tag:blogger.com,1999:blog-311352052024-03-23T13:44:08.357-04:00வ.ந.கிரிதரன் எழுத்துகள்இது எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் பக்கம். வ.ந.கிரிதரனின் எண்ணங்கள், புதிய / பழைய ஆக்கங்களென எதிர்காலத்தில் இப்பக்கம் மேலும் விரியும் பேராலென.Unknownnoreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-31135205.post-15528646767777468392020-05-03T13:40:00.002-04:002020-05-03T14:01:44.980-04:00 சிறுகதை: சொந்தக்காரன்! - வ.ந.கிரிதரன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbEofcZlQ2-w164BXozakFAFO83yz1Rjt0gJXrxK3VY8TvuC2mHTeG3H9XRigYBMOHRB3UpbakDintFvyHgz1sLxT5Ld4BPwDSNXX3lpSJyFHO124o5gfM9p-EP2wHy-11-VU_/s1600/vng_by_dipika.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="238" data-original-width="321" height="237" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbEofcZlQ2-w164BXozakFAFO83yz1Rjt0gJXrxK3VY8TvuC2mHTeG3H9XRigYBMOHRB3UpbakDintFvyHgz1sLxT5Ld4BPwDSNXX3lpSJyFHO124o5gfM9p-EP2wHy-11-VU_/s320/vng_by_dipika.jpg" width="320" /></a><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span style="font-size: x-small;">கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள்..ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வேலை செய்து கனடாவின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நல்லதொரு 'இமிகிரண்ட்'. வார நாட்களில் தொழிலாளி; வார இறுதி நாட்களில் தொழிலாளியைக் கண்காணிக்கும், முதலாளிக்கு ஏவல் புரியும் ஒரு கடமை தவறாத பாதுகாவலன். சற்று முன்னர் அவரது மேலதிகாரி ஜோ குறோபட் தொலைபேசியில் கூறியது நினைவிற்கு வந்தது.<br /><br />"சாம். இன்று உனக்கு நகர மண்டபப் பாதாள வாகன தரிப்பிடத்தில் தான் வேலை ( City hall Under ground parking lot).கடந்த ஒரு வாரமாக நிறைய முறைப்பாடுகள் ...பல வாகனங்களிலிருந்து பொருட்கள் பல களவாடப் பட்டிருக்கின்றன... பல 'வீதி மக்கள்' இரவு நேரங்களில் அங்கு படுத்துறங்குவதாகப் பலர் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார்கள்... எனக்கு உன்னில் நிறைய நம்பிக்கையுண்டு. கடமை தவறாத கண்டிப்பான பாதுகாவலன் நீ...யாரும் அங்கு அத்துமீறிப் பிரவேசிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உனது பொறுப்பு.."<br /><br />'இந்தப் உறை பனிக்குளிரிற்குள் இந்தப் 'பார்கிங் லொட்டில்' போய் வேலை செய்யச் சொல்லுகிறானே'டென்று ஜோவின் மேல் எரிச்சல் கூடத் தோன்றியது. வழக்கமாக அவர் வேலை பார்ப்பது வாசனைத் திரவியங்கள் செய்யும் தொழிற்சாலையொன்றில் தான். சுகமான வேலை. 'ரிஷப்ஷ'னில் அமர்ந்திருந்து , தொலைபேசி அழைப்புகளிற்கு பதிலிறுப்பது, மணித்தியாலத்திற்கொருமுறை தொழிற்சாலையை, தொழிலாளர்களை ஒருமுறை சுற்றிப் பார்ப்பது....கட்டடத்திற்குள்ளேயே அதன் கணகணப்பில் சுகமாகக் காய்ந்து கொண்டிருக்கலாம். 'என்ன செய்வது ஆட வெளிக்கிட்டாச்சு. ஆடத்தானே வேண்டும்'<br /><br />வார இறுதி நாட்களிலாவது ஓய்வெடுக்கலாமென்று பார்த்தால் ..முடிகிறதா? அவரது தர்மபத்தினி அகிலாண்டேஸ்வரி குழந்தைகளை அணைத்தபடி ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்கப் பொறாமையாகவிருந்தது. அவள் கனடா வந்ததிலிருந்து, கடந்த பத்து வருடங்களாக அவர் அவளை வேலைக்குப் போவென்று வாய்திறந்து கூறியது கூடவில்லை. குழந்தைகளைப் பார்க்கிறாளே, வீட்டைக் கவனிக்கிறாளே... பாவமென்று அவள் மேல் பரிதாபம்தான் கொண்டிருந்தார். ஆனால் அவளென்னடாவென்றால்..."நீங்களும்தான் கனடா வந்து இத்தனை வருடமாச்சு..என்னத்தைச் சேர்த்து வைத்தீர்கள்...ஆளிற்காள் வீடு வாசலென்று இருக்கிறார்கள்...நீங்களோ..'வீடு' 'வீடு' என்று உங்கடை வீட்டாருக்கே எல்லாம் செய்து போட்டீங்கள்...என்னைத்தைக் கண்டனீங்கள்....உங்கடை வீட்டாரே இப்ப உங்களை மதிக்கினமா..." அகிலாண்டேஸ்வரி வாயைத் திறந்தால் அவ்வளவுதான்..அவளது தொணதொணப்பை அவரால் தாங்கவே முடியாது. "இஞ்சேரும்..சும்மா வாயைத் தொணதொணகாதேயும்..நீர் இங்கை வந்து இவ்வளவு வருஷமாய் உமக்கு நான் என்ன குறை வைத்தனான்.."என்று இவர் பதிலிற்குக் கேட்டு வைத்தாலோ ..அவ்வளவுதான்."என்னத்தைச் செய்து கிழித்தனீங்கள்...நீங்களில்லையென்றால் நான் 'வெல்வெயர்' எடுத்துச் சுகமாகவாவது இருந்திருப்பேனே...." என்று அவள் இளக்காரமாகப் பதிலிறுப்பதைத்தான் இவரால் தாங்கவே முடிவதில்லை. ஊரில் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பிற்கான பௌதிக ஆசிரியராகவிருந்த அவர், இந்த வயதில் நாற்பது மணித்தியாலங்கள் முதுகு முறிய, முறியவென்று ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து உழைத்துக் கொண்டு வாடுகின்ற அவரது உழைப்பை எவ்வளவு துச்சமாக அவள் மதித்து வைத்திருக்கின்றாள். அதைத் தான் அவரால் தாங்க முடிவதில்லை. பொங்கிவரும் ஆத்திரத்தை வெகுவாகச் சிரமப்பட்டு அவர் அடக்கிக் கொள்வார். அப்பொழுதெல்லாம் எங்காவது கண்காணாத இடத்திற்கு ஓடிப்போய் விடலாமாவாவென்றிருக்கும். குழந்தைகளின் மேல் அவர் வைத்திருக்கின்ற பாசம் அவரைக் கட்டிப் போட்டு விடும். அவளது 'தொணதொண'ப்பிலிருந்து தப்புவதற்காகவே அவராகத் தேடிக்கொண்ட வார இறுதி வேலைதான் இந்தப் 'பாதுகாவலர்' உத்தியோகம்.<br /><br />"அப்ப நான் போயிட்டு வாறன். கதவை உள்ளுக்குள்ளாலை பூட்டி வையும். என்ன.."என்று மனைவிக்குக் குரல் கொடுத்து விட்டு வெளியில் வந்த பொழுதுதான் சூழலின் யதார்த்தம் அவரிற்கு உறைத்தது. வீதியெல்லாம் மலை போல் உறை பனி குவிந்து கிடந்தது. வாகன நடமாட்டம், ஆள் நடமாட்டமின்றி உறை பனி பொழிந்து கொண்டிருக்கும் அந்த இரவு ஒரு வித மோனத்தில் ஆழ்ந்திருந்தது. ஒரு மாதிரி 'பஸ்' பிடித்து, பாதாள ரயிலேறி வேலைக்கு நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டார். கடமை தவறாத பாதுகாவலனல்லவா அவர். மற்றவரென்றால் காலநிலையினைச் சாட்டாக வைத்து ஆறுதலாக ஆடிப் பாடி வருவார்கள். இதனால் தான் ஜோ அவரை அனுப்பி வைத்திருந்தான். சோமசுந்தரத்தை நம்பி அனுப்பலாம் என்று அவனிற்குத் தெரியும்.<br /><br />தமக்குரிய 'பூத்'தில் 'காஷியர்கள் தங்களது வேலையினை ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிற்கு முகமன் கூறிவிட்டுத் தன் அறையினுள் நுழைந்தார் சோமசுந்தரம். இரவு 'பார்க்கிங் லொட்'டினைத் துப்புரவு செய்யும் தொழிலாளியான போலந்து நாட்டுக் கிழவன் இவரிற்கு முகமன் கூறினான்.சோமசுந்தரம் இதற்கு முன்னரும் சில தடவைகள் இங்கு தற்காலிகமாக வேலை செய்திருக்கின்றார். அதனால் போலந்து நாட்டுக் கிழவனை அவரிற்குத் தெரியும். வாயில் நுழைய முடியாத நீண்டதொரு பெயர்.நல்லவன். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இராணுவத்தில் கடமையாற்றியவன்.அவனது புதல்வர்களிருவரும் நகரில் 'வான்கூவரில்' மருத்துவர்களாகக் கடமை புரிகின்றார்கள். போர்க் காலக் கதைகள் பலவற்றினை அவன் கூறுவான். ஒருமுறை தரைக் கண்ணி வெடியில் சிக்கிப் பல நாட்கள் அவன் அவஸ்த்தைப் பட்டிருந்திருக்கின்றான். நிலத்திற்குக் கீழுள்ள நான்கு தளங்களையும் கூட்டித் துப்புரவு செய்வது தான் அவனது பிரதான கடமை. அவனுடன் கதைத்த படியே சோமசுந்தரத்தின் பொழுது போகும். கிழவனிற்கும் தனிமையில் கிடைத்த துணையாக இவர் விளங்கினார். அத்துடன் அவ்வப்போது யாராவது அத்து மீறி நுழைந்தால் சோமசுந்தரத்திற்குத் தகவல் தந்தும் அவன் உதவி புரிவான்.<br /><br />"ஏ! நண்பனே! யாராவது எங்காவது படுத்திருப்பதைப் பார்த்தால் தகவல் தர மறந்திடாதே என்ன?" என்று அவனிற்கு ஒருமுறை நினைவூட்டி விட்டுத் தன் வேலையினைத் தொடர்ந்தார் சோமசுந்தரம். ஜோ வேலை தொடங்கியது அழைக்கக் கூறியிருந்தது நினவிற்கு வந்தது. அழைத்தார். ஜோ பெரிதும் மகிழ்ந்து போனான்."சாம்! கூடிய விரைவில் உனக்குச் சம்பள உயர்வு பெற்றுத்தர முயல்கின்றேன்." என்று உறுதியளித்தான். இவ்விதம் பல உறுதிகளை அவர் ஏற்கனவே ஜோவிடமிருந்து அவர் கேட்டிருக்கின்றார்.<br /><br />ஒரு மாதிரி பாதி நேரத்தினைத் தாண்டியாகி விட்டது. ஒரு குறிப்பிடத்தக்க சம்பவங்களும் நடக்கவில்லை. மணிக்கொருமுறை நான்கு பாதாளத் தளங்களையும் சுற்றிப் பார்ப்பதும், இருபத்து நான்கு மணிநேர தமிழ் வானொலியில் நிகழ்சிகளைச் செவி மடுப்பதுமாகப் பொழுது போய்க் கொண்டிருந்தது. வெளியில் உறைபனி மழை இன்னும் பொழிந்து கொண்டேயிருந்தது. உறைபனி படர்ந்து கிடக்கும் வீதிகளைத் துப்புரவு செய்வதற்காகன கனரக வாகனங்கள் தங்கள் வேலையினைச் செய்யத் தொடங்கிவிட்டிருந்தன. முதியவர்களிர்கான நிகழ்ச்சியொன்றின் மறு ஒலிபரப்பு வானொலியில் சென்று கொண்டிருந்தது. ஒரு வயதான பெண்மணி தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஒருவரிற்காக ஒரு பாடலைக் கேட்க விரும்பினார். அதற்காக அவர் கேட்க விரும்பிய பாடல்: "எங்கிருந்தாலும் வாழ்க.." அதற்கு அந்நிகழ்ச்சியினை நடாத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர் "அம்மா! அந்தப் பாட்டின் முதல் வரி தவிர அதன் அர்த்தமே வேறாச்சே" என்று கூற பதிலிற்கு அந்த அம்மா "அதையே போடுங்கோவென். அந்தப் புண்ணியவான் எங்கிருந்தாலும் வாழ்க.."என்று மிகவும் அப்பாவித்தனமாகக் கூறியதைக் கேட்ட பொழுது சோமசுந்தரத்திற்குச் சிரிப்பாகவிருந்தது. 'வயது ஏற ஏற முதியவர்கள் குழந்தைகளாகித் தான் விடுகின்றார்கள்' என்று தனக்குள் ஒருமுறை நினைத்துக் கொள்ளவும் செய்தார்.<br /><br />நேரம் மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. போலந்துக் கிழவன் ஓடி வந்தான்.<br /><br />"என்ன விசயம்.... இப்படி ஓடி வருகிறாய்.."<br /><br />கிழவன் ஓடி வந்ததில் சிறிது களைத்துப் போயிருந்தான். நின்று சிறிது நிதானித்தான்.<br /><br />"நான்காவது தளத்திலை ஒருவன் படுத்திருப்பதைப் பார்த்தேன். என்னுடன் வந்தாயென்றால் காட்டுகிறேன்" என்றான். வானொலியினை நிறுத்தி விட்டு சோமசுந்தரம் அவனுடன் நான்காவது தளத்திற்குச் சாய்தளப் பாதை வழியாகக் கீழிறங்கினார். கிழக்கு மூலை வாசலிற்கண்மையில் அவன் படுத்திருந்தான். ஐம்பதை எட்டிய தோற்றம். கந்தல் உடை. அருகில் நெருங்கிய பொழுது 'வைன்' வாசனையுடன் கூடிய பல நாட்கள் குளிக்காத உடம்பு வாசனை, துவைக்காத அழுக்கான கந்தல் வாசனை என்பனவும் மூக்கைத் துளைத்தன.<br /><br />அவன் ஒரு பூர்வீக இந்தியன். படுத்திருந்த அந்தப் பூர்வீக இந்தியனிற்கு சோமசுந்தரம் வருவது தெரிந்து தானிருந்தது. தெரியாதது போல் படுத்திருந்தான். இவரைப் போல் எததனையோ பாதுகாவலர்களை அவன் பார்த்திருப்பான் போலும். இதற்கிடையில் அவன் எழும்பாமலிருப்பதைக் கண்ட போலந்துக் கிழவன் அவன் தோள்களை உசுப்பி எழுப்பி விட்டான். ஏதோ முணுமுணுத்தபடி அந்தப் பூர்வீக இந்தியன் எழும்பினான். தூக்கத்தினைக் கெடுத்து விட்ட கோபம் முகத்தில் தெரிய அவன் இவர்களைப் பார்த்தான்.<br /><br />"மகாராஜாவிற்கு வருகின்ற கோபத்தைப் பார்" என்று போலந்துக் கிழவன் கிண்டல் வேறு செய்தான். சோமசுந்தரத்திற்கு வெளியில் கொட்டிக் கொண்டிந்த உறை பனி மழை ஞாபகத்திற்கு வந்தது. பூர்வீக இந்தியன் மேல் சிறிது பரிதாபம் கூட வந்தது. இதற்கிடையில் போலந்துக் கிழவன் "இவர்களால் தான் சரியான தொந்தரவு. படுத்திருப்பார்கள். யாருமில்லையென்றால் வாகனங்களை உடைத்துத் திருடி விடுவார்கள்" என்றான். அவனது மேலதிகாரி ஜோ அவனிடம் யாரையும் அத்து மீறிப் பிரவேசித்து விடாதபடி பணித்திருந்ததும் நினவிற்கு வந்தது. இந்தப் பூர்வீக இந்தியனைப் பார்த்தால் அப்படியொன்றும் திருடுபவனாகத் தெரியவில்லை. இன்னும் சில மணித்தியாலங்களில் அவரது வேலை முடிந்து விடும். பொழுதும் புலர்ந்தும் விடும். ஆனால் அது மட்டும் இவனைத் தங்க அனுமதிக்க அவரிற்கு அனுமதியில்லை. போதாதற்கு இந்தப் போலந்துக் கிழவன் வேறு அருகில் நிற்கிறான். இவனிற்கு இந்தப் பூர்வீக இந்தியர்கள் மேல் அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது. குடிப்பதும் திருடுவதும் தான் இவர்களது வாழ்க்கை என்று கருதுபவன். வைத்தி வைத்து விடுவான். சோமசுந்தரம் இக்கட்டான நிலையிலிருந்தார். என்ன செய்யலாமென்று சிந்தித்துப் பார்த்தார். முதலில் போலந்துக் கிழவனை அங்கிருந்து அனுப்பினால் நல்லதென்று பட்டது. அவனிற்கு நன்றித் தான் இவனைக் கவனிப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார்.கிழவனிற்கு நகர விருப்பமேயில்லை. 'விடுப்பு' பார்ப்பதென்றால் யாரிற்குத் தான் ஆசையில்லை.<br /><br />போலந்துக் கிழவன் சற்று அப்பால் நகர்ந்ததும் அந்தப் பூர்வீக இந்தியன் மீண்டும் படுப்பதற்கு ஆயத்தமானான். சோமசுந்தரம் சிறிது கண்டிப்பை முகத்தில் வைத்துக் கொண்டார்.<br /><br />"எதற்காக இங்கு வந்து படுத்திருக்கிறாய். இங்கு படுக்க உனக்கு அனுமதியில்லையென்பது உனக்குத் தெரியுமல்லவா. விடுதிகளிலேதாவதொன்றில் போய்ப் படுப்பது தானே " என்றார்.<br /><br />"எல்லா விடுதிகளும் நிறைந்து விட்டன. இன்னும் சிறிது நேரம் படுக்க அனுமதியளித்தால் போதும். நான் ஒரு பிரச்னையும் உனக்குத் தர மாட்டேன்" என்று அவன் பதிலிறுத்தான். சோமசுந்தரத்திற்கு அவனை இந்த வகையான காலநிலையில் வெளியேற்றுவதும் நல்லதாகப் படவில்லை. ஆனால் அவரது உத்தியோகத்தில் இவற்றையெல்லாம் பார்க்க முடியாது. கண்டிப்பான, கடமை தவறாத அதிகாரி அவர்.<br /><br />"பூமிப் பந்தின் இன்னுமொரு கோடியிலிருந்து நான், சொந்த மண்ணை விட்டுத் துரத்தப் பட்டு அகதியாக ஓடி வந்திருக்கின்றேன். நீயோ சொந்த மண்ணிலேயே அதனையிழந்த இந்த மண்ணின் சொந்தக்காரன்". சோமசுந்தரத்திற்கு உண்மையில் அந்தப் பூர்வீக இந்தியன் மேல் ஒருவித தோழமை கலந்த உணர்வு தோன்றியது.<br /><br />"நானோ அன்னிய நாட்டிலொரு அகதி. இவனோ சொந்த நாட்டிலேயே அகதியாகிப் போனவன்."<br /><br />ஒரு காலத்தில் இவனது இனத்தவர்கள் அமெரிக்கக் கண்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள். இயற்கையினைப் பேணுவதில் அன்றே பெரிதும் ஆர்வம் காட்டியவர்கள். இவர்கள் சடங்குகள், தத்துவங்களெல்லாம் இயற்கைச் செல்வத்தைப் பேணுவதை முக்கிய நோக்காகக் கொண்டவை.<br /><br />சோமசுந்தரம் கடமை தவறாத, கண்டிப்பான, நிறுவனத்திற்குப் பெயர் வாங்கித் தரும் பாதுகாவல் அதிகாரிதான். ஆனால் சோமசுந்தரம் மனிதாபிமானத்தை இழந்த பாதுகாவலனல்லவே.<br /><br />"நான் உன் வார்த்தைகளை நம்புகின்றேன். ஆனால் விடிந்ததும் போய் விட வேண்டும்" என்று கூறி விட்டுத் திரும்பி நடந்தார் சோமசுந்தரம். முதலாவது தளத்தினைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போலந்துக் கிழவன் சோமசுந்தரத்தைக் கண்டதும் கேட்டான்: " என்ன அவனைத் துரத்தி விட்டாயா?".<br /><br />"ஒரு மாதிரி அவனைத் துரத்தி விட்டேன். துரத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது" என்று பதிலிறுத்தார் சோமசுந்தரம்.<br /><br />"இந்தக் கொட்டும் உறை பனி மழையிக்குள் அவன் எங்கு போவானோ? பாவம்" என்று இரக்கப் பட்டான் போலந்துக் கிழவன். "பாவம் புண்ணியம் பார்த்தால் இந்த வேலை செய்ய முடியாதே" என்றவாறு சோமசுந்தரம் கடமையில் மூழ்கியவாறு மேலே நடந்தார்.</span><span style="font-size: xx-small;"><i>- நன்றி 'கணையாழி' (கணையாழி டிசம்பர் 2000 'கனடா சிறப்பிதழிலிருந்து..-), பதிவுகள், திண்ணை. </i></span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-136644990048858692020-05-03T13:36:00.002-04:002020-05-03T13:36:30.986-04:00தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaTW47FXNeJhl4Ky6haxV1YwxOJvyJAcgjPYRD6t1DtXadCAxtdL-hQ-hUWO4ATfyJyo7nHeisyDmcWKYqxLpUXP4zZhvR1n-yW2NWvxcTfsR-pCa97pewveLanu9OHNoTPuiO/s1600-h/man.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5125079226434498194" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaTW47FXNeJhl4Ky6haxV1YwxOJvyJAcgjPYRD6t1DtXadCAxtdL-hQ-hUWO4ATfyJyo7nHeisyDmcWKYqxLpUXP4zZhvR1n-yW2NWvxcTfsR-pCa97pewveLanu9OHNoTPuiO/s320/man.jpg" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" /></a> <b></b><br />
<h2 style="text-align: left;">
<b><span style="font-size: 78%;"><span style="font-size: 100%;">அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!</span></span></b></h2>
<span style="font-size: 78%;"><span style="font-size: 100%;"> </span><br />இளங்கோ அருள்ராசாவிடம் ஹரிபாபுவுடனான வேலை முடிவுக்கு வந்த விடயத்தைக் கூறியபோது அவன் கொஞ்சமும் ஆச்சரியப்படவில்லை. "இதை நான் எப்பவோ எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு நாளைக்காவது வேலையும் தந்து சம்பளமும் தந்தானே. அதுக்காக அவனைப் பாராட்ட வேண்டியதுதான். அவனுக்கு நன்றியாக இருக்க வேண்டியதுதான்" என்றவன் கார்லோவிடம் பிரசுரங்கள் விநியோகிக்கும் வேலை கிடைத்தது பற்றிக் குறிப்பிட்டதும் "ஒரு விதத்திலை இதுவும் நல்லதுக்குத்தான்" என்றான்.<br /><br />"அருள் எந்த விதத்திலை இது நல்லதென்று நீ நினைக்கிறாய்?"<br /><br />"கார்லோவிடம் வேலை பின்னேரங்களிலை ஒரு சில மணித்தியாலங்கள்தானே. அப்ப நாள் முழுக்க எங்களுக்கும் நிறைய நேரமிருக்கும் வேறேதாவது நல்ல வேலை தேட. இல்லையா? அதோடை 'இமிகிரேசன்' அலுவலைப் பார்க்கலாம் இல்லையா..."<br /><br />அருள்ராசா கூறியதும் சரியாகத்தான் பட்டது. "ஒரு விதத்திலை நீ சொல்லுறதும் சரியாய்த்தானிருக்கு... எல்லாமே நல்லதுக்குத்தான்.<br />பகல் முழுக்க வேறேதாவது வேலையைத் தேடிப்பார்க்க வேண்டியதுதான். சும்மா நேரம் இருக்குதென்று விஸ்கியை அடித்துப் போட்டுப் பகல் முழுக்கப் படுத்துப் படுத்துக் கிடக்கிறதில்லை. இந்த விசயத்திலை உன்னை நல்லக் கட்டுப்பாட்டிலை வைத்திருக்க வேண்டும் கண்டியோ?"<br /><br />"நீ சொல்லுறதும் சரிதான். இப்பிடியே காலத்தை வீணக்கிக் கொண்டிருக்க முடியாது. எப்படியாவது நிரந்தரமானதொரு வேலையைக் கண்டு பிடிக்க வேண்டியதுதான்.."<br /><br />"இல்லாவிட்டால்... கொஞ்சமும் காசு கீசு சேர்க்க முடியாது... இப்பப் பார்.. ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கையைக்<br />கொண்டோடிறதிலையே முடிஞ்சு போகுது. ஒரு பொழுதுபோக்கு அது இதென்று ஒன்றுமில்லை. எப்பவாவது இருந்திருந்திட்டு அடிக்கிற தண்ணிப் 'பார்ட்டி'யோடை எல்லாமே சரி..."<br /><br />"என்ன செய்யிறதடா இளங்கோ... எல்லாம் இந்த இமிகிரேசக்காரங்களாலை வந்த கரைச்சல்தானே... அவங்கள் மட்டும் இந்நேரத்துக்கு 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்'டைத் த்ந்திருந்தாங்களென்றால் இந்த வேலைப் பிரச்சினை இந்நேரம் போயிருக்கும். ம்.. எல்லாம் காலம்.."<br /><br />அருள்ராசா கூறுவதும் இளங்கோவுக்குச் சரியான கூற்றாகத்தான் பட்டது. அன்றிரவு எல்லோரும் தூக்கத்தில் சாய்ந்த பின்னும்<br />இளங்கோவுக்குத் தூக்கமே வரவில்லை. வழக்கமாக இவ்விதமான சமயங்களில் செய்வதுபோல் தனது குறிப்பேட்டையும், பாரதியார்<br />கவிதைகளையும் எடுத்துக் கொண்டு அறையில் தூக்கத்திலாழ்ந்திருப்பவர்களின் தூக்கத்தினைக் கலைப்பதற்கு விரும்பாமல் உணவறைக்கு வந்தான். சிறிது நேரம் பாரதியாரின் கவிதைகளைப் படிப்பதிலீடுபட்டான். அவனைப் பொறுத்தவரையில் வாழ்க்கை சலிப்பும், விரக்தியுமாகச் சாய்ந்திருக்கும் சமயங்களிலெல்லாம் அவனுக்குத் துணையாக இருப்பவை நூல்களே. முக்கியமாகப் பாரதியாரின் கவிதைகளைப் படிக்கும்போது அவனது சோர்ந்து, துவண்டிருக்கும் மனதானது உற்சாகம் பெற்றுத் துள்ளிக் குதிக்கவாரம்பித்துவிடும்.<br />பாரதியாரின் கவிதைகளைப் படிக்கப் படிக்க மனது இலேசாகிக் கொண்டே வந்தது. உள்ளத்தில் உறுதி கலந்த உற்சாக உணர்வுகள்<br />சிறகடிக்கவாரம்பித்தன. அதன்பின் தனது குறிப்பேட்டினை எடுத்து எழுதவாரம்பித்தான். குறிப்பேடு பல வழிகளில் அவனுக்குதவி புரிந்து கொண்டிருந்தது. மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைப்பதற்குரிய சுமைதாங்கியாக, வாழ்க்கையைத் திட்டமிடுவதற்குரியதொரு சாதனமாக, அந்தரங்க உணர்வுகளைப் பகிர்ந்துகொளவதற்குரியதொரு துணையாகப் பல்வகைகளில் உதவிக்கொண்டிருந்தது. குறிப்பேட்டினைப் பிரித்தவன் முதலில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த குறிப்புகளைச் சிறிது நேரம் வாசித்தான். அதன்பின் எழுதவாரம்பித்தான்:<br /><br />'நாட்டை விட்டு வெளியேறி இன்றுடன் ஆறுமாதங்கள் கழிந்து விட்டன. முதல் மூன்று மாதங்கள் தடுப்பு முகாமில். அடுத்த மூன்று மாதங்கள் வெளியில் காற்றிலாடும் சருகாக. ஒவ்வொரு நாளையும் கழிப்பதற்கான போராட்டத்திலேயே வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது. இரவு வானை, மதியை, சுடரை, வீசும் தென்றலை, புள்ளை, அந்தியின் அடிவானத்து வர்ண விளையாட்டை.. இவற்றையெல்லாம் மனம்விட்டு இரசிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இருப்புப் பிரச்சினையே பெரியதொரு பிரச்சினை. இதற்கு விரைவில் முடிவொன்றினைக் கட்ட வேண்டும். இப்படியே வாழ்வினைச் செல்ல விடக்கூடாது. போனது போகட்டும். இனி அடுத்த ஆறு மாதத்திற்குள் என் வாழ்க்கை உறுதியானதொரு அடித்தளத்தில் கட்டப்பட வேண்டும். அதற்கான உறுதியை இப்பொழுதே இந்தக் கணமே எடுத்துக் கொள்கின்றேன். என் அருமைக் குறிப்பேடே! நீ தான் இதற்குச் சாட்சி!<br /><br />வீட்டாருக்கு இங்கு நான் படுகிற கஷ்ட்டங்கள் தெரியாது. சொன்னாலும் புரியப் போவதில்லை. ஒரு நேரச் சாப்பாடிற்காக என் மண்ணில் ஒவ்வொரு நாளையும் குடும்பம், குட்டிகளுடன் கழிக்கும் குடியானவர்களின் அன்றாட நிலைமையை இந்தக் கணத்தில் என்னால் மனப்பூர்வமாக உணர முடிகிறது. எந்தவித நம்பிக்கைகளுமின்றி அன்றாடம் வாழ்வே போராட்டமாக வாழும் மக்களுடன் ஒப்பிடும்பொழுது என்நிலை ஒரு பொருட்டேயல்ல. ஆனால் இவற்றையெல்லாம் வீட்டார் உணரும் நிலையில் இருப்பார்களென்று நினைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் மகன் உலகின் குபேரபுரியில் வாழ்கிறான். 'பொடியன் அமெரிக்காவிலை' என்று சொல்லும்போதே அவர்களது வாயெல்லாம் பூரிப்பால் மலர்ந்து விடும். ஆனால் 'பொடியன் இங்கு படுகிற பாட்டை' நேரில் வந்து பார்த்தால் மட்டும்தான் அவர்களால் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்ள முடியும்.' இவ்விதம் சிறிது நேரம் குறிப்பேட்டில் எழுதினான். அதன் பின் இளங்கோவின் கவனம் அடுத்த ஆறு மாதங்களைப் பற்றிய எதிர்காலத் திட்டங்களில் ஆழ்ந்து போனது. அவற்றைப் பற்றி எழுதும்போது மேலும் மேலும் உள்ளம் நம்பிக்கையால், உற்சாகத்தால் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது.<br /><br />'சரியாக இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்த மண்ணில் மிகவும் உறுதியாகக் காலூன்ற வேண்டும். அதற்கு இயலுமானவரையில் குடிவரவு அதிகாரிகளுடன் மீண்டும் மீண்டும் கதைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆறு மாதங்களுக்குள் எதுவுமே சரிவராவிட்டால் தொடர்ந்தும் இங்கிருப்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. எந்த விதச் சட்டரீதியான அடையாளத்துக்குரிய ஆவணங்களுமில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கக் கூட முடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருத்தரின் துணையை நாட வேண்டும். இதற்கொரு முடிவை எவ்வளவு விரைவில் கட்ட வேண்டுமோ அவ்வளவு விரைவில் கட்ட வேண்டும். இந்த விசயத்தில கடமையைச் செய்வேன். பலனை எதிர்பார்க்காமல். ஆனால் செயலுக்குரிய பலனெதுவுமில்லாதிருக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் செயலாற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமெதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு மேல் பலனை எதிர்பார்க்க வேண்டியதுதான். அதுவரையில் எந்தவிதப் பயனையும் எதிர்பார்க்காமல் முடிந்தவரையில் முயல வேண்டியதுதான். அதன் பிறகும் எந்தவிதப் பயனும் விளையாவிட்டால் இந்த மண்ணில் நான் ஒருபோதுமே இருக்கப் போவதில்லை.<br /><br />விறகுவெட்டி, தெருவிளக்கில் படித்த ஆபிரகாம் லிங்கனுக்குச் சாத்தியமான அமெரிக்கக் கனவு எனக்குச் சாத்தியமாக வேண்டுமென்றால் முதலில் எனக்கும் அவர்களுக்கிருந்ததைப் போல் இந்த மண்ணில் காலூன்றுவதற்குரியதோரிடம் , அது தற்காலிகமாகவேனுமிருக்க வேண்டும். அதனை இந்த அரசு செய்து தர வேண்டும். அடுத்த ஆறு மாதங்களிலாவது அதனை இந்த அரசு செய்து தருமா?<br /><br />நியூயார்க்கின் துறைமுகத்தில் நின்றபடி தனது குடிமக்களை, வந்தேறு குடிகளை, அடக்கு ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி ஓடோடிவரும் அகதிகளை வரவேற்கும் சுதந்திரதேவி ஏன் சிலையாக நிற்கிறாளென்று இப்பொழுதுதான் தெரிகிறது? சுதேசிகளுக்கொரு சட்டம். விதேசிகளுக்கொரு சட்டம். சுதேசிகளுக்குள்ளும் வர்ண அடிப்படையில் நிலவுகின்ற இன்னுமொரு சட்டம். அபயக் குரலெழுப்பி ஓடிவரும் அகதிகளுக்கு நீரிலொரு சட்டம்; நிலத்திலொரு சட்டம். ஓடிவரும் அகதிகளுக்குச் சுதந்திரவொளி காட்டி இருகரம் நீட்டி ஆதரிக்க வேண்டிய உன்னால் அது முடியாமல் போனதினால் ஒருவேளை சிலையாகிப் போனாயோ<br /><br />சுதந்திரதேவியே! இந்த உலகுக்கெல்லாம் நீ விடுதலையினையும், அது பற்றிய ஞானத்தினையும் போதிப்பதாகக் கூறுகின்றார்களே!<br />ஆனால். என் விடயத்தை எடுத்துப் பார். இங்குள்ள தடுப்பு முகாம்களுக்குள் அன்றாடம் கனவுகளுடனும், கற்பனைகளுடனும்,<br />ஏக்கங்களுடனும் வளைய வரும் இந்தப் பூவுலகின் பலவேறு திக்குகளிலிருந்தும் வந்து வாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்ட அகதிகளை எண்ணிப் பார்! உலகுக்கெல்லாம் சுதந்திரத்தைப் போதிக்குமுன் மண்ணில் அடைக்கலம் நாடி வந்தவர்களுக்கேனிந்த நிலை? என்னைப் பொறுத்தவரையில் இந்த மண்ணை நோக்கிக் களவாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வந்தவனல்லன். முறையான ஆவணங்களுடன் இன்னொரு நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டிய விமானம் கொண்டு<br />செல்ல மறுத்து விட்ட நிலையினால் இந்த மண்ணில் நிர்க்கதிக்குள்ளாகிப் போனவன். சட்டரீதியாக இந்நாட்டினுள் நுழைந்தவனைச் சட்டவிரோதமாக நுழைந்தவனென்ற பிரிவில் வைத்துத் தடுப்பு முகாமில் அடைத்து வைத்ததும் நீ சுதந்திரத்தைப் போதிக்குமிந்த மண்ணில்தானே நிகழ்ந்தது. சுதந்திரதேவியே!'<br /><br />இவ்விதம் சிறிதுநேரம் மனப்பாரங்களையெல்லாம் தனது உற்ற துணையான அந்தக் குறிப்பேட்டில் கொட்டித் தீர்த்தான் இளங்கோ.<br />இவ்விதம் சுமைகளை இறக்கிய மனதில் சிறிது உறுதியும், உற்சாகமும் குமிழியிட்டன. இறுதியாக இவ்விதம் எழுதினான்: -<br />சுதந்திரதேவியே! உன் மண்ணில் நீ போதிக்கும் சுதந்திரம் என்னைப் போன்றவ்ர்களுக்கு மறுக்கப்பட்டபோதும் நான் உன்னைப் போற்றுகின்றேன். நீ போதிக்கும் சுதந்திரத்தின் அருமையினை உணர்ந்தவன் நான். அதனால் உன்னைப் போற்றுகின்றேன். இரவிலும், பகலிலும், மழையிலும், வெயிலிலும் தனியாக உயர்ந்து நின்று விடுதலையினை உலகுக்கெல்லாம் போதிக்கின்றாயே! அந்தத் தியாகத்தை நான் மதிக்கின்றேன். 'எத்தனை இடர் வரினும் தளர்ந்து விடாதே! விடுதலைக்காகப் போராடு! உலக விடுதலைக்காகப் போராடு!' என்று நீ இயம்புவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சுதந்திரதேவியே நீ வாழி! -<br /><br />இவ்விதம் உணர்வுச் சுமைகளைக் குறிப்பேட்டிலிறக்கியதும் உள்ளத்தில்தானெத்தனை மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சியுடன் பாரதியாரின் கவிதை நூலினை மீண்டும் பிரித்தான் இளங்கோ.<br /><br />'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!<br />இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,<br />அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.<br />துச்சமாக வெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்,<br />அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.<br />பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,<br />அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.<br />இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,<br />அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.......<br />உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,<br />அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.'<br /><br />அதன்பின்னர் நண்பர்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த அறையினுள் மெதுவாக வந்தவன் தன் படுக்கையில் சாய்ந்தான். சாய்ந்தவனை விரைவிலேயே நித்திராதேவி வந்து அரவணைத்துக் கொண்டாள். அவளது அரவணைப்புக்குள் தஞ்சமாவதற்கு முன்னர் அவன் பின்வருமாறு உறுதியாக நினைத்துக் கொண்டான்: 'இன்னும் ஆறு மாதங்கள் மட்டும்தான். அதன்பிறகு சரிவராவிட்டால் அடுத்த பயணத்தைத் தொடங்க வேண்டியதுதான்.' இவ்விதமாக எதிர்காலம் பற்றியதொரு தெளிவான சிந்தனையால் இளகிக் கிடந்தவனை நித்திராதேவி மிகவும் இலகுவாகவே அணைத்துக் கொண்டாள்..<br /><br />[தொடரும்]</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-31679955836645849722010-08-03T21:20:00.002-04:002020-05-03T13:29:52.553-04:00முள்ளிவாய்க்கால்! - வ.ந.கிரிதரன் - <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<br /></div>
<div>
[ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் கருப்பு சூலை 1983 ஒரு திருப்பு முனை. ஒரு குறியீடு. தமிழினத்தின் மீதான அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போ<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk7h_5cRjGbUJTWT61vpxPMJ3S7xQ3pi7EdY_C_u4el4u71JQ0ui8q1WoVLJlip60Bz_r7wGCRHEhC-lqddb6pGpv64qYWVHNJPRvEDx9Wd0nKOjfMKjVfhpqE8k-5fceK6Fwk/s1600/mkural.GIF"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5501359400673183570" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk7h_5cRjGbUJTWT61vpxPMJ3S7xQ3pi7EdY_C_u4el4u71JQ0ui8q1WoVLJlip60Bz_r7wGCRHEhC-lqddb6pGpv64qYWVHNJPRvEDx9Wd0nKOjfMKjVfhpqE8k-5fceK6Fwk/s200/mkural.GIF" style="cursor: hand; float: left; height: 149px; margin: 0px 10px 10px 0px; width: 68px;" /></a>ராட்டம் ஆயுதப் போராட்டமாக விரிவுபெற்றது அதன் பின்புதான். அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தம் இன்னுமொரு திருப்புமுனை. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான யுத்தம் எதிர்பாராதவகையில் முடிவுக்கு வந்தது. கருப்பு சூலை 1983இல் இந்தியாவின் ஆதரவுடன் விரிவுபெற்ற ஆயுதப் போராட்டம், 2009 மேயில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மேற்குநாடுகளின் ஆதரவுடன் முடிவுக்கு வந்தது. ஈழத்தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து இன்னுமொரு திக்கில் விரியப் போகிறது. ஆயுதத்தை நோக்கியா அல்லது அமைதியை நோக்கியா என்பதைக் காலம் உணர்த்தும். ]<br />
<br />
1.<br />
<br />
மனிக் பண்ணை தடுப்பு முகாமில் வாழ்க்கை ஒரு வருடத்தைத் தாண்டியோடிவிட்டதா? இதயச்சந்திரனுக்கு நம்பவே முடியவில்லை. அதை மட்டுமா அவனால் நம்ப முடியவில்லை.. அவன் இன்னும் உயிருடன் இருப்பதையும்தான் நம்ப முடியவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசுக்குமிடையில் நடைபெற்ற அந்தக் கொடிய போரின் இறுதி நாட்கள்... அந்த நாட்களின் ஒவ்வொரு கணங்களும் இன்னும் அவன் ஞாபகத்தில் பசுமையாக இருக்கின்றன. அவன் மறையும் வரையும் அவன் நெஞ்சை விட்டு அவை மறையப் போவதில்லை. போரின் கொடூரத்தை அறிந்த, அனுபவித்த நாட்கள். இருப்பு பற்றிய அவனது புரிதல்களை அடியோடு மாற்றிவிட்ட நாட்கள். எவ்விதம் நெஞ்சை விட்டகலும்?<br />
<br />
குறுகிய நிலப்பரப்புக்குள் புலிகளும், மக்களும் அடைபட்டுக் கிடந்த நிலையில் , இலங்கை அரசின் பல்வேறு வகையான தாக்குதல்களும்<br />
தீவிரமடைந்திருந்தன. எறிகணைகத் தாக்குதல்கள், கொத்தணிக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன வாயுத் தாக்குதல்கள்... ஆயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில்... பாதுகாப்பு வலயங்களெல்லாம் பாதுகாப்பற்றுப் போன அந்தக் கணங்கள்... மானுடம் தன் நாகரிகத்தை இழந்து அம்மணமாக நின்ற தருணங்களவை. உயிருக்கே உத்தரவாதமற்றுப் போன பொழுதுகள் அதுவரை மக்கள் கண்ட கனவுகளை, கற்பனைகளை, எதிர்கால இலட்சியங்களை, குடும்ப உறவுகளை, வரையறுத்த நீதி, நியாயக் கோட்பாடுகளையெல்லாம் துவம்சம் செய்துவிட்டு வெறியாட்டமாடிய போர் அரக்கரின் அட்டகாசத்தால் சமூக அமைப்புகளும், சூழலும் சிதைந்து போயிருந்த கொடிய தருணங்கள். ஆனால் இவையெல்லாவற்றையும் சர்வதேசமோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அன்று ருவாண்டா! இன்று சிறிலங்கா! அளவில் சிறிதானாலும், அழிவின் தன்மையில் மாறுதலேது?<br />
<br />
சிந்தனை வயப்பட்டுக் கிடந்தவனின் கவனம் சரோஜாவின், ஆனந்தனின் பக்கம் திரும்பியது. சரோஜாவையும், ஆனந்தனையும் அவனது வாழ்வுடன் பிணைத்துவிட்டது எது? அதுதான் விதியா? இவற்றிலெல்லாம் ஒரு காலத்தில் நம்பிக்கையில்லாமல் இருந்தவனின் சிந்தனையா இவ்விதம் திரும்பியிருக்கின்றது? அவனுக்கு அவனை எண்ண வியப்பாகவிருந்தது. விரக்தியாகவுமிருந்தது. காலம், அதன் கோலமும் எவ்விதம் ஒருவரை தலைகீழாக மாற்றி விடுகிறது?<br />
<br />
புதுக்குடியிருப்பு மருத்துவமனை தாக்கப்பட்டு, எஞ்சியிருந்த உடையார்கட்டு மருத்துவமனையும் தாக்கப்பட்டபோதுதான், அதற்கு முன்னர் நடந்த தாக்குதல்களில் தன் மனைவி, மகள்மாரை இழந்திருந்த இதயச்சந்திரன், எங்கே ஓடுகிறோமென்று தெரியாத நிலையில், உயிரைக் காப்பதற்காக சனங்களோடு சனங்களாக ஓடிக்கொண்டிருந்தபோதுதான், வழியில் சரோஜாவைக் கண்டான். கைகளில் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்த, ஏற்கனவே உயிரிழந்திருந்த குழந்தையொன்றுடன் , அக்குழந்தை இற்ந்ததைக் கூடப் புரிந்துகொள்ள முடியாமல், வீதியோரம் பேயறைந்தவளாக, சித்தப்பிரமை பிடித்தவளாகக் காணப்பட்ட சரோஜாவைக் கண்டதும் , அதற்கு முன்னர் நடந்த தாக்குதல்களில் தன் குழந்தைகளையும், மனைவியையும் இழந்திருந்த இதயச்சந்திரனால் அவளை அந்த நிலையில் விட்டுவிட்டுப் போக முடியவில்லை. அவ்விதம் விட்டு ஓடியிருந்தால் அவள் அரச படைகளின் குண்டு மழைக்குள் சிக்கி எந்தக் கணத்திலும் உயிர் துறக்கலாம்? மந்தைகளாகத் திரண்டோடிக் கொண்டிருக்கும் அகதிகளின் கால்களுக்குள் அகப்பட்டு உருக்குலையலாம்?<br />
<br />
குழந்தையை அருகில் கிடந்த இடிந்த குடிசையொன்றில் வைத்துவிட்டுச் சரோஜாவையும் இழுத்தபடியே ஓடினான். அவ்விதமாக அவர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுடன் வந்திணைந்து கொண்டவந்தான் ஆனந்தன். பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன். அவர்களைப் போல் அவனும் தன் தாய், தந்தை, சகோதரர்களை இழந்து, யாருமற்ற நிலையில் சனங்களோடு சனங்களாக ஓடிக் கொண்டிருந்தான். மிகவும் பயந்து போயிருந்தான்.<br />
<br />
அவனையும், சரோஜாவையும் இழுத்தபடி இதயச்சந்திரனும் ஓடியோடி, இறுதியில் புலிகளின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட காலகட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்தான்.. அதன் பின் இதுவரையில் தடுப்பு முகாமில் வாழ்வு ஓடிக்கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தின் அழுத்தங்களைத் தொடர்ந்து கட்டம் கட்டமாகத் தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது நிலைமை முன்பிருந்ததை விடப் பரவாயில்லை. ஆனால் ஆரம்பத்தில் மூன்று இலட்சங்களுக்கும் அதிகமான மக்களை மிருகங்க்ளைப் போல் அடைத்து வைக்கப்பட்டிருந்ததொரு பெரியதொரு பட்டியாகவே அந்த முகாம் விளங்கியது. அரசின் உளவுத்துறை அதிகாரிகள் முகாமெங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். புலிகளென்னும் சந்தேகத்தின் பெயரில் இளைஞர்கள், யுவதிகளென நாளுக்கு நாள் காணமல் போய்க் கொண்டிருந்தார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளானது பற்றிய கதைகள் முகாமெங்கும் நிறைந்திருந்தது. குடும்ப உறுப்பினர்களையே பிரித்து, வெவ்வேறிடங்களில்<br />
<br />
ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதபடி அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.<br />
<br />
அவற்றை இப்பொழுது எண்ணவே அவனுக்கு ஒருவித அச்சமாகவிருந்தது.<br />
<br />
ஒரு கணம் அவனது பார்வை விரிந்து கிடந்த விண்ணை நோக்கியது. கண்ணுக்கெட்டியதூரம் வரையில் நீலப்படுதாவாக விரிந்து கிடந்த விண் முன்பென்றால் உணர்வுகளை வருடிச் சென்றிருக்கும். இப்பொழுதோ கேள்விகளையே எழுப்ப முனைந்தது.<br />
<br />
விரிந்து கிடக்கும் பெருவெளி!<br />
விரைந்தோடும் சுடரும், கோளும்.<br />
விரிவும் தெரியவில்லை!<br />
விரைவும் புரியவில்லை!<br />
சின்னஞ்சிறு கோளுக்குள்,<br />
சின்னஞ்சிறு தீவிற்குள்,<br />
குத்து, வெட்டுகள்!<br />
புரிந்திருந்தால்<br />
படர்ந்திருக்குமோ<br />
சாந்தி!<br />
<br />
இவ்விதமாக அவனது மனதினுள் கவிதை வரிகள் சில எழுந்தன. எத்தனை காலம் எழுதி. இத்தகையதொரு பேரழிவுச் சூழலில் கவிதையெங்கே வரும்?<br />
<br />
<br />
2.<br />
<br />
இந்த ஒரு வருடத்தில் அவர்கள் மூவரும் ஒன்றாகத் தற்காலிகமாகக் கட்டப்பட்டிருந்த வீட்டினுள் 'மனிக்பார்ம்'முகாமில் வ்சித்து வந்தாலும், இற்ந்தகாலம் தந்த நினைவுச் சுமையிலிருந்தும், எதிர்காலம் பற்றிய வெறுமையான , நம்பிக்கையற்ற் உணர்வுகளிலிருந்தும்<br />
விடுபடமுடியாதவர்களாகவே பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு அவனது மனைவி வதனாவையும், மகள்மார்கள் ஆஷா, ஷோபா இருவரையும் மறக்க முடியவில்லை. மிகவும் மென்மையான்வள் இளையவள் ஷோபா. அக்கவென்றால் அவளுக்கு உயிர். இருவருமே ஒருவருக்கொருவர் சகோதரிகளாய், சிநேகிதிகளாய் எவ்வளவுதூரம் ஒன்றித்துப் போயிருந்தார்கள். அவர்களைப்பற்றி, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் அவனும், வதனாவும் எவ்வளவு கற்பனைகளைப் படர விட்டிருப்பார்கள்? எல்லாமே எவ்விதம் அடித்து நொருக்கப்பட்டு விட்டன?<br />
<br />
மனிதர்களால் எவ்விதம் இவ்விதம் வெறிகொண்டு தாண்டவமாட முடிகிறது?<br />
<br />
இப்பொழுது அவன் முன்னாலுள்ள பிரச்சினை. வெளியில் செல்வதானால் சரோஜாவையும், ஆனந்தனையும் என்ன செய்வது? சரோஜா மன்னார்ப் பக்கமிருந்து ஓடியோடி வன்னிக்கு வந்திருந்தவள் போரில் அகப்பட்டிருந்தாள். அவனது நிலையும் இதுதான். அவனும் முழங்காவில் பகுதியிலிருந்து ஓடி வந்திருந்தான். ஆனந்தனோ கிளிநொச்சி முரசுமொட்டையைச் சேர்ந்தவன். போர்ச் சூழல் எவ்விதம் அவர்கள் மூவரையும் ஒன்றாகச் சேர்த்து விட்டிருந்தது. அவளோ இன்னொருத்தரின் மனைவியாக, தனக்கென்றொரு குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவள். அவனோ அவளைப்போல் தன் மனைவி, குழந்தைகளென தனக்கொரு வட்டத்தைப் போட்டு , அதனுள் வாழ்ந்து<br />
வந்தவன். ஆனந்தனின் நிலையும் அதுதானே... அவனும் தன் தாய், தந்தையென வாழ்ந்து வந்திருந்தவன். சிந்தனையினின்றும் நீங்கியவனாக, நனவுலகிற்கு வந்த இதயச்சந்திரன் தனக்குள்ளாகவே தீர்மானமொன்றினை எடுத்தவனாக , சரோஜாவுடன் எப்படியும்<br />
இது விடயமாகக் கதைத்துவிட வேண்டுமென்று எண்ணினான். அப்பொழுதுதான் ஆனந்தன் அருகிலிருந்த அவனையொத்த சிறுவர்கள் சிலரைச் சிந்திப்பதற்காகச் சென்றிருந்தான் என்பது நினைவுக்கு வந்தது. நல்லதாகப் போய் விட்டதென்று பட்டது. முதலில் சரோஜாவுடன் கதைப்பதே நல்லதென்ரு பட்டது.<br />
<br />
சரோஜாவோ வழக்கம்போல் தனிமையில் மூழ்கியிருந்தாள். இதயச்சந்திரன் தன்னைத் த்யார்படுத்திவனாக அவளருகில் சென்று " சரோஜா" என்றழைத்தான்.<br />
<br />
அவனது அழைப்பின் வெறுபாட்டை உடனேயே சரோஜாவின் பெண்ணுள்ளம் புரிந்து கொண்டது. 'என்ன' என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனே தொடர்ந்தான்: "கெதியிலை வெளியிலை போகலாம் போலக் கிடக்குது. அதுதான் அதைப்பற்றிக் கதைக்கலாமெயென்று பட்டது. அதுதான் உங்களுக்கும் நேரமிருக்குமென்றால் , கொஞ்சநேரம் என்னுடன் நீங்கள் எல்லோரும் சந்தித்துக் கலந்தாலொசிக்க முடியுமே?"<br />
<br />
அதற்கவள் பதில் அவளது மனநிலையினை மிகவும் துல்லியமாகவே வெளிப்படுத்தியது.<br />
<br />
"எல்லாமே முடிந்து விட்டதே."<br />
<br />
"என்ன சொல்லுகிறீர்கள் சரோஜா?"<br />
<br />
"சொல்ல என்ன இருக்கு. என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே முடிஞ்சு போயிற்று. "<br />
<br />
இவ்விதம் சரோஜா கூறவே, இதயச்சந்திரன் இடை மறித்தான்: " சரோஜா. நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி. ஆனந்தனைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்கள். அவனுக்காகவாவது நாங்களேதாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும்தானே.. "<br />
<br />
இதற்கு அவள் மெளனமாகவிருந்தாள். அவனே தொடர்ந்துக் கூறினான்: "சரோஜா. நான் நல்லாய் யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறன். இன்னும் கொஞ்ச நாளிலை எங்களையும் இந்த முகாமிலிருந்து வெளியிலை அனுப்பி விடுவாங்கள். வெளியிலை போனவங்களிலை பலருக்கு இன்னும் குறைஞ்ச அளவு வசதிகள் தானும் செய்து கொடுக்க வில்லையாமே... இப்படியான சூழலிலை நீங்களும் , ஆனந்தனும் தனியே இருந்தால் என்ன நடக்குமென்றதை நினைச்சுப் பார்த்தாலே பயமாயிருக்கு. அதனால்தான் நான் கடைசியிலை இந்த முடிவுக்கு வந்திருக்கிறன்.."<br />
<br />
"நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' சரோஜாதான் கேட்டாள்.<br />
<br />
இதற்குச் சிறிது யோசித்துவிட்டு இதயச்சந்திரனே கூறினான்: "சரோஜா. நாங்கள் மூவரும் வெளியிலை போன பிறகும் ஒன்றாகவே வசித்தால் அதுதான் நல்லதுபோலை எனக்குத் தெரியிது. நான் உயிரோடை இருக்கிற வரையில் என்னால் முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கும், ஆனந்தனுக்கும் செய்வன். உங்களை அன்றைக்கு அந்தப் போர் சூழலிலை பார்த்த அந்தக் கணத்திலேயே எனக்குள் சொல்லிக் கொண்டேன் இந்தப் பெண்ணை எப்படியும் , என்னாலை முடிஞ்ச் அளவுக்குக் காப்பாத்துவேன். நான் ஒன்றாக இருப்போம் என்று சொன்னதும் தவறாக ஒன்றும் நினைச்சு விடாதீங்கள். இருவரும் ஆனந்தனுக்கு அவனது அப்பா, அம்மா இருந்தால் என்ன செய்வாங்களோ அப்படியே எதவிதக் குறையுமில்லாமல் எங்களால் முடிஞ்சதைச் செய்ய வேண்டும். அதுக்காக நாங்களிருவரும் புருசன், பெண்டாட்டியாகத்தான் இருக்க வேண்டுமென்று அர்த்தமில்லை. அப்படி வாழக் கிடைச்சால் அதை நான் மறுக்க மாட்டன். ஆனால் அதுவல்ல என் இப்போதைய விருப்பம். நாங்கள் மூவருமே இந்தப் போரினால் பாதிக்கப்பட்டிருக்கிறம். மனுசங்க என்ர<br />
அடிப்படையில் நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ வேண்டுமென்றுதான் நினைக்கிறன். நீங்கள் இப்பவே இதுக்கான பதிலைச் சொல்ல வேண்டுமென்றில்லை. நல்லா யோசித்து, ஆற , அமர யோசித்துச் சொன்னால் போதும். இந்த முகானை விட்டு போறதுக்குள்ளை சொன்னால் அது போதும். நீங்கள் நல்ல பதிலைச் சொல்லுவீங்களென்று நினைக்கிறன்"<br />
<br />
இவ்விதம் கூறிவிட்டு, சரோஜாவைத் தனிமையில் விட்டுவிட்டு, குடிசையின் வெளியே வந்தான் இதயச்சந்திரன். முதன் முறையாக எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைக் கீற்றொன்று சிந்தையில் தோன்றி மறைந்தது. முடிவு கூடத் தன்னுள் தொடக்கமொன்றினை எவ்விதம் மறைத்து வைத்துள்ளது.<br />
<br />
போர்கள் மட்டும் இல்லையென்றால் இந்தப் பூவுலகுதான் எவ்விதம் ஆனந்தமாக விளங்கும். எந்தவித இன,மத, சாதி வேறுபாடுகளற்று, இந்தப் பூமிப்பந்தின் மானுடர்கள அனைவரும் ஒரு தாய்ப்பிள்ளைகளாக வாழ்ந்திருக்கும் சாத்தியம் ஏற்பட்டால் எவ்விதம் இன்பமாகவிருக்கும்.<br />
<br />
போரே ! போய் விடு!<br />
போரே ! போய் விடு!<br />
போரே ! போய் விடு!<br />
போரே ! போய் விடு!<br />
<br />
ngiri2704@rogers.com </div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-6151358216227959322010-08-03T21:14:00.001-04:002020-05-03T13:30:08.891-04:00சிறகும், உறவும்! - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwQTfnx43wMH-VYrcvkv7Myo4E4rIiNx2Dzl8ZFvbPK8TCh22bCeQktobxSd2pmfFcOUYEUz0Rmgjay_GzcCVyp8HV7X_Z_XIsAh4DzPPaWVqX10y22hDllxqjcj-kiFbc4t43/s1600/piegon_1.png"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5501357943092122930" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwQTfnx43wMH-VYrcvkv7Myo4E4rIiNx2Dzl8ZFvbPK8TCh22bCeQktobxSd2pmfFcOUYEUz0Rmgjay_GzcCVyp8HV7X_Z_XIsAh4DzPPaWVqX10y22hDllxqjcj-kiFbc4t43/s200/piegon_1.png" style="cursor: hand; float: left; height: 125px; margin: 0px 10px 10px 0px; width: 126px;" /></a><br />
<div>
<span style="font-size: 100%;"><b><br /></b></span>1.<br />
<br />
மாதவனின் மனதில் அமைதியில்லை. கடந்த சில வாரங்களாக அவனுக்கும், மனைவி வசுந்தராவுக்குமிடையில் ஏற்பட்டிருந்த ஊடல் நாளுக்குநாள் குறைவதற்குப் பதில் அதிகரித்தவண்ணமேயிருந்தது. கூடலிருந்து ஆரம்பமான ஊடலிது. ஊடலுக்குப் பின் கூடுவதிலுள்ள இன்பம் பற்றிப் பல சங்கக் கவிதைகள் விபரித்துள்ளன. ஆனால் கூடலே ஊடலுக்கான காரணம் பற்றி ஏதாவது சங்கப் பாடல் உள்ளதா? இத்தனைக்கும் வசுந்தரா அவனது தாலி கட்டிய மனைவி. அவனைத் துரத்தித் துரத்தி ஒற்றைக்காலில் நின்று காதலித்து மணம் முடித்த துணைவி.<br />
<br />
அவன் சலிப்புற்றிருக்கும் நேரங்களீலெல்லாம தன் பார்வையால், சொல்லால், மயக்கும் கண்களால், புன்னைகையால், அரவணைப்பால் அவன் சலிப்பைப் போக்கும் கலையில் வல்லவள். அவளா இப்படி மாறிப் போனாள் என்று சிந்தனையிலாழ்ந்தான் மாதவன். திருமணம் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் அவளேன் இவ்விதம் மாறி விட்டாளென்பது அவனுக்குப் புரியாத புதிராகவிருந்தது. அவனது மனதில் அண்மைக் காலத்துச் சம்பவங்களின் தொகுப்பொன்று ஓடி மறைந்தது.<br />
<br />
எப்பொழுதுமே கலகலப்பாகவிருக்கும் வசுந்தராவின் நடத்தையில் அண்மைக்காலமாகவே ஒரு சிறு மாற்றம். அடிக்கடி தன்பாட்டில் சிந்தனையில் ஆழ்ந்து போய் விடுவாள். அவனுக்கு அது ஒரு வித ஆச்சரியத்தையே தந்தது.<br />
<br />
"என்ன வசந்தி! உமக்கேதாவது பிரச்சினையா? கொஞ்சக் காலமாகவே நானும்தான் பார்க்கிறன் .. நீர் ந்ல்லாத்தான் மாறிப் போட்டீர்.. என்ன பிரச்சினையென்றாலும் என்னட்டை மனதைத் திறந்து சொல்லலாம்தானே"<br />
<br />
அதற்கு அவள் ஒன்றுமே பதில் கூறாமல் மெளனமாகவிருந்தாள். அவன்தான் மீண்டும் கேட்டான்: "என்ன வசந்தி. நான் பேசுறது காதிலை விழுகுதா?"<br />
<br />
அதற்கும் அவள் பதிலெதனையும் கூறாமல் மெளனமே சாதித்தாள். அப்பொழுதுதான் அவனுக்கு அந்த யோசனை வந்தது. அவன் சலிப்பாகவிருக்கும் சமயங்களிலெல்லாம் அவள் எத்தகைய தந்திரங்களைச் செய்து அவனை மாற்றிவிடுவாளோ, அதே மாதிரியான தந்திரங்களை வைத்து அவளையும் மாற்றிவிடவேண்டுமென்று அவன் முடிவு செய்தது அப்பொழுதுதான். கூடலில் இருக்கும் இன்பமே தனி. கூடலுக்கு மயங்காத உயிரினம்தானேது.<br />
<br />
மெதுவாக வசுந்தராவின் பின்புறமாகச் சென்றவன் அவளை அப்படியே தன் மார்புடன் வாரித்தழுவ முயன்றான். அடுத்து நடந்த நிகழ்வுகள் அவனுக்குப் பெரிதும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கூடவே தந்தன. அவன் அவ்விதம் பின்புறமாக வந்து அணைப்பதை எதிர்பார்க்காத வசுந்தரா அன்னியனொருவன் அணைக்க வந்தால் எவ்விதம் எதிர்த்துப் போராடுவாளோ அவ்விதமே அவனைத் தன் பலமனைத்தையும் ஒன்றாக்கிப் பிடித்துத் தள்ளி, அவன் அனைப்பினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டாள்.<br />
<br />
மாதவன் ஒரு கணம் அதிர்ந்தே போனான். அக்கணத்தில் அவள் தன்னையொரு வேற்று மனிதனாகவேக் கருதி நடந்து கொண்டதாக உணர்ந்தான்.<br />
<br />
அதுவே அவனது அதிர்ச்சியின் காரணம். 'இவளுக்கென்ன நடந்து போச்சுது. ஒரு வ்ருசமாய்க் குழந்தை, குட்டியென்று ஒன்றும்<br />
கிடைக்காமலிருக்கிறதாலை ஏதாவது விரக்தி, கிரக்தி அல்லது மன அழுத்தமென்று ஏதாவது மன வியாதி இவளைப் பிடித்தாட்டுகிறதோ?.' அதே சமயம் தன்னை அவள் அவ்விதம் அன்னியனைப் போல் தள்ளியதாலேற்பட்ட ஒருவித சோகம் அவனைப் பிடித்து வாட்டத் தொடங்கியது. அந்த வாட்டத்திற்குரிய சோகமும், அவளது நடத்தையால் ஏற்பட்ட அதிர்ச்சியும் ஒன்று சேர்ந்து தாக்கவே, அவன் அவளத் தன் அணைப்பினிலிருந்து விலக்கினான். தன்னை உயிருக்கு உயிராய் காதலித்து மணந்த துணைவி அவள். அவள் இப்பொழுது தன்னை அன்னியன் ஒருவனைப் போல் நடத்துகின்றாளே. அந்தப் புறக்கணிப்பு அவனுக்கு ஒருவித வேதனையைத் தந்தது.<br />
<br />
அத்துடன் ' ஐ ஆம் சொறி' என்றான்.<br />
<br />
இவ்விதம் தான் கூறியதும் ,அவளேதாவது மன்னிப்பு கேட்பாளென்று எண்ணிய மாதவனுக்கு , அவள் அப்படியெதுவும் கேட்காமல், தவறு செய்தது அவன்தான் என்பது போலவும், அவனது மன்னிப்பு போதுமானதல்ல என்பது போலவுமொரு நிலையில் தலையைத் திருப்பிக் கொண்டு நின்றது மேலும் அதிர்ச்சியையே தந்தது. அவளாகவே திரும்பி வந்தால் மட்டுமே இனி கதைப்பது என்று விரைவாகவே தீர்மானித்துக் கொண்டான். இப்பொழுது அவனை வசுந்தராவின் திடீர் மனமாற்றத்திற்கான காரணங்கள் என்னவாகவிருக்கும் என்பதுபற்றிய எண்ணங்களே ஆக்கிரமிக்கத் தொடங்கின.<br />
<br />
2.<br />
<br />
வசுந்தரா வேலையிலிருந்து வரும்போது மணி மாலை ஏழை நெருங்கி விடும். அவர்கள் வசிப்பது ஸ்கார்பரோவில். அவள் வேலை பார்க்கும் வங்கி இருப்பது டொராண்டோ நகரின் மேற்குப் புறத்தின் எல்லையில் ரோயல் யோர்க் வீதியும், புளோர் வீதியும் சந்திக்கும் இடத்திற்கண்மையில். வேலை முடிந்து பாதாள் இரயிலேறி , 'ரபிட் ட்ரான்சிட்', பஸ்களென மாறி மாறி ஏறி இறங்கி வரவேண்டும். இந்த விடயத்தில் அவன் கொடுத்து வைத்தவன்.<br />
<br />
அவன் தகவல் தொழில் நுட்ப நிபுணனாக, ஒப்பந்த அடிப்படையில், அத்துறையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர்களினூடு சுய தொழில் செய்து கொண்டிருந்தான். அடிக்கடி பணி புரியும் நிறுவனங்கள் மாறிக் கொண்டிருந்தாலும், அதனைத்தான் அவனும் விரும்பினான், பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்வதன் மூலம் அதிக அளவில் தொழில் நுட்ப அனுபவங்களைப் பெறக் கூடியதாகவிருந்தது. அனுபவங்களுக்கேற்ப ஒவ்வொரு முறையும் ஊதியத்தையும் அவனால் அதிகரிக்க முடிந்தது. 'வெப் சேர்வர்' நிர்வகிப்பதில், அதற்குரிய 'அப்ளிகேசன்களை' நிறுவுதற்குரிய 'சேர்வர்'களை உருவாக்கி, 'அப்ளிகேசன்களை' நிறுவுவது .. இவைதான் அவனது முக்கியமான தொழில். மைக்ரோசாவ்ட்டை மையமாகக் கொண்டு அந்நிறுவனத்தால் உருவாக்கப்படும் மென்பொருள்களைப் பாவித்து மேற்படி சேவைகளை ஆரம்பத்தில் வழங்கியவன் ஒப்பந்த அடிப்படையில் மேலும் பல நிறுவனங்களில் பணி புரிந்ததன்வாயிலாக இன்று லினிக்ஸ்/பிஎச்பி/மை எஸ்குயூஎல், ஐபிஎம் எ.ஐ.எக்ஸ் யுனிக்ஸ்/ வெப் ஸ்பெயர் அப்ளிகேஷன் சேர்வர் எனத் தன் அறிவாற்றலையும், அனுபவத்தையும் வளர்த்தெடுத்திருந்தான். இணையமும் அது பற்றிய பல்வேறு தொழில் நுட்பங்களும் அவனை மிகவும் கவர்ந்தவை. இதனால் அவன் தன் பணியினை மிகவும் இரசித்து, விரும்பி, ஆற்றினான். தற்போது அவன் பணி புரியும் நிறுவனம் அவர்களது<br />
இருப்பிடத்திற்கண்மையில்தானிருந்தது. இதனால் நேரத்துடனேயே அவன் வீடு திரும்பிவிடுவான்.<br />
<br />
அன்றும் அவ்விதமே திரும்பியவன் வீட்டின் பின் வளவில் பிளாஸ்டிக் கதிரையொன்றைத் தூக்கிக் கொண்டு வந்து போட்டமர்ந்தபடியே சிந்தனையிலாழ்ந்தபோது மாலை மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. அவனது சிந்தனை முழுவதையும் வசுந்தராவே ஆக்கிரமித்திருந்தாள். இந்தப் பிரச்சினைக்கொரு முடிவு கட்டினால் நல்லதென்று பட்டது. இவ்விதமே இருவரும் அண்மைய மாற்றங்களுக்கென்ன காரணமென்பது தெரியாமல் , ஒருவிதமான ஒட்டாத வாழ்க்கை வாழ்வதிலும், ஆற அமர யோசித்து, பிரச்சினைகளைப் பற்றி மனந்திறந்து கதைப்பதன் மூலம்தான் தற்போது நிலவும் இறுக்கமான சூழலுக்கொரு தீர்விருக்க முடியுமென்று பட்டது. அவ்விதம் நினைத்ததுமே மனதிலொரு ஆறுதலேற்பட்டது. அது வரையில் வசுந்தரா பற்றிய எண்ணங்களில் மூழ்கிக் கிடந்தவனின் கவனம் அதன்பின்பே சுற்றியிருந்த அந்திச் சூழலின்மேல் திரும்பியது.<br />
<br />
சிவந்திருந்த அந்தி வான் எப்பொழுதுமே அவனைக் கவருமொரு நிகழ்வு. பொதுவாக விரிந்திருக்கும் நீலவான், சுடர் கொழிக்கும் இரவு வான், முகில் மூடி அவ்வப்போது உறுமும் கார்காலத்துக் கருவான்.. இவ்விதம் விரிந்திருக்கும் வானின் பல்வேறு வடிவங்களும், நிகழ்வுகளும் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. இயற்கையை எவ்வளவு இரசித்தாலும் அலுப்பதில்லை. இயற்கையின், படைப்பின் நேர்த்தி மிக்க அழகு எப்போழுதுமே அவனது தாகமெடுத்தலையும் சிந்தனையைத் தூண்டிவிடும் வல்லமை மிக்கது. அவனது பால்யகாலத்தில் காடுமேடென்று அலைந்து திரிவது அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளிலொன்று. அதிலும் கொட்டும் மழை அவனை மிகவும் கவர்ந்ததொரு இயற்கை நிகழ்வு. இரவு முழுக்க , ஓட்டுக் கூரை சடசடக்கக் கொட்டும் மழையையும், கூடவே அருகிலிருக்கும் வயற்புறங்களிலிருந்து ஒலிக்கும் தவளைக் கச்சேரிகளையும் கேட்பதைப் போல் மகிழ்ச்சி தருவது வேறொன்றுமுண்டோ?<br />
<br />
இவ்விதமே அன்றும் அந்தியின் அழகில் மெய்மறந்திருந்த அவனைக் கண்டதும் படையெடுக்கும் மாடப்புறாக்கள் சில தற்பொழுதும் அவனைக் கண்டதும் அருகில் வந்தமர்ந்தபடி அகப்பட்டடதைக் கொறிக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு முறையும் அவன் புறாக்களைக் கண்டதும் அவற்றுக்குப் பாணைச் சிறு சிறு துண்டுகளாக்கிப் போடுவான். அதன் விளைவாக ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் அந்தப் பட்சிகளுக்கும் அவனுக்குமிடையில் ஒருவிதமான உறவும் , பிணைப்பும் ஏற்பட்டிருந்தன. அவற்றின் விளைவாக அந்தப் புறாக்கள் அவன்மேல் எந்தவிதமான ஐயமும், அச்சமும் கொள்வதில்லை. அவனை தங்களது நம்பிக்கைக்குரியதொரு உயிரினமாக அவை கருதின போலும். மாதவன் வீட்டினுள் சென்று கிடந்த பாணொன்றை எடுத்துக்கொண்டு வந்து சிறு சிறு துண்டுகளாக்கி புறாக்களை நோக்கி வீசினான். அவையும் மிகவும் உற்சாகத்துடன் தீனியைத் தேடிக் கொறிக்க ஆரம்பித்தன.<br />
<br />
அவனது கவனம் அவற்றின்பால் திரும்பியது. ஆரம்பத்தில் சாதாரணமாகக் கவனிக்க ஆரம்பித்தவனின் கவனத்தை அவற்றின் நடத்தை மிகவும் கவர்ந்து விடவே மனமொன்றிக் கவனிக்க ஆரம்பித்தான். அத்துடன் உள்ளே சென்று மேலுமொரு பாணொன்றைப் பிய்த்தெடுத்துவந்து சிறு சிறு துண்டுகளாக்கி அவற்றிற்கிட்டான்.<br />
<br />
ஆரம்பத்தில் உண்பதில் கவனத்தைப் பதித்திருந்த ஆண் புறாவொன்றின் கவனம் , அதன் வயிற்றுப் பசி ஓரளவுக்குத் தணிந்ததும், வேறு திசையில் ப்யணிக்க ஆரம்பித்தது. அவற்றிலிருந்த ஆண் புறாவின் அங்க சேட்டைகள் மாதவனுக்கு ஒருவித சிரிப்பையும், இன்பத்தையும் முடிவில் ஆச்சரியத்தையும் தந்தன. தனது வாலைச் சிறிது விரித்து, தரையுடன் தேய்த்தபடி, கழுத்துப்புறத்துச் சிறகுகளைச் சிலிர்த்தபடி, கழுத்தை மேலும் கீழுமாக விரைவாக மேலும் கீழும் அசைத்தபடி அந்த ஆண் புறா அருகில் உண்பதில் கவனமாயிருந்த பெண் புறாவின் கவனத்தைக் கவர முயன்றது. துணையுடன் கூடுவதற்காக அது செய்த தந்திரமும், அதன் ஒரு விதமான நடன அசைவும் அவனை மேலும் கவரவே அவற்றைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் மாதவன். ஒவ்வொரு முறையும் ஆண் புறாவின் முயற்சியினை அந்தப் பெண் புறா கவனித்ததாகத் தெரியவில்லை. அலட்சியம் செய்தபடியே தன் பாட்டில் விலகி, விலகிச் சென்றபடியே தன் கவனத்தை ஆங்காங்கே சிதறிக் கிடந்த உணவுத் துணிக்கைகளைத் தேடி உண்பதில் கவனமாகவிருந்தது. அவனுக்கு அந்த ஆண் புறாவின் மேல் ஒருவித பரிவு கலந்த உணர்வு ஏற்பட்டது. அதே அதன் முயற்சிகளை அலட்சியம் செய்து கொண்டிருந்த அந்தப் பெண் புறாவின்மேல் சிறிது ஆத்திரமாகக் கூட வந்தது. 'என்ன பெண்ணிது... கொஞ்சம் கூடத் துணையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளமுடியாமல்... சரியான அகங்காரம் பிடித்த பெண்ணாகவிருக்க வேண்டும்' இவ்விதம் தனக்குள்ளாகவே அவன் கூறிக்கொள்ளவும் செய்தான்.<br />
<br />
ஆனால் அந்த ஆண் புறா தனது பெண் துணையின் புறக்கணிப்பைப் பற்றியும் சிறிதும் அலட்டிக்கொள்ளவேயில்லை. விடாமல் , சலிக்காமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டேயிருந்தது. அப்பொழுது அவனுக்கு அவனது பால்ய காலத்து நினைவொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவனது அம்மா எப்பொழுதுமே வீட்டில் கோழி வளர்க்கத் தவறியதேயில்லை. அப்பொழுதெல்லாம் முற்றத்தில் அடிக்கடி பெட்டைக் கோழிகளைத் துரத்தித் துரத்தித் தம் ஆண்மையினை அகங்காரத்துடன், பலவந்தமாக வெளிப்படுத்தும் சேவல்களின் ஞாபகம் இச்சமயத்தில் தோன்றியது. அவை இந்தப் புறாக்களிலிருந்து எவ்வளவு வித்தியாசமானவையென்று சடுதியாக பொறியாக அவன் சிந்தையில் எண்ணமொன்று ஓடி மறைந்தது. குறைந்தது பத்து தடவைகளாவது அந்த ஆண் புறா அந்தப் பெண் புறாவினைக் கவருவதற்குத் தன்னால் முடிந்தவரையில் முயற்சி செய்திருக்கும். ஆனால் ஒருமுறை கூட தன் துணையின் அலட்சிய நடத்தைக்காக அது ஆத்திரமுற்று, சேவலைப் போல் துரத்திப் பலவந்தமாகத் தன் வேட்கையினைத் தணிக்க முயற்சி செய்யவேயில்லை என்ற விடயம் அப்பொழுதுதான் அவனது கவனத்தில் உறைத்தது. அந்த ஆண் புறாவின் மேல் மிகுந்த மதிப்பும், பெருமிதமுமேற்பட்டன.<br />
<br />
இந்தப் பெண் புறா ஏன் தன் ஆண் கூடுவதற்கு முயன்றும் அலட்சியம் காட்டுகின்றது. எவ்வளவோ காரணங்களிருக்கக் கூடும். அதன் உளவியல், உடலியல் ரீதியிலான எத்தனையோ காரணங்கள் இருக்கக் கூடும். அதற்காக, அதன் அலட்சியத்திற்காக அந்த ஆண் புறா தன் மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளவில்லையே. எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும் வசுந்தராவின் நடத்தையில் அந்தக் கலகலப்பு காணாமல் போனதென்றால் அதற்கேதாவது உளவியல், அல்லது உடலியல்ரீதியிலான காரணங்கள் இருக்கக் கூடும். அவற்றைக் கண்டறிவதற்கு, புரிந்து கொள்வதற்கு அவன் எப்பொழுதுதாவது முயன்றதுண்டா? அதனைவிட்டுவிட்டு, அவளுடன் பலவந்தமாகக் கூடுவதற்கு முய்னற தன் செய்கையையும், கூடுவதற்குக் கூட கண்ணியத்தைக் கடைப்பிடித்த, துணையின் மனநிலையினைக் கவனத்திலெடுத்து அதனை வற்புறுத்தாத அந்த ஆண் புறாவின் நடத்தையையும் ஒரு முறை மனது ஒப்பிட்டுப் பார்த்தது. வெட்கித்துப் போனான்.<br />
<br />
( யாவும் கற்பனை )<br />
<br />
மின்னஞ்சல்: ngiri2704@rogers.com</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-30326934702419829662010-07-30T15:08:00.002-04:002010-07-30T15:12:54.330-04:00நான் அவனல்லன்! - வ.ந.கிரிதரன் -<div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTFg_PiUrZXCQrzsRUsRGFCvZNnmt9o8cSSap0kAXottMJTV7-9st8Xq4P2fRgUG6WBDAVh3M_iRvg1j5OpAcC6wuBnJOij5ZJ-DR5IcnsvxRqyZhYh598JpRcnnC4kRCjXYx0/s1600/manimekalai_book_thamiz.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 96px; FLOAT: left; HEIGHT: 140px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5499779218102546498" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTFg_PiUrZXCQrzsRUsRGFCvZNnmt9o8cSSap0kAXottMJTV7-9st8Xq4P2fRgUG6WBDAVh3M_iRvg1j5OpAcC6wuBnJOij5ZJ-DR5IcnsvxRqyZhYh598JpRcnnC4kRCjXYx0/s200/manimekalai_book_thamiz.jpg" /></a>சென்னையில் இயங்கும் மணிமேகலை பிரசுரம் 'முத்தமிழில் நல் முத்துக்கள்' என்றொரு நூலினை வெளியிட்டுள்ளார்கள். இதன் ஆசிரியர்களாக V.N.கிரிதரன், S.N.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். நீண்டகாலமாக வ.ந.கிரிதரன் (V.N.Giritharn) என்னும் பெயரில் எழுதிவருகின்றேன். மேற்படி நூலினை நான் எழுதவில்லை. ஏனென்றால் நான் அவர்களுக்கு எனது ஆக்கங்கள் எதனையும் வெளியிடுவதற்குக் கொடுக்கவில்லை. மேலும் மேற்படி நூலினை நான் இதுவரை வாசிக்கவில்லை. இணையத்தில் விருபா தளத்தில் கண்ட நண்பரொருவர் கூறித்தான் தெரிய வந்தது. நான் எனது ஆக்கங்கள் எதனையும் அவர்களுக்குப் பதிப்பிக்கக் கொடுக்காததனால் அந்த நூலிலுள்ள படைப்புகளை எழுதியவர் இன்னுமொரு கிரிதரனாக இருக்க வேண்டுமென நினைக்கின்றேன். அல்லது எனது ஆக்கங்கள் சிலவற்றை இணையத்திலிருந்து எடுத்து வெளியிட்டார்களோ என்பதும் எனக்குத் தெரியாது. மேற்படி நூலினை இதுவரையில் பார்க்காததனால் இரண்டிற்கும் சாத்தியங்களுள்ளதால், மேற்படி நூலினை வாசித்தவர்கள் யாராவதுதான் அறியத்தர வேண்டும். இங்கு நான் இந்த விடயத்தைத் தெளிவு படுத்துவதற்குக் காரணமுண்டு. அது பெயர்க் குழப்பம்தான். தமிழ் இலக்கிய உலகில் என்னை அறிந்தவர்கள் பெயரைப் பார்த்ததும் நான் எழுதியதாகக் கருதிவிடுவார்கள். மணிமேகலை பிரசுரம் போன்ற பதிப்பகங்கள் நூல்களை வெளியிடும்போது இவ்விதம் பெயர்க் குழப்பங்கள் ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பெயரை வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது தேவையற்ற பெயர்க் குழப்பங்களைத் தவிர்க்கும். மேலும் மணிமேகலை பிரசுரத்தினர் மேற்படி பெயரில் மேலும் எத்தனை நூல்களை வெளியிட்டிருக்கின்றார்களோ தெரியவில்லை. நான் எனது நூல் எதனையும் மணிமேகலை பதிப்பகம் மூலம் இதுவரை வெளியிடவில்லை என்பதை அறியத்தருகின்றேன். ஒரு பதிவுக்காகவும், விளக்கத்திற்காகவும் இதனை அறிவிப்பது அவசியமானதென்று கருதுகின்றேன். சங்கர்லால், தமிழ்வாணன் எனத் துப்பறியும் நிபுணர்கள் நடமாடும் நாவல்களைப் படைத்த தமிழ்வாணனின் புதல்வர்கள் நடாத்தும் நிறுவனத்தால் ஏற்கனவே நீண்டகாலமாக எழுதும் என் பெயரைப் பாவித்து நூல் வெளியிடுவதில் விளையக் கூடிய தேவையற்ற குழப்பங்களை உணரமுடியாமலிருப்பது வியப்பிற்குரியது. தந்தையின் நாவல்களில் வருவதைப்போல் சிறிது துப்பறிந்திருந்தால் ஏற்கனவே மேற்படி பெயரில் ஒருவர் எழுதுவதைக் கண்டுபிடித்திருக்கலாம். தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.<br /><br />- வ.ந.கிரிதரன் -<br />ngiri2704@rogers.com<br /><br />********************************<br /><br />இது பற்றி மணிமேகலை பதிப்பகத்தாருக்கு அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து (அவர்களது பதில் இன்னும் வரவில்லை) சில பகுதிகள்:<br /><br />வணக்கம் பதிப்பகத்தாரே,<br />உங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட 'முத்தமிழில் நல் முத்துகள்' என்னும் நூலின் ஆசிரியர்களிலொருவராக V.N.கிரிதரன் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக வ.ந.கிரிதரன் (V.N.Giritharan) எழுதி வருகின்றேன். இவ்விதமாக நீங்கள் V.N.கிரிதரன் என்னும் பெயரைப் பாவிப்பது பெயர்க் குழப்பங்களை ஏற்படுத்துமென்பதால் எதிர்காலத்தில் கிரிதரன் போன்ற பெயர்களைப் பாவிப்பீர்களென்றால் பெயர்க்குழப்பங்களை அதன் மூலம் தவிர்த்துக்கொள்ளலாம். இதனை நீங்கள் கருத்தில் கொள்வீர்களென நினைக்கின்றேன். மேலும் மேற்படி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள V.N.கிரிதரன் பற்றிய மேலதிக விபரங்களைத் தந்துதவிட முடியுமா?<br /><br />- வ.ந.கிரிதரன்:</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-12452704767359281462010-07-30T14:58:00.003-04:002010-07-30T15:04:12.798-04:00எதிர்காலச் சித்தன்! _ வ.ந.கிரிதரன் -<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5tlJ2iSrRBbAz4TR1STnSC2T2wvYJzPXFNMzzADsaAlGuJYIrYZePHoHb_DHYF5Am0tU5RhgVroPUjIK4NVrS6K_rMwOyjSeSfpzqXSRZP5AN1wMS7ZgySF5pB-1tooLCTDmJ/s1600/man.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 56px; FLOAT: left; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5499776840287361490" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5tlJ2iSrRBbAz4TR1STnSC2T2wvYJzPXFNMzzADsaAlGuJYIrYZePHoHb_DHYF5Am0tU5RhgVroPUjIK4NVrS6K_rMwOyjSeSfpzqXSRZP5AN1wMS7ZgySF5pB-1tooLCTDmJ/s200/man.jpg" /></a><br /><div><span style="font-size:78%;">[ ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. அதனைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை. மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவ்தை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது.]<br /></span><br /><span style="font-size:100%;"><span style="font-size:85%;">எதிர்காலத்திரை நீக்கி நான் காலத்தினூடு பயணித்தபொழுதுதான் அவனைக் கண்டேன். அவன் தான் எதிர்கால மனிதன். இரவியையொத்த ஒளிமுகத்தினைக் கொண்டிருந்த அந்த எதிர்கால மனிதனின் கண்களில் கருணை ஊறியிருந்தது. அவன் கூறினான்: "நிகழ்கால மனிதா! எதிர்கால உலகமிது. இங்கேன் நீ வந்தாய்? இங்கு நீ காணும் பலவும் உன்னை அதிர்வெடி போல் அலைக்கழிக்குமே. அப்பனே! அதனாலே நிகழ்காலம் நீ செல்க!"<br /><br />அறிவினில் அடங்காத தாகம் மிக்கவனாக எதிர்காலம் ஏகிட்ட என்னைப் பார்த்து இந்த எதிர்கால மனிதன் கூறுகின்றான் 'நிகழ்காலம் நீ செல்க" என்று. அவனுரையால் என் அறிவுத் தாகம் அடங்குமோ? அதனால் நான் பின்வருமாறு கூறினேன்: " திரண்டிருக்கும் அறிவின் சேர்க்கை வேண்டும் செந்தமிழன் நான். குற்றமேதுமற்ற பேராண்மைக் கோட்டை என்னை மலைவுறுத்தாது இந்த எதிர்காலம். ஆதலால் கவலையை விடு நண்பனே!"<br /><br />இவ்விதம் கூறிவிட்டு குறுகுறுத்த விழிகளையுடைய சாமர்த்தியசாலியான அந்த எதிர்கால மனிதனின் பெயரென்ன என்று வினவினேன்.<br /><br />அதற்கவன் பின்வருமாறு கூறினான்: "எனக்கு முன்னே சித்தர்கள் பலர் இருந்தாரப்பா! நானுமொரு சித்தன். எதிர்காலச் சித்தன்..... நிகழ்காலத்தவரான உன்னவரோ உனக்கு முன்னர் வாழ்ந்திட்ட சித்தரல்லாது உன் காலச் சித்தரையும் ஏற்காரப்பா. இதனை நான் எந்தவித மனக்குறையின் காரணமாகவும் கூறவில்லை. உன் நிகழ்காலத்துக் காசினியின் பண்பிதுதானே. அதுதான் அவ்விதம் கூறினேன்."<br /><br />இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் மேலும் எனக்குப் பல கருத்துகளைப் பகன்றான். சித்தனவனுரைதனை இந்த மாநிலத்தாரும் அறிதற்காய் இங்கு நான் விளக்கிக் கூறுகிறேன்:<br /><br />" பெரும்போர்கள் விளையும் உன் நிகழ்காலத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் பல்வகைப் பேதங்களுண்டு. ஒற்றுமையாக இணைய விரும்பும் மானுடரை ஒன்றாக இணையவிடாது செய்யும் அநியாய பேதங்களைக் கூறுவேன் கேள். துண்டுபட்டிருக்கும்தேசங்கள், தூய்மையான இனம், மதம், மொழி, மதமென்ற குறுகிய ம்னப்பாங்குள்ள கோட்பாடுகள் .. இவை போன்ற பேதங்களெல்லாம் உனது நிகழ்கால உலகில் உள்ளன. அவை எல்லாம் அர்த்தமில்லாப் பிரிவினைகள். அவை யாவும் சாகும் எனது எதிர்கால உலகில். ஒன்றுபட்டு இவ்வுலகம் ஒற்றையாகும். ஒரு மொழி கொண்ட ஓரரசு பிறக்குமப்பா. அரசுகளெல்லாம் ஒழிந்து இவ்வுலகில் ஓரரசு உண்டாகும். அறத்தினை வலியுறுத்தும் ஒரு மதமே உலகெல்லாம் நிலவும். விரசங்களையும், விகற்பங்களையும் வ்ளர்க்குமொழிகள் எல்லாம் வீழ்ந்து ஒருமொழியே பொது மொழியாக இவ்வுலகில் இருக்கும் செந்தமிழ் மட்டுமல்ல, சிங்கள மொழியும் சாகும். இச்செகமெல்லாம் ஒரேயொரு மொழியே தலைதூக்கி நிற்கும். எந்த மொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பீரானால் என் பதில் எண்ணிக்கை அதிகம் கொண்ட மொழியே அதிககாலம் நின்று நிலைக்கப் போகின்றது. அந்த மொழியே அரசாளும். எதிர்காலத்தில். உலகத்து மக்களெல்லாரும் தம்மை ஏற்றத்தாழ்வுகளற்ற மனித இனம் என்றே கருதுவர். தம்மை மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகளைக் கொண்டு பிரித்துப் பார்க்கும் வழக்கம் எனது எதிர்கால உலகில் இல்லை. அரசர்கள் , ஏழைகள் , பணக்காரர்கள் போன்ற அத்தனை பேதங்களும் எதிர்கால உலகில் ஒழிந்து விடும். எம் தமிழர் இனம மட்டுமல்ல, பிற இனங்களும் சாகும். நாடெல்லாம் மனித இனமென்ற ஒன்று மட்டுமே தலை தூக்கும். எல்லோரும் மானுடர்கள். பிரிவினைகள் ஒழிதல் நன்றுதானே."<br /><br />இவ்விதம் வருங்காலச் சித்தன் கூறினான். பின்னர் அவன் மேலும் கூறுவான்: "உன்னவரான நிகழ்காலச் செந்தமிழர் இவற்றைக் கேட்டால் , நீசனே! இவ்விதமாக இங்கு உரைக்காதே. செந்தமிழே உலகின் புகழ்மொழியாய், உலகத்தின் பொதுமொழியுமாகும் புதுமைதனைக் காண்பீர்கள் என்று கூறிடுவார்கள். எதிர்காலச் சித்தனான எனது உரையினை இகழ்ந்திடுவார்கள். இம்மியளவேணும் மானமில்லா மூர்க்கன் நிகழ்காலத்தில் மட்டுமிருந்திருந்தால் என்ன செய்வதென்றறிந்திருப்போம். அவன் நெஞ்சு பிளந்தெறிந்திருப்போம் என்றுமிகழ்ந்திடுவார்கள்"<br /><br />இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் சிறிது நேர மெளனத்திற்குப் பின்னர் மேலும் கூறுவான்:" பிறப்பாலே நான் தாழ்வுரைக்க மாட்டேன். பிறப்பாலே என் மொழியே சிறந்ததெனச் சொல்லேன். பிறப்பென்றன் வசமோ? அது என் வசமில்லை. அது பிரமத்தின் வசமல்லவா? இந்நிலையில் எவ்விதம் நான் அவ்விதம் பிறப்பாலே பெருமையுற முடியும்? பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பெருமையே. இத்தாலியில் பிறந்திருந்தால் இத்தாலி மொழி சிறப்பே. வெறி மிகுந்த உனது நிகழ்காலத்தவர் இதனை உணரமாட்டார். விழழுக்கே பெருங்கலகம் விளைவிக்கும் உன்னவர்கள் செய்வதென்ன? அறிவற்று துன்பங்களை அனைவருக்கும் விளைவிக்கின்றார்கள். ஐயய்யோ! இவரது மடைமையினை என்னவென்று கூறுவேன்?"<br /><br />எதிர்காலச் சித்தனின் கூற்றிலுள்ள தர்க்கம் என்னைப் பிரமிக்க வைத்தது. புது யுகத்தின் குரலாக அவ்னது குரல் ஒலிப்பதாக எனக்குப் பட்டது. இவ்விதம் அவன் கூறியதன் பின்னர் நான் அவனைப் பார்த்து இவ்விதம் கேட்டேன்: " எதிர்காலச் சித்தா! உனது இனிய மொழி கேட்டேன். மதி கெட்டு எம்மவர்கள் வாழும் நிகழ்கால உலகிற்கு என்னுடன் நீ வந்து புதிய வாழ்வினையேற்றினாயென்றால் அவரது எண்ணங்கள் விரிவடையும். அதற்காகவாவது நீ நிகழ்காலம் வரவேண்டும். அதுவே எனது விருப்பம். அதுவே பிளவுகளால் முட்டி மோதிக்கொண்டிருக்கும் நம்மவர் ஒன்றுபட்டுச் சிந்திக்க உதவும்."<br /><br />இவ்விதமாக நான் அவனை இறைஞ்சி நின்றேன். அதனைக் கண்ட எதிர்காலச் சித்தனின் செவ்விதழ்கள் மெதுவாகத் திறந்தன. அங்கே மென்முறுவலொன்று பிறந்ததைக் கண்டேன். அத்துடன் மீண்டும் அந்த வருங்காலச் சித்தன் என்னைப் பார்த்து கீழுள்ளவாறு கூறலானான்: "காலக் கடல் தாவி நீ இங்கு வந்திருக்கின்றாய். அதன் காரணமாக எது உண்மையான அறிவென்பதைக் கண்டாய். ஆனால் நிகழ்கால மயக்கத்தில் வாழும் உன் நிகழ்கால மானுடர் உண்மையான ஞானத்தினை, அறிவினைக் காண்பாரோ? காணார்களப்பா! காலத்தைத் தாண்டி காசினிக்கு நான் வந்தால் கட்டாயம் என்னை அவர்கள் ஏற்றி மிதித்திடுவார்கள். பகுத்தறிவுக்காகக் குரல்கொடுத்த சோக்கிரதரையே அன்று ஆலத்தைத் தந்து கொன்றவர்கள் உனது மானுடச் சோதரர்களன்றோ? ஆதலினால் நிகழ்கால மானுடனே! அங்கு நான் வரேன். நீ மீண்டும் அங்கு செல்வாயாக"<br /><br />இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தனின்பால் என்னிடத்தில் அன்பு ஊற்றெடுத்தது. அந்த அன்பு மீதுறவே அவனது கமலம் போன்ற பாதங்களைத் தொட்டுக் கண்களிலொற்றி விடைபெற்றேன். அவன் மட்டும் என் நிகழ்காலத்திற்கு வருவானென்றால் எவ்விதம் நன்றாகவிருக்கும். அறிவுக் கடலான அவனால் , ஞானசூன்யங்களாக விளங்கும் நம்மவர்கள் எவ்வளவு பயன்களைப் பெறமுடியும். அறியாமையிலிருக்கும் நம்மவர் அவனுரையினை அறிவதற்குரிய பக்குவமற்றுத்தானே இன்னும் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கன வருடங்களுக்கு முன்னர் விடத்தைக் கொடுத்து சோக்கிரதரைக் கொன்றார்களே அன்றைய ஆட்சியாளர்கள். எதற்கு. இன்றும் அதுதானே நடக்கிறது. இந்நிலையில் அவன் வர மறுத்ததிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது."<br /><br />அச்சமயம் .... என்ன ஆச்சரியம்! காலத்திரை நீங்கிற்று.<br /><br />பாதகர்களின் முழு மடைமைப் போர்களால் சூழந்துள்ள இந்தப் பாருக்கு, பூமிக்கு, நிகழ்காலத்துக்கு நான் மீண்டும் வந்தேன். வந்தவன் எங்கும் தீதுகளே நடம்புரியும் நிலை கண்டேன்; திடுக்கிட்டேன். பிளவுகளற்ற , மானுடர்களென்றரீதியில் இணைந்து, வாழும் எதிர்காலச் சித்தனுலகம் பற்றி ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். மடைமையில் மூழ்கிக் கிடக்கும் இந்த நிகழ்கால உலகமெங்கே! அவனது உலகமெங்கே!<br /><br />என்றிவர்கள் உணமை காண்பாரோ?</span><br /><br /></span><span style="font-size:78%;">ngiri2704@rogers.com<br />மூலம்: எதிர்காலச் சித்தன் பாடல்! - அ.ந.கந்தசாமி<br />http://www.geotamil.com/pathivukal/poems_ank.html#ethirkalam </span></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-87527096046182121532009-10-16T13:00:00.002-04:002020-05-03T13:29:17.393-04:00சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5k8uzV1K3yMSFe860Q5KfI1hwFC_a6jYUT7QkxNrHAJ31y8CwaSptZOjDaO0h2O3Bg7X9DvaEuWu1LYUf2aYuJ09ohRNID7bqqv91xYXcEpYmTC1bdlyGgp7LyNiDlchG5Np-/s1600-h/writing_letter.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5393245365462034562" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5k8uzV1K3yMSFe860Q5KfI1hwFC_a6jYUT7QkxNrHAJ31y8CwaSptZOjDaO0h2O3Bg7X9DvaEuWu1LYUf2aYuJ09ohRNID7bqqv91xYXcEpYmTC1bdlyGgp7LyNiDlchG5Np-/s200/writing_letter.jpg" style="cursor: hand; float: left; height: 98px; margin: 0px 10px 10px 0px; width: 108px;" /></a> <br />
<div>
<span style="font-size: 78%;">நான் சிறுவனாகவிருந்த காலத்திலிருந்து அவ்வப்போது நாவல்களென்ற பெயரில் எழுதிக் கொண்டுதான் வருகின்றேன். அவற்றில் பல தற்போது என்னிடமில்லை. இருந்தாலும் என் எழுத்து வாழ்க்கையில் அவற்றுக்கும் முக்கியமானதோரிடம் என்னைப் பொறுத்தவரையிலுண்டு என்பதால் அவற்றின் முக்கியத்துவம் என்னைப் பொறுத்தவரையில் எந்தவிதத்திலும் குறைந்து விடப்போவதில்லை. என் பால்யகாலத்தில் தமிழகத்தின் வெகுஜனசஞ்சிகைகள், பத்திரிகைகளால் நிறைந்திருந்த வீட்டுச் சூழலே அந்தவயதில் என் எழுத்தார்வத்தைத் தூண்டிவிட்ட முக்கியமான காரணிகளிலொன்று. இதனால்தான் என்னைப் பொறுத்தவரையில் எப்போதுமே இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளும் ஏதோ ஒரு வகையில், பல்வேறு காரணங்களால், பல்வேறு காலகட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக, தேவையாக இருக்கின்றன. நான் அடிக்கடி கூறுவதுபோல் ஒரு குழந்தை எடுத்த எடுப்பிலேயே எழுந்து நின்று நடக்கத் தொடங்குவதில்லை. உருண்டு, தவழ்ந்து பின்னரே பலவேறு முயற்சிகளுக்குப் பின்னர் எழுந்து நின்று சிரிக்கத் தொடங்குகிறது. எழுந்த எடுப்பிலேயே எல்லோரும் ஞானசம்பந்தரைப் போல் மூன்று வயதிலேயே உமையம்மையின் முலைப்பாலுண்டு ஞானம்பெற்று கவி புனையத் தொடங்கிவிடுவதில்லை. ஒரு படைப்பாளியோ அல்லது இலக்கிய ஆர்வலரோ படிப்படியாகத்தான் வளர்ச்சி பெற்று வருகின்றார்கள். ஆரம்பத்தில் அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் அல்லது பத்திரிகைகளின் பாலர் மலர்களில் தொடங்கிப் பின்னர் படிப்படியாக வெகுசன சஞ்சிகைகள், பத்திரிகைகளினூடு வளர்ந்து பின்னர் மெல்ல மெல்ல தி.ஜா. , புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ராமகிருஷ்ணன் என்று தங்களது இலக்கியப் படைப்புகளினூடான வளர்ச்சியைப் படிப்படியாக அடைகின்றார்கள். அதனால்தான் என்னைப்பொறுத்தவரையில் இத்தகைய வெகுசனப் படைப்புகளும் இலக்கியத்தின் முக்கியமானதோர் பகுதியாக விளங்குகின்றன. எல்லாப் பிரபலமான, தரமான படைப்பாளிகள் எல்லோருமே தததமது வாழ்க்கையில் வெகுசன இலக்கியப் படைப்புகளினூடுதான் வளர்ந்து வந்திருப்பார்கள். அவர்கள் பலரின் நினைவுக் குறிப்புகள் மற்றும் சுயசரிதைகள் பலவற்றின் வாசிப்பு இதனைத்தான் உறுதி செய்கின்றன. ஒரு இலக்கிய ஆர்வலரின் அல்லது படைப்பாளியின் வாசிப்பானது பலவேறு படிகளினூடாகப் பரிணாம வளர்ச்சிபெற்று வருவதுதான் இயற்கை. அது அம்மா அம்புலிமாமா காட்டி பற்சோறு ஊட்டுவதிலிருந்து தொடங்கி, பாலர் கதைகள், வெகுசன இலக்கியப் படைப்புகளென்று தொடங்கிப் பின்னர் படிப்படியாக காப்கா, உம்பத்தே ஈகோவென்று விரிவடைகின்றது. அதற்காக எல்லோருடைய வாசிப்புமே இவ்விதமாக முழுமையாக பரிணாம வளச்சியடைந்து விடுகின்றது என்பதில்லை. ஆனாலும் பலவேறு தரப்பினரின் வாசித்தலுக்கும் ஏதோவொரு வகையான இலக்கியப் போக்கின் தேவை எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றது.<br /><br /><b><span style="font-size: 85%;">ஹா! ஹா! ஹா!</span></b>என் பாலயப் பருவத்தில் என் அப்பாவும் அம்மாவும் அவ்வப்போது ஆனந்தவிகடனில் வெளிவந்த ஜெயகாந்தன் படைப்புகளைப் பற்றி அடிக்கடி விவாதித்துக் கொள்வார்கள். குறிப்பாக ஆனந்தவிகடனில் அன்றைய காலகட்டத்தில் ஜெயகாந்தனின் பல சிறுகதைகள், முழுநாவல்கள் முத்திரைக் கதைகளாக வெளிவந்துகொண்டிருந்தன. 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'கோகிலா என்ன செயுது விட்டாள்?', 'யாருகாக அழுதான்?', 'உன்னைபோல் ஒருவன்', 'அக்கினிப் பிரவேசம்' இவ்விதம் பல படைப்புகள அன்றைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' போன்ற நாவல்களை விகடனும், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்ற நாவல்களைத் தினமணிக் கதிரும் வெளியிட்டிருந்த காலகட்டம். அன்றைய காலகட்டத்தில் அதுவரையில் மூன்று பாகங்களுடன் வெளியாகிக் கொண்டிருந்த தொடர்கதைகளின் நீளம் ஓரளவுக்குக் குறைந்திருந்தது. அறுபதுகளில் வெளியாகும் பெரும்பாலான வெகுசன சஞ்சிகைகளில் நிச்சயமாக மூன்று பாகங்களுக்குக் குறையாமல் தொடர்கதைகள் வெளியாவதில்லை. நான் கூறவந்ததென்னவென்றால் இவ்விதமாக வெகுசன சஞ்சிகைகளும், படைப்புகளும் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டமொன்றில்தான் நான் வாசிக்கத் தொடங்கியிருந்தேன்; எழுதத் தொடங்கியிருந்தேன். வெகுசன இதழ்களில் வெளியான தொடர்கதைகளை வாராவாரம் காத்திருந்து மக்கள் வாசித்தார்கள். ஓவ்வொரு சஞ்சிகையும் போட்டி போட்டுக் கொண்டு பிரபல எழுத்தாளர்களின் தொடர்கதைகளைப் பாகங்களில் வெளியிட்டுக் கொண்டிருந்த காலகட்டமது. நா.பா, ஜெகசிற்பியன், அகிலன், சாண்டிலயன் போன்றோரது தொடர்கதைகள் பெரும்பாலும் மூன்று பாகங்களில் வெளியான காலமது. அவ்விதமானதொரு சூழலின் பாதிப்பால் அன்றைய காலகட்டத்தில் என் பாடசாலை அப்பியாசப் புத்தகங்களில் பல தொடர்கதைகளை எழுதிக் குவித்தேன். அவற்றிலொன்று 'மறக்க முடியுமா?'. அதைவிட இன்னும் பல குறுநாவல்கள். அவற்றிலொன்று: 'மழைப் பெய்து ஓய்ந்தது'. இவற்றின் முழுக் கதையும் தற்போது ஞாபகத்திலில்லை. இருந்தாலும் 'மழை பெய்து ஓய்ந்தது'. என்னுக் கதையின் ஆரம்பமும், முடிவும் மட்டும் இன்னும் ஞாபகத்திலுள்ளன. அந்தக் கதையின் ஆரம்பத்தில் கதாநாயகன் மிகவும் பலமாக 'ஹா ஹா ஹா'வென்று குரலெடுத்துச் சிரிப்பான். ம்ழை பெய்யத் தொடங்கியிருக்கும். அதுவொரு மர்மக் கதை. கதையின் இறுதியில் சிக்கல் அவிழ்ந்து, மழையும் பெய்து ஓய்ந்திருக்கும். கதாநாயகன் மீண்டும் பலமாகக் 'ஹா ஹா ஹா'வென்று சிரிப்பதுடன் கதை முடிந்திருக்கும். அதனைப் படித்துவிட்டு அப்பா பலமாகக் 'ஹா ஹா'வென்றுச் சிரித்தார். அப்பொழுது எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அடுத்தவீட்டு மாமியும் அன்றைய என் வாசகர்களிலொருவர். என் கதைகளை வாசித்துவிட்டுக் குறிப்பாக அந்த 'மழை பெய்து ஓய்ந்தது' கதையினைப் படித்துவிட்டு பலமாகக் 'ஹா ஹா'வென்று சிரித்தபடியே வந்து பாராட்டுத் தெரிவித்தார். நல்லவேளை, அந்த 'மழை பெய்து ஓய்ந்தது' கதை தற்போது என்னிடமில்லை. இருந்திருந்தால் அதனைப் படித்துவிட்டு நீங்களனைவரும்கூடக் 'ஹா ஹா ஹா'வென்று கல்கியின் ரவிதாசன் பாணியில் சிரித்துச் சிரித்தே வயிறுகள் புண்ணாகியிருப்பீர்கள். நல்லவேளை தப்பித்தீர்கள்.<br /><br /><span style="font-size: 85%;"><b>சித்தி வீட்டில் கொண்டாடிய சித்திரையும், ஈழநாடும்......</b></span>அவ்விதமாக ஆரம்பத்தில் நாவல்கள் சிலவற்றை எழுதிய நான் அதன் பின்னர் கவிதைகள் சில எழுதுவதில் ஆர்வத்தைச் செலுத்தினேன். தமிழகச் சஞ்சிகைகளில் வெளியான தீபாவளிக் கவிதைகளின் பாதிப்பில் ஓர் அறுசீர் விருத்தமொன்றினை அப்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழநாடு பத்திரிகையின் சித்திரைச் சிறப்பிதழுக்காக என் அப்பாவின் பெயரில் எழுதி அனுப்பினேன் (ஆனால் இதற்கு முன்னர் என் பெயரில் பொங்கல் கவிதையொன்றை சுதந்திரன் பத்திரிகை பிரசுரித்திருந்தது. அது ஒரு சிறுவர் கவிதை. அதுவே அச்சில் வெளியான எனது முதலாவது கவிதை). அன்றைய காலகட்டத்தில் மரபுக் கவிதைகள் பற்றிய போதிய அறிவு இருக்கவில்லை. இருந்தாலும் அப்பாணியில் அமைந்திருந்த ஏனைய பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருந்த கவிதைகளின் பாணியில் (குறிப்பாகத் தமிழக வெகுசன இதழ்களின் தீபாவளி மலர்களில் வெளியான கவிதைகளின் பாணியில்) எழுதி அனுப்பியிருந்தேன். சித்தி வீட்டுக்குச் சித்திரைத் திருநாளன்று செல்வது பற்றி எழுதியிருந்தது ஞாபகத்திலுள்ளது. அதனை ஈழநாடும் நான் எதிர்பார்க்காமலேயே பிரசுரித்தும் விட்டது. அப்பாவும் மகிழ்ச்சியடையக் கூடுமென்று அதனைக் காட்டி அப்பாவிடமிருந்து திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன். அதே சமயம் ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலரில் கவிதைகள், கட்டுரைகளென அவ்வப்போது எழுதத் தொடங்கியிருந்தேன். 'ஆசிரியர்', 'வான்மதி' போன்ற கவிதைகள் சில ஈழநாடு வாரமலரின் மாணவர் மலரில் வெளியாகியிருந்தன (பின்னர் வீரகேசரி, தினகரன், சிந்தாம்ணி, ஈழமணி போன்ற பத்திரிகைகள் புதுக்கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கத் தொடங்கியபொழுது அவ்ற்றில் சுமார் நூறு வரையிலான கவிதைகளை எழுதியிருப்பேன். அக்காலகட்டத்தில் புதுக்கவிதைகளை வீரகேசரி உரைவீச்சு என்னும் தலைப்பில் பிரசுரித்து வந்தது. சிரித்திரனும் நடத்தியதொரு கவிதைப் போட்டியில் "புது'மை'ப்பெண்" என்று எழுதிய சிறு கவிதையொன்று பாராட்டுக் கவிதைகளிலொன்றாகத் தெரிவுசெய்யப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.) உண்மையில் ஈழநாடு பத்திரிகையின் வாரமலர் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதோர் விடயம். என் ஆரம்பகால எழுத்துலகின் பல்வேறு காலகட்டங்களில் ஈழநாடு களமமைத்துக் கொடுத்து ஊக்குவித்திருந்தது மிகவும் மிகவும் முக்கியமானதொரு விடயம். ஆரம்ப்த்தில் மாணவர் மலரில் என் படைப்புகளைப் பிரசுரித்த ஈழநாடு பின்னர் எனது பதினமப் பிராயத்தில் சிறுகதைகள் சிலவற்றையும் பிரசுரித்து ஊக்குவித்திருந்தது. உருவகக் கதையொன்றும் 'நியதி' என்னும் பெயரில் ஈழநாடு பிரசுரித்தது. (அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'வெற்றிமணி' என்னும் சிறுவர் மாத சஞ்சிகையும் எனது மாணவர்காலப் படைப்புகளைப் பிரசுரித்து ஊக்குவித்தது. அப்பொழுது நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். இது தவிர சிரித்திரன் சஞ்சிகை வெளியிட்ட 'கண்மணி' என்னும் சிறுவர் சஞ்சிகையிலும் எனது சிறுவர் கதையொன்று வெளியானது. சிரித்திரனிலும் ஒரு சில சிறுவர் கவிதைகள் வெளியாகியதாக ஞாபகம்). 'மணல் வீடுகள்', 'இப்படியும் ஒரு பெண்', 'அஞ்சலை என்னை மன்னித்துவிடு'... போன்ற சிறுகதைகள் சில திரு. பெருமாளை வாரமலர் ஆசிர்யராகக் கொண்டு வெளிவந்த ஈழநாடு வாரமலர் பிரசுரித்திருந்தது. (தினகரனிலும் 'ஆலமரத்தடியில் பிறந்த ஞானம்' என்னுமொரு எனது இச்சிறுகதை பிரசுரமாகியிருந்தது இச்சமயத்தில் நினைவு கூர்கின்றேன்.) பின்னர் எனது பல்கலைக்கழகக் காலகட்டத்தில் 'நல்லூர் இராஜதானி', மற்றும் யாழ்நகரில் காணப்பட்ட பழமையின் சின்னங்கள் பலவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி நான் எழுதிய சில கட்டுரைகளையும் பிரசுரித்திருந்தது. அன்றைய காலகட்டத்தில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுடன் ஒரு சில நாட்கள் யாழ்நகர முழுவது மேற்படி சின்னங்களைப் பார்க்கத் திரிந்தது ஞாபகத்திற்கு வருகின்றது. எந்நேரமும் வாய்க்கு வாய் 'ராசா' , 'தம்பி' என்று அழைத்து உரையாடலினைத் தொடர்வது அன்றைய காலத்தில் அவரது வழக்கமாயிருந்தது. இந்த வகையில் அப்பொழுது யாழ் பழைய சந்தையிலிருந்த கங்கா சத்திரம்' பற்றி 'பழமையின் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதன் பற்றிய' எனது ஈழநாடுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அக்கட்டுரை வெளிவந்து சிறிது காலத்திலேயே அந்தக் 'கங்கா சத்திரம்' யாழ் மாநகர சபை நிர்வாகத்தால் இடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பல வருடங்கலின் பின்னர் கவிஞர் ஜெயபாலனை தொராண்டோவில் சந்தித்தபொழுது அதனை மறக்காமல் குறிப்பிட்டபோது ஆச்சரியமடைந்தேன். இன்னும் அக்காலகட்டத்தை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறாரே என்பதை எண்ணுகையில் மகிழ்ச்சியாகவிருந்தது.<br /><br />நான் ஈழநாடு பத்திரிகையினூடு வளர்ந்த எழுத்தாளனென்று கூறிகொள்வதில் மகிழ்ச்சியைடைகின்றேன். அண்மையில் மல்லிகையின் 43வது மலரில் ஈழத்தின் பிரபல நாவலாசிரியர்களிலொருவரான செங்கை ஆழியான் ஈழநாட்டுக் கதைகள் பற்றி எழுதியிருந்த ஆய்வுக கட்டுரையில் ஈழநாட்டுப் பத்திரிகையின் படைப்பாளிகளை ஏழு தலைமுறைப் படைப்பாளிகளாகப் பிரித்து என்னை ஏழாந்தலைமுறைப் படைப்பாளிகளொருவராகக் குறிப்பிட்டு எனது கதைகள் சிலவற்றையும் குறிப்பிட்டிருந்தது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தன. யாருமே ஈழநாட்டுப் படைப்புகளை மறந்துவிடவில்லையென்பது ஒரு வித ஆறுதலைத் தந்தது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழநாடு பத்திரிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகையென்ற பெருமையும் அதற்குண்டு. அதன் காரணமாகவே பல தடவைகள் அந்நிறுவனம் எரிக்கப்பட்டதும் மறந்துவிடக்கூடிய சம்பவங்களிலொன்றல்ல.<br /><br /><span style="font-size: 85%;"><b>சிரித்திரன் பெற்றுத் தந்த வாசகி....</b></span><br />எனது பதின்ம வயதுப் பருவத்தில் என்னை ஊக்குவித்த இன்னுமொரு சஞ்சிகை சிரித்திரன். சிரித்திரனில்தான் எனது முதலாவது சிறுகதை வெளியாகியிருந்தது. 'சலனங்கள்' என்னும் அச்சிறுகதை சிரித்திரன் சஞ்சிகை நடாத்திய அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவுதினச் சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பெற்ற கதைகளிலொன்றாக வெளியாகியிருந்தது. அந்தக் கதை மூலம் எனக்குச் சிரித்திரன் ஆசிரியரின் தொடர்பு கிட்டியது. சிரித்திரன் ஆசிரியரின் மகனான ஜீவகன் அப்பொழுது யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிந்தார். என்னிலும் சில வயதுகள் மூத்தவர். அவர் மூலம்தான் நான் தான் அச்சிறுகதையினை எழுத்தியவனென்ற விடயம் சிரித்திரன் ஆசிரியருக்குத் தெரிந்தது. அதன் பிறகு நான் இலங்கையில் இருந்த காலம் வரையில் பல, தடவைகள் சிரித்திரன் ஆசிரியரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. மேற்படி சிறுகதை எனக்கு இன்னுமொரு வாசகரையும் அறிமுகப்படுத்தி வைத்தது. உண்மையில் அவர் ஒரு வாசகி. அவர்தான் பிரபல யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முதல்வராகவிருந்த செல்வி இராமநாதன். அவர் என் அம்மாவின் பாட்சாலைத் தோழிகளிலொருவர். அச்சிறுகதை மூலம் என் வாசகர்களொலொருவராக மாறியவர். அன்றிலிருந்து பல தடவைகள் என் எழுத்து முயற்சிகளுக்கு மறைமுகமாக ஆதரவளித்து ஊக்கியவர். என் அம்மாவுடன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் பல தடவைகள் அவர் ஈழநாடு, சிரித்திரனில் வெளிவந்த ஒரு சில படைப்புகளைப் பற்றி ஆக்கபூர்வமான கருத்துகளைக் கூறி ஊக்குவித்தவர். ஒரு முறை நானும் , என் நண்பர்களிலொருவனான அநபாயனும் அவரைச் சென்று அவரது விட்டிலேயே சந்தித்திருந்தோம். அப்பொழுதும் அவர் என் எழுத்து முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவித்தார். வயதில் முதிர்ந்தவரான அவர் அன்று பாடசாலை மாணவனாக்விருந்த என் ஆரம்பகாலத்துப் படைப்புகளுக்கு முக்கியத்தும் கொடுத்து பாராட்டியது உண்மையில் எவ்வளவு ஆரோக்கியமானவிடயமென்பது இப்பொழுது விளங்குகின்றது.<br /><br /><span style="font-size: 85%;"><b>மனையடி சாத்திரமும் , மண்ணின் மாண்பும்!</b></span>சிரித்திரன் ஆசிரியரைப் பொறுத்தவரையில் இறுதியாக நான் சந்தித்தது கே.கே.எஸ். வீதியில் அவர் புது வீடு கட்டிய காலகட்டத்தில். அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக கழகத்தின் கட்டடக்கலை மாணவனாக இருந்த சமயம். ஒரு காலத்தில் கட்டடக்கலை மாணவனாகயிருந்தவர் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள். அன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலிருந்த வீட்டினைச் சுற்றிக் காட்டிய ஆசிரியர் , வீட்டின் அமைப்பு தன் துணைவியாரின் தூண்டுதலில் மனையடி சாத்திரத்திற்கேற்ப பல மாறுதல்களை அடையவேண்டியிருந்தது பற்றிச் சிரித்தவாறே கூறியதும் தற்போது ஞாபகத்திற்கு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் 'மண்ணின் மாண்பு' என்னுமொரு நாவலை எழுதிச் சிரித்திரன் ஆசிரியரிடம் கொடுத்திருந்தேன். அது கிழக்கிலங்கையின் கடற்கரைக்கிராமமொன்று எவ்விதம் உல்லாசப் பிரயாணிகளின் வருகையால் சீரழிகின்றது என்பது பற்றியது. அவ்விதமாக அங்குள்ள உல்லாசப் பயணிகளின் விடுதியொன்றில் பணியாற்றும் உள்ளூர்ப் பெண்ணொருத்தி எவ்விதம் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தவறுகின்றாள் என்பது பற்றியும், பின்னர் எவ்விதம் அவளது கணவனை அவளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றானென்பது பற்றியும் கூறும் நாவலது. அக்கடற்கரைக் கிராமத்து மக்களின் அமைதியான வாழ்வினை எவ்விதம் உல்லாசப்பயணிகளின் வரவும், அவர்களின் தன்னிச்சையான வாழ்வும் பாதிக்கின்றன் என்பது பற்றிய நாவல். அந்த நாவலை வாசிக்கக் கொடுத்திருந்தேன். ஆனால் அது சிரித்திரனிலும் பிரசுரமாகவில்லை. அதன் மூலப்பிரதி மீண்டும் எனக்குக் கிடைக்கவுமில்லை. பல மாதங்களின் பின்னர் அப்பிரதி தொலைந்து விட்டதாக ஆசிரியர் கூறினார்.<br /><br /><span style="font-size: 85%;"><b>பாடும் பறவைகளும், உறவு தேடும் உள்ளமும்...</b></span>இதன்பின்ன்ர் இன்னுமொரு நாவல் எழுதியிருந்தேன். அதன் பெயர் 'பறவைகள் பாடுகின்றன'. ஏனோ தெரியவில்லை அன்றைய காலத்து என் நாவல் முயற்சிகள் பலவற்றில் விதவை மறுமணம் முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருந்தது. மேற்படி நாவலிலும் ஒரு விதவை மறுமணம் விபரிக்கப்பட்டிருக்கும். அன்றைய காலகட்டத்தில் என் தங்கைமாரின் சிநேகிதிகள் சிலர், என் நண்பர்கள் சிலரென்று பலரின் கைகளுக்கு மேற்படி நாவல் மாறிப் பலரின் கருத்துகளையும் எனக்குப் பெற்றுத் தந்திருந்தது. இவையெல்லாம் நூலுருப் பெறவில்லையாயினும், என்னைப் பொறுத்தவரையில் அன்றைய காலகட்டத்தில் என் எழுத்தார்வததின் வடிகால்களாக விளங்கியவை அவை என்ற முக்கியத்தும் வாய்ந்தவை. இது போல் இன்னொரு நாவலும் எழுதியிருந்தேன். அதன் பிரதி இப்பொழுதும் என்னிடமுள்ளது. 'உறவு தேடும் உள்ளம்' என்னும் தலைப்பில் எழுதப்பட்ட குறுநாவல். நாற்பது பக்கங்களுக்குள் அடங்கியது. எண்பதுகளில் முழங்காவில் குடியேற்றத்திட்டத்திற்குச் சென்ற அனுபவத்தின் அடிப்படையில் பூங்குடிக் கிராமமென்ற குடியேற்றத் திட்டக் கிராமமொன்றில் நடைபெறுவதாக அமைந்திருக்கும் நாவல். நாவலின் கதாநாயகி எழுத்தார்வம் மிக்கவள். கணவனோ நேர்மையான விவசாயி. அவனை ஆனை அடித்துக் கொன்று விடுகிறது. நகருக்கு மேற்படிப்புக்காகச் செல்லவிருக்கும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமிடையிலான நட்பு பற்றியது நாவல். அத்துடன் குடியேற்றத் திட்ட வாசிகள் எவ்விதம் பலவேறு நபர்களால் சுரண்டப்படுகின்றார்களென்பது பற்றியும் நாவல் விபரிக்கும். முழங்காவில் அனுபவத்தில் எவ்விதம் அப்பாவிகளான அக்கிராமத்து மக்கள் அங்குள்ள சங்கககடை மனேஜர், தபாலதிபர், தொழில்நுட்பத் திட்ட உத்தியோகத்தர்கள் எனப் பலராலும் சுரண்டப்படுவதைக் கண்டபோது வேதனையாகவிருநதது. அந்த வேதனையின் விளைவாகவும், தமிழகத்து வெகுசன படைப்புகளின் தாக்குதல்களின் விளைவினாலும் உருவான கலவையாக உருவான நாவலிது. முற்றுப் பெறாத நாவல் பின்னர் வலிந்து முற்றுப் பெற வைக்கப்பட்டுள்ளது.<br /><br /><b><span style="font-size: 85%;">கணங்களும், குணங்களும்....</span></b>இவ்விதமாக நான் நாவல்கள் சில எழுதிய போதும் அவை எதுவும் எந்தப் பத்திரிகைகளிலோ சஞ்சிகைகளிலோ வெளிவாகவில்லை. முதல்முறையாக பத்திரிகையொன்றில் வெளிவந்த நாவலென்றால் அது 'கணங்களும் , குணங்களும்' தான். மணிவாணன் என்னும் பெயரில் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் வெளிவந்த நாவல். ( அதற்கு முன்னர் மான்ரியாலிலிருந்து வெளிவந்த கையெழுத்துப் பத்திரிகையான 'புரட்சிப்பாதை' சஞ்சிகையில் 'மண்ணின் குரல்' வெளிவந்திருந்தாலும் அது கையெழுத்துச் சஞ்சிகையென்பதால் 'கணங்களும் குணங்களும்' என்பதையே அச்சு ஊடகமொன்றில் வெளிவந்த முதலாவது நாவலாகக் கருதுகின்றேன்.) நாவலைப் படிப்பவர்கள் உடனேயே எழுபதுகளில் தமிழகத்தில் வெளிவந்த நாவல்களின் பாதிப்புகள், காண்டேகரின் கதைகளின் பாதிப்புகள் இருப்பதைக் கண்டுகொள்வார்கள். தன் காதலியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திச் சிறைத்தண்டனை பெற்ற நாயகன் , மீண்டும் விடுதலையானதும் அவளைச் சந்தித்துப் பாவமன்னிப்புப் பெற வேண்டி அவளிருக்கும் வவுனியாவுக்குச் செல்லுகின்றான. அவனது, அவனது காதலுக்குரியவள், மற்றும் அங்கு எதிர்ப்ப்டும் இன்னுமொரு பெண் ஆகியோரின் பார்வையில் கூறப்படும் கதையிது. இயற்கை வர்ணனைகள், தத்துவச் சிக்கல்கள் ஆகியன பற்றிய பல்வேறு கோணங்களில் இந்நாவலின் பாத்திரங்கள் சிந்திப்பார்கள். தமிழகத்திலிருந்து வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பில இந்நாவலுமுண்டு. இந்நாவலின் பெயராகக் 'கணங்களும் குணங்களும்' என்னும் பெயர் வந்ததற்கும் ஒரு காரணமுண்டு. என்னுடைய பாடசாலை நண்பர்களிலொருவன் கீதானந்தசிவம். மிகவும் ஆன்மிகத் தேடுதல் மிக்கவன். எபொபொழுதும் கேள்விக்குமேல் கேள்வியாகக் கேள்விகளைக் கேட்டே, உரையாடல்களைச் சிந்திக்க வைக்கும் ஆற்றல் மிக்கவன். ஒரு முறை இவனுடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலொன்றில் 'நல்லது, கெட்டது' ஆகியனவற்றைப் பற்றிய விவாதமொன்றெழுந்தது. சில கணங்களில் எவ்விதம் நல்லவர்கள் கூடத் தவறுகளைச் செய்து விடுகின்றார்கள் என்பது பற்றியெல்லாம் அவ்வுரையாடலில் அவன் பல்வேறு கருத்துகளை உதிர்த்தான். அப்பொழுது சில கணங்கள் எவ்விதம் சிலரது குணங்களை மாற்றித் தவறிழைக்க வைத்து விடுகிறது என்று எண்ணியதன் விளைவாக உருவானதுதான் 'கணங்களும், குணங்களும்' என்னும் தலைப்பு. இந்நாவல் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' (தமிழ்நாடு) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவற் தொகுப்பில் அடங்கிய நாவல்களிலொன்று.<br /><br />பொதுவாக எனக்கு எழுதுவதும், வாசிப்பதும் மூச்சு விடுவதைப் போல. அவையில்லாமல் என்னால் வாழவே முடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னால் இவையிரண்டையும் விட்டு விடவே முடிந்ததில்லை. ஆனால் நான் ஒரு போதுமே யாருடைய பாராட்டுதல்களுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் எழுதுவதில்லை. எனவே எதை எழுதினாலும் அதனை நான் அனுபவித்தே எழுதுவதுண்டு. என் எழுத்தில், படைப்புகளில் பொதுவான அம்சங்களாக என் வாழ்வில் அனுபவங்களிருக்கும் அதே சமயம் இருப்பு பற்றிய என் தேடல்கள், இயற்கையின் மீதான என் பற்றுதல் ஆகியன ஆங்காங்கே விரவிக் கிடக்கும். உதாரணமாகக் 'கணங்களும், குணங்களும்' நாவலை எடுத்துக் கொண்டால் அதில் வரும் கீழுள்ள பத்திகளைக் கவனித்தாலே போதும் மேற்படி கூற்றினை விளங்கப்படுத்த. </span></div>
<br />
<div>
<span style="font-size: 78%;"><br /><i>'வாழ்வுதான் எத்தனை விசித்திரமானது. என் வாழ்வின் ஒரு கட்டப் பயணத்தை முடித்துவிட்டுப் புதிய பயணத்தை ஆரம்பித்தவனாக் வந்த என்னை எவ்விதம் இச்சூழல் இன்னுமொரு பயணத்தில் இலாகவகமாகப் பிணைத்து விட்டது. வாழ்வை இன்னுமொரு கோணத்தில் பார்க்கும்படி எவ்விதம் என்னைக்கொண்டு வந்து நிறுத்தி விட்டது. அன்றாட வாழ்வே பிரச்சனையாக ஒவ்வொரு நாளுமே போராட்டமாக வாழ்வும் இந்த மக்கள்.... இவ்வளவு நெருக்கமாக விரிவாக நான் இதுவரை உலகை இன்னுமொரு கோணத்தில் வைத்துப் பார்த்ததே இல்லை. இதுவரையில் நான் எவ்விதம் வெறும் சுயநலக்காரனாக மட்டுமே, என் உணர்வுகளை மட்டுமே முதன்மைப்படுத்தி வாழ்ந்து விட்டிருந்தேன்.<br /><br />சாதாரண ஒரு மத்திய வர்க்கத்து வாழ்க்கை வட்டத்துடனான பரிச்சயமே கொண்டிருந்த என்னை, முதன் முறையாக ஏழ்மையின் அவலங்களைப்பற்றி ஏறெடுத்துப் பார்க்கத் தூண்டி விட்டிருந்தது எனது இந்தப் புதிய அனுபவம், ... வாழ்வையே பிரச்சனைகளின் போர்க்களமாக எதிர்நோக்கும் இம்மக்களுடன் ஒப்பிடுகையில் என்னைப் போன்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவ்வளவோ அற்பத்தனமானவையாக , அர்த்தமற்றவையாக அல்லவா தெனப்டுகின்றன. சாதாரண குடும்ப உறவுகளே, நிலவும் பொருளாதாரச் சூழலினால் சிதைந்துவிட... வாழ்வையே அதன் பயங்கரங்களையே தனித்து எதிர்நோக்கி நிற்கும் இந்த மக்களைப் பார்க்கையில் என்னையறியாமலேயே என் நெஞ்சில் ஒருவித பரிவு கலந்த வேதனை இழையோடியது. பெரும்பாலானவர்கள் அப்பாவிகளாக இருக்கிறார்கள். கடினமாக உழைக்கின்றார்கள். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியாக இருக்கிறார்கள். எனக்கு என்னை நினைகையிலேயே ஒரு கணம் வெறுப்பாக வந்தது. இவ்வளவு காலமும் எவ்விதம் நான் என் தனிமனித உணர்வுகளையே பூதாகாராமாக்கி, அதற்காகவே வாழ்ந்து விட்டிருந்தேன். அதன் ஒரு பகுதியாக நான் இழைத்துவிட்ட தவறும், தணடனையும்....'<br /><br />'மனது முன்னெப்போதையும்விட , மிக மிக இலேசாக , இன்பமாக, தெளிவாக , உறுதியாக விளங்குகின்றது. நான் வாழும் இந்த உலகம், இந்த ஆகாயம், தொலைவுகளில் கோடு கிழிக்கும் பறவைக் கூட்டங்கள், ஒளிக்கதிர்களை வாரி வழங்கும் ஆதவன், தண்ணென்று ஒளிவீசி வரும் முழுநிலா, வருடிச் செல்லும் வாயுபகவான், இரவுகளில் கண்சிமிட்டிச் சிரிக்கும் நட்சத்திரப் பெண்கள்.. இந்த மரம், மக்கள், மண், ... எல்லாமே இன்பமாக என்னில் ஒரு பகுதி போன்று அல்லது அவற்றின் ஒரு பகுதி நான் போன்றதொரு பரவசமாகத் தெரிகிறது.<br /><br />திடீரென்று மனதில் ஒரு காட்சி தென்படுகின்றது. அடிக்கடி என் கனவுகளில் தோன்றும் ஒரு காட்சிதான் அது. மனித நடமாட்டம் அரிதாகக் காணப்பட்ட ஆதிமானிடர் வாழும் ஒரு காலம் போன்றதொரு சூழல்... ஓங்கும் விருட்சங்கள்.. சீறும் காற்று.. உறுமியோடும் புலி முதலான விலங்குகள்... ஓயாது பொழியும் மழை வெள்ளமாக அருவியாக, பேராறாகப் பெருக்கெடுத்து..... அலைக்கரம் கொண்டு சாடும் கடல்... இவற்றிடையே இயற்கையின் குழந்தையாக நான்.<br /><br />இந்தக் காட்சி என் மனதில் தோன்றியதும் , அலுப்பாகச் சலிப்பாகக் காணப்படும் கணங்கள் அர்த்தம் நிறைந்வையாகக் காணப்படுவது வழக்கம். அது ஏன் என்பதற்கான சரியான உளவியல் காரணம் எதுவாக இருக்குமோ எனக்குச் சரியாகத் தெரியாது... ஆனால் இயற்கையின் குழந்தையான நீ .. இயற்கையுடனான உன் வாழ்வை இழந்து இன்றைய செயற்கை முலாம் பூசப்பட்ட இயற்கையினுள் மாய்ந்து கிடக்கின்றாயே.. அதுவே உன் பிரச்சனைகளின் உறையுள்.. என்கின்ற தெளிவு கலந்த சிந்தனையின் விளைவாக இருக்கலாம்...' (மண்ணின் குரல்; பக்கங்கள் 233, 234, 235 & 235)</i><br />மேற்படி 'மண்ணின் குரல்' தொகுப்பிலுள்ள இன்னுமொரு நாவல் 'மண்ணின் குரல்' 1984 காலப்பகுதியில் மான்ரியால், கனடாவிலிருந்து வெளிவந்த 'புரட்சிப்பாதை' கையெழுத்துப் பத்திரிகையில் தொடராக வெளியாகி முற்றுப் பெறாமல் நின்று போன கதை. பின்னர் கனடாவில் பூர்த்தியாக்கப்பட்டு ஒரு சில கவிதைகள், கட்டுரைகளுடன் நூலுருப் பெற்றது. கனடாவிலிருந்து வெளிவந்த முதலாவது நாவலென்ற பெருமை இதற்குண்டு. கனடாவிலிருந்து வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவலடங்கிய நூல் அதனுடன் மேலும் சில கவிதைகளையும், அரசியற் கட்டுரைகளையும் உள்ளடக்கியிருந்தது. ஆனால் தமிழகத்தில் வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்போ நான்கு நாவல்களின் தொகுப்பாக வெளிவந்திருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்தில் குறிப்பாக 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து ஈழத்துத் தமிழ்ப்பகுதிகளில் நிலவிய சூழலை மையமாக வைத்து, வர்க்க விடுதலையுடன் கூடிய தமிழீழ விடுதலையினை வலியுறுத்திய நாவல். தலைமறைவாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் குதித்துவிட்ட விடுதலைப் போராளிகளைப் பற்றி, இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தமிழ்ப் பெண்ணொருத்தி, விடுதலைப் போராளியொருத்தியின் காதலி, போராட்டத்தில் இணைந்தது பற்றி, பின்னர் சாதாரண இளம் வயதுக்கேயுரிய எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவளது தங்கையின் காதலன் எவ்விதம் அவளது வழியைப் பின்பற்றிப் போராட்டத்தில் இணைந்து கொளகின்றானென்பது பற்றி விபரிக்கும் சிறிய நாவல். கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படைக்கப்பட்ட இந்நாவல் அன்றைய காலத்து என் மனதின் பிரதிபலிப்பாக விளங்கும் காலத்தின் சூழலின் விளைவாக உருவான நாவல். கருத்தினை மையமாக வைத்து உருவான இச்சிறு நாவலில் ஆங்காங்ககே தூவிக் கிடக்கும் கருத்துகள் சிலவற்றைக் கீழே காணலாம்:<br /><br /><i>'தம்பி! மனிதனால் அறியமுடியாதபடி புதிர் நிறைந்ததாக இப்பிரபஞ்சத்தின் தோற்றமிருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் தம்பி. பொருளும், சக்தியும் ஒன்றென்று நவீன விஞ்ஞானம் கூறுகின்றது. என்னைப் பொறுத்தவரையில் இவ்வுலகம், கிரகங்கள், நட்சத்திரங்கள், .. பால்வெளிகளை உள்ளடக்கிய இயற்கையே சக்தி. அச்சக்தியே இயற்கை. இயறகையில் யாவுமே ஒழுங்காக இருக்கின்றன. .. மனிதனும் ஒழுங்காக இருப்பானாயின் பிரச்சனைகளே இல்லை...'<br /><br />'அறியாமையில் உருவான சமயம் என்கின்றீர்களே! அதனை நீங்கள் நம்புகிறீர்களா?"<br /><br />"தம்பி! நமக்கும் மேலாகவொரு புதிரான சக்தி இருப்பதை நான் ஏற்றுகொள்கிறேன். ஆனால் சமயத்தையோ அதன் மூடத்தனமான கோட்பாடுகளையோ நான் ஏற்கவில்லை....<br /><br />அன்ராடம் பிரச்சனைகளால் ஆடும் மனிதனைப் பிரச்சனைகளைத் தீர்த்துப் புதுபாதை காட்டுவதற்குச் சமயங்கள் முயலவில்லை. மாறாக என்ன செய்கின்றன...<br /><br />- ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு -<br /><br />- கொடுமை செய்பவன் நரகத்திற்குச் செல்வான் -<br /><br />- எல்லாவற்றையும் கடவுள் மேல் பழி போட்டுவிட்டு நிம்மதியாகவிரு -<br /><br />இவ்விதமான போதனைகளால் சமயம் மனிதனைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்குப் பதில் பிரச்சனைகளிலிருந்து தப்பியோட வைப்பதால், மனிதனை மனிதனாக வாழ்வதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிகளைக் கூறாமல் நடைமுறைக்கொவ்வாத நரகத்தைப் பற்றியும், சொர்க்கத்தைப் பற்றியும் போதிப்பதால்.. அததகைய சமயத்தை நான் ஆதரிக்கவில்லை.. நமக்குப் புதுவிதமான , நடைமுறைக்குச் சாத்தியமான , பிரச்சனைகளுக்கு அறிவுபூர்வமான தீர்வுகளைக் கூறுகின்ற சமயம் தான் தேவையே தவிர, மூட நம்பிக்கைகளுடன் கூடிய, மனிதனை பிரச்சனைகளிலிருந்து கோழையைப் போல் ஓட வைக்கின்ற சமயம் தேவையில்லை...' (பக்கங்கள் 327 & 328)<br /><br />'ஆகா.. அந்தியின் சிவப்பிலும் ஒரு தத்துவமே தெரிகிறது"<br /><br />சிந்தனையினின்றும் நீங்கியவனாக அநபாயன் திரும்பினான். எதிரில் சாமியார் நின்றிருந்தார்.<br /><br />"இரவு என்னும் கொடுங்கோலன் பகலைக் குற்றிக் குதறியதன் விளைவோ இந்தச் சிவப்பு..." என்றபடியே அருகீலமர்ந்த சாமியாரையே ஆவலுடன் நோக்கினான் அநபாயன்.<br /><br />"இவ்வுலகில் வாழ்வே ஒரு போராட்டம்தான்.. ஒவ்வொரு உயிருமே தனது வாழ்விற்காகப் போராடிக் கொண்டுதானிருக்கின்ரது... போராட்டமென்பது இயற்கையில் இயல்பாக, நியதியாகவே உள்ளது..."<br /><br />மேலும் தொடர்ந்தார்:<br /><br />"இயறகையின் முரணபாடுகளும், போராட்டங்களுமே வரலாற்றை வழி நடாத்திச் செல்கின்றன. ஆதியில் மனிதனின் அகவுலகோ இருண்டு கிடந்தது. அறியாமை அங்கே குடி கொண்டிருந்தது. அவன் தன் அறியாமையின் விளைவாக, புறவுலகில் நிலவிய முரண்பாடுகளைப் பிழையாகக் கையாண்டதன் விளைவே, பிரச்சனைகளைச் சிக்கலாக்கியது.. அவனது அறிவு வளர, வளர முரண்பாடுகளை அவன் கையாணட விதம் , பழைய முரண்பாடுகள் இருந்த இடத்தில் புதிய முரணபாடுகளைக் குடியமர்த்தின. இத்தகைய புதிய முரண்பாடுகளைஒ அவன் தீர்க்கையில் மேலும் சில முரண்பாடுகள் உருவாகின..." (பக்கங்கள் 346 &347)</i><br /><br />இவ்விதமாகச் செல்லும் நாவல் பின்வருமாறு முடிந்திருக்கும்:<br /><br /><i>'அதோ பாருங்கள்... உலகின் நானா பக்கங்களிலுமே அடக்கு, ஒடுக்கு முறைகளுக்கெதிராக ஒரு மக்கள் கூட்டம் தர்மத்திறகான வேள்வித் தீயினில் குதித்துப் போராடிக் கொண்டிருப்பதை.... வறட்டு வேதாந்ததினுள்ளும், அடிமைத்தளைகளுக்குள்ளும், அறியாமையினுள் மாண்டிருக்கும் மானுடத்தைப் புத்துயிர்ப்படையச் செய்வதற்காக, நடுக்கும் குளிரினுள், அர்த்த இராத்திரிகளில், கொடிய வனாந்தரங்களில், குகைகளில், மலைச்சாரல்களில், காடுகளில், ஊன் உறக்கமின்றி , இரவு பகல்களாக, ஏற்றத்தாழ்வுகளால, நாற்றமெடுத்துச் சீழ்பிடித்துச் சிதைந்து கிடக்கும் சமுதாயத்தினைச் சீர்சிருத்துவதற்காக அவர்கள் ஜீவ மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தாம் பிறந்த மண்ணில், தாணடவமாடிடும் அநீதியினை, அக்கிரமத்தினை அழித்தொழிப்பதறகாக, மலிந்து கிடக்கும் பொய்மையினை ஒழித்திடுவதற்காக, புழுதியில் புரண்டு கிடக்கும் பெண்மையின் புனிதத்தினைப் பேணுவ்தற்காக, சிதைந்துவிட்ட குடும்ப உறவுகளைச் சீராக்குவதற்காக, இழந்துவிட்ட அமைதியையும், இன்பத்தினையும் மீண்டும் நிலைநிறுத்துவதற்காக, மண்ணுடனான தமது கடமையினைச் செய்வதறகான புனிதப் போரினில் அவர்கள் ஈடுபட்டிருகின்றார்கள்.... இந்த மண்ணின் மைந்தர்கள் நடத்தும் போராட்டம் ஒருக்கிறதே.. அது என்றுமே தோற்றுவிடுவதில்லை. இவர்கள் இறந்து விடலாம். இவர்கள் ஏற்றி வைத்த இலட்சியச்சுடர்கள் அணைந்து விடுவதில்லை. விதைத்த தர்மப் பயிர்கள் மடிந்து விடுவதில்லை. இவர்களது உடல்கள் இம்மண்ணுடன் கலந்து விடுகையில்... இம் மண்ணில் வீசும் தென்றலும் புரட்சிப் பண் பாடி நிற்கும். துளிர்க்கும் புற்களும் போர்ப்பண்ணிசைத்து விடும். மலையருவிகள், குன்றுகள்... இங்கெல்லாம் இம்மண்ணின் குரல் கேட்கின்றதே.. உங்களுக்கு அவை புரிகின்றதா? ... ஆமாம்! என்று இம்மண்ணில் அநீதியும், அக்கிரமும் அழிந்தொழிந்து விடுகின்றதொ, பொய்மை உருக்குலைந்து போகின்றதோ, பெண்மை போற்றிடப் படுகின்றதோ, குடும்ப உறவுகள் சீர்பெற்று விடுகின்றனவோ, அன்றுவரை இம்மண்ணின் குரலும் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்.</i><br /><i>எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி<br />இருந்ததும் இந்நாடே! அதன்<br />முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து<br />முடிந்ததும் இந்நாடே! அவர்<br />சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து<br />சிறந்ததும் இந்நாடே! இதை<br />வந்தனை கூறி மனத்தில் இருத்தி என்<br />வாயுற வாழ்த்தேனோ" ( பக்கங்கள்: 352, 353 & 354 )</i><br />இவ்விதமாக மேற்படி தொகுப்பிலுள்ள 'மண்ணின் குரல்' அன்றைய காலகட்டத்து என் மனநிலையினைப் பிரதிபலிக்குமொரு படைப்பு. தமிழ் மக்களின் விடுதலையினை வலியுறுத்தும் நாவல். ஆனால் அதன் பின் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற தவறான போக்குகளை, நிகழ்வுகளை, ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கிய படைப்புகளாக மேற்படி தொகுப்பிலுள்ள 'வன்னி மண்', மற்றும் 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்' என்னுமிரு நாவல்களையும் கூறலாம். மேற்படி நாவல்களிரண்டும் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகை / சஞ்சிகையில் வெளிவந்த நாவல்கள். ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கிய படைப்புகளென்று நான் கூறுவதற்குக் காரணங்களுண்டு. மேறபடி விமர்சனங்கள் ஒரு போதுமே தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. மிகவும் பலமாக சகோதரப் படுகொலைகளை, 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' கேள்விக்குள்ளாகினால் , 'வன்னி மண்' நாவலோ அப்பாவிகள் யாராகவிருந்தாலும் (சிங்களவர்களோ அல்லது தமிழர்களோ) அவர்களுக்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.<br /><br /><b><span style="font-size: 85%;">வன்னி மண்ணில் என் வாழ்வு....</span></b>மேற்படி 'வன்னி மண்' என் வாழ்வின் பால்ய காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவமொன்றின் அடிப்படையில். நடைபெற்ற நிகழ்வொன்றின் அடிப்படையில், தமிழ் மக்களின் போராட்டத்தை அணுகும் நாவல். என் பாலய காலத்தில் நான் , வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தேன். என் அம்மா அங்குதான் ஆசிரியையாகக் கற்பித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் மன்னார் வீதியில் அமைந்திருக்கும் குருமண்காடு என்னும் பகுதி ஓரிரு குடும்பங்களையே உள்ளடக்கிய, ஒற்றையடிப் பாதையினை மட்டுமே கொண்டிருந்த , காடு மண்டிக் கிடந்ததொரு பகுதி. அங்கு நாங்கள் போவதற்கு முன்னரே ஒரு சிங்கள பாஸ் குடும்பமும் வாழ்ந்து வந்தது. எந்நேரமும் சிரித்தபடி காட்சியளிக்கும் அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நல்ல அயலவர்களாக விளங்கிவந்தார்கள். எங்களது பண்டிகைகளில் எங்களது உணவு வகைகள் அவர்களது வீட்டிற்குப் போகும். அவர்களது பண்டிகைக் காலங்களில் அவர்களது பாற்சோறு ('கிரி பத்' ) போன்ற உணவு வகைகள் எங்களுக்கு வரும். அவர்களுடன் அன்றைய காலகட்டத்தில் அருகிலிருந்த பட்டாணிச்சுப் புளியங்குளம் என்னும் குளத்திற்குக் குளிக்கப் போவதுண்டு. அப்பொழுது எனக்கு நீந்தத் தெரியாது. நீந்துவதற்குப் பழகிக் கொண்டிருந்தேன். அந்த பாஸ் குடும்பத்தவருடன் சாந்தா என்று ஒரு சிங்கள இளைஞனும் வசித்து வந்தான். அவன் நன்கு நீந்துவான். நீந்தத் தெரியாத நான் அக்குளத்தில் மிதந்து கொண்டிருந்த மரக்குற்றியொன்றைப் பற்றிப் பிடித்தவண்ணம் நீந்தப் பழகிக் கொண்டிருந்தேன். அருகில் சாந்தாவும் நீந்திக் கொண்டிருப்பான். ஒரு நாள் இவ்விதம் மரக்குற்றியினைப் பிடித்தவண்ணம் நீந்திக் கொண்டிருந்தேன். அருகிலேயே சாந்தாவும் நீந்திக் கொண்டிருந்தான். நீந்திக் கொண்டிருந்தவன் மிகவும் ஆழமாக விளங்கிய குளத்தின் நடுப்பகுதிக்கு வந்து விட்டேன். அந்தச் சமயத்தில் மரக்குற்றியைப் பிடித்திருந்த பிடி நழுவி விடவே நான் நீரினுள் மூழ்க ஆரம்பித்துவிட்டேன். இதனைக் கண்ட சாந்தா மிகவும் விரைவாக என்னருகே நீந்திவந்து மூழ்கிக் கொண்டிருந்த என்னைப் பற்றித் தூக்க முயன்றான். அவன் கழுத்தைச் சுற்றிப் பலமாக மூழ்கிக் கொண்டிருந்த நான் கட்டிப்பிடித்துக் கொள்ளவே என்னுடன் சேர்ந்து அவனும் மூழ்க ஆரம்பித்தான். இதனை அவதானித்த குளக்கரையிலிருந்த என் அக்கா கத்தவே, அப்பொழுது கரையில் நின்று சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்த பாஸ் , உடனடியாகவே நீந்திவந்து மூழ்கிக் கொண்டிருந்த எங்களிருவரையும் தன் இரு கைகளால் கிடுக்கிப் பிடி பிடித்தபடி கரைக்கு இழுத்துவந்து காப்பாற்றினார். அன்று அந்த பாஸ் எங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால். இன்று நான் உங்கள் முன்னிருந்து இவ்விதம் கதை கூறிக்கொண்டிருக்க மாட்டேன். அதன் பின்னர் நாங்கள் மீண்டும் யாழ்ப்பாணம் போய் விட்டோம். யாழ் இந்துக் கல்லூரி, மொறட்டுவைப் பல்கலைக் கழகமென்று திரிந்த என் வாழ்க்கை இன்று கனடாவில் தொடர்கிறது. இதற்கிடையில் இலங்கையில் தமிழ்ர் விடுதலைப் போராட்டம் முனைப்புடன் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்து விட்டிருந்தது. இனங்களுக்கிடையில் நிலவிய புரிந்துணர்வுகள் சிதைந்தன. முக்கியமாக எல்லைப் புறங்களில் வாழ்ந்த பல்வேறு மக்களுக்கிடையில் நிலவிய நட்புடன் கூடிய சூழலை நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளும், இனக்கலவரங்களும் , அரசபடையினரின் அடக்குமுறைகளும், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதச் சட்டமும் மோசமாகச் சீரழித்து விட்டன. நானும் காலப்போக்கில் அந்த பாஸ் குடும்பததவரை மறந்து விட்டேன். பின்னர் பல வருடங்களின் பின்னர் நான் கனடாவில் வசிக்கும்போதுதான் கேள்விப்பட்டேன் அந்த பாஸ் குடும்பததவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையினை. 1983ற்குப் பின்னர் நிலவிய சூழலில், தமிழ் விடுதலை அமைப்பொன்றினால் அந்த பாஸின் குடும்பம் முழுவதுமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டதாகவும், அதனை அந்தப் பகுதியிலேயே வாழ்ந்த அந்த அமைப்பின் பொறுப்பாளரே செய்ததாகவும், பின்னர் அந்தப் பொறுப்பாளர் இன்னுமொரு அமைப்பினால் கொலை செய்யப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். அந்த பாஸ் பின்னர் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்கியதாகவும் அதனாலேயே இவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. சுயாதீன விசாரணைகளேதுமற்ற நிலையில் நான் கேள்விப்பட்ட அந்த அமைப்பின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆயினும் அந்த பாஸ் குடும்பம முழுவதும் அருகிலிருந்த காட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்டதாகக் கேள்விப்பட்ட தகவல் என்னைப் பாதித்தது. என்னையும் ,மூழ்கிக் கொண்டிருந்த சாந்தா என்ற சிங்கள் இளைஞனையும் காப்பாற்றிய அந்தச் சம்பவம்தான் உடனடியாக நினவிற்கு வந்தது. உடனடியாகவே வன்னி மண்ணில் கழிந்த என் பால்யகாலத்து நினைவலைகள் ஓடி மறைந்தன. வன்னி மண்ணுடனான என வாழ்வின் அனுபவங்களின் நனவிடை தோய்தலினூடாக எவ்விதம் அந்த வன்னி மண்ணின் அமைதி கலந்த சூழல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளால் படிப்படியாக மாற்றமடைந்தது என்பதை விளக்குமொரு நாவலாக இந்த வன்னி மண் நாவல் உருவானது. அப்பாவிகள் யாராகவிருந்தாலும் அவர்கள் மேல் துப்பாக்கிகள் நீட்டப்படுவதை என்னால் ஏறக முடியாது. அதே சமயம் ஈழத் தமிழ் மக்களின் நீதியான போராட்டத்தினையும் என்னால் கொச்சைப்படுத்த முடியாது. வன்னி மண் நாவல் மேற்படி இரண்டுவிதமான என்மனப் போக்குகளையும் விவரிக்கும். மேற்படி நாவல் தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்துகொண்டிருந்த சமயம் கனடா வந்திருந்த எழுத்தாளர் மாலனுடனானதொரு குறுகிய சந்திப்பு எழுத்தாளர் ரதனின் இருப்பிடத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது நடைபெற்ற உரையாடலின்போது மாலன் 'ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நடைபெறும் இச்சூழலில் எந்தவொரு ஈழத்தமிழ் எழுத்தாளராவது அப்பாவிச் சிங்கள மக்கள்மேல் நடைபெறும் தாக்குதல்பற்றிக் கண்டித்து எழுதியிருக்கின்றார்களா? இல்லையே' என்று குறைபட்டுக் கொண்டார். அப்பொழுது 'வன்னி மண்ணி'ல் இவ்விதமானதொரு கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றேன் என்று கூற நினைத்தேன். ஆனாலும் கூறவில்லை.<br /><br />மேற்படி 'வன்னி மண்' நாவலில் வரும் கீழுள்ள சில பத்திகள் என் மனநிலையினைத் தெளிவாக விளக்கும்:<br /><br /><i>"..இன்று உன்னால் உயிர் கொடுக்கப்பட்ட நான் இருக்கிறேன். ஆனால் .. நீ.. உளவாளியென்று உன்னோடு சேர்த்து முழுக்குடும்பத்தையும் கூண்டோடு கைலாசமேற்றி அனுப்பிவிட்டார்கள். நியாயப் படுத்துவதற்கா ஆட்களில்லை. எதையும் நியாயப்படுத்த அடுக்கடுக்காக அள்ளி வீசக் காரணங்களாயில்லை. சொந்தச் சகோதரர்களையே தெருவில் எரித்துப் போட்டுவிட்டு அதற்குமொரு நியாயம் கற்பித்த பரம்பரையைச் சேர்ந்தவர்களல்லவா நாங்கள்... வழக்கம்போல் இதற்கும் காரணங்களை அள்ளி வீசுவோம்.<br />- பாஸ் இராணுவததிற்கு உளவு சொன்னான் -<br />- பாஸின் மனுசிக்கும் இராணுவத்துக்கும் அப்படியிப்படி ஏதோ தொடர்பாம். விட்டு வைக்கக் கூடாது...-<br />- அவங்கட பிள்ளைகளும் சேர்ந்துதானாம் -<br />- போராட்டப் பாதையிலே இதையெல்லாம் விட்டு வைக்கக் கூடாது -<br />ஆனால் எனக்குத் தெரிந்த நீ .. என்னைவிட அம்மண்ணுடன் உனக்குத்தான் அதிக சொந்தம். நாங்கள் முதன் முறையாக வந்தபோதே அந்தப் பகுதி காடுமண்டிப் போய்க்கிடந்தது. ஆனால் நீ வந்தபோதோ நான் பிறந்திருக்கவேயில்லை. அந்தப் பகுதி எந்த நிலையில் இருந்திருக்கும். இளைஞனான நீ கனவுகளுடன் , கற்பனைகளுடன் புது மண்ணில் வாழ்க்கையைத் தொடங்கியிருப்பாய். திட்டங்கள் பல போட்டிருப்பாய். எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. ..... போராட்டம், இராணுவத் தீர்வு என்ற பெயரில் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகப் போகின்றனவோ? போரில் நேரடியாக ஈடுபட்டவர்களின் அழிவைவிட இதுவரை அழிந்துபோன பாதிக்கப்பட்ட அப்பாவி உயிர்களின் எண்ணிக்கைதான் மிகமிக அதிகம். உலகம் முழுவதும் நிலைமை இதுதான். இதன் முடிவு தானென்ன?<br /><br />... நான் நிச்சயம் நம்புகிறேன். நீ உளவாளியாகவிருக்க முடியாது. என் உயிரைக் காப்பாற்றும்போது நான் தமிழன் நீ சிங்களவனென்று நீ நினைத்திருக்கவில்லை. மனிதனென்றுதான் எண்ணினாய். அந்த மனிதாபிமானத்தை எனக்கு விளங்கும். என் எதிர்பார்ப்பையும் மீறி உண்மையிலேயே காலம் உன் நெஞ்சிலும் இன உணர்வுகளை விதைத்து விட்டிருந்தால்.. அதற்கும் கூட உனக்கும், உன் குடும்பததவர்களுக்கும் கிடைத்த தண்டனை கொடியதுதான்... மிகவும் கொடியதுதான்... ." (மண்ணின் குரல் ; பக்கங்கள்: 96,97 & 98)</i><br />இந்த நாவலின் நோக்கம் பற்றி மேற்படி 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பின் இறுதியில் பின்வருமாறு கூறியிருந்தேன். அதனை இங்கு மீண்டுமொருமுறை குறிப்பிடுவதும் பொருத்தமானதே:<br /><br /><i>'எம்மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட ஆயுதம் ஏந்தியவர்கள் தொடர்ந்தும் தமக்கிடையில் மோதித்தேவையற்ற அழிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். அப்பாவிகள் யாராகவிருந்தாலும் அவர்களுக்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதில் என் மனம் மிகவும் தெளிவாகவேயிருந்தது. மேற்படி தாயகம் பத்திரிகையில் வெளிவந்த எனது இன்னுமொரு நாவலான 'அருச்சுனனின் தேடலும் , அகலிகையின் காதலும்' நாவல் முக்கியமாக அமைப்புகளிடையே நிலவிய சகோதரப் படுகொலைகளையும், உட்படுகொலைகளையும், சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆயுதமேந்தியவர்களால் களவு, விபச்சாரம் போன்றவற்றைத் தம் வயிற்றுக்காகப் புரிந்தவர்களை மரணதண்டனைக்குள்ளாக்கிய செயல்களையும் கண்டிக்கிறது. அவ்விதம் கண்டிக்கும் அதே சமயம் அந்நாவல் பின்வருமாறு முடிவது அதன் நோக்கத்தைத் துல்லியமாகவே புலப்படுத்தும்:<br /><br />" அநியாயமாக, அப்பாவிகள் தண்டிக்கப்படுவதன் காரணம் , சாகடிக்கப்படுவதன் காரணம் விசாரணைகளின்றி விரைவாகத் தண்டனைகள நிறைவேற்றப்படுவதுதான். நீ சொல்வதும் உண்மைதான். ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடியதும் இதனால்தான். ஒவ்வொரு மனிதனினதும் தனிப்பட்ட உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பேச்சுரிமை, எழுத்துரிமை உட்படச் சகல உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். போராட்டச் சூழலில் நீண்ட விசாரணைகளை எதிர்பார்க்க முடியாதுதான். இருந்தாலும் மரணதண்டனைகள் விடயத்தில் இயக்கங்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும். இயக்கரீதியாக, சரியான வழியில், பிரச்சினை அணுகப்படவேண்டும். தண்டனைகளை நிறைவேற்றுவதில் அதிக அவசரம் காட்டக் கூடாது. இயக்கங்கள் தங்களது இயக்க விதிகளை, யாப்புகளை மறுசீரமைக்க வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில் முன்னிற்க வேண்டும். அதே சமயம் ஒற்றுமையற்று சிதைந்திருக்கும் எம் மக்களுக்கிடையே , இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். நடந்தவற்றைக் கெட்ட கனவாக மறந்துவிட்டு , புதிய பாதையில் இனியாவது நடைபோட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை என்றாலும் நமக்கு நல்லதொரு வழியைக் காட்டட்டும்." (மண்ணின் குரல்; பக்கம் 220)</i><br />மேற்படி நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் எனக்குத் தெரிந்து யாருமே இவ்விதம் இயக்க உள்முரண்பாடுகளை, இயக்க முரண்பாடுகளை, அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள், விபச்சாரம், களவு போன்ற வயிற்றுக்காகத் தவறிழைத்தவர்கள் சீர்திருத்தப்படுவதற்குப் பதிலாக, அவ்வாறு அவர்களை வாழ நிர்ப்பந்தித்த சமுதாயத்தைத் திருத்துவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கே தண்டனை கொடுத்த செய்கையினைக் கண்டித்து நாவல்கள் படைத்திருக்கின்றார்களா? எம் மக்களின் தேசிய விடுதலையுடன் அவர்களது சமுதாயப் பிரச்சினைகளையும் தீர்க்கப் போகின்றோமென்று கூறிய அமைப்புகள், அத்தகைய அமைப்பின் விளைவாக உருவானவர்களுக்குத் தண்டனை அதுவும் மரணதண்டணை கொடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களை அவ்விதம் வாழ நிர்பந்தித்த சமுதாய அமைப்பினைத் திருத்துவதன் மூலம்தான் அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென்பதென் நிலைப்பாடு. அதை விட்டு விட்டு, வறுமையின் காரணமாக அவ்விதம் வாழ்ந்த மக்களுக்குத் தண்டணை கொடுத்த செயல தவறானதென்பதென் கருத்து. ஆயினும் செழியன் போன்ற முன்னாள் போராளிகள் சிலர் தமது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார்கள்? ஆனால் படைப்பாளிகள் யாராவது இவ்விதம் புனைகதைகளைப் படைத்திருக்கின்றார்களா? மேற்படி நாவல்களெல்லாம் 90களின் ஆரம்ப காலகட்டத்தில் எழுதப்பட்டனவென்பதை நினைவில் வைப்பதும் நல்லதே. அக்காலகட்டச் சூழலின் வரலாற்றுக் கடமை கருதி, கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படைக்கப்பட்ட நாவல்களவை. அவை கூறும் பொருளின் அடிப்படையில் மேற்படி நாவல்களுக்கும் முக்கியத்துவமுண்டு என்று நான் கருதுகின்றேன்.<br /><br />இவை தவிர 'அமெரிக்கா' என்றொரு சிறுநாவலும் தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் மேலும் சிறுகதைகளையும் உள்ளடக்கி, தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா' என்னும் பெயரில் தொகுப்பாக வெளிவந்தது. இது பற்றிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் சிலவற்றில் (சரிநிகர், புதியபாதை) விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. மேற்படி 'அமெரிக்கா' அமெரிக்காவிலுள்ள தடுப்புமுகாம்களில் வாடும் அகதிகள் பற்றியது. என் சொந்த அனுபவத்தின் விளைவான பதிவு. பின்னர் 'அமெரிக்கா II ' என்னுமொரு இன்னுமொரு விரிவான நாவல் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது. நியூயார்க் மாநகரத்தில் ஈழத்தமிழ அகதியொருவனின் அனுபவங்களை விபரிப்பது. இன்னும் நூலுருப் பெறவில்லை. கூறும் பொருளிலும், கூறும் முறையிலும், பாத்திரப் படைப்பிலும் என் நாவல்களில் முக்கியமானதொன்றாக இதனை நான் கருதுகின்றேன். இந்நாவலில் வரும் மாந்தர் தொடக்கம் அனுபவங்கள் அனைத்துமே ஏனைய புலம்பெயர் படைப்புகளிலிருந்து சிறிது வேறுபட்டு வாசிப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தினைத் தரக்கூடுமென்று நான் எண்ணுகின்றேன். இந்நாவல் நூலுருப் பெறும்போது மேலும் பலரது கவனத்தைக் கவரக் கூடும்.<br /><br />இவ்விதமாக எனது நாவல்கள் எல்லாவற்றிலுமே சமகாலப் பிரச்சினைகளின் தாக்கங்கள் என் அனுபவங்களினடிப்படையில் மலிந்து கிடக்கும். அதே சமயம் மேற்படி நாவல்களிலெல்லாம் இருப்பு பற்றிய என் கேள்விகளும், இயற்கையின் மீதான் என் ஆழ்ந்த காதலும் இழையோடிக் கிடப்பதை வாசிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். மேற்படி நாவல்களைத் தவிர இணைய இதழ்களில் வெளியான பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த என் அனுபவத்தின் விளைவான உருவானவை. கவிதைகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எழுதியிருக்கின்றேன். இருப்பு பற்றிய என் கேள்விகளைக் கருப்பொருளாகக் கொண்டு அதிக எண்ணிக்கையில் எழுதியுள்ளேன். இதே போல் கட்டுரைகள் பலவும் பதிவுகள் இணைய இதழில் பத்தி எழுத்துகளும் (ஒரு சில புனைபெயர்களில்) சமகால சமூக, அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகள், விடயங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஆகச் சுருக்கமாகக் கூறின், என் படைப்புகள் எதுவாகவிருந்தாலும் (கதையோ, கட்டுரையோ அல்லது கவிதையோ எதுவாகவிருந்தாலும்) அவற்றில் நிச்சயமாக என் மண்ணின், புலம்பெயர்ந்து வாழும் சூழலின் அனுபவப் பதிவுகள் நிச்சயமாக இழையோடியிருக்கும். அதே சமயம் இருப்பு பற்றிய என் தேடலின் விளைவான சிந்தனைகளும் அவற்றில் நிச்சயம் விரவியே கிடக்கும். [மேற்படி 'மண்ணின் குரல்' தொகுதியின் பிரதிகள் சில என்னிடமுள்ளன. வாங்க விரும்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் எனது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். விலை, தபாற் செலவு மற்றும அனுப்ப வேண்டிய முகவரி போன்ற விடயங்களைத் தருகிறேன்.)</span><br />
<br />
<span style="font-size: 78%;">ngiri704@rogers.com </span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-75057533783418312922009-06-22T22:08:00.006-04:002020-05-03T13:30:52.201-04:00நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்' கோட்பாடு பற்றிய புரிதலும்! - வ.ந. கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgR9H5xZLkBo2OyKsMFILAtIHRZReISky4t4YEzuB5lSJrwo5Qr3R6GmYCghJtCD17yXdl8JJs4brWCYfWjQpJcArSwbd-A_WPNrJlH-gZIL-mGcJyJv1p56mBNWXi48H9cHRf9/s1600-h/toronto_financial_district.jpg"><img alt="" border="0" height="222" id="BLOGGER_PHOTO_ID_5350339753636516338" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgR9H5xZLkBo2OyKsMFILAtIHRZReISky4t4YEzuB5lSJrwo5Qr3R6GmYCghJtCD17yXdl8JJs4brWCYfWjQpJcArSwbd-A_WPNrJlH-gZIL-mGcJyJv1p56mBNWXi48H9cHRf9/s320/toronto_financial_district.jpg" style="float: left; height: 139px; margin: 0px 10px 10px 0px; width: 200px;" width="320" /></a> <span style="font-size: 85%;"><i>நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).<br /><br />நகரொன்றின் பெளதிக யதார்த்தத்திலிருந்து எவ்விதமான மனப்பிம்பங்களை அந்நகரத்து மாந்தர் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பது பற்றிய ஆய்வொன்றினை நகர மாந்தர்கள் பலருடனான நேர்காணல்கள் பலவற்றின் மூலம் கண்டறிந்த அவர் அவற்றின் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்து நகரின் பிம்பம்' (The Image Of the City) என்றொரு நல்லதொரு சிந்தைக்கு விருந்தளிக்கும், மேலும் அதனை விரிவடையவைக்கும் ஆய்வு நூலொன்றினை வெளியிட்டிருந்தார். மேற்படி அவரது ஆய்வானது நகர மாந்தரின் மேற்படி நகர் பற்றிய உளப்பதிவுகள் பற்றிய முக்கியமான பல நவீன கருதுகோள்களுக்கு அடிப்படையாக விளங்குகின்றது. மேலும் நகரொன்றின் உருவம் பற்றிய , அங்கு காணப்படும் கட்டடச் சூழல் அல்லது கட்டடக்கலை எவ்விதம் மேற்படி அந்நகர மாந்தரின் நகர் பற்றிய பிம்பத்திற்குக் காரணமாயிருக்கின்றது பற்றிய புரிதலுக்கு மிகவும் பங்களிப்புச் செய்துள்ளது என்று கூறினால் மிகையான கூற்றல்ல.<br /><br />இவ்விதமான நகரத்து மாந்தரின் அந்நகர் அவர்களது மனங்களில் ஏற்படுத்திவிடும் மனப்பிம்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆதாரப்பகுதிகளாக ஐந்து விடயங்களை பேராசிரியர் கெவின் லிஞ்ச் அவர்கள் தனது ஆய்வுகள் மூலம் இனங்கண்டார். அவையாவன:<br /><br />1. நகரின் மாந்தரின் நடமாட்டத்திற்கு உதவும் பல்வகைப் பாதைகள் (Pathways)<br />2. நகரின் பல்வேறு தனமையினைப் பிரதிபலிக்கும் பிரதேசங்கள் அல்லது பகுதிகள் (Districs)<br />3. நகரின் பல்வேறு பகுதிகளைப் பிரிக்கும் ஓரங்கள் (Edges)<br />4. நகரின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் கட்டடங்கள் போன்ற நில அடையாளச் சின்னங்கள் (Lanadmarks)<br />5. நகரின் பல்வேறு செயற்பாடுகளின் மையப் புள்ளிகளாக விளங்கும் நகரின் பகுதிகள் ( Nodes)<br /><br />நகர மாந்தரொருவரின் அந்நகர் பற்றிய அவரது மனப்பிம்பங்களை முக்கிய ஆதாரப்பகுதிகளாக விளங்குபவை மேலுள்ள ஐந்து பகுதிகளுமே என்பதைப் பேராசிரியர் லிஞ்சின் மேற்படி 'நகரின் பிம்பம' என்னும் ஆய்வு புலப்படுத்தும். இனி இன்னும் சிறிது விரிவாக மேற்படி ஐந்து ஆதாரப் பகுதிகள் பற்றியும் பார்ப்போம்.<br /><br />1. பாதைகள் (Pathways)<br />நகரொன்றில் அந்நகரத்து மாந்தரின் நடமாட்டத்துக்குதவும் வகையில் பல்வேறு பாதைகள் பிரதான கடுகதிப் பாதைகளிலிருந்து, புகையிரதப் பாதைகள், கால்வாய்கள் தொடக்கம் குச்சொழுங்கை வரையிலெனப் பல்வேறு பாதைகள் காணப்படும். மேற்படி பேராசிரியர் லிஞ்சின் ஆய்வின்படி பாதைகள் நகர மாந்தரின் நகர் பற்றிய் பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமான பங்கினை வகிப்பதை அறிய முடிந்தது. பல்வேறு காரணங்களுக்காக நகரத்து மாந்தர் மற்றும் அந்நகருக்கு வருகை தரும் பயணிகள் ஆகியோர் மேற்படி பாதைகளினூடு பயணிப்பர். அவ்விதமான பயணங்களின்போது மேற்படி பாதைகளினூடு பயணிக்கும் அனுபவமானது மேற்படி பயணிகளுக்கு, நகர மாந்தருக்குப்ப் பல்வேறு வகையிலான ம்னப்பதிவுகளை,மனக்கிளர்ச்சிகளை உருவாக்குகின்றன. இவையெல்லாம் சேர்ந்தே அவர்களது அந்நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகின்றன. ( யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது மாலை நேரங்களில் துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கிக் கல்லுண்டாய் வெளியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியினூடு செல்வதை இச்சமயத்தில் எண்ணிப் பார்க்கின்றேன். ஓட்டு மடத்தில் தொடங்கி காரைநகர் நோக்கிச் செல்லும் பிரதான பாதையது. ஆரம்பத்தில் முஸ்லீம் மக்களின் குடியிருப்பான பொம்மை வெளி தாண்டினால் அடுத்து விரிவது காக்கைதீவுக் கடற்புறம். மீன் சந்தையுடன் கூடிய முக்கியமான் யாழ்நகரின் நெய்தல் நிலப்பகுதி அது. ஒரு புறம் ஆனைக்கோட்டை மறுபுறம் காக்கைதீவுக் கடற்பகுதி. இதனைத் தாண்டினால் விரிவது நவாலியின் புகழ்பெற்ற மண்மேடுகளுடன் கூடிய மருதநிலப் பகுதி. மேற்குபுறம் புல்வெளியுடன் கூடிய கடல்சிறிது உள்வாங்கிய காக்கைதீவுக் கடற்பிரதேசம். மருதமும் நெய்தலும் இணையும் அற்புதம். அதனைத் தாண்டினால் கல்லுண்டாய் வெளியும் , உப்பளமும். மேலும் நீளும்பாதை வடக்கு அராலி, தெற்கு அராலியெனப் பிரிந்து மீண்டும் வட்டுக்கோட்டையில் இணைந்து ஒன்று காரைநகர் நோக்கியும் அடுத்தது சித்தன்கேணி நோக்கியும் செல்லும். வ்டக்கு அராலி/ தெற்கு அராலியெனப் பாதை பிரிவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற வழுக்கியாறு அராலிக் கடலுடன் கலப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள சிறிய பாலமொன்றைக் காணலாம். மேறப்டி வழுக்கியாறு பற்றிய பிரபல ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியானின் சிரித்திரன் சஞ்சிகையில் வெளிவந்த 'நடந்தாய் வாழி வழுக்கியாறு' என்னும் பயணக்கட்டுரைத் தொடர் வயிறு குலுங்க வைக்கும் நல்லதொரு பயணத் தொடராக அப்பருவத்தில் எனக்குப் பட்டதும் நினைவுக்கு வருகிறது. மேற்படி பாதையானது என் இளம் பிராயத்திருப்புடன் பின்னிப் பிணைந்துள்ள பாதைகளிலொன்று. என் பால்யகாலம் வன்னி மண்ணில் கழிந்ததென்றால் அதன்பின்னான என் பதின்ம பருவம் யாழ் மண்ணிலும் அதன் சுற்றாடலிலும் கழிந்திருந்தது. அவ்வயதில் மேற்படி கல்லுண்டாய் வெளியினூடு காரைநகர் நோக்கி நீண்டிருக்கும் பாதையானது என் மனதிலேற்படுத்திய பதிவுகள் , பிம்பங்கள் பற்பல. அந்தியில் அவ்வழியே பயணித்தலோரினிய அனுபவம். ஆண்டின் பல்வேறு பருவங்களுக்கேற்ப அப்பயணத்தின் அனுபவங்களும் பலவகையின. அதிகாலையில் துவிச்சக்கர வண்டிகளில் நகர் நோக்கிப் படையெடுக்கும் தொழிலாளர்கள் அந்திசாயும் நேரங்களில் தத்தமது கிராமங்களை நோக்கி மீள் படையெடுப்பர். அதி காலைகளில் வழுக்கியாறு கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ள பாலத்தினடியில் மீனவர்கள் இறால் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சில பருவங்களில் காக்கைதீவுக்கும், கல்லுண்டாய் உப்பளத்திற்குமிடையிலான பாதையின் ஓரங்களில் மீனவர்கள் பிடித்த கடலட்டைகளை அவித்துக் காயப்போட்டிருப்பார்கள். அப்பிராந்தியமெங்கும் கடலட்டைகளின் அவியும் மணமும், உலரும் மணமும் நிறைந்திருக்கும். கடலட்டைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் அப்பகுதி கடற்றொழிலாளர்களின் பங்கும் முக்கியமானது. காலை நேரங்களில் காக்கைதீவுக் கடற்கரையில் அமைந்திருந்த மீன்சந்தை ஒரே ஆரவாரமாக விளங்கும். கடற்பறவைகளால் நிறைந்திருக்கும். அந்திக் கருக்கிருளில் கட்டுமரங்களில் க்டலில் மீன்பிடிப்பதற்காகப் பயணத்தைத் தொடங்கியிருப்பர் கடறொழிலாளர்கள். தொலைவில் சற்றுமுன்னர்தான் கடலுக்குள் மூழ்கியிருந்த கதிரவனால் சிவந்து சிவந்து கிடந்த வானம் மேலும் சிவந்திருக்கும். இவ்விதமாக அப்பாதையானது என்னிடத்திலேற்படுத்திய மனப்பதிவுகள், பிம்பங்கள் அழியாத கோலங்களாக இன்றுமென் சிந்தையின் ஆழத்திலுள்ளனவென்றால் பாதைகள் எவ்விதம் நகர மாந்தரின் மனப்பிம்பங்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றனவென்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.)<br /><br />2. பிரதேசங்கள் அல்லது பகுதிகள் (Districts)<br />நகரானது பலவேறு அம்சங்களுடன் கூடிய சுற்றுப்புறங்களையும் (Component neighbourhoods) அல்லது பிரதேசங்களையும் (Districts) உள்ளடக்கிக் காணப்படும். உதாரணமாக உள்நகர் (Downtown) , புறநகர் (uptown), அதன் மையப்பகுதி, வர்த்தக மையப் பகுதி, தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பகுதிகள், பல்கலைக்கழகப் பிரதேசங்கள் மற்றும் 'டொராண்டோ' போன்ற பல்சமூக மக்கள் வாழும் நகர்களில் அவ்வினங்கள் அதிகமாக செறிந்து வாழும் அல்லது வர்த்தகம் செய்யும் பிரதேசங்கள் எனப் பல்வேறு தனித்த அமசங்களைப் பிரதிபலிக்கும் பிரதேசங்களை அல்லது சுற்றுப்புறங்களைக் காணமுடியும். சில சமயங்களில் மேற்படிப் பிரதேசங்கள் தமக்கேயுரிய தனித்த அடையாளங்களுடன் ('டொராண்டோ'வின் நிதிமையமான உள்நகர்ப் பகுதி) விளங்கும். இன்னும் சில சமயங்களிலோ தனித்த சிறப்பியல்புகளற்று சிறப்பியல்புகளின் கலவையாகவும் (மான்ஹட்டனின் நடுநகர்ப் பிரதேசம் போன்று (midtown) விளங்குவதுண்டு. இவையெல்லாம் நகர மாந்தரொருவரின் அந்நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை நல்குகின்றனவெனலாம்.<br /><br />3. ஓரங்கள் (Edges)<br />ஓரங்களை நகரின் பிரதேசங்களைப் பிரிக்கும் எல்லைகளாகக் குறிப்பிடலாம். இவை பாதைகளைப் போல் முக்கியமானவையாக இல்லாதபோதும் நகர் மாந்தரொருவரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிப்பவை. பெரும் வாவியினை உள்ளடக்கிய 'டொராண்டோ' போன்ற மாநகர்களைப் பொறுத்தவரையில் குளக்கரையானது நகரையும் நீரையும் பிரிக்குமோரெல்லையாக ஓரமாக விளங்குகின்றது. இவ்விதமே கடுகதிப் பாதைகளையும், மக்கள் வசிப்பிடங்களையும் பாதுகாப்பு, மற்றும் வாகன ஒலித்தொல்லை போன்றவற்றிலிருந்து பிரிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள நீண்ட சுவர்களையும் ஓரங்களிலொன்றாகக் குறிப்பிடலாம். (சீனாவின் நீண்ட சுவரினயும் இங்கு நினைவு கூரலாம்). முதலாவதில் ஓரமானது நீரையும் நிலத்தையும் பிரிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், அநத ஓரமானது நிலத்திலிருந்து நீருக்கோ அல்லது நீரிலிருந்து நிலத்திற்கோ மாந்தரின் நடமாட்டத்தைத் தடுப்பதில்லை. ஆயினும் இரண்டாவது உதாரணத்தில் சுவரானது ஓரெல்லையாக விளங்கி மக்கள் அதனூடு ஊடறுத்துச் செல்வதைத் தடுக்கிறது. இன்னும் சில சமயங்களில் ஓரமொன்றினைக் கண்டறிவது கடினமானது. உதாரணமாக 'டொராண்டோ'வின் கிழக்கில் அமைந்திருக்கின்ற சீனந்கர்ப் பிரதேசமானது அதற்கணமையில் அமைந்துள்ள 'குட்டி இந்தியா' பிரதேசத்துடன் படிப்படியாக ஆடையொன்றின் இரு பகுதிகள் இணைவதைப் போல் இணைந்து கலந்து விடுவதைக் காணலாம்.<br /><br />4. நில அடையாளச் சின்னங்கள் (Landmarks)<br />அடையாளச் சின்னங்களும் நகர் பற்றிய பிமபங்களை நகர மாந்தரிடையே உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகின்றன. இத்தகைய அடையாளச் சின்னங்கள் தனித்து, உயர்ந்து தொலைவிலிருந்தும் அந்நகரினைப் பிரதிநிதித்துவம் செய்யும் நியூயார்க்கின் 'எம்பயர் ஸ்டேட்' கட்டடம் அல்லது 9-11இல் அழிந்த இணைக் கோபுரங்களான 'உலக வர்த்தக மையக்' கட்டங்களைபோன்று வான் முட்டும் கட்டடங்களாகவோ அல்லது 'டொராண்டோ'வின் புகழ்பெற்ற 'சி.என்' கோபுரம் (C.N.Tower) போன்ற கோபுரங்களாகவோ இருக்கலாம். தஞ்சையின் புகழ்பெற்ற தஞ்சைப்பெரிய கோயில் , பாரிஸின் சாயும் கோபுரம் மற்றும் குதுப்மினார் போன்ற கட்டடங்களையும் இவ்விதம் குறிப்பிடலாம். அல்லது குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய பூங்காவிலுள்ள கட்டடமாகவோ அல்லது நீரூற்றாகவோ அல்லது சிலையாகவோ கூட இருக்கலாம். அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி, புகழ்பெற்ற அரண்மனைகள், ஆலயங்கள், தாதுகோபங்கள போன்ற கட்டடங்களை இதற்குதாரணங்களாகக் குறிப்பிடலாம்.<br /><br />5. மையப்புள்ளிகள் ( Nodes)<br />இவையும் மேற்படி அடையாள சின்னங்கலைப் போன்று விளங்கினாலும் இவ்விதமான மையப் புள்ளிகள் வேறுபடுவது மற்றும் முக்கியத்துவம் பெறுவது அப்புள்ளிகளில் நடைபெறக்கூடிய செயற்பாடுகளிலிருந்துதான். நகரில் காணப்படும் பிரதானமான சதுக்கங்கள், பாதைகள் சந்திக்கும் சந்திகள் போன்றவற்றை இதற்குதாரணங்களாகக் குறிப்பிடலாம். நியூயார்க்கின் 'டைம்ஸ்' சதுக்கம் , 'டொராண்டோவின்' புதிய நகர மணடபமும் அதனுடன் கூடிய 'நேதன் பிலிப்' சதுக்கமும், மற்றும் புதிதாக அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட 'டன்டாஸ்' சதுக்கமும் அங்கு நடைபெறும் செயற்பாடுகள் காரணமாக நகரின் முக்கிய மையப்புள்ளிகளாக இருக்கும் அதே சமயம் முக்கியமான நில அடையாளச் சின்னங்களாகவும் விளங்குகின்றன. மேலும் 'டைம்ஸ்' சதுக்கம் அப்ப்குதியில் சிரப்பியல்பு காரணமாக அந்நகரின் முக்கியமான பிரதேசங்களீலொன்றாக (District) விளங்குவதையும் ஏற்கனவே பார்த்தோம்.<br /><br />இவ்விதமாக மேற்படி ஐந்து ஆதாரப்பகுதிகளும் எவ்விதம் நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் நகரின் விம்பம் பற்றிய பேராசிரியர் கெவின் லிஞ்சின் நகர அமைப்பு பற்றிய கோட்பாடானது நகர அமைப்புத் துறையின் முக்கியமானதொரு கோட்பாடுகளிலொன்றாக விளங்குகின்றது. நகரின் புனரமைப்புத் திட்டங்களில், அல்லது நிர்மாணத்திட்டங்களில் மேற்படி கோட்பாடு மிகவும் பயன் மிகவும் முக்கியமானதே.<br /><br />[இச்சமயத்தில் மொறட்டுவைப் ப்லகலைக் கழகத்தில் கட்டடக்கலை முடித்தபின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அமைப்பு அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய காலங்களில் கொழும்பு மாநகர், புதிய பாராளுமன்றம் போன்ற பல நில அமைப்பு (Landscape) , நகர் அமைப்புத் (Town Planning) திட்டங்களில் பணியாற்றிய நினைவுகள் மீளெழுகின்றன. அவற்றில் முக்கியமானதொன்று மேற்படி பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நகர் அமைப்பு வல்லுநரான டிக்சன், கட்டடக்கலை/ நகர் அமைப்பு வல்லுநரான சிவபாலன் (இவர் பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியபோது மரணித்து விட்டார்) , கட்டடக்க்லைஞரான வைரமுத்து அருட்செல்வன் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட கொழும்பு மாநகரின் பிம்பம் பற்றிய ஆய்வு. அது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் நினைவுக்கு வருகின்றது).<br /><br />ngiri2704@rogers.com<br />20/06/2009:</i> </span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-10162207632964745832009-06-19T20:53:00.002-04:002020-05-03T13:31:11.996-04:00'உலகக் கிராமத்து' மக்களே! - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF4z6BmqZZwTG1AQ_NKjqvrZzVXEfTqJMHHDUAz5rnCmAYhSGzbi9CTz85SroPXl0yFy5tac8tWcxuIASwWY6HVZ18Bhc87yIPhC9EwagzVZGq519KbDxsFoWiC5NtunQy1XnK/s1600-h/telegraph_tamilchildrenbehindwires.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5349208170641408802" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF4z6BmqZZwTG1AQ_NKjqvrZzVXEfTqJMHHDUAz5rnCmAYhSGzbi9CTz85SroPXl0yFy5tac8tWcxuIASwWY6HVZ18Bhc87yIPhC9EwagzVZGq519KbDxsFoWiC5NtunQy1XnK/s200/telegraph_tamilchildrenbehindwires.jpg" style="cursor: hand; float: left; height: 123px; margin: 0px 10px 10px 0px; width: 200px;" /></a> <span style="font-size: 85%;"><i>அங்கே<br />எனது மண்ணில்<br />மக்கள் மெளனித்திருக்கின்றார்கள்.<br />மெளனமாக்கப்பட்டிருக்கின்றார்கள்.<br />இரவும், பகலுமென<br />ஓடியோடி அவர்கள் உருக்குலைந்து விட்டார்கள்.<br />நிலப்பொந்துகளுக்குள் வாழும் முயல்களுக்கோ<br />அல்லது மண்ணெலிகளுக்கோ கிடைக்கும்<br />தூக்கத்தைக் கூட , நிம்மதியைக் கூட<br />அவர்கள் இழந்து விட்டிருந்தார்கள்.<br />சிட்டுக் குருவியொன்றுக்கிருக்கக் கூடிய<br />குறுகிய மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தைக் கூட<br />அவர்களால் அனுபவிக்க முடியாதவாறு<br />அவர்கள் நிலத்துக்கடியில் புதைந்து கிடந்தார்கள்.<br />இப்பொழுது வேலிகளுக்குள் வதைபட்டுக்<br />கிடக்கின்றார்கள்?<br /><br />குண்டு மழையில் மானுட நாகரிகத்தின்<br />அற்புதங்களையெல்லாம், பெருமைகளையெல்லாம்<br />அவர்கள் இழந்து விட்டிருந்தபோது.<br />மெளனித்திருந்தது அவர்கள் மட்டுமா?<br />அவர்களைச் சுற்றியிருந்தவர்களும்தான்.<br />நாளும், பொழுதும், கணமும்<br />அவர்கள் சீர்குலைக்கப்பட்டபோது<br />மெளனித்திருந்தது அவர்கள் மட்டுமா?<br />அவர்களைச் சுற்றியிருந்தவர்களும்தான்.<br />எல்லோரும் மெளனித்திருந்தார்கள்.<br />ஓரிருப்புக்குரிய கெளரவத்தை, மாண்பினை,<br />மகிழ்ச்சியினையெல்லாம்<br />அவர்கள் இழந்து, தெருத்தெருவாக,<br />காடு மேடு, நீர்நிலைகளினூடாகவெல்லாம்<br />ஓடிக்கொண்டிருந்த போதெல்லாம்<br />மெளனித்திருந்தது அவர்கள் மட்டுமா?<br />அவர்களைச் சுற்றியிருந்தவர்களும்தான்.<br /><br />அங்கங்கள் சிதைக்கப்பட்டன; உயிர்கள்<br />வதைக்கப்பட்டன; கற்பனைகள், கனவுகள்<br />நொருக்கப்பட்டன; இருந்தும் அனைவரும்<br />திரைப்படமொன்றினைப் பார்ப்பதுபோல்<br />மெளனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.<br />அனைவருக்கும் புரிந்திருந்ததா?<br />சரி எது? பிழை எது? என்பதெல்லாம்.<br />இருந்தும் அவர்களை நகர விடாமல்<br />எவை கட்டிப் போட்டிருந்தன?<br /><br />கிராமங்களை அன்பினூற்றென்று சொன்ன<br />புண்ணியமான மானுடரே?<br />'உலகக் கிராமங்களில்; ஏன் அவை<br />சிதைந்து போயின என்பதற்கான<br />காரணங்களைக் கூறுவீரா?<br />எல்லைகளற்ற , குறுங் கிராமத்து<br />மக்களே! எல்லைகளால்.<br />இன்னும் எத்தனை காலம்தான்<br />நீங்கள் குறுகிக் கிடக்கப் போகின்றீர்கள்?<br />இன்னும் எததனை நாட்களுக்குத்தான்<br />மெளனித்திருக்கப் போகின்றீர்கள்?<br />இன்னும் எததனை நாட்களுக்குத்தான்<br />மெளனித்திருக்கப் போகின்றோம்?<br /><br />ngiri2704@rogers.com</i></span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-80224668639990422562009-06-08T15:31:00.004-04:002009-06-08T15:38:31.177-04:00அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!<div><div><span style="font-size:78%;">முல்லை அமுதனின் காற்றுவெளி அமைப்பினால் வெளியிடப்பட்ட 'இலக்கியப் பூக்கள் ' நூலில் வெளியான கட்டுரை. நூலில் வெளியான கட்டுரையின் மூல வடிவம்.<br /><br /></span><strong>அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!<br /><br />- வ.ந.கிரிதரன் - </strong></div><div><strong><br /></strong><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhayuDA4H0D2GztV4obKs-CaNseV9A6SZO2URD5LOf9260BfDChcdEc-ZVhn-wVfp2ZrwTDz7wCcKzjmZNeewUZVTBXugDn882yUttKhxFr7i-lPz_A4ZSBuB_YEXWi41fI1aHA/s1600-h/ankanthasami.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 149px; FLOAT: left; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5345043096325561890" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhayuDA4H0D2GztV4obKs-CaNseV9A6SZO2URD5LOf9260BfDChcdEc-ZVhn-wVfp2ZrwTDz7wCcKzjmZNeewUZVTBXugDn882yUttKhxFr7i-lPz_A4ZSBuB_YEXWi41fI1aHA/s200/ankanthasami.jpg" /></a><span style="font-size:85%;">அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் சிறுகதை, நாவல்,நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை எனச் சகல பிரிவுகளிலும் கொடி கட்டிப் பறந்தவர். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப் படுபவர். தனக்குப் பின்னால் ஓர் எழுத்தாளப் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். செயல் வீரர் கூட. நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞன். புதுமைப் பித்தன் போன்றவர்களை மீண்டும் இனம் கண்டது போல் அ.ந.க.வையும் மீண்டும் விரிவாக இனம் காண்பது ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியம். தான் வாழ்ந்த மிகவும் குறுகிய காலத்தில் சமூகத்திற்காக, மொழிக்காக அ.ந.க ஆற்றிய பங்களிப்பு வியப்பிற்குரியது. அ.ந.க தான் வாழ்ந்த காலத்தில் பல இளம் படைப்பாளிகளைப் பாதித்தவர். பலர் உருவாகக் காரணமாகவிருந்தவர். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு அளப்பரியது. அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில் படைப்புகள் நூலுருப் பெறவேண்டிய தேவையுள்ளது. அ.ந.கவின் படைப்புகள் அனைத்தும் சேகரிக்கப்பாடு நூல்களாக வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் தன்னலமற்ற , இலட்சிய வேட்கை மிக்க இலக்கியப்பணிக்கு நாம் செய்யும் கைம்மாறுமாகும். இதுவரையில் அவரது இரு படைப்புகள் மாத்திரமே நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த 'வெற்றியின் இரகசியங்கள்'. அடுத்தது 'மதமாற்றம்' மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் பெயரில் வெளிவந்ததொரு நூல்.<br /><br /><strong><span style="font-size:100%;">அ.ந.கந்தசாமியின் ஆரம்ப வாழ்க்கை பற்றிய தகவல்கள்...<br /></span></strong><br />அ.ந.க.வின் வாழ்நாள் பாரதியின் வாழ்நாளைப் போலக் குறுகியது. பாரதி 39 வருடங்களே வாழ்ந்திருந்தார். 8-8-1924 பிறந்த அ.ந.க. 44 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். பெப்ருவரி 14, 1968 அன்று மறைந்தார். அ.ந.கவின் தந்தையாரான நடராஜா யாழ் வண்ணார்பண்ணையில் வாழ்ந்திருந்தவர். சிறைச்சாலையில் வைத்திய அதிகாரியாக விளங்கியவர். தாயார் பெயர்: கெளரியம்மா. ஒரு சகோதரர்: நவரத்தினம். சகோதரி: தையல்நாயகி. நடராஜா பல சொத்துக்களின் அதிபதியாக விளங்கியவர். அ.ந.கவுக்கு ஐந்து வயதாயுள்ளபோது தந்தை இறந்து விட்டார். தாயாரும் தந்தை இறந்து 41ஆம் நாள் இறந்து விட்டார். குழந்தைகள் மூவரையும் நீதிமன்றம் சட்டரீதியான பாதுகாவலர் ஒருவர் பொறுப்பில் விட்டது. [உண்மையில் கொழும்பிலிருந்த உறவினரொருவர் மூன்று குழந்தைகளையும் தன் பாதுகாப்பில் எடுத்துச் சென்றதாகவும், அ.ந.க.வி பாட்டி நீதிமன்ற உதவியின் மூலம் தன்வசம் எடுத்துக் கொண்டதாகவும் அறியப்படுகிறது.] இந்தச் சொத்துக்கள் பல பாதுகாவலர், அதற்குப் பொறுப்பான சட்டத்தரணி ஆகியோரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அறிகின்றோம். [ அ.ந.க. தனது கல்வியை மேலும் தொடர முடியாமல் போனதற்கு இது முக்கிய காரணம். அல்லாவிடில் அ.ந.க. நிச்சயமொரு கலாநிதியாகக் கூட வந்திருப்பார். இந்நிலையில் குறுகிய காலத்தில் அவர் நிறைய நூல்களைக் கற்று, இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்ததோடு, செயல்வீரராகவும் விளங்கியது அவரது ஆற்றலைத்தான் காட்டுகிறது. அதனால்தான் அவர் வாழ்ந்த காலத்திலேயே அறிஞர் அ.ந.கந்தசாமியென அனைவராலும் அழைக்கப்பட்டார்.] இச்சமயத்தில் ஆரம்பக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் கற்ற அ.ந.க. சிறிதுகாலம் அளவெட்டி சென்று உறவினர் சிலருடன் வாழ்ந்து வந்தார். அளவெட்டியிலிருந்த காலத்தில் அ.ந.க. தனது கல்வியினைத் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் எஸ்.எஸ்.எல்.சி கல்வி கற்று பின்னர் கொழும்பு சென்றார்.<br /><br />அ.ந.க. பதினாலு வயதிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டார். ஈழகேசரி சிறுவர் பகுதியில் எழுத ஆரம்பித்தார். அச்சமயம் ஈழகேசரி நடத்திய பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். கதைப்போட்டியில் முதற்பரிசும் பெற்றுள்ளதாக அறிகின்றோம்.<br /><br />மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்துக்குரியம் முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவர் அ.ந.க.. ஏனையவர்கள்: தி.ச.வரதராசன், பஞ்சாட்சர சர்மா, நாவற்குழியூர் நடராசன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துக்கு முக்கியமானவர்களிலொருவர் அ.ந.க. அதன் சங்கக் கீதத்தை இயற்றியவரும் அவரே. மறுமலர்ச்சிக் காலகட்டம் என்னும் பொழுது 'மறுமலர்ச்சி' என்னும் சஞ்சிகையின் காலகட்டத்தை மட்டும் கருதுவது தவறு. மறுமலர்ச்சி அமைப்பினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். அ.ந.கந்தசாமி மறுமலர்ச்சி சஞ்சிகையில் சிறுகதைகள் எழுதாவிட்டாலும் 'மறுமலர்ச்சி' அமைப்பு உருவாவதற்குரிய முக்கிய காரணகர்த்தாக்களிலொருவர்.இந்த வகையில் அ.ந.க.வை மறுமலர்ச்சி எழுத்தாளரென்று கூறுவதில் எந்தவிதத் தவறுமில்லை.<br /><br />அ.ந.க சிறிதுகாலம் கொழும்பு கறுவாக்காட்டுப் பகுதியில் மணமுடித்து வாழ்ந்திருந்ததாக அறிகின்றோம். இவரது குடும்பவாழ்க்கை நீடிக்கவில்லை. திருமணத்தில் ஏற்பட்ட ஆள்மாறாட்டமே இதற்குக் காரணம். பார்த்த பெண் ஒருத்தி. மணந்ததோ அவரது சகோதரியை. இதனால் தான் போலும் அ.ந.க.வின் பல படைப்புகளில் ஆள்மாறாட்டமுள்ள சம்பவங்கள் காணப்படுகின்றன போலும்.<br /><br />சிறுவயதிலேயே வீட்டை விட்டுத் தனியாகக் கொழும்பு சென்ற அ.ந.க பட்டதாரியல்ல. ஆனால் கலாநிதிகள் தமது நூல்களை அவருக்கு அர்ப்பணிக்குமளவுக்குப் புலமை வாய்ந்தவர். கலாநிதி கைலாசபதி தனது 'ஓப்பியல் இலக்கியம்' என்னும் நூலினை அறிஞர் அ.ந.கந்தசாமிக்கு அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.<br /><br />பாரதியைப் போல் அ.ந.க.வும் தனது குறுகிய காலகட்ட வாழ்வில் சாதித்த சாதனைகள் அளப்பரியன. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம், உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர் அ.ந.க. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர்.<br /><br /><span style="font-size:100%;">அ.ந.கந்தசாமியின் சிறுகதைகள்....<br /></span><br />அறிஞர் அ.ந.கந்தசாமி சுமார் 60 சிறுகதைகளாவது எழுதியிருப்பாரென அறியக் கிடக்கின்றது. இவற்றில் உதவி வந்தது (பாரதி இதழ்) , வழிகாட்டி ( பாரதி இதழ்) , .இரத்த உறவு (பாரதி) , .புதுப் புனல் ( உதயம் மலரில்) , .நாயினும் கடையர் ( வீரகேசரி) , .காளிமுத்து இலங்கை வந்த கதை ( தேசாபிமானி) , .பாதாள மோகினி (சுதந்திரன்) , .நள்ளிரவு (சுதந்திரன்) , .ஐந்தாவது சந்திப்பு ( சுதந்திரன்) , .பரிசு ( சுதந்திரன்) , குருட்டு வாழ்க்கை .,.உலகப் பிரவேசம் , .ஸ்ரீதனம் , .பிக்பொக்கட் , சாகும் உரிமை , கொலைகாரன் , சாவுமணி போன்றவை பற்றிய தகவல்களையே பெற முடிந்தது. இவற்றிலும் ஒரு சிலவற்றையே பெற முடிந்தது. ஏனையவை ஆங்காங்கே பத்திரிகை, சஞ்சிகைகளில் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் எத்தனை காலத்தால் அழியுண்டு போயினவோ நாமறியோம். இந்நிலையில் இயலுமானவரையில் அவை சேகரிக்கப்பட வேண்டும். ஆவணப் படுத்தப்பட வேண்டும்.<br /><br />இவரது சிறுகதைகள் பற்றித் தனது 'ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மணிகள்' நூலில் அண்மையில் மறைந்த எழுத்தாளர் செம்பியன் செல்வன் 'இரத்த உறவு (மறுமலர்ச்சி), நாயிலும் படையர் (வீரகேசரி), காளிமுத்து இலங்கை வந்த கதை (தேசாபிமானி) பாதாள மோகினி, நள்ளிரவு, ஐந்தாவது சந்திப்பு (சுதந்திரன்), பரிசு, குருட்டுவாழ்க்கை, உலகப்பிரவேசம், ஸ்ரீதனம், பிக்பொக்கட், சாகும் உரிமை, கொலைகாரன், உதவிவந்தது, வழிகாட்டி ஆகிய கதைகளை அ.ந.க. தனது நல்ல கதைகள் எனக் குறிப்பிட்டுள்ளார். 'இரத்தஉறவு, ஐந்தாவது சந்திப்பு, நாயிலும் கடையர், - ஆகிய கதைகள் இவருக்குப் பெரும் புகழீட்டிக் கொடுத்தன. முதலிரு கதைகளும் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு புகழ்பெற்றவை. தேயிலைத் தோட்டவாழ்வு பற்றிய ‘நாயிலும் கடையர்’ - மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை என பல்வேறு ஈழத்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டதொன்று.... அத்துடன் 'வாழ்வின் உயிர் நாடியான சமூகப்பிரச்சினையான இவற்றைப் பொருளாகக் கொண்டு இவரின் கதைகள் எழுந்தன. சமூக ஆராய்வின்போது எழும் முடிவுகள் - தத்துவஞானிக்குத் தத்துவங்களாகவும், எழுத்தாளனுக்கு கதைகளாகவும் வெளியாகின்றன. உண்மையில் சிறந்த எழுத்துக்கள் வாழ்வின் நடப்பியல்பில் பிறப்பன அல்ல. அவ்வியல்புகளின் ஆராய்வின் முடிவிலேயே பிறக்கின்றன என்பதற்கு இவரின் கதைகள் சிறந்த உதாரணங்களாகும்' என்று கூறுவது கவனிக்கத் தக்கது.<br /><br /><strong><span style="font-size:100%;">அ.ந.கந்தசாமியின் கவிதைகள்..<br /><br /></span></strong>கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே என்னும் புனைபெயர்களிலும் எழுதிக் குவித்தவர். மரபுக் கவிதை எழுதுவதில் மிகுந்த பாண்டித்தியம் மிக்கவர் அ.ந.க. ஆனால் இவரது மரபுக்கவிதைகள் ஏனைய பண்டிதர்களின் மரபுக்கவிதைகளைப் போன்றவையல்ல. துள்ளு தமிழ் கொஞ்சுபவை.அன்றொருநாள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகரசபைக்குச் சொந்தமான வில்லூன்றிமயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வை இவரது 'வில்லூன்றி மயானம்' என்னும் கவிதை சாடுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த காலத்தில் ஏனைய கவிஞர்கள், எழுத்தாளர்களெல்லாம் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகக் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித்தீயாக அதனைக் கண்டார்.<br /><br />'சிறுகதையைப் போலவே, கவிதைத் துறையிலும் இவர் வெற்றியீட்டினார். 'எதிர்காலச் சித்தன் பாட்டு', துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம் என்பன சிறந்தவை' என்பார் எழுத்தாளர் செம்பியன் செல்வன். இவரது ஆரம்பக் கவிதைகளிலொன்றான 'சிந்தனையும், மின்னொளியும்' நல்லதொரு கவிதை. 'ஈழத்துச் சாகித்திய அமைப்பின் இலக்கிய நிகழ்வொன்றில் பாடப்பட்ட இவரது ‘கடவுள் - என்சோரநாயகன்' என்ற கவிதையைக் கேட்ட, தென் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை ‘ ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறைதான் இப்படிப் பட்ட நல்ல கவிதை தோன்றும்’ என்று கூறியதாக அநதனி ஜீவா, செம்பியன் செல்வன் போன்ற பல எழுத்தாளர்கள் தமது கட்டுரைகளில், ஆய்வு நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். எழுத்தாளர் காவலூர் ராஜதுரையும் அ.ந.க.பற்றியத் தினகரனில் எழுதிய கட்டுரையில் "சாகித்திய மண்டலத்தின் 'பா ஓதல்' கவி அரங்கிலும் கந்தசாமியின் குரல் ஒலித்தது. 'கடவுள் என் சோர நாயகன்' என்னும் தலைப்பில் அவர் ஓதிய பா, அவரே குறிப்பிட்டதுபோல, தமிழுக்கே புதியது. 'நாயகனாகவும், நாயகியாகவும், குழந்தையாகவும் மற்றும் பலவாறாகவும் கடவுளைத் தமிழ்க் கவிஞர் பலர் பாவித்திருக்கின்றார்கள். ஆனால் எவராவது சோர நாயகனாகப் பாவித்ததிண்டோ?' என்றார் கந்தசாமி" என்று குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் அ.ந.க ஈழத்துக் கவிதையுலகில் தவிர்க்கப்படாத முக்கிய படைப்பாளியென்பதை உறுதி செய்யும்.<br /><br /><span style="font-size:100%;"><strong>அ.ந.க.வின் நாவல், நாடக முயற்சிகள்....<br /></strong></span><br />அ.ந.க.வின் ஒரேயொரு நாவல் 'மனக்கண்' தினகரனில் 1967இல் தொடராக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றது. இதன காரணமாகவே பின்னர் அ.ந.க.வின் உற்ற நண்பர்களிலொருவரான சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தினரால் ஒலிபரப்பப் பட்டது. பதிவுகள் இணைய இதழிலும் இந்நாவல் அண்மையில் தொடராக வெளிவந்திருந்தது. (ஆயினும் இந்நாவலிம் அத்தியாயம் முப்பதினை கண்டெடுக்க முடியவில்லை. இந்த அத்தியாயமிலாமலே பதிவுகள் இணைய இதழில் மேற்படி நாவல் வெளிவந்தது..) இந்த நாவல் முடிந்தபொழுது அ.ந.க. தனது முடிவுரையினை 'நாவல்' பற்றியதொரு நல்லதொரு ஆய்வுக்கட்டுரையாக வடித்துள்ளார். அதிலவர் மனக்கண் பற்றிய தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தவிர அ.ந.க. தனது இறுதிக்காலத்தில் 'களனி வெள்ளம்' என்னுமொரு நாவலினையும் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக் கொண்டிருந்ததாகவும், அவர் இறந்ததும் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்த அப்பிரதி 1983 கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறிகின்றோம். செ.கணேசலிங்கன் அ.ந.க.வின் இறுதிக் காலத்தில் அவரைப் பராமரித்தவர்களிலொருவர். அதுபற்றித் தனது குமரன் சஞ்சிகையில் அ.ந.க.வின் இறுதிக்காலம் பற்றிய தொடர் கட்டுரையொன்றினையும் எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது.<br /><br />அ.ந.க. தாஜ்மகால் பற்றிய 'கடைசி ஆசை' , 'அமர வாழ்வு' போன்ற குறுநாடகங்கள் சில எழுதியுள்ளதாக அறிகின்றோம். ஆயினும் 1967இல் கொழும்பில் நான்கு தடவைகள் மேடையேற்றப்படுப் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஈழத்து இலக்கிய உலகில் எழுப்பிய 'மதமாற்றம்' என்னும் நாடகம் அவரது காத்திரமான பங்களிப்பினை என்றும் வெளிப்படுத்தி நிற்கும். இந்நாடகம் கலாநிதி கைலாசபதி அவர்களை மிகவும் கவர்ந்த நாடகங்களிலொன்று. அது பற்றி அவர் 'இதுவே தமிழில் இதுவரை எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச்சிறந்தது’ என்று குறிப்பிட்டுள்ளது இதனைப் புலப்படுத்தும். இது பற்றி அ.ந.கந்தசாமியே விமர்சனக் கட்டுரையொன்றினை இலங்கையிலிருந்து வெளிவந்த 'ராதா' என்னும் பத்திரிகையில் எழுதியுள்ளார்.<br /><br />எழுத்தாளர் அந்தனி ஜீவா தினகரனில் அ.ந.க. பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்; என்னும் தொடரில் 'எதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள் விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள்' என்று குறிப்பிடுவது மிகையான கூற்றல்ல. மேற்படி அ.ந.க.வின் நாடகத்தைப் பற்றிய தனது 'டெய்லி மிரர்' விமர்சனத்தில் அ.ந.க.வின் நாடகத் திறமையினை ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவோடு ஒப்பிட்டு விமர்சித்திருப்பது அ.ந.க.வின் நாடகப் புலமையினை வெளிப்படுத்தும்.<br /><br /><span style="font-size:100%;"><strong>அ.ந.கவும் உளவியலும்...<br /></strong></span><br />"வெற்றியின் இரகசியங்கள்" என்ற அ.ந.கந்தசாமியின் உளவியல் நூலினைப் பாரி பதிப்பகத்தினர் தமிழகத்தில் வெளியிட்டுள்ளனர். மேற்படி நூலில் பல்வேறு உளவியற் கோடுபாடுகள் பற்றியெல்லாம், அவற்றை வாழ்வின் வெற்றிக்கு எவ்வகையில் பாவிக்கலாம் என்பது பற்றியெல்லாம் தனக்கேயுரிய துள்ளுதமிழ் நடையில் அ.ந.க. விபரித்திருப்பார்.<br /><br /><strong><span style="font-size:100%;">அ.ந.க.வின் மொழிபெயர்ப்பு முயற்சிகள்.....<br /></span><br /></strong>1943இலிருந்து 1953வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். அச்சமயம் பல ஆங்கில நூல்களைப் பணிநிமித்தம் மொழிபெயர்த்துள்ளார். (அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் அ.ந.க இலங்கை அரச தகவற் துறையில் 12, 13 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிடுவார். தகவற்துறையில் பணிபுரிந்த் காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீலங்கா' இதழாசிரியராகவும் அ.ந.க.வே விளங்கினார்). அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனங்களுக்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்து வந்தார். ஒப்சேவரில் புரூவ் ரீடராகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார். வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய அ.ந.க தேசாபிமானி பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அக்காலகட்டத்தில் சுதந்திரன் பத்திரிகையில் சேர்ந்து அதன் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். ஆங்கிலப் பத்திரிகையான டிரிபியூனில் சிலகாலம் பணியாற்றினார். அச்சமயம் நிறைய திருக்குறள் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். எமிலி சோலாவின் 'நானா' (நாவல்'- , பெர்ட்ராண்ட் ரசலின் 'யூத அராபிய உறவுகள்', 'பொம்மை மாநகர்' என்னும் சீன நாவல், ஓ ஹென்றியின் சிறுகதைகள் மற்றும் பல படைப்புகளை மொழிபெயர்த்தவரிவர். இவையெல்லாம் சேகரிக்கப்பட வேண்டும். இவற்றை வைத்திருக்கும் படைப்பாளிகள் இவை பற்றிய தகவல்களை எமக்கு அறியத் தந்தால் நன்றியுடையவர்களாகவிருப்போம்.<br /><br />எமிலிசோலாவின் நாவலான 'நானா'வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் 'நானா' சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் 'முதலிரவு' என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் 'போலிஸ்' என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாவது அத்தியாயம் , தொடரும் அல்லது முற்றும் என்பவையின்றி, ஓசையின்றி முடிந்துள்ளதைப் பார்க்கும்போது ' நானா' நாவல் அத்துடன் முடிவு பெற்றுள்ளதா அல்லது நடுவழியில் வாதப்பிரதிவாதங்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை மூல நூல் பார்த்துத்தான், நாவலை வாசித்துப் பார்த்துத்தான் முடிவு செய்யவேண்டும். நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும், நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில் முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா 'நானா' பற்றி சுதந்திரனுக்கு எழுதிய வாசகர் கடிதமொன்றில் '"நானா" கதை சுதந்திரனில் வெளிவரத்தொடங்கிய பின்பு மார்க்கெட்டில் சுதந்திரன் பத்திரிகைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் கடைகளுக்குச் சென்று பத்திரிகை கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளதை நான் கண்ணாரக் கண்டேன். அதனால் பலர் சேர்ந்து ஒரு பத்திரிகையை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏறபட்டுள்ளது. தமிழாக்கம் அபாரம்' என்று தனது கருத்தினைப் பதிவு செய்திருக்கின்றார். இலங்கையிலிருந்தும் மட்டுமல்ல தமிழக்த்திலிருந்தும் பலர் 'நானா' பற்றிய தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபோல் பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் அ.ந.கந்தசாமி எழுதிய 'கண்ணகிப் பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? பெண்ணடிமையின் சிகரம் என்பதே சாலப் பொருந்தும்' என்னும் கட்டுரையும் பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளதை அன்றைய சுதந்திரன் இதழின் பக்கங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.<br /><br /><span style="font-size:100%;"><strong>அ.ந.க. என்றொரு விமர்சகர்....<br /></strong></span><br />சிறுகதை, கவிதைகள், நாடகம், நாவலெ, மொழிபெயர்ப்பு என்றெல்லாம் எழுத்தில் கால் பதித்த அ.ந.க. பல்வேறு அரிய இலக்கியக் கட்டுரைகளை, விமர்சனக் கட்டுரைகளை, நூல் மதிப்புரைகள் மற்றும் சினிமா பற்றிய விமர்சனக் கட்டுரைகள்,தேசிய இலக்கியம், கவிதை, நாடகத் தமிழ், சிலப்பதிகாரம்' என்றெல்லாம் பல்வேறு விடயங்கள் பற்றி அ.ந.க. எழுதிய படைப்புகள் பல்வேறு சிற்றிதழ்கள், பத்திரிகைகளிலெல்லாம் வெளிவந்திருக்கின்றன. வெண்பா பற்றிய தொடர் கட்டுரைகளை வீரகேசரியில் எழுதியுள்ளதாகவும் அறிகின்றோ. இதனால் அ.ந.க.வை ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகர்களிலொருவராகவும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.<br /><br />பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் இவர் சுதந்திரனில் எழுதிய சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தமிழகத்திலும், இலங்கையிலும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பின. பெரியாரின் குடியரசு பத்திரிகையிலும் இவற்றில் சில மீள்பிரசுரம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.<br /><br />தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை பெற்ற அ.ந.க. ஆங்கிலத்திலும் சிலப்பதிகாரம், திருக்குறள், கெளடில்யரின் அர்த்தசாத்திரம் பற்றியெல்லாம் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை டிரிபியூன் போன்ற ஆங்கில சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.<br /><br /><span style="font-size:100%;"><strong>அ.ந.க.வும் சிறுவர் இலக்கியமும்!<br /></strong></span><br />சிறுவர் இலக்கியத் துறையில் அ.ந.க தன் பால்ய காலத்தில் ஈழகேசரி மாணவர் மலரில் எழுதியுள்ளதாக அறிகின்றோம். இவையும் சேகரிக்கப்பட வேண்டுமெனக் கருதுகின்றோம். இது தவிர 'சங்கீதப் பிசாசு' என்றொரு சிறுவர் நாவலொன்றினையும் அ.ந.க எழுதியுள்ளார். எழுபதுகளின் இறுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தால் வெளியிடப்பட்ட 'கண்மணி' என்னும் சிறுவர் சஞ்சிகையில் அந்நாவலின் சில அத்தியாயங்கள் வெளிவந்த்துள்ளன. பின்னர் 'கண்மணி' நின்று விடவே அந்நாவலும் குறையுடன் நின்று விட்டது. அந்நாவல் முதன் முதலில் 'சிரித்திரனில்' வெளிவந்ததாகச் சிரித்திரன் ஆசிரியர் அவருடனான உரையாடலொன்றின்போது குறிப்பிட்டதாகவொரு நினைவு. இது பற்றிய தேடலினையும் தொடங்க வேண்டும்.<br /><br /><span style="font-size:100%;"><strong>அ.ந.க.வின் உரைநடை...</strong><br /></span><br />அ.ந.க என்னும் கிணறினைத் தோண்டத் தோண்டப் பெருகிவரும் இலக்கிய ஊற்று எம்மைப் பெரிதும் பிரமிக்க வைக்கின்றது. அவருக்குப் பெருமை சேர்க்குமின்னுமொரு விடயம் அவரது அந்தத் துள்ளுதமிழ் உரைநடை. இது பற்றிய செம்பியன் செல்வனின் 'ஈழத்தமிழ்ச் சிறுகதை மணிகள்' "இவரின் படைப்புக்களின் வெற்றிகளுக்கு இவரின் உரை நடையும் முக்கிய காரணம் எனலாம். எளிய வாக்கியங்களாக கருத்துக்களை வெளியிட்டார். அக் கருத்துக்களை உவமை, உருவகச் சொல்லாட்சிகளினால் அழகுபடுத்தியும், கம்பீரத் தொனியேற்றியும், எல்லாருக்கும் புரியும்வண்ணம் மக்கள் முன் வைத்தார். இப் பண்பு சிறுகதைகளில் மட்டுமல்லாது, ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், கொள்கை விளக்கக் கட்டுரைகளிலும் எல்லாரையும் வசீகரிக்கும் வண்ணம் அழகழகான, ஆழமான, எளிய உவமை உருவங்களை அமைத்து எழுதுவார். சாதாரணமாக ஒரு சிறு கட்டுரையிற் கூட குறைந்தது பத்தோ பதினைந்து உவமை உருவங்களைக் காணலாம்." என்று குறிப்பிடும்.<br /><br /><strong><span style="font-size:100%;">வானொலியில் அ.ந.க....</span><br /></strong><br />இலங்கை வானொலியின் "கலைக்கோல" நிகழ்ச்சியிலும் மாதந்தோறும் அ.ந.க. வின் விமரிசினங்கள், "உலக நாடகாசிரியர்கள்" பற்றிய அறிமுகவுரைகள் ஒலிபரப்பப்பட்டதாகவும் அறிகின்றோம். அவரது இறுதிப் படைப்பாக 'மொழிபெயர்ப்பு நாடக'மொன்று ஒலி பரப்பப்பட்டதாகவும் அறிகின்றோம். அ.ந.க.வின் வானொலி முயற்சிகளைப் பற்றி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலும் இவர் பற்றிய தேடலினைத் தொடர வேண்டிய தேவையினை இது வலியுறுத்தும்.<br /><br />இவை தவிர பேச்சுக் கலையிலும் வல்லவர் அ.ந.க. அத்துடன் பல கவியரங்குகளிலும் பங்கு பற்றிய அன்றைய காலத்து இலக்கிய வானில் நட்சத்திரமாக மின்னியவர் அ.ந.க என்பதைத்தான் அவர் பற்றிய கட்டுரைகள், நூல்கள் தெரிவிக்கின்றன.<br /><br /><span style="font-size:100%;"><strong>செயல் வீரர் அ.ந.க!</strong><br /><br /></span>அ.ந.க. எழுதியதுடன் மட்டும நின்று விட்டவரல்லர். செயல் வீரரும் கூட. தான் கொண்ட கொள்கைகளுக்காக இறுதி இறுதி வரையில் போராடியவர். 'வீரகேசரியில் பணிபுரிந்தபோது, இவரின் கடமை, எழுத்துடன் மட்டும் நின்றுவிடாது. செயல் முறையிலும் தீவிரமடைந்தது. வீரகேசரியில் முதன் முதலாகத் தொழிற் சங்கம் ஒன்றினைத் தாபித்து தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபட்டவர்' என்று தனது ''ஈழத்துச் சிறுகதை மணிகள்' நூலில் குறிப்பிடுவார் எழுத்தாளர் செம்பியன் செல்வன. இது பற்றிய அந்தனி ஜீவாவின் 'சாகாத இலக்கியத்தின் சரித்திரன் நாயகன்' ''வீரகேசரி' ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்து விலக்கப் பட்டார்." என்று பதிவு செய்யும்.<br /><br />மேற்படி கட்டுரையில் அந்தனி ஜீவா அ.ந.க.வின் மார்க்சிய ஈடுபாடு பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்:<br /><br />"பின்பு கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியரானார். கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான 'தேசாபிமானி'யின் முதலாவது ஆரம்பகால ஆசிரியர் அ.ந.கந்தசாமியே. 'தேசாபிமானி'யின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். அப்பத்திரிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், அரசியற் கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன. கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக அ.ந.கந்தசாமி கணிக்கப் படுகின்றார். தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட காலங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அமர இலக்கியங்களைச் சிருஷ்டித்துள்ளார். கம்யூனிஸ்ட கட்சிக்குள் நடந்த போராட்டத்தின் காரணமாக அ.ந.கந்தசாமியும் அவரைச் சார்ந்த ஏழெட்டுப் பேரும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.".<br /><br /><span style="font-size:100%;"><strong>அ.ந.க.வின் இலக்கியக் கோட்பாடுகள்!<br /></strong></span><br />"'மக்கள் இலக்கியம்' என்ற கருத்தும் 'சோஷலிஸ்ட் யதார்த்தம்' என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன" எனத் தனது பிரசித்தி பெற்ற 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் கட்டுரையில் குறிப்பிடும் அ.ந.க. பின்வருமாறு தான் எழுதுவதன் நோக்கம் பற்றி விபரிப்பார்:<br /><br />"எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.<br /><br />மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கபலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.<br /><br />பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை....உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்."<br /><br />'தேசாபிமானி'யில் வெளிவந்த மேற்படி கட்டுரை எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. அ.ந.க மறைந்தபொழுது அவரது மேற்படி கட்டுரையினைப் பிரசுரித்த தேசாபிமானி 'போர்ச்சுவாலை அமரச் சுடராகியது' என்றொரு ஆசிரியத் தலையங்கத்தினையும் வரைந்து தனது அஞ்சலியினைச் செலுத்தியது.<br /><br />இவையெல்லாம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அறிஞர் அ.ந.க.வின் அளப்பரிய பங்களிப்பினைத் தெளிவாக விளக்கி நிற்கின்றன. இன்று அ.ந.க பற்றிக் குறிப்பிடும் ஒரு சில எழுத்தாளர்கள் அவரது பன்முக ஆற்றலின் பின்னணியில் அவரை ஆய்வு செய்ய மறந்து சில சமயங்களில் மேலோட்டமாகக் கருத்துகளைத் தெரிவிப்பது அவர்களது அறியாமையின் விளைவே. அ.ந.க. போதிய ஆய்வுகளின்றி அவர் பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதை தவிர்த்து விடுவது நல்லது. "ஈழத்தமிழிலக்கிய உலகின் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு மற்றையோரால் மறுக்கவோ மறைக்கவோ முடியாதளவிற்கு சிறந்த தொண்டாற்றினார். நவீன தமிழ்க்கலை வடிவங்களாக உருவகித்த சிறுகதை, நாவல், விமர்சனம், மொழி பெயர்ப்பு என்பனவற்றுடன் நாடகம், கவிதை ஆகிய துறைகளையும் - புத்தாற்றல் நிரம்பிய ஆக்ரோஷ வேகத்துடன் சமூகச் சீர்கேடுகளைக் கெல்லி எறியவும், ‘புதியதோர் உலகு’ அமைக்கவும் ஏற்றகருவிகளாக்கினார்" என்று குறிப்பிடும் செம்பியன் செல்வன் "இவரைப்பற்றிய உண்மையான மதிப்பீடு பல் துறைகளையும் தழுவியதாகவிருந்தாலன்றி முழுமையடையா"வென்று குறிப்பிடுவதை மேற்படி அரைகுறை ஆய்வாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் இது பற்றிய தனது வேதனையினை "அ.ந. கந்தசாமி சுமார் நாற்பது சிறுகதைகள் வரையே எழுதியிருப்பார் என அவரின் நெருங்கிய இலக்கிய நண்பர்களால் அறியவருகின்றது. அவை யாவும் ஆங்காங்கே அவர் பணியாற்றிய பத்திரிகைகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் சிதறிக்கிடக்கின்றன. அவரது சிறுகதைகள் இன்றுவரை தொகுப்பாக வெளிவராதிருப்பது விந்தையான வேதனையே, அவரால் உற்சாகப் படுத்தப்பட்டும் உயர்த்தப்பட்டும் உருவாக்கப்பட்ட இலக்கியவாணர்கள் எத்தனையோ பேர் இன்று ஈழத்தமிழிலக்கிய உலகில் மட்டுமல்லாது சமூக நிலையிலும் உயர்நிலை பெற்று விளங்குகின்றனர். அவர்களோ அன்றிப் பிற பதிப்பங்களோ, அ.ந. கந்தசாமியின் படைப்புக்களை நூலுருவில் கொணர முயலவேண்டும். அவர் தன் ஆயுட்காலம் முழுவதும் தொடர்பு கொண்டிருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமாவது இவ்விடயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தவேண்டும்" என்றும் வெளிப்படுத்துவார்.<br /><br />அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த 'தமிழமுது' என்னுமோர் சிற்றிதழின் ஆசிரியரான சரவணையூர் மணிசேகரன் தனது 'அ.ந.க.வும் அவர் சிருஷ்டிகளும்' என்னும் ஆசிரியத் தலையங்கத்தில் "அவர் சாகும்போதும் இலக்கியப் பெருமூச்சு விட்டுத்தான் இறந்தார். அவரைச் சந்திக்கப் போனால் எந்த நேரமும் எங்களோடு பேசிக்கொள்வது தமிழ் இலக்கியம்தான். அவர் தமிழ் இலக்கியத்துக்காக தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்ப்பணித்தார்.... ஏ குளிகைகளே! சமூகத்துக்காக அவர் சிருஷ்டித்தவர். அவர் சிருஷ்டிகளை புத்தக உருவில் கொண்டுவர முயற்சிக்காத இந்த நன்றி கெட்ட சமூகம் போலவா நீ அவர் உயிரைப் பிடித்து வைக்காது துரோகம் செய்து விட்டாய்? 'தமிழமுது' அழுகின்றாள். அவள் கண்களில் நீர் துளிக்கின்றது. அவர் படத்தை (அமரர் அ.ந.கந்தசாமி) முகப்பில் தாங்கியபின்புதான் அவள் மனம் கொஞ்சம் சாந்தியடைகின்றது." என்று சாடியிருப்பார்.<br /><br />இவ்விதம் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்குப் பல்துறைகளில் அரிய பங்காற்றிய அறிஞர் அ.ந.க.வின் படைப்புகளை இனியாவது இன்றைய தமிழ் உலகு வெளிக்கொணர முயற்சிகள் செய்ய வேண்டும். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அவரது படைப்புகளைச் சேகரிக்க உதவினாலே அதுவேயொரு மிகப்பெரிய சேவையாகவிருக்கும்.</span><br /><br />ngiri2704@rogers.com</div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-79596353879659495282009-06-07T22:10:00.004-04:002009-06-07T22:14:41.938-04:00கவீந்திரன் கண்ட கனவு!<div><div><strong><em>கவீந்திரன் கண்ட கனவு: ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு!</em> <em>- வ.ந.கிரிதரன்-</em></strong></div><div><strong></strong><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlzr39Pje4Nka-HUx7YN8HQrVQ-9-3u0dtA0VvtIMFp1WXphHDphFeOERD9Pi5_NU_uW-jNgDmFHT9n0M5QEHJRwyCWlQpPsHfBpQLUeaqaOjlHBs9f-VJWooEgC2vfYn3nnOZ/s1600-h/ankanthasami.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 137px; FLOAT: left; HEIGHT: 151px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5344773991837281906" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlzr39Pje4Nka-HUx7YN8HQrVQ-9-3u0dtA0VvtIMFp1WXphHDphFeOERD9Pi5_NU_uW-jNgDmFHT9n0M5QEHJRwyCWlQpPsHfBpQLUeaqaOjlHBs9f-VJWooEgC2vfYn3nnOZ/s320/ankanthasami.jpg" /></a></div><div><strong>-</strong>ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் த்மிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது [மறுமலர்ச்சிக் குழுவினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை. இச்சஞ்சிகையில் எழுதிய படைப்பாளிகளையே மறுமலர்ச்சி எழுத்தாளர்களாகக் காணும் போக்கொன்று செங்கை ஆழியானுட்பட இன்று இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுகள் செய்ய விரும்பும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினைச் சார்ந்த செல்லத்துரை சுதர்ஸன் போன்றவர்கள் மத்தியில் நிலவுவதாகத் தெரிகிறது. இது ஒரு பிழையான அணுகுமுறை. மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கி, அதில் பாடுபட்டவர்களின் படைப்புகள் யாவும் மறுமலர்ச்சிப் படைப்புகளாகத்தான் கருதப்பட வேண்டும். உண்மையில் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், அல்லது மறுமலர்ச்சிக் கவிதைகள், அல்லது மறுமலர்ச்சிப் படைப்புகள் , மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்போது அது மறுமலர்ச்சி சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்களை மட்டும் குறிக்கவில்லை. அந்த 'மறுமலர்ச்சி' இதழினை வெளியிட்ட மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்களின் படைப்புகளையும் குறிக்கிறது. இதுவே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும் என்பதென் கருத்து. செங்கை ஆழியான, செல்லத்துரை சுதர்ஸன் போன்றோர் இந்த விடயத்தில் கருத்துச் செலுத்த் வேண்டுமென்பதென் அவா. சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்' என்னும் நூலில் ஈழத்துக் கவிதையுலகின் ம்றுமலர்ச்சிக் கட்ட காலம் பற்றிக் குறிப்பிடும்போது அ.ந.கந்தசாமி, மகாகவி, நாவற்குழியூர் நடராசன் ஆகியோரை மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்களாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் கவீந்த்திரன் என்னும் புனைபெயரிலும் எழுதிய அறிஞர் அ.ந.கநதசாமியை ஈழத்தின் தமிழ்க் கவிதையில் முத்லாவதாக இடதுசாரிச் சிந்தனையினை அறிமுகப்படுத்திய படைப்பாளியாகவும் குறிப்பிடுவர்.இவ்விதம் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றியே குறிப்பிடப்படவேண்டுமே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் படைப்புகளை மட்டும் மையமாக வைத்து மறுமலர்ச்சிக் காலகட்டத்தை எடை போடக்கூடாது. அவ்விதமான போக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய பிழையான பிம்பத்தினைத் தந்துவிடும் அபாயமுண்டு. - பதிவுகள்]<br /><br />அ.ந.க. ஒரு செயல் வீரர். ஏனையவர்களைப் போல் வாயளவில் நின்று விட்டவரல்லர். தான் நம்பிய கொள்கைகளுக்காக இறுதிவரை பாடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவர். மேற்படி சங்கத்தின் கீதமாகவும் இவரது கவிதையே விளங்குகின்றது. அவரது கவிதைகளின் கருப்பொருட்களாகத் தீண்டாமை, தோட்டத்தொழிலாளர் இழிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீரமைப்பு, இயற்கை, காதல், தத்துவம், வர்க்க விடுதலை, பிடித்த அளுமைகள் போன்றவை விளங்குகின்றன. இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன [அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.]. இவரது ஆரம்ப காலத்துக் க்விதைகளிலொன்றான , ஈழகேசரியில் வெளிவந்த, 'சிந்தனையும், மின்னொளியும்' என்ற கவிதை முக்கியமான கவிதைகளிலொன்று. 'அர்த்த இராத்திரியில் கொட்டுமிடித்தாளத்துடனும், மின்னலுடனும் பெய்யும் மழையைப் பற்றிப் பாடப்படும் இக்கவிதையில் , அந்த இயறகை நிகழ்வு கூடக் கவிஞரிடம் சிந்தனையோட்டமொன்றினை ஏற்படுத்தி விடுகின்றது. கணப்பொழுதில் தோன்றி அழியும் மின்னல் கூட ஒரு சேதியைக் கூறிவிடுகிறது. அது என்ன?<br /><br />'கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்<br />மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்<br />தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்<br />ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?<br />வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?<br />சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?<br />ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய<br />மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற<br />சேதி புதினமன்று....' (ஈழகேசரி)<br /><br />இவ்விதமாகக் கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் கூறும் சேதிதானென்ன? அதன் சோதிதான் அதன் சேதி. சிறுகணமே வாழ்ந்தாலும் அம்மின்னல் உலகிற்கு ஒளி வழங்குவதன் மூலம் நல்லதொரு சேவையைச் செய்து விட்டுத்தான் ஓடி மறைகிறது. மனித வாழ்வும் இத்தகைய மின்னலைப் போன்றுதான் விளங்க வேண்டும். இதுதான் மண்ணின் மக்களுக்கு கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் சொல்லும் சேதி. இதுதான் கவிஞரிடத்தில் அவ்வியற்கை நிகழ்வு தூண்டிவிட்ட சிந்தனையின் தரங்கங்கள்.<br /><br />'....அச் சேதியிலே நான் காணும்<br />சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு<br />ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்<br />தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!<br />சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்<br />ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!<br />என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.<br />மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.<br />வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே<br />நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.'<br /><br />மேற்படி 'சிந்தனையும் மின்னொளியும்' என்னும் அ.ந.க.வின் ஆரம்பகாலக் கவிதை அ.ந.கவிற்கு மிகவும் பிடித்ததொரு கவிதை. மேற்படி மின்னலைப் போலவே தோன்றி குறுகிய காலமே வாழ்ந்து ஒளி வீசி மறைந்த்வர் அ.ந.க. மின்னல் கூறிய பாடத்தினையே பின்பற்றி வாழ்ந்தவர் அவரென்பதை அவரது 'தேசாபிமானி' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையான 'நான் ஏன் எழுதுகிறேன்? ' என்னும் கட்டுரை புலப்படுத்துகிறது. (வ.ந.கிரிதரனை இதழாசிரியராக கொண்டு வெளிவந்த மொறட்டுவைப் ப்லகலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரின் 'நுட்பம்' (1981) வருடாந்தச் சஞ்சிகையிலும் இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப் பட்டிருக்கின்றது.] அக்க்ட்டுரையில் மேற்படி தனது ஆரம்பகாலக் கவிதையினைக் குறிப்பிடும் அ.ந.க. மேலும் தொடர்ந்து கூறுவார்:<br /><br />'....இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம். இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?...'<br /><br />இதன் மூலம் அ.ந.கவின் ஆரம்பகாலக் கவிதையான் 'சிந்தனையும், மின்னொளியும்' கவிதை அவரது எதிர்கால இலக்கிய வாழ்வின் அடித்தளமாக, உந்து சக்தியாக விளங்குவதைக் காணமுடிகிறது. அவரது படைப்புகள் எல்லாமே மேற்படி அவரது இலட்சிய வேட்கையைப் புலப்படுத்துவனவாகவேயிருக்கின்றன.<br /><br />இவரது இன்னுமொரு கவிதையான 'வில்லூன்றி மயானம்' சமுதாயத்தில் நிலவிய சாதிக் கொடுமையினை, அதன் கட்டுப்பாடுகளை வன்மையாகச் சாடுகின்றது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகர சபைக்குச் சொந்தமான வில்லூன்றி மயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வைச் சாடும் கவிதையிது. இச்சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில் ஏனைய கவிஞர்களெல்லாரும் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் , அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகத் துணிச்சலுடன் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித் தீயாக அதனை இனங்கண்டார்:<br /><br />'நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்<br />நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று<br />கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்<br />கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்<br />நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்<br />நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்<br />வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்<br />வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வஃது...'<br /><br />மனிதர்கள் ஏழை, பணக்காரர் என்று ஏற்றத்தாழ்வுகள் பார்த்தல் தகாது. ஒருவரிற்கொருவர் அன்புடன் வாழ்தல் வேண்டும். அருவருப்பினையொதுக்கிச் சேவை மனப்பான்மையுடன் வாழ வேண்டுமென்பதை இவரது 'துறவியும், குஷ்ட்டரோகியும்' என்னும் கவிதை கூறுகிறது. தானமெடுப்பதற்காகச் செல்லும் துறவியொருவருக்குத் தானமிடுவதற்காகச் செல்வர்கள் பலர் காத்து நிற்கின்றார்கள். அவரோ குஷ்ட்டரோகத்தால் வ்ருந்துமோர் ஏழை தரும் உணவை அன்புடன் வாங்கி உண்ணுகிறார். அவ்விதம் உண்ணுகையில் அப்பாத்திரத்தினுள் நோயினால் அழுகி வீழ்ந்திருந்த அந்த ஏழையினது விரலொன்றினைக் க்ண்டும் அருவருப்படையாது, முகம் சுளிக்காது , அதையொதுக்கி வைத்துவிட்டு உணவையுண்ணுகின்றார். இதனை மேற்படி 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளிவந்த 'துறவியும், குஷ்ட்டரோகியும்' கவிதை விபரிக்கும்:<br /><br />'உணவையிடும் போதந்தக் குஷ்ட நோயால்<br />உக்கி உணர்விழந்திருந்த விரலில் ஒன்று<br />பிணக்கமுற்று ஓடு தன்னில் வீழ்ந்தந்தப்<br />பீடைதனைக் கண்டனன் கண்டபோது<br />கனமுனிவன் சாந்த முகம் மாறாதந்த<br />கையில் விரலெடுத்ததனை மெல்ல நீக்கி<br />மனதினிலே ஒரு சிறிது மாசுமின்றி<br />வாயினிலே மெல்லமெல்ல அள்ளி உண்டான்.<br /><br />புல்லுணவை நல்லுணவாய் ஏற்றதனை<br />புத்தமிர்தமாய் மதித்துப் புசித்தான் ஏழை<br />நல்லவொரு நண்பன் இந்த முனியில் கண்டான்!<br />நானிலத்தில் விஷமாகும் தனிமை என்னும்<br />கொல்லுகின்ற வியாதிய·து போயொளியும்<br />கொண்டனவன் பெரிய இன்பம் குவலயத்தில்<br />இல்லை இதுபோலில்லை இல்லை என்று<br />எண்ணி எண்ணி களிக்கடலில் மூழ்கிவிட்டான்.. ' (சுதந்திரன்)<br /><br /><br />'கவீந்திரன்' என்னும்பெயரிலும் அ.ந.க கவிதைகள் எழுதியுள்ளார். 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரனில் வெளிவந்த தொடர்கட்டுரையில் எழுத்தாளர் அநதனி ஜீவா 'அ.ந.க. ஆரம்பகாலத்தில் கவீந்திரன் என்னும் பெயரில் நிறைய எழுதியிருப்பதாகக் குறிப்பிடுவார். 'தேசபக்தன்' பத்திரிகையில் 'கசையடிக் கவிராயர்' என்னும் பெயரில் அ.ந.க இலக்கிய உலகின் மோசடிகளைச் சாடிக் கவிதைகள் பல எழுதியுள்ளதாகவும் மேற்படி அந்தனி ஜீவாவின் கட்டுரை தெரிவிக்கின்றது. [மேலும் பல புனைபெயர்களில் அ.ந.க எழுதியுள்ளதாக அறிகின்றோம். இது பற்றியும் விரிவான ஆய்வுகள் நடைபெற வேண்டும்.] 'தேயிலைத் தோட்டத்திலே' என்ற இவரது கவிதை 'பாரதி' சஞ்சிகையில் 'கவீந்திரன்' என்னும் புனைபெயரில் வெளிவந்தது. காலையில் விழித்தெழுந்து, குழந்தைக்குப் பாலூட்டி விட்டு, அக்குழந்தை பற்றிய எதிர்காலக் கனவுகளில் மூழ்கி, பழையதை உண்டுவிட்டு, மூங்கிற் கூடையினை முதுகினில் மாட்டிவிட்டு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளப் பெண்ணொருத்தியைப் பற்றிப் பாடும் கவிதையிது.<br /><br />'பானையிலே தண்ணீரில இட்டிருநத<br />பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச<br />மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு<br />மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று<br />கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை<br />கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு<br />தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!<br />தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்! '<br /><br />இது போல் இன்னுமொரு கவிதையான 'முன்னேற்றச் சேனை' (மேற்படி இரு கவிதைகளும் 'பாரதி' என்னும் சஞ்சிகையில் வெளிவந்தவை ) 'மூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட', 'மங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்திடப்' புறப்பட்ட 'முன்னேற்றச் சேனை' பற்றிப் பாடும்.<br /><br />அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை அ.ந.க.வின் மிக முக்கியமான கவிதைளிலொன்று. நிகழ்கால மனிதனொருவன் காலத்தைத் தாண்டி எதிர்காலச் சித்தன் வாழும் உலகிற்கு வந்துவிடுகின்றான். நாடு, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன், சாதியென்று பிளவுண்டு, போர்களினால் சூழப்பட்டிருக்கும் நிகழ்கால உலகிற்கு எதிராகப் பிரிவினைகளற்ற, பேதங்களற்ற மனிதர்களென்றவொருரீதியில் அன்புடன் வாழும் சமுதாயமொன்றில் வாழும் எதிர்காலச்சித்தனொருவனின் உலகினைச் சித்திரிக்கும் கவிதையிது. அருமையான கவிதை. எதிர்காலச் சித்தனிற்கும், நிகழ்கால மனிதனுக்குமிடையில் நிகழும் உரையாடலாக அமைந்துள்ள நீண்ட் கவிதை.<br /><br />'அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்<br />அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்<br />விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்<br />வீழ்ந்துவிடும் ஒருமொழியே ­வ்வுலகில் உண்டாம்<br />சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்<br />சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார்<br />அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்<br />அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்'<br /><br />என்று எதிர்காலச் சித்தன் கூறுவான். அத்துடன் அச்சித்தன் வாழும் புதுயுகத்தில் மானிடர்கள் இனம், மதம், நாடு போன்ற எல்லைகளைக் கடந்து மனிதர்களென்ற ஓரினமாகவும், ஒரே மொழிபேசுபவர்களாகவும் விளங்குவர். அவ்வெதிர்காலச் சித்தன் வாழும் உலகு காலம் தாண்டிச் சென்ற நிகழ்கால மனிதனுக்கு மிகுந்த உவகையினைக் கொடுத்தது. அதன் விளைவாக அவன் எதிர்காலச் சித்தனைப் பார்த்து,<br /><br />"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.<br />எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து<br />மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய<br />வாழ்வேற்றிச்செல்வாயோ..' என்றிறைஞ்சி நிற்கிறான்.<br /><br />அதனைக் கேட்டதும் எதிர்காலச்சித்தனின் இதழ்களிலே குஞ்சிரிப்பொன்று பிறக்கின்றது. அச்சிரிப்பினூடு 'காலத்தின் கடல்தாவி நீ இங்கு வந்த காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய். ஆனால் உன்னுலகில் நிகழ்கால மயக்கத்தில் வாழ்வோர் இந்த ஞானத்தினைக் காண்பாரோ? இல்லை. இத்தகையதொரு நிலையில் காலத்தை நான் தாண்டிக் காசினிக்கு வந்தால் விடத்தைத் தந்து சோக்கிரதரைக் கொண்ட உன் சோதரர்கள் கட்டாயம் என்னை ஏற்றி மிதித்திடுவார்கள்' என்கின்றான். அதனால் 'நிகழ்கால மனிதா! நான் அங்கு வரேன். நீ போவாய்' என்கின்றான். எனவே ஏமாற்றத்துடன் மீண்டும் நிகழ்கால உலகிற்கே நிகழ்கால மானுடன் திரும்புகின்றான். திரும்பியவனை நடைபெறும் மடைமைப் போர்களும், நடம் புரியும் தீதுகளும் திடுக்கிட வைக்கின்றன. 'என்றிவர்கள் உண்மை காண்பாரோ?' என ஏக்கமுற வைக்கின்றன. அதனையே கவிஞர் பின்வருமாறு கூறுவார்:<br /><br />'புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்<br />புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து<br />"எதிர்காலச் சித்தா உன் ­னியமொழி கேட்டேன்.<br />எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து<br />மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய<br />வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க<br />மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே<br />மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.<br /><br />காலத்தின் கடல் தாவி நீ­ங்கு வந்த<br />காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்<br />ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.<br />ஞானத்தைக் கான்பாரோ? காணார்களப்பா<br />காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்<br />கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்<br />ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற<br />அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?<br /><br />ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு<br />யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்<br />காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்<br />கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.<br />பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்<br />பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்<br />தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு<br />திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?'<br /><br />மேற்படி கவிதையினைத் நவீனத்தமிழ்க் கவிதையுலகில் வெளிவந்த முதலாவது விஞ்ஞானக் கவிதையெனக் குறிப்பிடலாமா? ஆய்வாளர்கள்தான் பதிலிறுக்க வேண்டும். ஆயினும் நான் அவ்விதம்தான் கருதுவேன். மேற்படி 'எதிர்காலச் சித்தன்' கவிதை நிகழ்கால மனிதன் காலம் கடந்து செல்வதை மட்டும் குறிக்கவில்லை. அ.ந.க கண்ட் இலட்சிய உலகினையும், கனவினையும் கூடவே வெளிப்படுத்தி நிற்கின்றது. நவீனத்தமிழ்க் கவிதையுலகில் குறிப்பிடத்தக்க முக்கியமான கவிதைகளிலொன்றாக இதனை நான் இனங்காணுகின்றேன். அ.ந.க.வையே மேற்படி கவிதையில் வரும் எதிர்காலச்சித்தனாகவும் நான் உணருகின்றேன். அவரது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த இலட்சியக் கனவின் வடிவமாகவே எதிர்காலச் சித்தன் விளங்குகின்றான். அத்துடன் அ.ந.க.வின் சிந்தனைத் தெளிவினையும், கவி புனையும் ஆற்றலையும் கூட மேற்படி கவிதை விளக்கி நிற்கின்றன.<br /><br />அ.ந.கந்தசாமி அவ்வப்போது கவியரங்கங்களிலும் பங்குபற்றித் தலைமை வகித்துள்ளார்; கவிதைகள் பாடியிருக்கின்றார். அ.ந.க.வின் கவியரங்கப் பங்களிப்பைக் குறிப்பிடும் அந்தனி ஜீவா த்னது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரையில் '1966ம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டபத்தில் நடத்திய ''பாவோதல்'' நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய ''கடவுள் என் சோர நாயகன்'' என்ற கவிதை பாவோதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தென்புலோலியூர் மு.கண்பதிப்பிள்ளை "ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்" எனப் பாராட்டினார். பல கவிதை அரங்குகளின் தலமைப் பீடத்தை அலங்கரித்துள்ளார் அ.ந.க' என்று குறிப்பிட்டுள்ளது இங்கு கவனிக்கத் தக்கது. இவ்விதமாக அவர் பங்குபற்றிய கவிதையரங்கொன்றுதான் வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கு. தமிழ் மறையாம் திருக்குறளினை வழங்கிய 'வள்ளுவர்' பற்றிய நீண்ட கவிதை தமிழ்க் கவிதையுலகில் திருவள்ளுவர் பற்றி வெளிவந்த அற்புதமான கவிதைகளில் நானறிந்த வரையில் முதன்மையானது. மேற்படி கவிதை வள்ளுவரின் சிறப்பினையும், கூடவே அ.ந.க அவர்மேல் வைத்திருந்த அபிமானத்தையும் புலப்படுத்தி நிற்கும். அத்துடன் அழகாகச் சொற்களை அடுக்கிச் சிந்தனையைத் தூண்டும் வகையில், மனதினை ஈர்க்கும் வகையில் கவிபுனையும் அ.ந.க.வின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றது.<br /><br />'மதங்களை அடிப்ப்டையாக புலவர்கள் கொள்ளுமொரு காலகட்டத்தில் வள்ளுவரோ மன்னுலக வாழ்வை மட்டுமே அடிப்படையாகக் கொள்கின்றார். மற்றவரோ வீடென்றும், மோட்சமென்றும் புனைய வள்ளுவரோ இல்வாழ்வுக்குரிய அறம், பொருள், இன்பம் பற்றி உரைத்திடுகின்றார்' இவ்விதம் கூறும்<br />அ.ந.க<br /><br />'இது நல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்.<br />இவர் குறளைக் கையேந்தி இவ்வுலகை வெல்வோம்' என்கின்றார்.<br /><br />அத்துடன் 'வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சினை வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதை'<br /><br />'வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது 1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து) உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்' என்று குறிப்பிடும் அ.ந.க மேலும் 'பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார் பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்' என்று விபரிக்கும் அ.ந.க மேலும் தொடர்ந்து வள்ளுவனார் வழிவந்த பாரதியார் 'தனி யொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார். ஆனால் வள்ளுவரோ 'தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே? அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்' என்று பல்லாண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டுவார்:<br /><br />'வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்<br />2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்<br />உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று<br />உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.<br />வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்<br />வழுத்தினார் இதன் பொருளை ஆவேசத்தோடு<br />3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?<br />அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்" என்றார்'<br /><br />இவ்விதமாக வள்ளுவரை மக்கள் கவிஞ்னாக, ஏழைகளின் தோழனாக அவனது குறட்பாக்களினூடு காணும் கவிஞர்<br /><br />'கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு<br />கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு<br />கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று<br />கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று<br />விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை<br />வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.<br />கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்<br />கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்'<br /><br />என்று மேலும் பாடி , வள்ளுவரை கருத்துக்கு முக்கியம் தரும் கலை படைக்குமொரு சமுதாயச் சிந்தனை மிக்க படைப்பாளியாகச் சித்திரிப்பார். கலை கலைக்காக என்று கருதுபவர்கள் கலை இந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று வள்ளுவரைப் பார்த்து உணரட்டுமென்கின்றார். அவர் காட்டும் பாதையிலே பேனாவை ஓட்டட்டுமென்கின்றார். மக்களுக்காக இலக்கியம் படைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு செயலாற்றிவந்த அ.ந.க. வள்ளுவரையும் அத்தகையதொரு கோணத்திலேயே அவனது குறட்பாக்களினூட் இனம் காண்கின்றார். இச்சமயத்தில் அ.ந.க.வின் இலக்கியம் பற்றிய கருத்துகளை நினைவு கூர்வது பொருத்தமானதே. ஏற்கனவே குறிப்பிட்டுள்ள 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது. அவரது எழுத்தின் நோக்கம் பற்றிய அவரது உள்நோக்கத்தினை எடுத்தியம்பும் வரிகளிவை. அவரைப் பற்றி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவக் கூடிய வரிகளிவை.:<br /><br />'மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில்> ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.<br /><br />பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை.... உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.<br /><br />"மக்கள் இலக்கியம்" என்ற கருத்தும் "சோஷலிஸ்ட் யதார்த்தம்" என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.<br /><br />எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன்.'<br /><br /><br />இவ்விதமாக எழுத்து பற்றிய கருத்துள்ள அ.ந.க வள்ளுவரையும் அவ்விதமான, மக்களுக்காக இலக்கியம் படைத்த் படைப்பாளியாகவே இனங்காண்கின்றார். அதனால்தான்<br /><br />'நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்<br />செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்<br />இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!<br />எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்' என்கின்றார்.<br /><br />அ.ந.க. வை வள்ளுவரைப் போல் மகாதமா காந்தியின் துணைவியார் அன்னை கஸ்தூரிபாயும் மிகவும் கவர்ந்தவர். அவரது மறைவையொட்டி அவர் எழுதிய 'அன்னையார் பிரிவு' என்னும் ஈழகேசரியில் வெளியான நினைவுக் கவிதையொன்றே அதற்குச் சான்று. அதிலவர் அன்னை பற்றி 'ஒப்பரிய<br />காந்தியரி னொப்பில்லாத<br />ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்<br />செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்<br />தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்' எனவும்<br /><br />'சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும்<br />சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம்<br />காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள்<br />கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று<br />ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்<br />பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்' எனவும் குறிப்பிடும் அ.ந.க, அன்னையார் இறந்த செய்தியினை 'மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த பேரிடி'யாய் உணருகின்றார்.<br /><br />இவ்விதமாகக் கவீந்திரனின் கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் முக்கியமான படைப்புகளாக விளங்கி நிற்கின்றன. அ.ந.க. வின் கவிதைகள் எல்லாமே போர்ச்சுவாலைகளாகத்தான் இருந்தன என்பதற்கில்லை, அவ்வப்போது காதல் போன்ற மென்மையான உள்ளத்துணர்வுகள் பற்றியும் பாடியுள்ளார். முற்போக்குக் கவிஞரொருவர் இவ்விதமாகவெல்லாம் பாடலாமா என்ற்ம் சிலர் கேட்பர். அதற்கு அ.ந.க. முன்பு குறிப்பிட்டுள்ள 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்னும் கட்டுரையினை மீண்டும் ஒருமுறை அசைபோடுதல் தகுமே. அதிலவர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருப்பார்:<br /><br />'எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன். ஆனால் சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது.<br /><br />பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா? எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான். பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?<br /><br />சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். 'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம் 'எதிர்காலச்<br />சித்தன் பாட்டு ' வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன். ஆனால் போர்க்களத்தில்கூட பூக்கள் பூப்பதுண்டு. இதை நாம் மறக்கக்கூடாது. வாளேந்திப் போர்க்களம் புகும் வீரன் கூட தும்பை மாலையை கழுத்திலணிந்து செல்வது பண்டைத் தமிழ் நாட்டு வழக்கமாகும். இந்த விவகாரம் இக்கட்டுரைக்குப் புறப்பிரச்சினையானாலும் முற்போக்கு இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையென்பதால் சில வார்த்தைகள் கூறும்படி நேரிட்டது. முடிவாக "எதற்காக எழுதுகிறேன்?" என்பதற்கு நான் இரத்தினச்சுருக்கமாகச் சில காரணங்களைக் கூறி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். முதலாவதாக என் வாழ்வு சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக வேண்டும் என்ற காரணம். சுரண்டலும் அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்கவும் என்னாலான பணியை எழுத்து மூலம் செய்ய வேண்டுமென்ற காரணம். இதனை நான் முன்னரே விரித்துக் கூறிவிட்டேன்.'<br /><br />ஈழத்து மரபுக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க கவிஞர்களிலொருவர் வித்துவான் க.வேந்தனார். இவரது கவிதைகளின் சிறப்பம்சங்களிலொன்று அவரது கவிதைகளில் காணப்படுகின்ற முற்போக்குக் கருத்துகள். ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் இவரது 'காலைத் தூக்கிக் கண்ணில் வைத்து கட்டிக் கொள்ளும் அம்மா' என்னும் குழந்தைப் பாட்டு மிகவும் புகழ் பெற்றது. க.வேந்தனாரின் இன்னுமொரு கவிதை 'கவிஞன்' அதிலவர் பின்வருமாறு<br />கூறுவார்:<br /><br />'வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள<br />மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்<br />கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு<br />குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்!'<br /><br />இவ்விதமாகக் வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள கோளரியாக வாழ்ந்த கவிஞன்தான் அ.ந.கந்தசாமி. ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகின் முக்கியமான கவிஞரான அ.ந.கவின் தமிழ்க் கவிதைக்கான பங்களிப்பை மறைத்துவிட முனைவோர் முழுப் பூசணிக்காயைச் சோற்றினுள் மறைக்க முயலும் அறிவிலிகளே! ஆய்வாளர்களல்லர்.<br /><br />அ.ந.கந்தசாமியின் கவிதைகள் சில!<br /><br />சிந்தனையும் மின்னொளியும்!<br /><br />சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்<br />ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,<br />வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,<br />மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!<br />'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி<br />கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்<br />ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.<br />ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று<br />சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த<br />ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?<br />சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.<br />ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை<br />உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்<br />மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த<br />காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.<br />கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்<br />மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்<br />தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்<br />ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?<br />வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?<br />சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?<br />ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய<br />மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற<br />சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்<br />சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு<br />ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்<br />தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!<br />சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்<br />ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!<br />என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.<br />மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.<br />வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே<br />நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.<br />இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.<br />புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்<br />இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய<br />சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?<br /><br />-அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. ஈழகேசரியில் வெளிவந்தது.-<br /><br /><br />எதிர்காலச் சித்தன் பாடல்!<br /><br />எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான்<br />ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன்<br />கதிர்போலும் ஒளிமுகத்தான் கருனையூறும்<br />கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான்<br />"எதிர்கால உலகமி·து மனிதா நீயிங்<br />கேன்வந்தாய் இவன்காணும் பலவுமுன்னை<br />அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே<br />அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான்.<br /><br />அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன்<br />அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச்<br />'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும்<br />செந்தமிழன் யானொருவன் ஆதலாலே<br />மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை<br />மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக்<br />குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான்<br />குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.<br /><br />"எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா<br />எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர்<br />உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால்<br />உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா<br />மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில்<br />மடமையொரு மயக்கத்தின் ஆட்சி என்றும்<br />கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன்<br />காசினியின் பண்பிதனைக் கானப் பா நீ.<br /><br />வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை<br />வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன்<br />"பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில்<br />பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு<br />ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம்<br />ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும்<br />நோக்கிடுவாய் தூரஎதிர் கால மீதே"<br /><br />அண்டுபவர் அண்டாது செய்வதேது<br />அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன்<br />துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல்<br />தூய்மையாம் இனம்மொழிகள் மதங்க ளென்று<br />அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த<br />அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும்.<br />ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும்<br />ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா.<br /><br />அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்<br />அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்<br />விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்<br />வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம்<br />சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்<br />சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார்<br />அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்<br />அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்.<br /><br />செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும்<br />செகமெல்லாம் ஒருமொழியே தலை தூக்கி நிற்கும்.<br />நந்தமிழர் இனம் இனஞ்சாகும் பிற இனமும் சாகும்<br />நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும்.<br />எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில்<br />எண்ணீக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு<br />அந்த மொழி தானப்பா அரசாகும் உண்மை<br />அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல்.<br /><br />நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச் சீறி<br />நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின்<br />புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் ஆகும்<br />புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார்.<br />இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை<br />இம்மியள வேணும்பி மானமில்லா மூர்க்கன்<br />நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம்.<br />நெஞ்சுபிள ந் தெறிந்திருப்போம் என்றுனிகழ்த்திடுவார்.<br /><br />பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன்<br />பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன்.<br />பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம்.<br />பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே<br />வெறிமிகுந்த நிகழ்காலத் தீதுணரமாட்டார்<br />விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார்<br />அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும் விளைப்பவர்<br />ஐய்யய்யோ இவர்மடமை எனென்ன்று சொல்வேன்.<br /><br />புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்<br />புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து<br />"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.<br />எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து<br />மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய<br />வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க<br />மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே<br />மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.<br /><br />காலத்தின் கடல் தாவி நீஇங்கு வந்த<br />காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்<br />ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.<br />ஞானத்தைக் கான்பாரோ? காணார்களப்பா<br />காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்<br />கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்<br />ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற<br />அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?<br /><br />ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு<br />யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்<br />காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்<br />கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.<br />பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்<br />பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்<br />தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு<br />திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?<br /><br />வள்ளூவர் நினைவு!<br /><br />வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி<br />வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வன்கவிஞர் மன்றில்<br />தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும்<br />தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர்<br />விள்ளுகவி கேட்டோம்; பிறர்கவியும் கேட்டோம்<br />வேலணையூர் வீசுபுகழ் தொல்காவிய மன்றில்<br />வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு<br />வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து.<br /><br />பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில்<br />பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே?<br />பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றி<br />பரவிடுவேன் அதற்கும்பல் ஆதாரம் சொல்வேன்<br />நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை<br />நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான்<br />பாட்டாக வடிவெடுத்தான் அநுபவத்தின் கோர்வை<br />பாரெல்லாம் போற்றுததைத் தமிழ்வேதம் என்றே.<br /><br />மதங்களினை அடிப்படையாய்ப் பிறபுலவர் கொள்ள<br />மன்னுலக வாழ்வைமட்டும் வள்ளுவனார் கொண்டார்<br />விதவிதமாய் வீடென்றார் மோட்சமென்றார் மற்றோர்<br />வீரமிகும் வள்ளுவனார் அறம்பொருளோ டின்பம்<br />இதமாக இல்வாழ்வில் காணுமிவை மூன்றும்<br />இனிமையுள முப்பால்நூல் எற்றியுரைத்திட்டார்<br />இதுநல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்<br />இவர்குறளைக் கைஏந்தி இவ்வுலகை வெல்வோம்.<br /><br />வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சம்<br />வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதையார் இங்கே<br />வெறுமொழிஎன் றியம்பிடுதல் கூடுமிதோ பாரீர்<br />வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது<br />1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து)<br />உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்<br />பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார்<br />பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்.<br /><br />வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்<br />2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்<br />உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று<br />உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.<br />வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்<br />வழுத்தினார் இதன் பொருளை ஆவேசத்தோடு<br />3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?<br />அவிவிதமேல் சாய்காந்த ஆண்டவனும்" என்றார்.<br /><br />நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்<br />செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்<br />இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!<br />எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்!<br />திசையெல்லாம் கேட்கட்டும் திருக்குறளின் கோஷம்!<br />தீரட்டும் ஓயட்டும் தீயர்வெளி வேஷம்!<br />இசைநூலை நாமிழந்தோம் நாடகமும் இழந்தோம்<br />ஏதிழந்தா லுமிந்தக் குறளொன்று போதும்.<br /><br />கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில்<br />கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில்<br />கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை<br />கணக்கில்லா நூல்கலெள்ளாம் கடலோடு போச்சு!<br />கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த<br />காரியமோ யாமறியோம்! செந்தமிழர் நாட்டுக்<br />கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று<br />கவிராயர் சொலக்கூடும்! சத்தியமும் அதுவோ?<br /><br />நீருண்ட இவைபோக இருப்பதெல்லாம் எச்சம்<br />நெருப்போடு கறையான்கள் உண்டவற்றின் சொச்சம்<br />பாரிடத்தே பைந்தமிழின் நூலெல்லாம் சேர்த்துப்<br />பஷ்மீகர மானாலும் குறளென்னும் சொத்து<br />ஊரிடத்தே எஞ்சிநின்றால் அ·தொன்று போதும்<br />உற்றகுறை எங்களுக்கு இல்லை இவன் யாதும்<br />நேரில்லா வள்ளுவனார் குறள்வாழ்க வாழ்க<br />நிறைநூ லின் கருத்திந்த உலகெல்லாம் சூழ்க.<br /><br />கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு<br />கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு<br />கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று<br />கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று<br />விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை<br />வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.<br />கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்<br />கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்.<br /><br />செந்தமிழர் நாட்டுக்குப் புகழ்தருமோர் நூலின்<br />சிறப்புசில எடுத்துரைத்தேன் என் அறிவில் பட்ட<br />பைந்தமிழ்நற் கருத்துக்களைப் பகர்ந்துள்ளேன் இங்கு<br />பகர்ந்தவற்றில் கொள்வதனைக் கொள்வீர்கள் மற்ற<br />நொய்ந்திட்ட கருத்துக்களை நோயென்று தள்ளீ£ர்<br />நுவலரிய புகழ்பெற்றாள் தமிழன்னை பெற்ற<br />மைந்தர்களே மாநிலத்தில் குறள்புகழைப் பாடி<br />மகிழ்ந்திடிவீர் நீவிரிங்கு நீடூழி வாழி.<br /><br />-வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.கந்தசாமி பாடியவை.-<br /><br />நான் செய் நித்திலம்!<br /><br />வானிலோர் முத்தினை வைத்திழைத் ததுபோல்<br />வளர்மதி தவழ்ந்தது; மாடியின் மீதுயான்<br />இப்பி ஒன்றில் முத்தொன் றிட்டனன்;<br />கழிந்தது; கழிந்தபின் என்மனை விளங்கக்<br />கண்ணன் போலொரு கனிவாய்க் குழந்தை<br />வந்தது; வந்தபின் வாணிலா முகத்தென்<br />மனையாள் அதைஎன் மடியிடைக் கிடத்தி<br />ஈரைந்து திங்களின் முன்னால் ஒருநாள்<br />நீங்கள் செய்த நித்திலம் இதுவே.<br />என்று கூறி மகிந்தனள்; அவள் கண்<br />ஓரம் கண்டேன்; ஒளிமுத் தொன்று<br />அங்கு துடித்ததும் கண்டனன்; அவள் விழி<br />தொட்டேன்; முத்துத் தீய்ந்தது; மகிழ்ச்சியில்<br />உள்ளத்திப்பியில் உதித்துக் கண்வழி<br />வந்தஅம் முத்தில் வையகத் தின்பம்<br />யாவும் கண்டனன்; அம்முத்தெனது<br />மடியிடைக் கிடந்த மணிமிசை விழுந்திட<br />மணியை எடுத்துநான் மலர்க்கரம் தடவி<br />உச்சி மோந்தே உளம்மகிழ்ந் திட்டேன்.<br />நான் செய் நித்திலம் தேன் செய்ததுவே!<br /><br />வில்லூன்றி மயானம்!<br /><br />நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்<br />நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று<br />கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்<br />கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்<br />நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்<br />நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்<br />வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்<br />வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வ·து.<br /><br />மக்கள்குல மன்றோநாம் மரமோ கீ¢ழாம்<br />மாடுகளோ விலங்குகளோ கூறும் என்று<br />திக்கற்றான் நெஞ்சினிலே பிறந்த வைரத்<br />தீ அதுவாம் திசை எங்கும் பரவுதற்கு<br />மக்கள்நாம் மறுப்பதெவர் என்று கூறி<br />மாவுரிமைப் போர்தொடங்கி விட்டான் அந்தத்<br />திக்கதனை வில்லூன்றித் திருத்த லத்தைச்<br />சிர்ந்தாழ்த்தி வணங்குவோம் புனித பூமி.<br /><br />கேளீர் ஓர் வீரமிகு காதை ஈது.<br />கிளரின்பம் நல்குமொரு சேதி யன்றோ?<br />பாழினிலே பயந்திருந்த பாம ரர்கள்<br />பலகாலந் துயில்நீங்கி எழுந்துவிட்டார்<br />வாழியரோ வரப்போகும் நவயு கத்தின்<br />வளக்காலை இளம்பருதி வரவு ணர்த்தும்<br />கோழியது சிலம்பலிது வெற்றி ஓங்கல்<br />கொள்கைக்காதரவு, நல்குவோம் நாம்.<br /><br />பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று<br />பழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின்<br />பரம்பரையாய்ப் பேணிடினும் தீயதான<br />பழக்கமெனப் பகுத்தறிவாற் கண்ட பின்னும்<br />சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச் செய்கைச்<br />சிறுமைஎன்று செகமெல்லாம் நகை நகைத்துச்<br />சிரிபபதற்குச் செவிதாரீர் தீண்டாய்ப் பேயின்<br />சிரங்கொய்தே புகைத்திடுவோம் வாரீர் வாரீர்.<br /><br />அன்னையார் பிரிவு!<br /><br />ஒப்பரிய காந்தியரி னொப்பில் லாத<br />ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்<br />செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்<br />தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்;<br />இப்புவிதான் கலங்கிடவும் இந்தியத்தாய்<br />அழுதரற்றிக் கூவிடவும் இறந்துபட்டாள்;<br />இப்பெரிய துன்பந்தான் இதயந் தன்னை<br />ஈர்க்குதே இந்தியர்கள் வேர்க்கின்றாரே!<br /><br />பாரதத்தின் மக்களெல்லாம் காந்திதம்மைப்<br />பண்புடைய பிதாவென்றும் அம்மையாரைச்<br />சீருதவும் செவ்வியளாம் மாதாவென்றுஞ்<br />சிந்தையிலே நினைத்திருந்தார் அந்தோ வின்று<br />நீருகுத்து நிலைகலங்கல் ஆனா ரன்னை<br />தனைப்பிரிந்தே வாடுகின்றார்; நீளுந் துன்பம்<br />பாரிடத்தெ கொண்டுவிட்டார் செயல்ம றந்து<br />பரிதவித்துப் பதறுகின்றார் என்னே துன்பம்!<br /><br />மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற<br />காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த<br />பேரிடிபோல் வந்ததையோ! அன்னை யாரின்<br />பிரிவுதனை என்னசொல்வேன்; காந்தியாரின்<br />சீரினிய பத்தினியே! சிறப்பின் மிக்க<br />கஸ்த்தூரி யன்னாய்! எம் கருத்தே! கண்ணே!<br />பாரினிலே யெமைவிட்டும் சென்றாய்! இ·தோ<br />பண்புடையார் செயல்? நம்மை மறந்தாய் கொல்போ?<br /><br />சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும்<br />சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம்<br />காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள்<br />கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று<br />ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்<br />பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்! நல்<br />மாதரசே! மாதர்களை முன்னே வைத்தாய்<br />உன்வாழ்வு மாதிரியை மறத்த லாமோ?<br /><br />நகரம்!<br /><br />நகரத்துக் கூச்சலெல்லாம் நடுத் தெருவினிலே மோதிப்<br />பகர்தற்கு பிரியதான குழப்பத்தை உண்டுபண்ணும்<br />சகலர்க்கும் ஏதோ இந்த 'சட்டுப்புட்' அவசரந்தான்<br />அகலக் கால் வைத்து அங்கு மாந்தர்கள் பாய்கின்றாரே!<br /><br />அப்பப்பா! மனிதர் தம்மில் ஆயிரம் வகைகள் உண்டோ!<br />தொப்பிக்குள் புகுந்திருப்போர் தொந்திகள் பருத்தோர்மற்றும்<br />சப்பாத்துக் காலர் நல்ல சால்வைகள் தரித்தோர் என்று<br />எப்படி எல்லாம் எங்கள் இனத்தினில் மாறுபாடு?<br /><br />பெண்களைப் பற்றி எம்மால் பேசிடப்போமோ? சில்லோர்<br />கண்களை மறைக்கும் நீலக் கண்ணாடி தரித்தோர் கையில்<br />வண்ண நற் குடையர் சேலை வனப்புற அணிந்தோர் தங்கள்<br />பொன் மேனியால் குமரர் புத்தியும் இழந்து போனார்.<br /><br />ட்ராமோடும் பஸ் ஓடும் காரோடும் சைக்கிள் ஓடும்<br />ட்ராமோடத் தாமோடி ஏறுவர் சில்லோர் நல்ல<br />தாமரை முகமொன்றந்த ட்\ராமிலே தளிர்க்க அ·தை<br />காமனின் அம்பு தாக்கக் களிப்பொடு பார்ப்பார் சில்லோர்<br /><br />ரிக்ஷாக்கள் என்னுமந்த மனிதரைப் பூட்டி ஓட்டும்<br />ஜட்காக்கள் தாமும் ஓடும் சந்திகள் தம்மில் கார்கள்<br />உட்கார்ந்து விடும்கொடிய ட்ரபிக்ஜாம்கள் என்று சொல்வார்.<br />கட்பார்வைக்கு எங்கும் கும்பல் குழப்பமே! கூச்சல்தானே!<br /><br />நகரத்தில் கனத்தொகைக்கு நலிவில்லை இருந்த போதும்<br />அகத்தினைத் திறந்து பேச ஆட்கள் இல்லைப் பார்த்தால்<br />வகை வகை மரம் வளர்ந்து மண்டிய காடும் போல்தான்<br />நகரத்தின் பண்பு இங்கே மனிதப் பண்பில்லை யம்மா!<br /><br />காற்றிலே தூசு சேரும் கட்டுடல் வெயர்வை சேரும்<br />நூற்றிலே ஒருவரில்லை அடுத்தவர் நினைவு கொள்ளல்<br />நாற்றம் சாக்கடையைச் சேர நற்கொசுக் கூட்டம் மண்டி<br />தூற்றலைப் போல் சுருதி ஒன்றினை எழுப்பும் காணீர்!<br /><br />சிற்றிடை மாதரர்கள் சிகை அலங்கார மென்னே!<br />கற்றை போல் பாம்பைப்போல் கரியதோர் மதியைப் போல்<br />புற்றைப் போல் புதரைப் போல் புதுப்புது மோஸ்தரெல்லாம்<br />கற்ற காரிகையர் செய்கை கணக்குக்கும் அடங்குமோதான்!<br /><br />செல்வத்தின் செழிப்பு ஓர்பால் தீயதாம் வறுமை என்னும்<br />கொல்புலி வாயிற்பட்ட கும்பலோ மறு பக்கத்தில்<br />பல்விதப் பண்பும் சேர்ந்து கணமேனும் அமைதிப் பண்பு<br />நல் விதம் தோன்றா இந்த நகரம் கொல் நர கமாமே!<br /><br />- சுதந்திரன் மார்ச் 18, 1951<br /><br />அ.ந.கந்தசாமியின் நெடுங்கவிதை: கைதி!<br /><br />1.<br />சட்ட மென்னும் கருங்கல்லால்<br />சமைத்த சிறைவீ டிதுவாகும்<br />சட்டம் சரியோ பிழையோ நான்<br />சாற்றவறியேன் அறிவதெலாம்<br />கஷ்ட்டமிந்தச் சிறை வாழ்வு<br />கருங்கற் சுவரும் பலமாகும்<br />மற்றதெல்லாம் எற்றுக்கு<br />மனதே வீணில் அலைவதுமேன்?<br /><br />2.<br />சிறைவீ டென்று கூறிவிட்டால்<br />சிறியோர் தாமோ அங்கிருப்போர்?<br />நிறைந்த அறிவின் அலைவீசும்<br />நீலக் கடலே அனையாரும்<br />திறந்தே இருளைப் பிளந்தொளியை<br />திக்கிற் சிதற் விட்டோரும்<br />மறைந்தே உறைந்த ஆலயமாம்<br />வணங்கற்குரிய கோவிலிதாம்!<br /><br />3.<br />கிரேக்க ஞானி சோக்ரரும்<br />கீழைத்தேச மகாத்மாவும்<br />உரைக்க வொண்ணா நற் பெருமை<br />உத்தமரின்னும் பல நூறாய்த்<br />தரைக்கே உண்மை வழிகாட்ட<br />தாரணி தோன்றிய நன் மலர்கள்<br />சிறைக்கே சுகந்தம் வீசி நின்ற<br />சிறுமை உலகம் இதுவன்றோ?<br /><br />4.<br />பெரியோர் வாழ்ந்த இச்சிறையில்<br />பேதை நானும் இடம் பெற்றேன்!<br />அரிதே இந்த அதிர்ஷ்டத்தை<br />அறிந்த நண்பர் யாவர்க்கும்<br />விரிவாய் உரைத்து மகிழ்தற்கு<br />விலங்காய் அமைந்த கொடுஞ் சிறையே!<br />சரிந்தே உந்தன் சுவரெல்லாம்<br />சாய்ந்தே ஒழிந்து போகாவோ?<br /><br />5.<br />வானின் சிறிய மலர்கள் போல்<br />வாவும் வண்ணப் பறவைகளை<br />கான வேடன் கைப்பற்றி<br />கட்டிக் கூட்டில் இட்டதுபோல்<br />மானிடப் புள்ளின் சிறகதனை<br />மழுங்க வெட்டிச் சிறைவைக்கும்<br />நானிலப் புல்லர் கூட்டம்போல்<br />நாசகாரர் இங்குண்டோ?<br /><br />6.<br />பறவை நல்லூன் உணவாகும்<br />பயனைக் கருதி அடைக்கின்றார்!<br />கறவைப் பசுவைப் பாலுக்காய்க்<br />கட்டிவைத்துக் கறக்கின்றார்!<br />வறிதே மனிதர் கூட்டத்தைச்<br />சிறையில் வைத்து வளர்க்கின்றார்!<br />சிறையில் வாழ்ந்தேன் ஆயினுமிச்<br />சிறுமை சிரிப்பைத் தந்திடுமே!<br /><br />7.<br />களவு செய்தால் சிறையென்று<br />கனன்றே என்னை இங்கிட்டார்!<br />களவு களவு என்ப தெல்லாம்<br />கருத்தைச் செலுத்திப் பார்க்கையிலே<br />முழுதும் பெரிய விளையாட்டே<br />மூடத்தனத்தின் முடிபேயாம்!<br />களவு களவு என்ற பதக்<br />கருத்தை நானும் கழறுவனே!<br /><br />8.<br />உள்ளவனிடத்தில் இல்லாதான்<br />உணவின் உடையின் தேவைக்காய்<br />மெல்லச் சிறிதே எடுத்திட்டால்<br />மேதினி அதனைக் களவென்னும்!<br />உள்ளவனிடத்தில் அல்லாமல்<br />உடைமை யற்றவன் கையிருந்து<br />இல்லா மனிதன் எடுப்பதற்கு<br />எங்ஙன் முடியும் இயல்பு வீரே!<br /><br />9.<br />இன்னும் கூறுவன் கேளுமினோ!<br />இல்லாமனிதன் உள்ளவனைப்<br />பன்னிப் பன்னிக் கேட்டாலும்<br />பயக்கும் பயனோ மிகச் சொற்பம்!<br />சென்னியில் அடித்துப் பறித்தாலோ<br />சிவந்த ரத்தம் வீணாகும்!<br />அண்ணல் காந்தி சொல்லிவைத்த<br />அகிம்சை வழியே களவாகும்!<br /><br />10.<br />கள்வர் கள்வர் எனக்கூறி<br />கருணையற்றோர் ஏழைகளை<br />மெள்ள இங்கே தள்ளுகிறார்<br />மேலாம் செல்வர் பகலினிலே<br />கொள்ளை அடிப்போர் உலகெங்கும்<br />குவையாய்ப் பணத்தில் புரள்கின்றார்!<br />கள்வர் தமக்கே சிறையென்றால்<br />அவர்க்கே முதலிடம் தருவீரே!<br /><br />11.<br />களவு பிடிக்கும் சட்டமெல்லாம்<br />காசினி வதியும் செல்வர்களே<br />அழகாய்த் தம்பொருள் காப்பதற்கு<br />ஆக்கி வைத்த தந்திரமாம்!<br />வளமார் கிளிகள், பறவையினம்<br />வனத்தில் வதியும் விலங்குகளில்<br />களவுச் சட்டம் ஒன்றுண்டோ?<br />கழறும் கவிதை ரசிகர்களே!<br /><br />12.<br />சிறையில் உடலைப் பிணித்தாலும்<br />சிந்தனை சிறகு தீயவில்லை!<br />முறையாய் நினைவு முழுவதுமே<br />முழங்கித் தீர்க்கத் தருணமிலை!<br />சிறைவாய்க் கதவை நோக்குகிறேன்,<br />இரும்புக் கம்பிகள் எண்ணுகிறேன்<br />சிறையே! என்னுளம் கவிதையினால்<br />சிலிர்க்க வைத்தாய் நீ வாழ்க!<br /><br />13.<br />இரும்புக் கம்பிகள் பின்னால் நான்<br />இருந்து குமையும் வேளைகளில்<br />இரும்புக் கம்பிகள் எத்தனை யென்<br />றெண்ணி எண்ணி அலுத்துவிட்டேன்!<br />திரும்பத் திரும்ப எண்ணிடிலும்<br />திடமாம் கம்பிகள் பதினெட்டே!<br />திரும்பத திரும்ப எண்ணுவதேன்<br />திடுமெனக் கூடிக் குறையுமென்றா?<br /><br />14.<br />கருங்கற் சுவரைப் பார்க்கின்றேன்<br />கருமைந் நிழல் படர்ந்துள்ள<br />நெருங்கும் சந்துகள், மூலைகளில்<br />நெஞ்சம் செலுத்தி நோக்குகின்றேன்!<br />கருங்கற் சுவரின் இடையினிலே<br />காணும் சிறையே! இவ்வுலகின்<br />கருங்கல் லிதயத் துறைகின்ற<br />காரிருள் சின்னம் நீயேதான்!<br /><br />நன்றி: சுதந்திரன் ஆகஸ்ட் 5, 1951.<br /><br />***************<br /><br />அ.ந.க. பற்றி மேலும் சில இணைய இணைப்புகள்:<br /><br />1.அறிஞர் அ.ந.கந்தசாமியின் 15 கவிதைகள்! http://www.geotamil.com/pathivukal/poems_15_ANK.htm<br />2.கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமியின் ) கவிதைகள் சில ..http://www.geotamil.com/pathivukal/poems_september2008.htm#ANK<br />3.அறிஞர் அ.ந.கந்தசாமி http://www.geotamil.com/pathivukal/poems_ank.html<br />4.அ.ந.க.ந்தசாமியின் படைப்புகள் சில: http://www.geotamil.com/pathivukal/ank_unicode_november2006.htm<br />5.அறிஞர் அ.ந.கந்தசாமி! பன்முக ஆளுமையுள்ள ஈழத்திலக்கிய முன்னோடி!<br />சிறு அறிமுகம்! http://www.geotamil.com/pathivukal/ANKANTHASAMI.html<br />6.அ.ந.கந்தசாமியின் வலைப்பதிவு: http://ankanthasamy.blogspot.com/<br />7. சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் - அந்தனி ஜீவா.http://www.geotamil.com/pathivukal/ankbyanthonyjeevaa.html<br />...<br />ngiri2704@rogers.com </div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-30935680285101350112009-06-07T12:44:00.005-04:002009-06-08T15:18:08.939-04:00இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்! - வ.ந.கிரிதரன்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3tSdGztZOPjmaT7cyLVSLwgKs_IOeZS1oJfNSA6Eu66H3OrC3uUskCQ63rxY8cvOJLPMRRWO3l4u31bKw3l4wVCaotx4pTn5c8-MZVWFWU8v-7qgCF4EoX5PxV0ME00KKHZwB/s1600-h/internet_surfing.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 189px; FLOAT: left; HEIGHT: 177px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5344628492799621586" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3tSdGztZOPjmaT7cyLVSLwgKs_IOeZS1oJfNSA6Eu66H3OrC3uUskCQ63rxY8cvOJLPMRRWO3l4u31bKw3l4wVCaotx4pTn5c8-MZVWFWU8v-7qgCF4EoX5PxV0ME00KKHZwB/s320/internet_surfing.jpg" /></a><br /><strong>இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்! - வ.ந.கிரிதரன்</strong><br />['வடக்குவாசல்' இலக்கிய மலருக்காக எழுதியது- ஆசிரியர்]<br /><br />பொதுவாக மானுட குலத்தின் வளர்ச்சியென்பது தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவொன்று. மானுட சமுதாயத்தில் இதுவரையில் நிலவி வந்த, நிலவி வரும் சமுதாய அமைப்புகளின் பரிணாம வளர்ச்சிக்குக் காரணமே தொழில் நுட்ப வளர்ச்சியானது உற்பத்தி முறையில் ஏற்படுத்திய மாற்றங்களின் வளர்ச்சியே. மானுட வரலாற்றின் பலவேறு காலகட்டங்களில் அவ்வப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களெல்லாம் பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் வரவானது தகவற் பரிமாற்றத்தில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியது. அதே சமயம் அரசியல், இலக்கியம், கல்வி, ஆய்வு, பிரயாணம், விஞ்ஞானமெனப் பலவேறு துறைகளிலும் மேற்படி உபகரணங்களின் வரவானது தாக்கங்கள் பலவற்றை ஏற்படுத்தின. எந்தவொரு தொழிநுட்பத்தின் தன்மைக்கேற்பவும் மேற்படி வெகுசன ஊடகத்துறையிலுருவான மாற்றங்களும் ஆரோக்கியமான, ஆரோக்கியமற்ற விளைவுகளை உருவாக்கின. தகவல் பரிமாற்றத்தில் மேற்படி தொழில் நுட்பங்களின் மாற்றங்களை இன்னும் நவீனமயப்படுத்தச் செய்மதிகளின் வரவு உதவியதெனலாம். செய்மதிகளின் மூலம் இதுவரை காலமும் நாடுகளின் எல்லைகளுக்குள் மூடி மறைக்கப்பட்டிருந்த பல விடயங்களை, தகவல்களை விரைவாகவே உலகெங்கும் எடுத்துக் கொண்டு செல்வதற்கு வழிவகைகளேற்பட்டன. மேற்படி வெகுசன ஊடகங்களின் தொழிநுட்ப வளர்ச்சியானது இப்பூவுலகின் எல்லைகளைச் சுருக்கிக் கொண்டு வரும் காலகட்டத்தில் இணையத்தின் வரவானது தகவல் தொழில் நுட்படமுட்பட மானுடத்தின் பலவேறு துறைகளிலும், பிரிவுகளிலும் மிகப்பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியதோடு , உலகினை எல்லைகளற்றுச் சுருக்கி விட்டது. பலவேறு மட்டத்திலிருக்கும் மானிடர் (அறிந்தவர், அறியாதவர், படித்தவர், படிக்காதவர், வறியவர், செல்வர், நடிகர், அரசியல்வாதி, வர்த்தகர், மாணவர், ஆண், பெண், முதியோர், சிறுவர், சிறுமியர், வியாபாரியென பலவேறு பிரிவினரும்) தமக்கேற்ற வகையில் இணையத்தைப் பாவிக்கும் நிலையேற்பட்டது. தகவற் பரிமாற்றங்கள் விரைவாக நடைபெற இணையம் உதவுகிறது. இதுவரை காலமும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களெல்லாம் அவற்றின் அறிமுகக் காலகட்டங்களில் உருவாக்கிய, அறிமுகப்படுத்திய மாற்றங்களெல்லாவற்றையும் விட மிகப்பெரிய பாய்ச்சலையே இணையத்தின் வரவு ஏற்படுத்தியது. வாசிப்பிலும், எழுதுவதிலும் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு இணையத்தின் வரவும் அதனுடனான எனது உறவும் பல புதிய வழிகளை, சந்தர்ப்பங்களைக் காட்டின; உருவாக்கித் தந்தன. மானுடரின் இலக்கிய முயற்சிகளுக்கு இணையத்தின் வரவு உருவாக்கித் தந்த அளப்பரும் வளங்கள் என்னைக் கவர்ந்தன. குறிப்பாக பதிப்புத் துறையில் அதன் வளங்கள் மலைப்பைத் தந்தன. மிகவும் இலகுவாக உலகின் பலவேறு பகுதிகளிலும் பரந்து வாழும் எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடிவதுடன்,அவர்களுடன் என் இலக்கிய முயற்சிகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகளுமிருப்பதை உணர்ந்தேன். அத்துடன் கருத்துகளை விவாதிக்கவும், பகிர்ந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வழிகளை இணையமேற்படுத்தித் தந்தது. கணித்தமிழானது தமிழ் மொழியின் வளர்ச்சியின் முக்கியமானதொரு மைல்கல் என்பதை உணர முடிந்தது.<br /><br />'<strong>பதிவுகளின்' தோற்றமும், நோக்கமும்.....<br /></strong><br />இத்தகையதொரு சூழலில்தான் தகவற் தொழில்நுட்பத் துறையில் மிகப்பிரபலமான நிறுவனங்களுடன் இனைந்து பணியாற்றும்<br />சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இணையததளப் பராமரிப்புத் துறையில் பணியாற்றிய அனுபவம் மேலும் அதன் ஆரோக்கியமான பயன்களை உணர வைத்தது. அவ்விதமானதொரு சமயத்தில்தான் 'பதிவுகள்' இணைய இதழினை மிக எளிமையாக 2000ம் ஆண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ஆரம்பித்தேன். முரசு அஞ்சலின் உதவுயுடன் தட்டச்சு செய்வதும் இலகுவானதாதவிருந்தது. பதிவுகள் போன்ற இதழ்கள் பல ஆரம்பத்தில் உருவானதற்கு முரசு அஞ்சலின் வரவு மிகுந்த பங்களிப்பினை அளித்ததை அனைவரும் அறிவர். இதற்காக முத்து நெடுமாறனுக்கு நன்றி கூறவேண்டும்.<br /><br />பதிவுகள் இணைய இதழ் உருவானதன் முக்கியமான நோக்கங்கள் பற்றி பதிவுகள் சஞ்சிகையிலேயே அவ்வப்போது கூறியிருக்கின்றோம். அவற்றை மீண்டுமொரு முறை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானதே. 'பல்வேறு நோக்கங்கள். எழுத்தாளனான நான் பல்வேறு படைப்பாளிகள் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் என் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வது அதிலொன்று. பதிவுகளின் முக்கியமான நோக்கங்களிலொன்று 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்ளல் ( 'Sharing knwoledge with every one'). ஆரம்பத்தில் மிகவும் எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட 'பதிவுகள்' தளத்தின் தாரகமந்திரமாக 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொளவோம்' என்னும் சொற்றொடரினை உருவாக்கிக் கொண்டேன். ஒவ்வொரு முறை பதிவுகள் இதழினைப் பார்க்கும் சமயங்களிலெல்லாம் மேற்படி சொற்றொடர் நெஞ்சில் உற்சாகத்தினையும், களிப்பினையுமேற்றி அவ்வப்போது ஏற்படும் சலிப்புணர்வுகளையெல்லாம் ஒதுக்கிவிடுவதில் பெரிதும் ஒத்துழைத்தது. தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் தம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுமிடமாகப் பதிவுகள் விளங்குகின்றது. இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று மிக இலகுவாகப் பலரை எல்லைகளைக் கடந்து தொடர்பு கொள்ள வைத்தலென்பது.. இணைய இதழொன்றினால் மிக இலகுவாக, விரைவாகப் பல படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு அனைவரையும் கணித்தமிழின் நன்மைகளை உணர வைக்க வேண்டும். இத்தகைய இணைய இதழ்களால், அவற்றை வெற்றிகரமாக நடாத்திக் காட்டுவதன் மூலம், அவற்றில் பங்களிக்க வைப்பதன் மூலம் உணர வைக்க முடியும். இதற்கு முதல்படியாக பதிவுகள் ஆரம்பத்தில் பாவிக்கும் எழுத்துருக்களில் ஆக்கங்களை, எண்ணங்களை அனுப்பி வைக்கும்படி கோரினோம். அவ்விதம் வரும் படைப்புகளையே பிரசுரிக்கத் தொடங்கினோம். பல பெரிய எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் தமிழில் எழுதச் சிரமப்பட்டபோது அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். அதன்பின் அவர்கள் பதிவுகளுக்குத் தாங்களாகவே உரிய எழுத்தில் ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினார்கள். இதன் மூலம் படைப்பாளிகளுக்குக் கணித்தமிழின் பயனை நேரடியாகவே உணரவைக்கக் கூடியதாகவிருந்தது. மேலும் பதிவுகள் இதழினை ஆரம்ப காலத்திலிருந்தே படைப்பாளிகளின், வாசகர்களின்<br />பங்களிப்புடன் வெளிக்கொணர்ந்திட முடிந்தது. பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்பும் படைப்பாளிகள் தங்களது ஆக்கங்களைத் தாங்களே தட்டச்சு செய்து அனுப்புவதென்பது பதிவுகள் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கியமானதொரு தேவையாகவிருந்தது. ஆரம்பகாலப் பதிவுகள் இதழ் மிகவும் மோசமான வடிவமைப்புடன் ஆர்வத்தின் காரணமாக வெளிவந்ததை ஆரம்ப ஆக்கங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். இருந்தும் இவ்விதமாக ஆரம்பத்தில் எளிமையாக வெளிவந்து கொண்டிருந்த பதிவுகள் பலரது கவனத்தையும் கவர ஆரம்பித்தது. பலவேறு சஞ்சிகைகளில் பதிவுகளைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் வெளியாகின. தென்னாபிரிக்கக் கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்த மகாத்மா காந்தியின் பேரன் தென்னாபிரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலைப் போரினைப் பயங்கரவாதச் செயற்பாடாகச் சித்திரித்த குடியரசுக் கட்சிக்குச் சார்பாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதிக்காக தேர்தலில் செயற்படுவதைப் பற்றிய பதிவுகளின் குறிப்பினை ஆனந்தவிகடன் மீள்பிரசுரம் செய்திருந்தது. இவ்விதமாகப் பதிவுகளுடன் பல்வேறு படைப்பாளிகளுட்படப் பலர் வந்து இணைந்து பங்களிப்புச் செய்யத் தொடங்கினர். அடுத்துவந்த ஆண்டுகளில் பதிவுகளில் விவாதக் களத்தினையும் ஆரம்பித்தோம். அச்சமயம் பதிவுகளின் விவாதக் களத்தில் பல படைப்பாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். பதிவுகளுக்கும் ஆக்கங்களை அனுப்பினார்கள். கணித்தமிழை படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தும்படி செய்தல். அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளல், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்குமிடையிலொரு பாலமாக விளங்குதல் ஆகிவற்றை அடிப்படை நோக்கங்களில் சில எனக். குறிப்பிடலாம்'<br /><br /><strong>பதிவுகளும், பல்வேறு எழுத்துக் குறிமுறை நியமங்களும்!<br /></strong><br />ஆரம்பத்தில் முரசு அஞ்சலில் இணைமதி எழுத்துருவுடன் ஆரம்பிக்கப் பட்ட பதிவுகள் இணைய இதழ் பின்னர் 'திஸ்கி' (TSCII - Tamil Standard Code for Information Interchange) எனப்படும் தகுதரம் (தமிழ் குறியீட்டு தராதரம்) என்னும் எழுத்துக் குறிமுறை நியமத்திற்கு மாற்றப்பட்டது. 'அஸ்கி' (ASCII - - American Standard Code for Information Interchange) எனப்படும் 'எட்டு பிட்' அடிப்படையிலமைந்த மேற்படி எழுத்துக் குறிமுறை நியமமானது தமிழில் உலகளாவியரீதியில் இணையத்தில் தரப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட குறிமுறை நியமம். மேற்படி நியமமானது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கணினியில் ஆவணமொன்றைத் தயாரிப்பதை இலகுவாக்கியது. இக்குறிமுறை நியமத்தில் 'அஸ்கி' குறிமுறை நியமத்தில் ஆங்கில எழுத்துகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தமிழ் எழுத்துகளுக்குரிய இடம் ஒதுக்கப்பட்டன. முன்னர் ஆங்கில எழுத்துகளுள்ள இடங்களிலேயே தமிழ் எழுத்துகளும் அதனை உருவாக்கியவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பிரதியீடு செய்யப்பட்டதால் அத்தகைய செயற்பாடு ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளைக் கையாள்வதில் சிரமங்களையேற்படுத்தினை. தரப்படுத்தப்படாத எழுத்துக் குறிமுறை நியமத்தில் உருவாக்க்கப்பட்ட பல்வேறு தமிழ் எழுத்துகளில் உருவான கோப்புகளை வாசிப்பதற்கு அந்தந்த எழுத்துருக்களைப் பாவிக்க வேண்டிய தேவையுமிருந்தது. இந்நிலையினை தகுதர எழுத்துக் குறிமுறை நியமம் இலகுவாக்கியது. மேற்படி தகுதர எழுத்துக் குறியீட்டு முறையில் உருவான ஏதாவதொரு எழுத்துரு மூலம் உருவான கணினி ஆவணங்களை இன்னுமொரு தகுதர எழுத்துருவுள்ள கணினியிலும் வாசிப்பதை இவ்வகையான எழுத்துக் குறிமுறை நியமம் சாத்தியமாக்கியது. மேற்படி எழுத்துக் குறியீட்டு முறையினைப் பாவித்துத் தமிழைக் கணினியில் உள்ளிடுவதற்கு 'எ-கலைப்பை', முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்கள் மிகவும் உதவின. மேற்படி தகுதர எழுத்துக் குறிமுறை நியமத்தில் பதிவுகள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இன்றைய தமிழ் இலக்கிய உலகின் பிரபலமான படைப்பாளிகள் பலர் பதிவுகளுக்கு ஆக்கப் பங்களிப்புச் செய்தார்கள். பதிவுகளின் விவாதக் களத்தில் ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொண்டார்கள். இன்றுபோல் வலைப்பூக்கள் அறிமுகப்படாத அக்காலகட்டத்தில் திண்ணை மற்றும் பதிவுகள் போன்ற இதழ்கள் நடாத்திய விவாதத்தளங்கள் நடைபெற்ற விவாதங்கள் குறிப்பிடத்தக்கன. இன்று பதிவுகள் 'பதினாறு பிட்' எழுத்துருவான ஒருங்குறி (Unicode) எழுத்துக் குறிமுறை நியமத்திற்கு மாறிவிட்டது. ஆயினும் பதிவுகளின் பழைய படைப்புகள் இன்னும் முரசு அஞ்சலின் இணைமதி மற்றும் தகுதர எழுத்துருக்களில் இருக்கின்றன. அவற்றை வாசிப்பதற்கு அவற்றிற்குரிய மென்பொருட்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் இன்று ஒருங்குறியில் வெளிவரும் பதிவுகள் இதழினை ஒருங்குறி எழுத்துக் குறியீட்டு முறை நியமத்தினை உள்ளடக்கியுள்ள 'விண்டோஸ் XP' போன்ற இன்றைய 'ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ்' மூலம் வாசிப்பதில் வாசகர்கள் எந்தவிதச் சிரமங்களையும் எதிர்நோக்கத் தேவையில்லை. மேலும் முன்னர் குறிப்பிட்ட முரசு அஞ்சல், எகலப்பை போன்ற மென்பொருட்கள் ஒருங்குறியில் தமிழைக் கணினியில் உள்ளீரு செய்வதற்கு உதவியாகவிருக்கின்றன. ஆங்கில மொழியைப் போல் ஒருங்குறி எழுத்துக் குறிமுறை நியமத்தில் உலகின் மொழிகளனைத்துக்கும் உரிய இடங்கள் உள்ளன. இதனால் ஒருங்குறியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எந்த 'ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ்' என்றாலும் , அது எந்த மொழ்யில் இருந்தாலும் , தமிழ் தமிழாகத்தான் தெரியும். இது கணித்தமிழ் உலகில் முக்கியமானதோர் வளர்ச்சி. மேற்படி தமிழ் எழுத்துருக்களின் பல்வேறு குறிமுறை நியமங்களின் வளர்ச்சிப்போக்கினூடு பதிவுகளும் வள்ர்ந்து வந்திருக்கின்றது. இதற்காக மேற்படி வளர்ச்சிப்போக்குக்குப் பங்களித்த தகவற் தொழில்நுட்பத்<br />தொழில் நுட்ப வல்லுநர்களுக்கெல்லாம் பதிவுகள் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றது.<br /><br />பதிவுகளின் ஆரம்பகாலத்துப் படைப்புகள் நூற்றுக் கணக்கில் 'அஸ்கி', 'திஸ்கி' போன்ற எழுத்துக் குறிமுறை நியமத்திலுள்ளன. அவற்றையேல்லாம் எழுத்து உருமாற்றிகளைப் பாவித்து இன்றைய ஒருங்குறி முறைக்கு மாற்ற வேண்டும். இது மிகப்பெரிய வேலை. இதனைத் தற்போதுள்ள சூழலில் என்னால் தனித்துச் செய்ய முடியாது. காலப்போக்கில் பகுதி பகுதியாக மேற்படி உருமாற்றத்தைச் செய்ய வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் தொண்டர்களாக இணைந்து பணியாற்றலாம்.<br /><br /><strong>பதிவுகளின் வளர்ச்சி பற்றி...<br /></strong><br />2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பதிவுகள் இணைய இதழ் எட்டு ஆண்டுகளைக் கடந்து இன்னும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இணைய இதழ்கள் பற்றிய பலவேறு பல்கலைக் கழக ஆய்வுக் கட்டுரைகளில் பதிவுகள் முக்கியமானதோர் இணைய இதழாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பதிவுகளில் வெளிவந்த படைப்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் (என்னுடைய படைப்புகளுட்பட) தமிழகப் பல்கலைக் கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகள், அறிமுகப்படைப்பாளிகளெனப் பலர் ஆர்வத்துடன் மாதாமாதம் பதிவுகளுக்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வருகின்றார்கள். விரும்பியவர்கள் சந்தா வழங்கி ஆதரவளிக்கலாமென்று கோரியிருந்த போதிலும் பதிவுகள் இதழ் இன்னும் இலவசமாகவே வெளிவருகின்றது.<br /><br />பதிவுகள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ப் படைப்பாளிகள், கலை, இலக்கிய ஆர்வலர்களின் ஆர்வம் மிக்க பங்களிப்புடன் தொடர்ந்து வெளிவருகின்ற போதும் , இணைய இதழைப் பொறுத்தவரையில் இன்னும் அதன் ஆசிரியராக, இணையத் தளப் பராமரிப்பாளராக (Webmaster), அதன் பதிப்பாளராக நானே இருந்து வருகின்றேன். கடந்த எட்டு வருடங்களில் இதற்காக நான் செலவழித்த, செலவழிக்கும் நேரம் அதிகமானது. இருந்தும் இன்னும் என் ஆர்வம் குறைந்து விடவில்லை. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கானவர்கள் பதிவுகளை பல்வேறு நாடுகளிலிருந்தும் வாசித்து வருகின்றார்கள். கடிதங்கள், படைப்புகள் மூலம் ஊக்குவித்து வருகின்றார்கள். தனியொருவனாக நின்று, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ கலை, இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகளின் ஒத்துழைப்புடன் பதிவுகளை நடாத்தி வருவதை இணையத்தின் வரவு சாத்தியமாக்கியுள்ளது.<br /><br />ஒருவர் அர்ப்பணிப்புடன் மற்றும் ஆர்வத்துடன் கூடிய உழைப்புடன், தகவற் தொழில்நுட்ப அறிவினையும் உள்வாங்கி, இது போன்றதொரு இணைய இதழொன்றினை வெளிக் கொணர முடியும், இவ்விதம் வெளிவரும் இணைய இதழொன்றின் மூலம் ஆயிரக்கணக்கான உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் வாசகர்களை இலகுவாகச் சென்றடைய முடியும். இது அச்சு இதழொன்றில் இவ்வளவு இலகுவாகச் சாத்தியப்பட்டிருக்காது.<br /><br /><strong>பதிவுகளின் , இணைய இதழ்களின் எதிர்காலம் பற்றி....<br /><br /></strong>என்னைப் பொறுத்தவரையில் கணித்தமிழ் தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு. பொதுவாகத் தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகங்களின் வளர்ச்சியினையும் கூடவே உருவாக்கி வருவது தெரிந்ததே. ஓலைச் சுவடிகள், தாள்களென வளர்ந்து இன்று கணித்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் பயன்கள் பல். இணையம் மிக இலகுவாக உலகின் பல பாகங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் சஞ்சிகையினை மிக இலகுவாக எடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் உலாவரும் இணையச் சஞ்சிகைகளில் உடனுக்குடன் இலக்கிய விவாதங்களை, கருத்துப் பரிமாறல்களை நடாத்த முடிகிறது. இது அச்சு ஊடகங்களில் சாத்தியமற்றது. அவை வெளிவரும் வரையில் காத்திருக்க வேண்டும். மேலும் எல்லோருடைய கருத்துகளையும் பிரசுரிப்பதும் சாத்தியமற்றது. இணையத்தில் பலரின் கருத்துகளை, விவாதங்களை உடனடியாகவே பிரசுரிக்க முடியும். மேலும் தனிமனிதரொருவர் கூட தகவல் தொழில் நுட்ப அறிவும், இலக்கிய அறிவும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புமிருந்தால் ஒரு இணையச் சஞ்சிகையினை இலகுவாக வலையேற்றி விடலாம். இதுபோல் பல பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் சிற்றிதழ்கள் வரை, வெகுசன ஊடகங்கள் வரை இணையத்தில் காலூன்றுவதில் அக்கறையெடுகின்றன.<br /><br />இணைய இதழ்களின் வரவு நிச்சயமாகப் பிற ஊடகங்களைப் பாதிக்கத்தான் செய்யும். உடனடியாகவல்ல. ஒருவரால் இணையத்தில் ஒரு சஞ்சிகையின் விடயங்கள முழுவதையும் படிக்க முடியுமென்றால் அவர் எதற்காக அச்சில் வெளிவரும் அவ்வூடகத்தை நாட வேண்டும். ஆனல் அந்த நிலை வருவதற்கு இன்னும் நீண்ட காலமுண்டு. இணையத் தொடர்பு சாதாரண மக்களையும் மிகவும் குறைந்த செலவில் அடையும் வாய்ப்பு முதலில் ஏற்படவேண்டும். கணினி அனைத்து மக்களாலும் இலகுவாக அடையுமொரு பொருளாக இருக்கும் சாத்தியம் வேண்டும். அததகையதொரு சூழலில், பிராந்திய மொழிகளில் மக்களின் அனைத்துப் பிரிவினரும் கணினிகளைப் பாவிக்க முடியும் சூழல் உருவாகும். அததகையதொரு சமயம் ஏற்படும்வரை அச்சு ஊடகங்களின் தேவையும் இருந்து கொண்டுதானிருக்கும்.<br /><br />தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் முக்கியமான பரிணாம வளர்ச்சியென நான் கருதுகின்றேன். பதிவுகள் எனக்கு உணர்த்திய பாடமிது. எவ்வளவு இலகுவாக என்னால் பல படைப்பாளிகளுடன் எவ்வளவு இலகுவாகத் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. அச்சில் ஒரு இதழைக் கொண்டு வந்தால் இவ்வளவு அதிகமான படைப்பாளிகளிடமிருந்து நான் தான் சேகரித்து வெளியிட வேண்டும். ஆனால் இணையம் அதனை எவ்வளவு இலகுவாக்கி விட்டது. புகழ்பெற்ற படைப்பாளிகள் முதல் புதிய படைப்பாளிகள்வரை எல்லோருமே பதிவுகளைத் தாங்களாகவே இனங்கண்டு தொடர்பு கொண்டார்கள். சாதாரண அச்சு ஊடகங்களுக்கில்லாத பல பயன்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல் இருப்பதால் இணைய இதழ்களின் வரவு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல நிலைத்து நிற்கவும் போகின்றது. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழின் நல்லதொரு வரவு. இந்த வகையில் ஆரம்ப காலத் தமிழ் இணைய இதழ்களின் சேவை, பதிவுகளுட்பட, வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படுமென நான் நிச்சயம் எதிர்பார்க்கின்றேன்.<br /><br />ngiri2704@rogers.comUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-64593584338629832832009-06-07T12:32:00.002-04:002009-06-07T12:34:41.984-04:00' நான் அவனில்லை'.. - வ.ந.கிரிதரன் -<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0vvuBetVobMTIICb-j42UfC3lopzT-isqcpTaK8kcmvD41zGVn76pXnP9AUZd5czpMAsBCCQCDf1wuQRxHtgg2WFZuI-5uHTs1we5s7sImy4Qeem6tkCgWIS7r08t1tfQ0LWK/s1600-h/thinking_man.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 145px; height: 146px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0vvuBetVobMTIICb-j42UfC3lopzT-isqcpTaK8kcmvD41zGVn76pXnP9AUZd5czpMAsBCCQCDf1wuQRxHtgg2WFZuI-5uHTs1we5s7sImy4Qeem6tkCgWIS7r08t1tfQ0LWK/s320/thinking_man.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5344624846495524866" /></a><br />எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்திய அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான விருதினைப் பெற்ற அறிவியற் சிறுகதை! <br /><br />'<strong> நான் அவனில்லை'.. <br /><br />- வ.ந.கிரிதரன் </strong><br /> <br />கி.பி.2700 ஆம் ஆண்டிலொருநாள்.... ... <br /><br />தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளின் உடல்களிலும் அவர்களது அடையாளங்கள் பற்றிய அனைத்துத் தகவ்ல்களுடன் கூடிய சிலிக்கான் சில்லுகள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், GPS தொழில் நுட்பத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பிறிதோரிடத்தில் அமைந்திருந்த சிறைச்சாலைத் தலைமைச் செயலகத்திலிருந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். செவ்வாய்க் கிரகம், சந்திரன் போன்ற கிரகங்களெல்லாம் புதிய புதிய காலனிகளால் நிறைந்து விட்டிருந்தன. சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்வெளிக் காலனிகள் உருவாக்கப் பட்டிருந்தன. பூவுலகின் பல்வேறு நாடுகளும் மானுடர்களென்ற ரீதியில் ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். ஒரு கிரகம்! அதன் மக்கள் நாம்! என்று பக்குவப்பட்டிருந்த மானுடர்கள் பூவுலகு மக்கள் கூட்டமைப்பு என்று ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். நாடுகளுக்கிடையில் பயணிப்பதற்குக் கடவுச் சீட்டு, விசா போன்ற எதுவுமே தேவையாகவிருக்கவில்லை. நாடுகள், தேசிய இனங்கள், தேசிய பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளும் தத்தமது வெளிநாட்டுக் கொள்கையினை வகுத்திருந்த காலம் எப்போழுதோ இப்பூமியில் மலையேறிவிட்டிருந்தது. இன்று விண்வெளித் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி விட்டிருந்ததொரு நிலையில் வேற்றுக் கிரக வாசிகள், உயிரினங்களிலிருந்து இப்பூமிக்கான பாதுகாப்பு என்னும் அடிப்படையில் பூவுலகின் பாதுகாப்பு தீர்மானிக்கப்பட்டது. இத்தகையதொரு சூழல் நிலவும் காலகட்டமொன்றில்தான் இவ்விதம் திறந்தவெளிச் சிறைச்சாலையொன்றில் அமர்ந்திருந்தான் இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன். அவனது சிந்தனையெல்லாம் அடுத்த நாளைப் பற்றியதாகவேயிருந்தது. செய்யாத குற்றத்திற்காக அவனுக்கு மரணதண்டணை விதிக்கப் பட்டிருந்தது. சந்தர்ப்ப சாட்சியங்கள் சதி செய்து விட்டன. <br /><br />இத்தனைக்கும் அவன் செய்ததாகக் கருதப்பட்ட குற்றச்சாட்டு: அல்பா செஞ்சுரி நட்சத்திர மண்டலத்திலுள்ள சிறியதொரு, பூமியையொத்த கிரகமான 'பிளானட் அலபா'வில் வசிக்கும் மானிடர்களைப் பெரும்பாலுமொத்த வேற்றுலகவாசிகளுக்குப் பூமியின் பாதுகாப்பு இரகசியங்களை வழங்கியிருந்தத்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தான். நமது பூமிக்குத் துரோகம் செய்ய முனைந்தவனாகக் குற்றவாளியாக்கப்பட்டிருந்தான். அதற்கான தண்டனைதான் மறுநாள் நிறைவேற்றப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்த, அவன்மேல் விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை. இதிலிருந்து தப்புவதற்கென்று ஏதாவது வழிகளிருக்கிறதாவென்று பல்வேறு கோணங்களில் சிந்தனையைத் தட்டிவிட்டான். தப்புவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்பது மட்டும் நன்றாகவே விளங்கியது. முதன் முறையாகச் சாவு, மரணம் பற்றி மனம் மிகத் தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டது. வேறு மார்க்கமேதுமில்லை. நடப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான். <br /><br />இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன் எப்பொழுதுமே தனிமையில் சிந்திப்ப்தை மிகவும் விரும்புவன. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி, இதற்குச் சமாந்தரமாக இருக்கக் கூடிய ஏனைய பிரபஞ்சங்கள், காலத்தினூடு பயணித்தல், கருந்துளைகள்... பற்றியெல்லாம் அவன் பல நூல்கள் , ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருப்பவன். பிரபஞ்சத்தின் இருப்பு பற்றி ஆராய்ந்தவனின் இருப்பு விரைவிலேயே இல்லாமல் போகப் போகிறதா? <br /><br />அவனது முடிவை அவன் தனித்து நின்று எதிர்நோக்க வேண்டியதுதான். மானிடர்களிடையே குடும்பம், நட்பு போன்ற உறவுகளற்றுப் பல நூற்றாண்டுகள் கடந்து விட்டிருந்தன. இனப்பெருக்கம் மானிடப் பண்ணைகளில் நடைபெறத் தொடங்கி விட்டிருந்தன. மேலும் குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், போர் வீரர்கள், வர்த்தகர்கள், கலைஞர்கள், மத குருக்களென ஒரே மாதிரியான மானுடர்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆண் விந்துக்களும், பெண் முட்டைகளும் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டு பல்வேறு வகைகளில் கலந்து மானுடர் உருவாக்கம் தேவைகளுக்கேற்ப நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு குடும்ப உறவுகள் மின்னூல்களில் மட்டுமே அறிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது. அவற்றைப் பற்றி எண்ணும்போது அவன் அன்றைய மானுடர்களின் அன்புநிறைந்த வாழ்க்கை வட்டம் பற்றி ஆச்சரியப்படுவான். <br /><br />அவனது சிந்தனையோட்டம் பல்கிக் கிளை விரிந்தோடிக் கொண்டிருந்தது. <br /><br />'நாளையுடன் இந்த உலகுடனான எனது இந்த இருப்பு முடிந்து விடும். அதன் பிறகு நான் என்னவாவேன்? " இவ்விதம் அவன் சிந்தித்தான். இதற்கான தெளிவான விடை கிடைக்காததொரு நிலையில்தான் இன்னும் மானுடகுலமிருந்தது. பொருளா? சக்தியா? பொருள்முதல்வாதமா? கருத்து முதல்வாதமா? இவ்விதமான தத்துவப் போராட்டம் இன்னும் முடிவற்று தொடர்ந்து கொண்டிருந்தது. <br /><br />அப்பொழுதுதான் அவன் முன் அந்த அதிசயம் நிகழ்ந்தது. <br /><br />அவன் கண்களின் முன் திடீரென் ஒரு கோளம் போன்றதொரு வடிவம் தோன்றி மறைந்தது. அவன் திகைப்பு அடங்குவதற்குள் அதனைத் தொடர்ந்து மேலும் சிறிய,பெரிய கோளங்கள் சில தோன்றி மறைந்தன. <br /><br />இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரனுக்குச் சிறிது நேரம் நடந்த நிகழ்வுகளைக் கிரகிப்பதற்குக் கடினமாகவிருந்தது. தான் காண்பது கனவா அல்லது நனவா என்பதிலொரு சந்தேகம் எழுந்தது. அடுத்தநாள் மரண தண்டனையென்பதால் அவனது புத்தி பேதலித்து விட்டதாயென்ன? இவ்விதமாக அவன் ஒரு முடிவுக்கும் வராமல் திணறிக்கொண்டிருந்த வேளையில் அவன் முன்னால் மேலுமொரு அதிசயம் நிகழ்ந்தது. <br /><br />இம்முறை அவன் முன்னால் ஒரு வெள்ளை நிறக் காகிதம், A-1 அளவில் தோன்றி , செங்குத்தாக அவன் வாசிப்பதற்கு இலகுவாக நின்றது. அக்காகிதம் மறையாமல் நிலைத்து நிற்கவே அவனுக்குத் தான் காண்பது கனவல்ல என்பது புரிந்தது. <br /><br />அதில் பின்வருமாறு எழுதியிருந்தது: <br /><br />'நண்பா! என்ன திகைத்துப் போய் விட்டாயா?' <br /><br />அதனைப் படித்துவிட்டு அதற்குப் பதிலிறுக்கும் முகமாக 'ஆம்' என்று தலையசைத்தான் இயற்பியல் விஞ்ஞானி. <br /><br />இப்பொழுது அந்தக் காகிதம் மறைந்து மீண்டும் தோன்றியது. இம்முறை அதில் கீழுள்ளவாறு எழுதப் பட்டிருந்தது: <br /><br />'பயப்படாதே நண்பா! நான் உனது பிரபஞ்சத்துடன் கூடவே இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பிரபஞ்சங்களில் ஒன்றினைச் சேர்ந்த உயிரினம். எங்களது பிரபஞ்சம் உங்களுடையதை விட பதினான்கு வெளிப் பரிமாணங்களும் , ஒரு காலப்பரிமாணமும் கொண்டது. அதனால் உங்களது பிரபஞ்சத்தினுள் நாம் தோன்றும்போது மட்டும் , உங்களது முப்பரிமாணங்களுக்குரிய எங்களது உருவத்தின் பகுதிகள் தெரியும். ஆனால் உங்களால் எங்களின் முழுத்தோற்றத்தினையும் பார்க்க முடியாது. ஆனால் எங்களால் உங்களது தோற்றம் மற்றும் செய்ற்பாடுகள் அனைத்தையுமே பார்க்க முடியும்..' <br /><br />'அப்படியா..!' என்று வியந்து போனான் இயற்பியல் விஞ்ஞானி. <br /><br />அதன்பின் அவர்களுக்கிடையிலான உரையாடற் தொடர்பானது அவன் கூறுவதும், அதற்குப் பதிலாக அந்தப் பல்பரிமாண உயிரினத்தின் காகிதப் பதில்களுமாகத் தொடர்ந்தது. அதனை இலகுவாக்கும் பொருட்டுக் கீழுள்ளவாறு உரையாடல் குறிப்பிடப்படும். <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: ' உங்களால எங்கள் மொழியை வாசிக்க முடிகிறது. ஏன் பேச முடியவில்லை..' <br /><br />அண்டவெளி உயிரினம்: 'எங்களுக்கிடையிலான உரையாடல்களெல்லாம் உங்களைப் போல் கூறுவதும் பதிலிறுப்பதுமாகத் தொடர்வதில்லை. மாறாக நினைப்பதும், அவற்றை உணர்வதுமாகத் தொடருமொரு செயற்பாடு. அதனால் எங்களிடையே உங்களுடையதைப் போன்ற ஒலியை மையமாகக் கொண்ட உரையாடல் நிலவுவதில்லை. அதற்குரிய உறுப்புகளின் தேவைகளும் இருப்பதில்லை.' <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: 'எவ்வளவு ஆச்சரியமாகவும், திருப்தியாகவுமிருக்கிறது. என் இருப்பின் முடிவுக்கண்மையில் எனக்கு இபப்டியொரு அறிதலும், புரிதலுமா? ' <br /><br />அண்டவெளி உயிரினம்: 'என்ன கூறுகிறாய் நண்பா! என்ன உன் இருப்பு முடியும் தறுவாயிலிருக்கிறதா? ஏன்..?' <br /><br />இயற்பியல் விஞ்ஞானி இதற்குப் பதிலாகத் தன் கதையினையும், நிறைவேற்றப்படவுள்ள தண்டனை பற்றியும் குறிப்பிட்டான். இதற்குப் பதிலாகச் சிறிது நேரம் அண்டவெளி உயிரினத்திடமிருந்து மெளனம் நிலவியது. பின்னர் அது கூறியது. <br /><br />'இதற்கு நீ ஏன் கவலைபடுகிறாய்? கவலையை விடு! இந்த இக்கட்டிலிருந்து உன்னை நான் தப்ப வைக்க முடியும். நீ உன் உலகத்துச் சட்டதிட்டங்களின்படி விடுதலையானதும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம்." <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: 'உன்னால் என்னை எவ்விதம் காப்பாற்ற முடியுமென நினைக்கிறாய்?" <br /><br />அண்டவெளி உயிரினம்: 'நாளை உனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதனால் , காலதாமதம் செய்வ்தற்குரிய தருணமல்ல இது. அதனால்...' <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: 'அதனால்....' <br /><br />அண்டவெளி உயிரினம்: 'முதலில் இன்று உன் சிறைக் காவலர்களுடன் தொடர்பு கொண்டு உன் இறுதி முறையான மேன்முறையீட்டினை விண்ணப்பித்துவிடு. உங்கள் உலகத்துச் சட்டதிட்டங்களின்படி மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்வரையில் தகுந்த காரணம் இருப்பின் , நிரூபிக்கப்படின் அவ்விதமான மேன்முறையீடுகளை விண்ணப்பிக்கலாமல்லவா?' <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: 'ஆம். உண்மைதான்...' <br /><br />அண்டவெளி உயிரினம்: 'அவ்விதம் உன் மேன்முறையீட்டினை உடனடியாகவே விண்ணப்பித்து முதலில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நீ உண்மையில் இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரன் அல்லனென்று கூறவேண்டும்; நிரூபிக்க வேண்டும். ..' <br /><br />இய்ற்பியல் விஞ்ஞானி: 'அதெப்படி.. ஒன்றுமே புரியவில்லையே... எதற்காக நான் , இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரன் அல்லனென்று கூறவேண்டும்? நான் பாஸ்கரன் தானே! ' <br /><br />அண்டவெளி உயிரினம்: 'வேறு வழியில்லை.. அதுவொன்றுதான் தற்போதுள்ள இலகுவான வழி.. முதலில் நீ தப்ப வேண்டும். அதன்பின் எங்களுக்கிடையிலான தொடர்பு தொடரட்டும்...' <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: '. ஒன்றுமே புரியவில்லையே.. நான் நானில்லையென்றால் வேறு யார்?' <br /><br />அண்டவெளி உயிரினம்: ' இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரனுக்கு அவனது இதயம் எந்தப் பக்கத்திலுள்ளது? " <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: 'அதிலென்ன சந்தேகம்.. இடது புறத்தில்தான்..' <br /><br />அண்டவெளி உயிரினம்: 'இயற்பியல் விஞ்ஞானியின் முக்கிய அடையாளங்களிலொன்றான பிறப்பு மச்சம் எந்தப் பக்கத்திலிருக்கிறது?' <br /><br />இயற்பில விஞ்ஞானி: 'அது தாடையின் வலப்புறத்தில்தான்...' <br /><br />அண்டவெளி உயிரினம்: ' அவற்றினை இடம் மாற்றி வைத்து விட்டால் வேலை சுலபமாகிவிடும். அதன் பின்னர் உனது மேன்முறையீட்டில் உண்மையான இயற்பியல் விஞ்ஞானியின் இதயம் இடது ப்றத்தில் இருப்பதையும், அவனது அங்க அடையாளங்களின் இருப்பிடங்களையும் குறிப்பிட வேண்டும். ஆனால் அவை எல்லாமே உன்னைப் பொறுத்தவரையில் இடம் மாறியிருக்கும். ஆக நீ - நான் அவனில்லை - என்று வாதாட வேண்டும். உன் உடலின் எல்லாப் பாகங்களுமே இடம் மாறியிருப்பதால் உன் இடது கை வலது கையாகவும், வலது கை இடது கையாகவுமிருக்கும். நீதி மனறத்திடமிருக்கும் தகவல்களின்படி அவர்களிடமிருப்பது போலியான கைரேகையாகவிருக்கும்.. என்ன புரிகிறதா?' <br /><br />இயற்பியல் விஞ்ஞானி; 'ஏதோ கொஞ்சம் புரிகிறது. புரியாமலுமிருக்கிறது... ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது: நான் அவனில்லையென்று வாதாட வேண்டும் என்று. தற்போதுள்ள என் அங்கங்கள் தொடக்கம் அனைத்தையுமே தற்போதுள்ள இடத்திலிருந்து இடம் மாற்றி வைத்தால் இவையெல்லாம் சாத்தியமென்று நீ குறிப்பிடுவதும் புரிகிறது... ஆனால் அவையெல்லாம் - இடமாற்றம்- எவ்விதம் சாத்தியமென்றுதான் புரியவில்லை ' <br /><br />அண்டவெளி உயிரினம். 'சபாஷ்! நீ கெட்டிக்காரன் தான். உனக்கு எல்லாமே புரிகிறது ஒரு சிலவற்றைத் தவிர. ஆனால் இவ்விதமான புரிதல் உன்னைப் பொறுத்தவரையில் இயல்பானதொன்றுதான்...' <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: 'என்ன இயல்பானதா.. என்ன சொல்கிறாய்? சற்று விளக்கமாகத்தான் கூறேன்?' <br /><br />அண்டவெளி உயிரினம்: 'உன்னால் உணர முடியாது. காரணம்: உனது முப்பரிமாண எல்லைகள். அவற்றை மீறி உன்னால் உணர முடியாது. ஆனால் உனக்குக் கீழுள்ளவற்றை ஒப்ப்பிடுவதன்மூலம் அவற்றை , உன்னிலும் அதிகமான பரிமாணங்களின் சாத்தியங்கள் பற்றிய புரிதலுக்கு உன் அறிவு போதுமானது. உணர முடியாவிட்டாலும் புரிய முடியும்.' <br /><br />அண்டவெளி உயிரினம் தொடர்ந்தது: ' மானுட நண்பா! இரு பரிமாணங்களிலுள்ள உலகமொன்றிருப்பின் அங்குள்ள உயிர்கள் தட்டையானவையாகத்தானிருக்கும். அவற்றால் உன்னால் உணர முடிந்த உயரத்துடன் கூடிய முப்பரிமாண உலகைப் பார்க்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் நீளமும் அகலமுமேயுள்ள சிறைச்சாலையை விட்டு வெளியில் செல்ல வேண்டுமானால் நீள அகலச் சுவர்களை உடைத்துதான் செல்ல வேண்டும். ஆனால் முப்பரிமாணங்களுள்ள உன்னால் மிக இலகுவாக உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினூடு அந்தத் தட்டை மனிதர்களை மேலெடுத்து மீண்டும் சிறைச்சாலைக்கு வெளியே அவர்களது தட்டைச் சிறைகளை உடைக்காமலே கொண்டு சென்று விட முடியும். நீ அவர்களை உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினுள் எடுத்தவுடனேயே அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது தட்டை உலகத்திலிருந்து மறைந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் மறையவில்லை மூன்றாவது பரிமாணத்தினுள் இருப்பது உனக்கு மட்டும்தான் புரியும். இல்லையா? ' <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: 'ஆம். நீ கூறுவது தர்க்கரீதியாகச் சரியாகத்தானிருக்கிறது..' <br /><br />அண்டவெளி உயிரினம்: 'அதுபோல்தான் .. இடது புறத்தில் இதயமுள்ள தட்டை உயிரினமொன்றை உனது பரிமாணத்தினுள் எடுத்து, 180 பாகையில் திருப்பி மீண்டும் அதனது உலகினுள் கொண்டு சென்று விட்டால் என்ன நடக்கும்? அதன் உறுப்புகளின் இடம் மாறியிருக்கும். புரிகிறதா? மானுடனே! புரிகிறதா?' <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: 'புரிகிறது. நன்றாகவே புரிகிறது. என்னை இப்பொழுது உனது அதிஉயர் வெளிப் பரிமாணங்களிலொன்றினுள் அழைத்துச் சென்று, 180 பாகை திருப்பி , மீண்டும் இங்கு கொண்டுவந்து இறக்கி விடப்போகின்றாய். அப்படித்தானே!' <br /><br />அண்டவெளி உயிரினம்: 'பட்சே அதெ! அதே!' <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: 'அட உனக்கு மலையாளம் கூடத் தெரியுமா?' <br /><br />அண்டவெளி உயிரினம்: 'எனக்குத் தெரியாத உன் பிரபஞ்சத்து மொழிகளே இல்லை. எல்லாவற்றையும் மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும். முதலில் நீ விடுதலை பெற்று வா! அதன் பிறகு உனக்கு நான் இன்னும் பல அதிசயங்களைச் சொல்லித் தருவேன். அவற்றைப் பாவித்து நீ உன் உலகத்தில் மிகவும் பலமுள்ள ஆளாக மாறலாம். எப்பொழுதுமே என் உதவி உனக்குண்டு. அதற்கு முன்.. இப்பொழுது உன்னை நான் உனது முப்பரிமாணங்களிலும் மேலான இன்னொருமொரு வெளிக்குரிய பரிமாணத்தினுள் காவிச் செல்லப் போகின்றேன். இவ்விதம் பரிமாணங்களினூடு பயணிப்பதன் மூலம் உன் பிரபஞ்சத்தின் நெடுந்ததொலைவுகளைக் கூட மிக இலகுவாக, ஒரு சில கணங்களில் கடந்து விட முடியும்..... என்ன தயாரா?' <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: கண்களை மூடிக் கொள்கிறான். 'அப்பனே! முருகா! எந்தவிதப் பிரச்சினைகளுமில்லாமல் மீண்டும் என்னை இந்த மானுட , முப்பரிமாண உலகுக்கே கொண்டு வந்துவிட நீ அருள் புரிய வேண்டும்..' <br /><br />அண்டவெளி உயிரினம்: ' என்ன கடவுளை வேண்டிக் கொள்கிறாயா? என் மேல் இன்னும் உனக்கு நம்பிக்கை வரவில்லையா..' <br /><br />இயற்பியல்விஞ்ஞானி: சிறிது வெட்கித்தவனாக ' அப்படியொன்றுமில்லை. நீ என்னை இப்பொழுதே காவிச் செல்லலாம்...' <br /><br />அடுத்த சில கணங்களில் நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்திலிருந்து இயற்பியல் விஞ்ஞானி மறைந்து மீண்டும் தோன்றினான். <br /><br />என்ன ஆச்சரியம்! <br /><br />அவனாலே அவனை நம்ப முடியவில்லை. அவனது இதயம் வலது புறத்திலிருந்து துடித்துக் கொண்டிருந்தது. முன்பு வரை இடது பக்கமாகவிருந்த அவ்னது உடற் பாகங்கள் , பிறப்படையாளங்கள், அனைத்துமே வலப்புறமாக இடம் மாறியிருந்தன. <br /><br />அண்டவெளி உயிரினம்: 'மானுட நண்பனே! சரி மீண்டும் நாளை உனது மறுபிறப்புக்குப் பின்னர் வருகிறேன். அதன் பின்னர் இன்னும் பலவற்றை உனக்குத் சொல்லித் தருவேன். மானுடராகிய உங்களவர்களின் உடல்களைத் திறக்காமல், வெட்டாமல் எவ்விதம் சத்திர சிகிச்சைகளச் செய்வ்து போன்ற பல விடயங்களில் என்னால் உனக்கு உதவ முடியும். உன் மேன்முறையீடு மூயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துகள். வருகிறேன். நண்பா! நன்கு இருண்டு விட்டது. இப்பொழுது நீ நன்கு தூங்கு. விடிந்ததும் முதல் வேலையாக உன் மேன் முறையீட்டினைச் செய். வருகிறேன்.' <br /><br />இயற்பியல் விஞ்ஞானி: - (தனக்குள்) 'பலபரிமாண நண்பனே! உன் உதவிக்கு நன்றி' <br /><br />இவ்விதமாக எண்ணியவன் தூக்கத்திலாழ்ந்தான். நாளை விடிந்ததும் அவன் தன் மறுவாழ்வுக்காக வாதாடுவான். தன் அங்க அடையாளங்கள், கை ரேகை, இதயத்தின் இருப்பிடம் பற்றியெல்லாம் தெளிவாக எடுத்துரைத்து இயம்புவான் 'நான் அவனில்லை'யென்று.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-35203573821875736912008-07-13T21:25:00.001-04:002020-05-03T13:31:44.603-04:00கவிதை பற்றி ! கவிதையும் , யாப்பிலக்கணமும் பற்றியதொரு புரிதல்! - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIVsp5SPyTjx_ENSGUm2fZWq5NBK31aQ9X0llo79BNojMTenUr-YFzLnnsbFf5pdKZTYnR747mzVCa4d_KFzWxrbUNNic2dwiFo9m8fH3u1Scgb7etpusRZj3qNnAMuSP9iiKI/s1600-h/writer_e.gif"><img alt="" border="0" height="133" id="BLOGGER_PHOTO_ID_5222675556196878162" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIVsp5SPyTjx_ENSGUm2fZWq5NBK31aQ9X0llo79BNojMTenUr-YFzLnnsbFf5pdKZTYnR747mzVCa4d_KFzWxrbUNNic2dwiFo9m8fH3u1Scgb7etpusRZj3qNnAMuSP9iiKI/s320/writer_e.gif" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" width="135" /></a><br />
<br />
<div>
<span style="font-size: 78%;">தற்காலத்தில் கவிதை எழுதுபவர்கள் பலருக்குத் தமிழ்க் கவிதையின் யாப்பிலக்கணம் பற்றி எதுவுமே தெரிவதில்லை. தமிழில் கவிதை எழுதுவதற்குக் கவிதையின் யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டுமா என்று யாரும் கேட்கலாம். கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லைதான். ஆனால் நூற்றுக் கணக்கில் கவிதைகளைப் பிரசவித்துத்தள்ளும் எம் இன்றைய நவீனக் கவிஞர்கள் பலருக்கு அவ்விதம் பிரசவித்துத் தள்ளுவதற்குரிய நேரத்தில் ஒரு பங்கினை ஒதுக்கித் தமிழ்க் கவிதையின் யாப்பிலக்கணம் பற்றி அறிந்து கொள்வதிலென்ன சிரமமிருக்க முடியும்? தெரிந்து கொள்வதாலொன்றும் அதிக நட்டமில்லையே. இலாபந்தானே இருக்க முடியும். எந்த ஒரு துறையினைப் பற்றிக் கற்கும்போதும் முதலில் அத்துறையின் வரலாறு பற்றிக் கற்பதுடன்தானே ஆரம்பிக்கின்றோம். அதன் மூலம் அத்துறைபற்றிய பாண்டித்தியம்தானே அதிகமாகின்றது. கவிதையின் யாப்பிலக்கணம்பற்றி அறிய வேண்டுமென்று கூறும்பொழுது அதனைக் கரைத்துக் குடிக்க வேண்டுமென்று நானிங்கு கூற வரவில்லை. அதுபற்றிய அடிப்படை விளக்கங்களையாவது அறிந்திருப்பது நல்லதென்றுதான் கூறுகின்றேன். இதன்மூலம் எமது மரபுக் கவிதைகளைப் படித்துச் சுவைத்திடமுடியும். அத்தகைய மரபுக் கவிதைகளில் எவ்விதம் கவிஞர்கள் சொல்நயம், பொருள்நயம் மிக்க கவிதைகளைப் படைத்திருக்கின்றார்கள், எவ்விதம் சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன என்பவற்றையெல்லாம் அறிந்து கொள்வது இன்றைய கவிஞர்களின் படைப்பாற்றலினை நிச்சயம் அதிகரிக்க வைத்துவிடுமென்று நான் கருதுகின்றேன்.<br /><br />உண்மையிலேயே ஒரு சமயம் முக்கியமானதொரு கவிஞருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது நான் ஆசிரியப்பாவைப் அகவலென்று குறிப்பிட்டபோது ஆசிரியப்பாவும் அகவலும் ஒன்றல்லவென்று என்னுடன் வாதிக்க முனைந்து விட்டார். உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைந்துதான் போனேன். அவரை விடுங்கள். 'டாக்டர்' பொன்மணி வைரமுத்துவே தனது ஆய்வு நூலான 'சங்க இலக்கியத்தில் புதுக்கவிதைக் கூறுகள்' நூலில் 'சீர் இரண்டும் பலவுமாகச் சேர்ந்த உறுப்பு அடி எனப்படுகிறது. குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் ஐவகைப் பாகுபாடும் நாற்சீரடிக்கே பொருத்தமுடையது என்று கூறுவர்' (பக்கம் 72) என்று கூறியிருக்கின்றாரே. இதனைப் புரிதற்கு நான் இன்னும் முயன்று கொண்டுதானிருக்கின்றேன். நேரடி அல்லது அளவடி என்பது நான்கு சீர்களைக் கொண்ட அடியினைக் குறிக்கும். மேலுள்ள கூற்றின்படி 'குறளடி, சிந்தடி, நேரடி அல்லது அளவடி, நெடிலடி, கழிநெடிலடி ஆகிய ஐவகைப்பாகுபாடும் நேரடிக்கே அல்லது அளவடிக்கே (ஏனெனில் நேரடி என்பது நாற்சீரடியே) பொருத்தமுடையது என்றல்லவா பொருள்தருகின்றது. மேலும் 'டாக்டர் பொன்மணி வைரமுத்து' தொடர்ந்து '...வெண்பா அளவடி ,சிந்தடியாகவும், ஐவகை அடியும் ஆசிரியப்பாவிற்கும்..வரும்' என்கின்றார். பொதுவாக நானறிந்தவரையில் ஆசிரியப்பா நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறி மண்டல ஆசிரியப்பா என்னும் பிரிவுகளை உள்ளடக்கியது. இவற்றில் நேரிசை ஆசிரியப்பாவில் ஈற்றுக்கு அயல் அடி தவிர , அதாவது கடைசிக்கு முதல் அடி தவிர, ஏனைய அடிகள் யாவும் நான்கு சீர்களளைக் கொண்ட நேரடிகளாலனது. இணைக்குறள் ஆசிரியப்பாவைப் பொறுத்தவரையில் முதலும் இறுதியும் அடிகளொத்து, இடையில் இரு சீர் அல்லது ஒரு சீர் குறைந்து சிந்தடிகளாகவும் ( முச்சீரடி), குறளடிகளாகவும் (இரு சீரடி) இருக்கும். நிலைமண்டில எல்லா அடிகளும் நான்கு சீர்களைக்கொண்டு, அளவிலொத்து வரும். அடி மறி மண்டில ஆசிரியப்பாவைப் பொறுத்தவரையில் எல்லா அடிகளும் ஒத்து, எவ்விதம் அடிகளை மாறி வாசித்தாலும் ஓசையும், பொருளும் ஒத்து வரும். ஆகப் பொதுவாக ஆசிரியப்பா என்னும் பாவினத்தில் அதிகமாக அளவடிகளும், அடுத்தபடியாக சிந்தடி, குறளடிகளும் வரும். ஆனால் ஐந்து சீர்களைக் கொண்ட நெடிலடிகளும் எப்போதாவது அருகி ஆசிரியப்பாவினுள் வருவதுண்டு. இதனை யாப்பருங்கலக்காரிகையில் அமிதசாகரர் 'அருகிக் கலியோ டகவன் மருங்கினைஞ் சீரடியும் வருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர்..' என்பார். இதன் கருத்து: கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளும் ஐஞ்சீர் அடியும் அருகி வரப்பெறும் என்பதே. இதற்குதாரணமாகக் குணசாகரர் தனதுரையில் 'உமணர்ச் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை / ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்கா..'வென்னும் குறுந்தொகையினைக் காட்டுவார் [மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை பதிப்பித்த 'யாப்பருங்கலக்காரிகை' நூலில்; பக்கம் 157] ஆசிரியப்பாவுக்கு ஐஞ்சீரடியான நெடிலடி மிகவும் அரிதாகவே வரும். இந்நிலையில் ஐஞ்சீர்களுக்கும் அதிகமான சீர்களையுள்ளடக்கிய கழிநெடிலடியினையும் சேர்த்து 'ஐவகை அடியும் ஆசிரியப்பாவுக்கும்' என்று கூறுகின்றார் 'டாக்டர்' பொன்மணி வைரமுத்து அவர்கள். யாப்பிலக்கணத்தில் கரைகண்டவர்கள் யாராவாதுதான் இந்த விடயத்தில் என் ஐயத்தினைப் போக்க வேண்டும்.<br /><br />இந்நிலையில் புதுமைப்பித்தன் 'சமயத்தையும் கடந்த கலை' என்னும் கட்டுரையில் கவிதை பற்றிக் கூறியுள்ளதை நினைவு கூருவதும் பொருத்தமானது. மேற்படி கட்டுரையில் அவர் "கவிதை தமிழில் இருக்கலாம்; ஆனால் கவிதையைப் பற்றிய ஆராய்சி தமிழில் கிடையாது. தமிழில் செய்யுளியலைப் பற்றி ஆராய்சியிருந்திருக்கிறது. அதாவது கவிதையின் வடிவத்தைப் பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள். கவிதைக்குத் தமிழ் யாப்பிலக்கணத்தைப்போல் இயற்கையான அமைப்பு வேறு கிடையாதென்றே கூறி விடலாம். ஆனால் கவிதை என்றால் என்ன என்பதைப் பற்றித் தமிழர் ஆராயவே இல்லை. உடற்கூறு படியாவிட்டால் உயிர் வாழ முடியாதென்று சொல்ல முடியாது. அதைப்போல் இலக்கணம் இல்லாவிட்டால் கவிதை இருக்க முடியாதென்று கூற முடியாது. ஆனால் கவிதையை ரஸிப்பதற்குக் கவிதை என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். தற்காலத்திய பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கவனிக்க முடியாமல் எல்லாவற்றையும் புகழ்ந்து கொண்டு இடர்ப்படுவதற்க்குக் காரணம் அவர்கள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாததுதான்" என்று கூறியிருக்கின்றார். உண்மையில் இவர்களில் பலருக்குக் கவிதை பற்றி மட்டுமல்ல அதன் யாப்பிலக்கணத்தில் கூடப் போதிய தெளிவு இல்லாதிருப்பதைத்தான் நாம் நடைமுறை அனுபவத்தில் காணக் கூடியதாகவிருக்கிறது. உள்ளத்தில் உண்மையொளி இல்லாதிருந்தால் வாக்கினிலெவ்விதம் ஒளி வரும்; தெளிவு வரும்?<br /><br />ngiri2704@rogers.com</span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-48420466463417070872008-07-13T12:28:00.001-04:002020-05-03T13:33:31.013-04:00வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்! - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhzM7gHEkzE_sS4n6nmDIdeEy8dgw1FP16lq8g49O-dmcylScm6iAoRH0a7jd6Vroyowtghl-wYj24nW5UaFBvY16BCmZBBnX-aJt6Wan0775z3t7GApdXXhGTNu1e7giwui3C/s1600-h/man.jpg"><img alt="" border="0" height="178" id="BLOGGER_PHOTO_ID_5222536902021841474" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhzM7gHEkzE_sS4n6nmDIdeEy8dgw1FP16lq8g49O-dmcylScm6iAoRH0a7jd6Vroyowtghl-wYj24nW5UaFBvY16BCmZBBnX-aJt6Wan0775z3t7GApdXXhGTNu1e7giwui3C/s320/man.jpg" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" width="36" /></a> <span style="font-size: 78%;"><span style="font-size: 85%;"><b><br /></b></span>1.<br />பல்கலாச்சாரச் சமூகங்கள் நிறைந்தொளிரும்,<br />உலகிற்கொரு முன்மாதிரியான மா<br />நகரிந்தத் 'தொராண்டோ' மாநகர்.<br />பாதாளப் புகையிரதங்கள், நவீன வாகனங்கள்,<br />விண்முட்டும் உயர் கட்டடங்கள்,<br />உலகில் அதியுயர்ந்த சுயதாங்கிக் கோபுரம் (CN Tower),<br />இயங்கும் தன்மை மிக்க<br />'குவிகூரை' விளையாட்டு மண்டபம் (SkyDome),<br />மாபெரும் அங்காடிகள், பூங்காக்களென....<br />ஒளிருமிந்தப் பெருநகருக்கு<br />உலகில் நல்லதொரு பெயருண்டு:<br />இந்நகரொரு குட்டிப்<br />பூகோளம்.<br /><br />2.<br />இம்மாநகரில்தான் நானும்<br />இத்தனை வருடங்களாகக்<br />'குப்பை' கொட்டிக் கொண்டிருக்கின்றேன்.<br />இந்த நாட்டின் குடிமகனென்ற பெயரும்,<br />உரிமையும் கொண்ட எனைப் பார்த்து<br />மூன்றாம் உலகத்து வாசிகளுக்குப்<br />பொறாமையும், ஏக்கமும் அதிகம்.<br />அதிலும் தென்னிந்தியச் சினிமாக்களில்<br />இந்நகரைக் காணும் தருணங்களிலெல்லாம்<br />அவ்வுணர்வுகளதிகமாகும்.<br /><br /><br />3.<br />இந்தவிருபது வருடங்களில் தானெத்தனை<br />எத்தனை மாற்றங்களை இம்மாநகர்<br />கண்டுவிட்டது.<br />இருந்தும் இன்னும்<br />மாறாதவையுமுள சில.அவை:<br /><br />3.1<br />அன்றெனை மறித்த காவல்துறையதிகாரி<br />இன்று ஓய்வுபெற்றுப் போயிருக்கலாம்.<br />மரித்திருக்கலாம். இருந்தாலும்<br />அன்றெனை மறித்த தருணத்தில்<br />அவன் முகத்தில் படர்ந்த அலட்சியம்<br />ஒருவேளை<br />அக்காலகட்டத்தின் எனது குடியுரிமை நிலை<br />காரணமாக இருக்கலாமென்றெண்ணி<br />ஆறுதலைடைந்ததுண்டு.<br /><br />3.2.<br />ஆயின் பின்னர் குடியுரிமைபெற்றுப்<br />பெருமிதத்தில்<br />நடைபயின்றவென்னை<br />இன்னுமொரு அதிகாரி<br />அதுபோன்றதொரு அலட்சியத்தில்<br />நடத்தியபோது, அவனுக்குமென்<br />குடியுரிமை நிலை தெரியாமலிருந்திருக்கலாமென<br />எண்ணினேன்.<br /><br />3.3.<br />ஆயினுமென்ன! நேற்று, நான்<br />இம்மண்ணில் காலடிவைத்தபோது<br />அவதரித்துக் காவலதிகாரியாக அவதரித்த<br />அதிகாரியும் அவ்விதமே<br />அலட்சியமாக நடந்து கொண்டபோது<br />அவனலட்சியத்தின் காரணம் புரியாது,அது<br />எதுவாயிருக்குமென<br />சிந்தையிலோராயிரமெண்ணங்கள்.<br />இவர்களுக்கெல்லாம்<br />நானுமிந்த நாட்டின் பூரணவுரிமை<br />பெற்றதொரு பிரசைதானென்பதை<br />எப்படிப் புரியவைப்பேன்?<br />இவர்களினிந்த அலட்சியத்தின் காரணம்?<br />என் நிறமா? அல்லதென் மொழியா? எது?<br /><br />4.<br />இவ்விதம் பல்சிந்தனைகள் மிகுந்து<br />நடைபாதையொன்றில் நடந்ததொருதருணத்தில்,<br />நடைபாதையினோரத்தில் குடங்கிக்கிடந்த<br />பூர்வீக இந்தியனொருவன் நகைத்தான்;<br />அவன் பூர்விகமறியாது அவன்<br />நகைப்பினாலாத்திரம் மிகக்கொண்டு,<br />நானடைந்த<br />ஆத்திரம் அவன் விலாவை மேலும்<br />குலுங்க வைக்கவே அமைதியானேன்.<br />அப்போதவன் கூறினான்:<br />'இம்மண்ணின் பூர்வீகக்குடி நான்.<br />என்னாலேயே முடியவில்லை;<br />வந்து குடியேறிய மகன் நீ. உன்னாலெவ்விதம்<br />முடியும்? அதுவேயென் நகைப்பின்<br />காரணம் தவிர வேறல்ல. ஆத்திரம் தவிர்.<br />ஒருவேளை என்னால் முடியாதது<br />உன்னால் முடியக்கூடுமாயின்<br />அதனையெனக்கும் அறிவிக்க மட்டும்<br />மறந்துவிடாதே நண்பனே!<br />சொந்த மண்ணினிழப்பை<br />அனுபவித்தால்தான் தெரியுமதனிழப்பு'<br />அப்பொழுது நான் கூறினேன்:<br />'நண்பனே! சொந்த மண்ணை<br />இழந்தது நீ மட்டும் தானல்ல'!<br /><br /><br />********************************<br /><br />காலத்தின் சார்பு நிலை!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />எனது பால்யகாலத்தில் எவ்வளவு<br />ஆறுதலாக, மெதுவாகக் காலம்<br />சென்று கொண்டிருந்தது.<br />ஒவ்வொரு கணத்தையும் மிகவும்<br />ஆறுதலாக உள்வாங்கி, உணர்ந்து, இரசித்து<br />பொழுதுகளை எவ்வளவு<br />இனிமையாகக் கழிக்க முடிந்தது.<br />அன்னையப்பர் மற்றும் பிற<br />உறவுகளுடன் கழிந்ததந்த<br />வாழ்வினொவ்வொரு பக்கமும்<br />நேற்றுத்தான் படித்ததொரு புத்தகமென<br />இன்னுமென்னகத்தில்<br />இருக்கும் மாயமென்ன!<br />ஆறுதலாக , மிக மிக மெதுவாக<br />விரைந்த காலமே! உழைப்பேயிருப்பென<br />ஆகிவிட்ட இன்று மட்டுமேன்<br />ஒளிவேகத்தில் விரைகின்றாய்?<br />ஐன்ஸ்டைனின் கூற்றினைத் திருப்திப்படுத்துவதில்<br />உனக்கென்ன அவ்வளவு மோகம், வேகம்?<br /><br />ngiri2704@rogers.com</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-70790438923415830002008-07-13T12:14:00.005-04:002020-05-03T13:34:38.035-04:00அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் நினைவாக..... நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! - - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXR-jCZHAm_O4lLkPExrkDfh-vni-aWmGTack6rS4ELiYs7HxwvWElhNBDXvO3L0bu14fptXWUoJrPSUhcc_NDALDw4VKFsWRHNpsizsFho_o_dT5MKVBQRNgXf33gaxGGtGeE/s1600-h/arthur_c_clarke_abcd.jpg"><img alt="" border="0" height="200" id="BLOGGER_PHOTO_ID_5222533698305711282" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXR-jCZHAm_O4lLkPExrkDfh-vni-aWmGTack6rS4ELiYs7HxwvWElhNBDXvO3L0bu14fptXWUoJrPSUhcc_NDALDw4VKFsWRHNpsizsFho_o_dT5MKVBQRNgXf33gaxGGtGeE/s320/arthur_c_clarke_abcd.jpg" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" width="263" /></a><br />
<b><i></i></b><br />
- அண்மையில் மறைந்த விஞ்ஞானப் புனைகதையுலகில் முக்கிய படைப்பாளியாக விளங்கிய ஆர்தர் சி. கிளார்க்கை ஒருமுறை என் வாழ்வில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் வாழ்க்கைச் சரித்திரத்தில் அதுவொரு முக்கிய சந்திப்பாகவும் அமைந்து விட்டது. மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலைப் பட்டப்படிப்பினை முடித்துப் அதற்குரிய சான்றிதழினை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பெற்றது அவரது கைகளிலிருந்துதான். அவர்தான் அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைக் கழகத்து வேந்தராக இருந்தார். அவரது நினைவாக இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.-<br />
<span style="font-size: 78%;"></span><br />
<span style="font-size: 78%;">இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானப் புனைகதையுலகில் கொடிகட்டிப் பறந்த முக்கியமான மூலவர்களாக மூவர் குறிப்பிடப்படுவார்கள். ஒருவர் ஐசக் அசிமோவ். ரஷிய நாட்டவர். அடுத்தவர் அமெரிக்கரான ரொபேட் ஏ றெய்ன்லெய்ன். இவர் மிசூரியைச் சேர்ந்தவர். அடுத்தவர் </span><span style="font-size: 78%;">ஆர்தர் சி.கிளார்க். இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். ஆர்தர் சி. கிளார்க் ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து அண்மையில் மறையும் வரையில் இலங்கையில் வசித்து வந்தாலும் அவர் பிறந்தது இங்கிலாந்திலுள்ள 'மைன்ஹெட்' என்னுமிடத்தில்தான். 1917இல் பிறந்த அவர் இலண்டனிலுள்ள 'கிங் காலேஜ்'ஜில் இயற்பியல் மற்றும் கணித்தில் தனது பட்டப்படிப்பினை முதற்பிரிவுச் சித்தியுடன் நிறைவு செய்தவர். மிகவும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானப் புனை கதை எழுத்தாளராக விளங்கிய கிளார்க் ஒரு விஞ்ஞானியும் கூடத்தான். தகவல் பரிமாற்றத்திற்கான செயற்கைக் கோள்களின் ஆட்சி கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய யுகத்தின் பிதாமகரே இவரேதான். ஏனெனில் பூமிக்கான தகவல்பரிமாற்றத்திற்கான செயற்கைக் கோள்கள் பற்றிய கோட்பாட்டினை அன்றைய காலத்தில், நாற்பதுகளிலேயே, எதிர்வு கூறியவர் இவர். மேலும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பிரிட்டிஷ் றோயல் விமானப்படையின் ராடார் நிபுணராகவும் இவர் பணிபுரிந்திருக்கின்றார்.<br /><br />விஞ்ஞானப் புனைகதையுலகின் முக்கியமான படைப்பாளியான ஆர்த்ர் சி. கிளார்க்கின் படைப்புகள் மானுட இனத்தைப் பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனையைக் கொண்டிருப்பவை. அவரது படைப்புகள் அவற்றின் தெளிவுக்காகவும், கற்பனை வளமை மிக்க எதிர்வு கூறல்களுக்கும் பிரசித்தி பெற்றவை. ஏற்கனவே கிடைக்கப்பெற்ற அறிவியற் தகவல்களின் அடிப்படையில், அறிவுபூர்வமான, புதிய கண்டுபிடிப்புகளை எதிர்வு கூறின அவை. அத்தகையதொரு கண்டுபிடிப்பே மேற்படி 'பூமிக்கான தகவல் பரிமாற்றத்திற்குரிய செயற்கைக் கிரகமெ'ன்பதும். இப்பிரபஞ்சத்தில் மானுடர் எப்படியும் தப்பிப் பிழைத்து விடுவார்களென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையினைப் புலப்படுத்தும் படைப்புகளை அவர் படைத்தார். மானுடர்கள் ஒருகாலத்தில் அழிந்து விடுவார்களென்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை. சகலபிரச்சினைகளுக்கும் மத்தியில் அவர்கள் எப்படியும் தப்பிப் பிழைத்து விடுவார்களென்று அவர் உறுதியாக நம்பினார். அவர்கள் எப்படியும் தப்பிப் பிழைப்பதற்குரிய வழியொன்றினை கண்டு பிடித்து விடுவார்களென்பதில் அவருக்குத் திடமான நம்பிக்கையிருந்தது. அத்துடன் அவர் மானுடர் மட்டும்தான் இப்பிரபஞ்சத்தின் ஒரேயொரு நுண்ணறிவுமிக்க, புத்திசாதுரியம் மிக்க உயிரினமென்றும் நம்பவில்லை. பரந்து, விரிந்து கிடக்குமிந்தப் பிரபஞ்சத்தில், நம்மைப்போன்ற புத்திசாதுரியம் மிக்க உயிரினங்கள் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சாத்தியங்களை அவர் திடமாகவே நம்பினார். இத்தகைய காரணங்களினால் மானுடரின் எதிர்காலம் பற்றிய ஆக்கபூர்வமான நம்பிக்கை, தெளிவு, கற்பனை வளமிக்க அறிவுபூர்வமான எதிர்வு கூறல்கள், இவையே அவரது படைப்புகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களாக விளங்குகின்றன.<br /><br />அவரது 'பிள்ளைப் பிராயத்தின் முடிவு' ( Childhood's End) என்னும் விஞ்ஞானப் புனைகதையானது மானுடர் உளரீதியில் இன்னுமொரு தளத்துக்குப் (Overmind) வளர்ச்சியுறுவதை விபரிக்கும். 'பூமியொளி' (Earthlight) என்னும் 1951இல் வெளியான அவரது குறுநாவல் மானுட இனமானது தன்னைத்தானே அழித்துக் கொள்ளாதென்ற நம்பிக்கையினை வெளிப்படுத்தும்.. அன்றைய காலகட்டத்தில் வெளியான இவரது 'த சென்டினல்' The Sentinel) இன்னுமொரு புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைகதையாகும். இது 1996இல் சந்திரனுக்குப் பயணிக்கும் வில்சனென்னும் நிலவியல் அறிஞரொருவரின் பயணத்தை அவரது கூற்றில் வெளிப்படுத்துமொரு புனைவாகும். சந்திரனில் வேற்றுலகத்து உயிரினமொன்றினால் பூமியில் மானுடர் தோன்றுவதற்குப் முன்பே அமைக்கப்பட்டிருந்த படிகத்திலான 'பிரமிட்'டினைப்பற்றி விபரிக்கும். மேற்படி படிகப் பிரமிட்டானது பூமியிலுள்ள ஒருவரால் அங்கு அமைக்கப்பட்டிருக்கக் கூடுமென்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்ட வில்சன் பின்னர் தன்னைப் போல் சந்திரனுக்கு முன்னர் பயணித்த வேற்றுலகத்து உயிரொன்றின் வேலையே அதுவென்று நம்பிக்கை கொள்கின்றார். மேற்படி 'படிகப் பிரமிட்டா'னது மானுடருக்கும், வேற்றுலகத்து வாசிகளுக்குமிடையில் எதிர்காலத்தில் நிகழக்கூடிய சந்திப்பொன்றினை எதிர்வு கூறுமொரு குறியீடாகவே கருதப்படுகிறது. மேலும் அந்தப் பிரமிட்டின் அமைப்பானது அவ்வகை உயிரினமொன்றினால் அமைக்கப்பட்டதொரு எசசரிக்கைக் கருவியே. அதனைக் கண்டு பிடிக்கும் உயிரினத்தைப் பற்றிய தகவல்களை அந்த வேற்றுலகத்துவாசிகளுக்கு அறிவிப்பதற்காக மேற்படி 'சென்டினல்' என்னும் அந்தப் படிகப் பிரமிட்டானது சந்திரனில் அமைக்கப்பட்டிருந்தது. இது போன்று மில்லியன் கணக்கில் இத்தகைய படிகப் பிரமிட்டுகள் பிரபஞ்சமெங்கும் அந்த வேற்றுலக வாசிகளினால் அமைக்கப்பட்டிருக்கவேண்டுமென்று மேற்படி புனைகதையில் ஆர்தர் சி கிளார்க் விபரிக்கின்றார். மேற்படி 'படிகப் பிரமிட்டி'னை மேற்படி வேற்றுலகவாசிகள் பூமியில் அமைக்காமல் சந்திரனில் எதற்காக அமைத்திருக்க வேண்டும்? அதற்குமொரு தர்க்கரீதியிலான காரணமொன்றினைக் கிளார்க் முன்வைக்கின்றார். சந்திரனை அடைவதற்கு பூமியில் வசிக்கும் மானுடர் வெற்றிடத்துடன் சூழ்ந்த விண்வெளியினைக் கடக்கும் வல்லமை பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஆற்றல் மிக்க இனமொன்றினால்தான் மேற்படி 'படிகப்பிரமிட்டி'னைக் கண்டுபிடிக்க முடியும்? அத்தகைய அறிவுள்ள உயிரினங்களுடன்தான் மேற்படி வேற்றுலகத்து வாசிகள் தொடர்பு கொள்ள விரும்பியிருக்க வேண்டும். மானுடர் அதனை அறியும்பொருட்டுத்தான் அதனைப் பூமியில் அமைக்காது சந்திரனில் அமைத்திருக்கவேண்டும். மேற்படி விஞ்ஞானப் புனைவு கிளார்க்கின் மானுடரின் தப்பிப் பிழைத்தலுக்கான ஆற்றலினையும், நுண்ணறிவு மிக்க வேற்றுலகத்துவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் பற்றியும், அததகைய உயிரினங்களுடனான தகவல் பரிமாற்றத்திற்கான சாத்தியம் பற்றிய அவரது அசைக்க முடியாத நம்பிக்கையினையும் வெளிப்படுத்துமொரு அறிவியற் புனைவாகும்.<br /><br />மேலும் மேற்படி 'படிகப்பிரமிட்' பற்றிய சிந்தனை கிளார்க்கின் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அறிவுபூர்வமாகப் புனையப்படும் அவரது கற்பனையாற்றலினையும் புலப்படுத்துகிறது. எவ்விதம் பிரமிட்டானது பூமியில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்து, காலவெள்ளத்தில் மூழ்கிப் போன எகிப்திய நாகரிகத்தைப் பறைசாற்றுகிறதோ அவ்வாறே மேற்படி 'படிகப்பிரமிட்டும்' சந்திரனில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நாகரிகத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் மேற்படி 'படிகப்பிரமிட்'டானது 'சென்டினல்' (Sentnal) என்று அழைக்கப்படுகிறது. 'சென்டினல்' என்றால் அதற்கு அவதானிப்பவர் என்றொரு அர்த்தமும் உண்டு. தம்மையொத்த அறிவுபூர்வமான உயிரினமொன்றின வருகைக்காகக் காத்து நிற்கும், அவதானித்து நிற்கும் அந்தப் 'படிகப்பிரமிட்'டுக்கு 'சென்டினல்' என்னும் பெயர் நன்கு பொருத்தமானதே.<br /><br />மேலுமொரு விடயத்தினையும் மேற்படி 'சென்டினல்' என்னும் விஞ்ஞானப் புனைகதை வெளிப்படுத்துகிறது. அது சந்திரனில் மனிதரால் காலடியெடுத்து வைக்கமுடியுமென்ற, சந்திரப் பயணத்துக்கான சாத்தியம் பற்றிய, அவரது நம்பிக்கைதானது. மேற்படி கதை எழுதப்பட்டது 1951இல். ஆனால் உண்மையிலேயே மனிதர் சந்திரனில் காலடியெடுத்து வைத்தது 1969இல். மேற்படி மானுடரின் எதிர்காலச் சாத்தியப்பாடுகள் பற்றிய நம்பிக்கையானது கிளார்க்கின் படைப்புகளில் காணப்படும் முக்கியமானதொரு அம்சமென்று விமர்சகர்கள் பலர் விதந்துரைத்திருக்கின்றார்கள்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZQTK6u61MrB3UVkDZmIOKiTbRpGYgfYpFVN5bMnUS4Oq3neLHURDpXGJBYfvP3nNrekWHZTXdHNotJ8k4GlrjzQcOhCiNsN7VQ0h1NQqeyoiLTg8ThKZfP9uYX_r4MvLFrmNF/s1600-h/ARTHURCALRKE_CHILDHOODS_END_a.jpg"></a>இவ்விதமான மானுடர் பற்றி, வேற்றுலகத்துவாசிகள் பற்றிய நம்பிக்கையினைக் கிளார்க் பெற்றது எவ்விதம்? இதற்கு அவரது 'பிரமிப்பூட்டும் நாட்கள்' (Astounding Days) என்னும் சுயசரிதை நூல் விடை பகர்கிறது. மேற்படி நூலில் தனது பதின்மூன்று வயதில் தான் முதன்முதலாக முதலாவது விஞ்ஞானப் புனைவுச் சஞ்சிகையொன்றினை வாசித்ததாகவும், அன்றிலிருந்து தனது வாழ்க்கை அடியோடு மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். தற்பொழுது 'அனலாக்' (Analog) என்று வெளிவரும் விஞ்ஞானப் புனைவுச் சஞ்சிகையானது அக்காலகட்டத்தில் 'பிரமிப்பூட்டும் உயர்தர விஞ்ஞானக் கதைகள்' ( Astounding Stories of Super Science) என்னும் பெயரில் வெளிவந்து கொண்டிருந்தது. அச்சஞ்சிகையே கிளார்க்கின் வாழ்க்கையினை அடியோடு மாற்றிய மேற்படி சஞ்சிகையாகும். தனது சுயசரிதையில் கிளார்க் மேறபடி சஞ்சிகை எவ்விதம் அவரது 'டீன்' வயதுப் பருவத்தில் அவர்மேல் ஆதிக்கம் செலுத்தியதென்பதை விபரிப்பார். மேற்படி சஞ்சிகையின் முதலாவது ஆசிரியத் தலையங்கத்தில் 'நாளை பிரமிப்பூட்டும் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. உங்களது குழந்தைகள் அல்லது அவர்களின் குழந்தைகள் சந்திரனுக்கான பயணத்தை மேற்கொள்வார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டும் கிளார்க் அவை மிகவும் நம்பிக்கையான் சொற்களென்பார். உண்மையில் 1930இல் வாழ்ந்தவர்களின் பிள்ளைகளே சந்திரனில் காலடியெடுத்து வைத்தார்களென்பார்.<br /><br />ஆர்தர் சி. கிளார்க்கின் மேற்படி விஞ்ஞானச் சஞ்சிகையுனான சிறுவயதுத் தொடர்பும், வாசிக்கும் பழக்கமுமே மானுடரின் எதிர்காலம் பற்றிய, நுண்ணறிவுமிக்க வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் பற்றிய நம்பிக்கையினை அவருக்கேற்படுத்தின. அதுவே அவரது படைப்புகள் பலவற்றில் காணப்படும் முக்கியமான அம்சங்களிலொன்றாக விளங்குவதற்குக் காரணம். அதே சமயம் தெளிவும், எளிமையும், ஆழமும் மற்றும் அறிவுபூர்வமான கற்பனைச் சிறப்பும் அவரது படைப்புகளில் விரவிக் கிடப்பதற்கு முக்கியமான காரணங்களாக அவரது வாசிப்புப் பழக்கம், கல்விப் பின்புலம், மற்றும் அவரது தொழில்ரீதியிலான அனுபவங்களே காரணங்களெனக் குறிப்பிடலாம். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கொப்ப, மேற்படி 'சென்டினல்' விஞ்ஞானப் புனைகதையானது அவரது படைப்புகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இன்னுமொரு விடயத்திற்கும் மேற்படி புனைகதையானது அடிப்படையாக விளங்குகின்றது. ஆர்தர் சி. கிளார்க்கென்றால் ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற '2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி' என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் ஞாபகம் அனைவருக்குமே வராமல் போகாது. ஸ்ரான்லி குப்ரிக்கின் இயக்கத்தில் வெளிவந்த அந்தத் திரைப்படத்திற்கு குப்ரிக்குடன் இணைந்து திரைப்பட வசனமெழுதியவர் கிளார்க். 'சென்டினல்' என்னும் மேற்படி புனைகதையினை இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கின் வேண்டுகோளின்பேரில் விரிவாக்கி உருவாக்கிய நாவலே '2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி'. திரைப்படம் நாவல் வெளிவருவதற்கு முன்னர் வெளிவந்தாலும் நாவல் திரைப்படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே கிளார்க்கால் எழுதி முடிக்கப்பட்ட் விட்டது. ஆயினும் அந்நாவல் உருவாக்கத்திற்கு முக்கிய காரணம் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கேயென்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அவரது வேண்டுகோளின்பேரில்தான் கிளார்க் அந்நாவலை எழுதினார். அதற்கான பெயர் கூட ஸ்டான்லி குப்ரிக்கினால் வைக்கப்பட்டதாகக் கிளார்க் கூறியுள்ளார்.<br /><br />மானுடரின் தப்பிப் பிழைக்கும் ஆற்றல் மிக்க எதிர்காலம், நுண்ணறிவு மிக்க வேற்றுலக வாசிகள் இருப்பதற்கான சாத்தியம் போன்றவற்றில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை , அறிவுபூர்வமான வளமான கற்பனையாற்றல், தெளிவு, எளிமை மற்றும் ஆழம் ஆகியவற்றைப் புலப்படுத்தும் விஞ்ஞானப் புனைகதைகளுக்காகவும் , அறிவுபூர்வமான எதிர்வு கூறல்களுக்காகவும் ஆர்தர் சி. கிளார்க் எப்பொழுதும் நினைவு கூரப்படுவார். அந்த நம்பிக்கையினால்தான் அவர் மக்களின் விண்வெளிப்பயணம் விரைவில் சாத்தியமாகுமென்றும், அப்பொழுது சாதாரண மக்கள் சந்திரனுக்கு மட்டுமல்ல அதற்கப்பாலும் இலகுவாகப் பயணிப்பார்களென்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். ஏற்கனவே சாத்தியமாகியுள்ள அவரது எதிர்வு கூறல்கள் பலவற்றைப் போலவே இந்த நம்பிக்கை மிக்க எதிர்வு கூறலும் சாத்தியமாகிவருவதையே தற்போதைய நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.<br /><br /><i>ngiri2704@rogers.com</i></span><i> </i></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-37337828393324486592008-07-13T11:59:00.004-04:002008-07-13T12:10:19.225-04:00வ.ந.கிரிதரனின் 'இருப்பதிகாரம்'!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiDdhfq92UF4U_hVKIDo0sZjHl2LfxRznipYLA59Ep5GA7dECi815XPrTK2ttSJoIjXceXoJjGvCpQ1vmd4k1h3I01ujgPR-ViNkT2K9cOwJGO9aYb2E-6npVUZRqASBMkUS5s/s1600-h/man_night.jpg"><strong><img id="BLOGGER_PHOTO_ID_5222531142166739650" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiDdhfq92UF4U_hVKIDo0sZjHl2LfxRznipYLA59Ep5GA7dECi815XPrTK2ttSJoIjXceXoJjGvCpQ1vmd4k1h3I01ujgPR-ViNkT2K9cOwJGO9aYb2E-6npVUZRqASBMkUS5s/s320/man_night.jpg" border="0" /></strong></a><strong> </strong><span style="font-size:78%;"><span style="font-size:100%;"><strong><em>வ.ந.கிரிதரனின் 'இருப்பதிகாரம்'!</em><br /></strong><em><strong>இருப்பு பற்றிய தேடல்!<br /></strong></em></span><br />இதுவரையில் நான் எழுதிய கவிதைகளில் பல் இப்பிரபஞ்சத்தில் ந்மது , மானுட, இருப்புப் பற்றிய தேடல்களாகவே இருப்பதை எனது கவிதைகளை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வர். மாணவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட அத்தகைய கவிதைகளின் தொகுப்பாக இதனைக் கருதலாம். எனது புனைகதைள் இன்றைய மனிதரினின் சமகால சமூக, அரசியல்ரீதியிலான பாதிப்புகளைக் களமாகக் கொண்டியங்கினால், எனது கவிதைகளோ பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சம் பற்றி, அது பற்றிய தேடல்களைப் பற்றியே அதிகமாகப் பிரதிபலிக்கும். ஆயினும் அவ்வப்போது சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளின் பாதிப்புகளைப் பற்றியும் அவை பேசும். ஆயினும் 'இருப்பதிகாரம்' என்னுமித் தொகுப்பு எனது இருப்பு பற்றிய தேடல்களின் விளைவான உணர்வுகளைப் பிரதிபலிக்கும். பல்வேறு இணைய இதழ்களில் (திண்னை, பதிவுகள், ஆறாந்திணை, தட்ஸ்தமிழ்.காம் போன்ற) வெளிவந்த கவிதைகள், என் மாணவப் பிராயத்திலே ஈழநாடு மாணவர் மலர், மற்றும் பலவேறு ஈழத்துப் பத்திரிகைகளான வீரகேசரி, ஈழமணி, சிந்தாமணி, தினகரன் போன்ற் பத்திரிகைகளில் வெளிவந்த ஆரம்பகாலக் கவிதைகளில் இருப்பு பற்றிய தேடலைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பிது..<br /><br /><br />1. மீறிப் பார்!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />உனது பரிமாணங்கள்தானெத்தனை சிறியவை.<br />அதற்குள் வளைய வந்து கொண்டா<br />இத்தனை ஆட்டமும், பாட்டமும் ?<br />முடிந்தால், மீறிட முடிந்தால்<br />முயன்று பார்!<br />மீறுதலென்பது அவ்வளவு தப்பான<br />காரியமல்லவென்பதை மட்டுமல்ல<br />மீறுதலென்பது வளர்ச்சியினொரு<br />படிதானென்பதை மட்டுமல்ல<br />ஏன்<br />மீறுதலென்பதவ்வளவு<br />இலகுவானதல்லவென்பதையும் கூட<br />மேலும் நீ புரிந்து கொள்ளலாம்.<br />அதற்காகவாவது<br />மீறிப் பார்!<br /><br /><br />2. நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'<br /><br />-வ.நகிரிதரன் -<br /><br />உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?<br />ஒவ்வொரு முறையும் இவ்விதம்<br />நகைப்பதே உன் தொழிலாயிற்று.<br />விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்<br />நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,<br />அல்லது உன் தந்திரம் மிக்க<br />கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.<br /><br />இரவுவானின் அடுக்குகளில்<br />உனது சாகசம் மிக்க<br />நகைப்பினை உற்றுப் பார்த்திடும்<br />ஒவ்வொரு இரவிலும்,<br />நட்சத்திரச் சுடர்களில்,<br />அவற்றின் வலிமையில்<br />உன்னை உணர்கின்றேன்.<br /><br />எப்பொழுதுமே இறுதி வெற்றி<br />உனக்குத்தான்.<br />எப்பொழுதுமே உன்காட்டில்<br />மழைதான். அதற்காக<br />மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்<br />உன்னை வெற்றி கொள்ளுதலுமென்<br />பேரவாவன்று.பின்<br />உனைப் புரிதல்தான்.<br /><br />ஓரெல்லையினை<br />ஒளிச்சுடருனக்குத்<br />தந்துவிடும் பொருளறிந்த<br />எனக்கு<br />அவ்வெல்லையினை மீறிடும்<br />ஆற்றலும், பக்குவமும்<br />உண்டு; புரியுமா?<br /><br />வெளியும், கதியும், ஈர்ப்பும்<br />உன்னை, உன் இருப்பினை<br />நிர்ணயித்து விடுகையில்<br />சுயாதீனத்துடன்<br />பீற்றித் திரிவதாக உணரும்<br />உன் சுயாதீனமற்ற,<br />இறுமாப்புக்கு<br />அர்த்தமேதுமுண்டா?<br /><br />இடம், வலம் , மேல், கீழ்.<br />இருதிசை, நோக்கு கொண்ட<br />பரிமாணங்களில் இதுவரையில்<br />நீ<br />ஒருதிசையினைத் தானே காட்டி<br />புதிருடன் விளங்குகின்றாய்?<br />உன் புதிரவிழ்த்துன்<br />மறுபக்கத்தைக் காட்டுதலெப்போ?<br /><br />இரவி , இச் சுடர் இவையெலாம்<br />ஓய்வாயிருத்தலுண்டோ? பின்<br />நான் மட்டுமேன்?<br /><br />நீ எத்தனை முறை தான்<br />உள்ளிருந்து<br />எள்ளி நகைத்தாலும்<br />மீண்டும் மீண்டும்<br />முயன்று கொண்டேயிருப்பேன்.<br />நீ<br />போடும் புதிர்களுக்கு<br />விளக்கம் காணுதற்கு<br />முயன்று கொண்டேயிருப்பேன்.<br /><br />வேதாளங்களின் உள்ளிருந்து<br />எள்ளி நகைத்தல் கண்டும்<br />முயற்சியில்<br />முற்றுந் தளராதவன் விக்கிரமாதித்தன்<br />மட்டும்தானா?<br /><br /><br />3. சுடர்ப் பெண்கள் சொல்லும் இரகசியம்.<br /><br />வ.ந.கிரிதரன் -<br /><br />இருண்ட அடிவானை நோக்குவீர்.<br />ஆங்கு<br />இலங்கிடும் சுடர்பெண்கள்<br />சொல்லிடும்<br />இரகசியம் தானென்ன ?<br />புரிந்ததா ?<br />சூன்யத்தைத் துளைத்து<br />வருமொளிக் கதிர்கள்.<br />'அஞ்சுதலற்ற கதிர்கள்.<br />அட! அண்டத்தே யார்க்கும்<br />அஞ்சுவமோ ?<br />ஓராயிரம் கோடி கோடியாண்டுகள்<br />ஓடியே வந்தோம்.<br />வருகின்றோம்.வருவோம்.<br />காலப் பாிமாணங்களை<br />வெளியினில்<br />காவியே வந்தோம்.சூன்யங்கள்<br />கண்டு சிறிதேனும்<br />துவண்டுதான் போனோமோ ?<br />அஞ்சுதலற்ற நெஞ்சினர்<br />எம்முன்னே மிஞ்சி நிற்பவர்<br />தானெவருமுண்டோ ?<br />தொிந்ததா ? விளக்கம்<br />புரிந்ததா ? '<br />நோக்குங்கள்! நோக்குங்கள்!<br />நோக்கம் தான்<br />தொிந்ததுவோ ? சுடர்ப்<br />பெண்கள் பகரும்<br />இரகசியம் தான்<br />புரிந்ததுவோ ?<br /><br /><br />4. கதி கூடின் கதி கூடும் காலமே! அ'கதி'க் காலமே!<br /><br />வ.ந.கிரிதரன்<br /><br />காலத்தின் விரைவு சிந்தனையை<br />நெருடும். அன்று அவ்வளவு மெதுவாகச்<br />சென்ற காலமாயிது!<br />பாடசாலை விட்டு வரும் வழியில்<br />எஞ்சினியர் வீட்டு வளவில் திருட்டுத் தனமாக<br />'விலாட் 'மாம்பழம் பறித்துண்ட போது,<br />வயற்புறக் குளத்தில் விரால்<br />பிடிக்க அலைந்த போது,<br />முருங்கையில் மரங்கொத்தி கண்டு<br />முதற் கதை படைத்த போது,<br />உடும்பு தேடி 'ஜிம்மியுடன் '<br />காடுமேடென்று ஊர்ந்த போது<br />எத்துணை மெதுவாகச் சென்றதிந்தக்<br />காலம்.<br /><br />'டியூசன் ' முடிந்து அவள் கடைக்கண்<br />பார்வைக்காய் வீதிக் கோடியில்<br />காத்து நின்ற போது கூட<br />இவ்வளவு விரைவாகச் செல்லவில்லையே<br />இந்தக் காலம்.<br /><br />பின்னொரு நாள் நடுநிசி நிலவே<br />துணையாக நண்பருடன்<br />பொருள்முடல் வாதம் பற்றி<br />வாதம் புாிந்த போது கூட<br />காலம் இவ்வளவு கடிதாகச்<br />சென்றதாயென்ன ? அன்று<br />சிறைப்பிடிக்கப் பட்ட ஒவ்வொரு கணமும்<br />பதியப் பட்ட உருவக் கோப்புகளாகி<br />எந்தன் நிலையான நினைவகத்தில்<br />இன்னுமிருக்குமளவிற்கு<br />எத்துணை மெதுவாகச் சென்றதிந்தக்<br />காலம்.<br /><br />ஆனால்..இன்று.. ?<br /><br />காலமே! உன் கடுகதிப் பயணத்தின்<br />காரணம் யாதோ ?<br /><br />வேகம் கூடுமெனின், சார்பு நிலையில்<br />உன் வேகம் கூடக் குறைந்து விடுமென்று<br />தத்துவம் சொல்லிடுதே. ஆனால் நாடற்றவிந்த<br />அகதி வாழ்வின் வேகம் கூடியதன்றோ ?யார் சொன்னது<br />குறைந்ததென்று ? கடுகதியாய் விரையுமிவ்<br />வாழ்வில் காலமே நீயுமேன் கடுகதியில்<br />விரைகின்றாய் ?அன்று ஆடி அசைந்து<br />ஆறுதலாகச் சென்றவென் வாழ்வில் நீயுமேன்<br />ஆறுதலாகவாடிச் சென்றாய் ?காலமே!<br />கதி கூடின் காலந்தனின் கதி<br />குறையுமென்ற ஐன்ஸ்டைனின்<br />கூற்றும் பொய்யோ ?என்<br />கதி கூடின் கதி கூடும்<br /><br />காலமே சொல். 'அ'கதி'யிருப்பில்<br />கதியிருப்பதால் கதிகூடும் உன்னைப்<br />போல் நானுமொரு அ'கதி'யே! வெளிகளிற்குள்<br />திக்கிழந்ததொரு அகதி நான்.<br /><br />அதனாலென் கதியும் உன் கதியாச்சு.<br /><br />கதி கூடிப் போச்சு. பாவம். ஐன்ஸ்டன். அவன்<br />கதி இவ்விதமாச்சே! கதி கூடின் 'காலம் '<br />கதி குறையுமென்ற மூடனவன்<br />காலத்தின் கோலம் முற்றுமறியாத<br />யானை பார்த்த குருடன் '<br />என்கின்றாயா காலமே! காலமே!<br />இன்று நான் உந்தன்<br />இருப்பறிந்தேன். உந்தன் கதியறிந்தேன்.<br /><br />'கதி'யற்ற அ'கதி'க்குக் 'கதி'யற்ற<br />காலமும் துணையென்றுணர்ந்தேன்.<br />காலமே! போற்றி! போற்றி!<br /><br /><br />5. மின் பின்னியதொரு பின்னலா ?<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?<br />நான் பார்ப்பது, நீ இருப்பது<br />இதுவெல்லாம்<br />உண்மையென்று<br />எவ்விதம் நான் நம்புவது ?<br />நீயே சொல்.<br />நீ சொல்கின்றாய்<br />நீ இருக்கிறாயென்று.<br />உண்மையாக நீ இருக்கின்றாயென்று.<br />என்னை விட்டுத் தனியாக<br />எப்பொழுதுமே<br />இருப்பதாக நீ கூறுகின்றாய்.<br />எவ்விதம் நம்புவது.<br />ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு<br />அப்பாலிருந்து இருந்து வரும்<br />ஒளிக்கதிர்களுக்கும்<br />உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்<br />இடையிலென்ன வித்தியாசம் ?<br />நேரத்தினைத் தவிர.<br />உனக்கும்<br />எனக்குமிடையில்<br />எப்பொழுதுமே ஒரு தூரம்<br />இருக்கத் தானே<br />செய்கிறது. அது<br />எவ்வளவுதான் சிறியதாக<br />இருந்த போதிலும்.<br />எப்பொழுதுமே ஒரு நேரம்<br />இருக்கத் தானே செய்கிறது<br />கணத்தினொரு சிறுபகுதியாக<br />என்றாலும்.<br />நீ இருப்பதாக<br />நீ சொல்லுவதைக் கூட<br />நான் அறிவதற்கும் புரிவதற்கும்<br />எப்பொழுதுமே இங்கு<br />நேரமுண்டு. தூரமுமுண்டு கண்ணே!<br />காண்பதெதுவென்றாலும்<br />கண்ணே! அதனை<br />அப்பொழுதே காண்பதற்கு<br />வழியென்றுண்டா ?<br />காலத்தைக் கடந்தாலன்றி<br />ஞாலத்தில் அது<br />நம்மால முடியாதன்றோ ?<br />தூரமென்று ஒன்று உள்ளவரை<br />நேரமொன்று இங்கு<br />இருந்து தானே தீரும் ?<br />அது எவ்வளவுதான்<br />சிறியதாக இருந்த போதும்.<br />வெளிக்குள்<br />காலத்திற்குள்<br />கட்டுண்டதொரு இருப்பு<br />நம் இருப்பு கண்ணம்மா1<br />காலத்தினொரு கூறாய்<br />உன்னை நான் காண்பதெல்லாம் இங்கு<br />உன்னை நான் அறிவதெல்லாம்<br />மின்னலே!<br />மின் பின்னியதொரு<br />பின்னலா ? உன்னிருப்பும்<br />இங்கு<br />மின் பின்னியதொரு<br />பின்னலா ? என் கண்ணே!<br /><br /><br />6. தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை<br />உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!<br />எங்கு சென்றாய் ?<br />நினைவுக்கோளத்தினொரு சித்த<br />விளையாட்டாய் இருந்து நீ<br />சென்றதெல்லாம் அன்னையே! என்<br />எண்ணப் பறவைகளின் வெறும்<br />சிறகடிப்போ ? இருந்தவிருப்பை<br />இதுவரை நான் இவ்விதம்<br />உணர்ந்தேனா ? இருப்புணர்ந்து<br />புரிவதற்கு உன்னிருப்பேயொரு<br />காரணியாயமைந்த விந்தையென்னே!<br />உன்னிழல் தொடர்ந்து வரும்<br />குஞ்சுகளாய் வருமெமையரவணைத்தாய்.<br />காத்து நின்றாய். உணர்வெல்லாம்<br />காற்றாக நீ போனதினால் நனவாய்க்<br />கனவாய் வந்து வந்து மோதும்<br />செயலென்னே! என்றேனும்<br />உனைப்பற்றி நீ எண்ணியதுண்டா ? நாம்<br />நன்றாயிருந்தாலது போதுமென<br />உன்பணிசெய்து கிடந்தாயே ? தாயே!<br />உனை நாமெங்கினிக் காண்போமோ ?<br />இங்கு நீ இருந்ததெல்லாம், இங்கு நீ<br />நடந்ததெல்லாம், இங்கு நாம்<br />திரிந்ததெல்லாம் இருந்ததொரு<br />இருப்போ ? விரியும் வினாக்கள்<br />விடைநாடிச் சிறகடிக்கும் சிட்டுக்களாய்<br />சித்தவானினிலே.<br />விடை தெரியா விடைநாடும்<br />வினாக்கள் பல சுமந்து<br />ஒட்டகமாயிப் பாலையிலே<br />காலையும் மாலையுமாய்<br />பயணமின்னும் தொடருமோ ?<br />பயணத்தின் ஒளித்<br />தெறிப்பெல்லாம் கானற் காட்சியாய்<br />கடந்ததுவோ ? பாலையும் கானலோ ?<br />இப்பயணமும் கானலோ ?<br />இங்கு இப் பயணமும்<br />கானலோ ?<br />நெஞ்சிலுரமூட்டியெமை வளர்த்தாய் தாயே!<br />அஞ்சிடாதுளம் தந்தெமை வார்த்தாய்.<br />நீ இருந்ததெல்லாம் தாயே! வெறும் நிழலா ?<br />நீ இருந்ததெல்லாம் தாயே! வெறுங் கனவா ?<br />உன்னிருப்புமென்னிருப்பால் விளைந்ததொரு<br />பொய்யானதொரு மெய்யோ ? தாயே!<br />பொய்யானதொரு மெய்யோ ?<br />உனது சொல்லும் செயலும்<br />உணர்வும் பரிவும்<br />பரவிக்கிடக்கும் வெளிக்குள்<br />வெளியாய் பரவிக் கலந்தாய்.<br />மீண்டுமொருமுறை<br />'நான் ' 'ஏன் ' 'யார் ' என<br />ஆய்ந்திட வைத்துச் சென்றாய் ? தாயே!<br />ஆயினுன் உயிரின் உறவின்<br />உதிரத் துளியாய் இன்னுமிங்கே<br />இருக்குமென் இருப்பில் நான்<br />உனைக் கண்டு தெளிவேன். அதனால்<br />உனைப் புரிந்தேனிந்த<br />உலகை அறிந்தேன். ஏன்<br />எனையும் தெரிந்தேன். என்<br />இருப்பில் இருந்தஉன்<br />இருப்பின் பொருள் உணர்ந்தேன்.<br />தாயே! பொருள் கண்டேன்.<br /><br />- அன்னையார் மறைந்தபோது எழுதியது. -<br /><br /><br />7. எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு..<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />முகமில்லாத மனிதர்களிற்காகவும்<br />விழியில்லாத உருவங்களிற்காகவும்<br />கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்<br />அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்<br />அனுப்புகின்றேனிச் செய்திதனை.<br />உன்னை நான் பார்த்ததில்லை.<br />பார்க்கப் போவதுமில்லை.<br />உனக்கும் எனக்குமிடையிலோ<br />ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.<br />'காலத்தின் மாய' வேடங்கள்.<br />ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.<br />மனந்தளர்ந்திடவில்லை.<br />மனந்தளர்ந்திடவில்லை.<br />நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன்.<br />எங்கேனுமோரிடத்தில்<br />நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.<br />ஆம்!<br />வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.<br />காடுகளில் , குகைகளில் அல்லது<br />கூதற்குளிர்படர்வரைகளில்<br />உன்<br />காலத்தின் முதற்படியில்...<br />அல்லது<br />விண்வெளியில் கொக்கரித்து<br />வீங்கிக் கிடக்கும் மமதையிலே..<br />சிலவேளை<br />போர்களினாலுந்தன் பூதலந்தனைப்<br />பொசுக்கிச் சிதைத்தபடி<br />அறியாமையில்...<br />ஒருவேளை<br />அதியுயர் மனத்தன்மை பெற்றதொரு<br />அற்புதவுயிராய்...<br />ஆயினும் உன்னிடம் நான்<br />அறிய விரும்புவது ஒன்றினையே..<br />'புரியாத புதிர்தனைப் புரிந்தவனாய்<br />நீயிருப்பின்<br />பகர்ந்திடு.<br />காலத்தை நீ வென்றனையோ?<br />அவ்வாறெனின்<br />அதையெனக்குப் பகர்ந்திடு.<br />பின் நீயே<br />நம்மவரின் கடவுள்.<br />காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்<br />நம்மவர்.<br />இன்னுமொன்று கேட்பேன்.<br />இயலுமென்றா லியம்பிடு.<br />இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?<br />இதனை நீ அறிந்தனையோ?<br />உண்டெனில் அர்த்தம் தானென்ன?<br />சிலர்<br />அர்த்தமற்ற வாழ்வென்பர்.<br />யான்<br />அவ்வாறல்லன்.<br />அர்த்தம்தனை நம்புபவன். ஆயினும்<br />அதனையிதுவரை அறிந்திலேன்.<br />அதனை நீ அறிந்திடின்<br />அதனையிங்கு விளக்கிடு.<br />அது போதும்!<br />அது போதும்!<br /><br />8. அலைகளுக்கு மத்தியில்<br />அலையென அலைதல்!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />நீர்த்துப் போன அலைகளும்,<br />வீர்யம் நிறைந்தவையுமாக,<br />மிகச்சாதாரணமான ஒலி அலைகள் தொடக்கம்<br />மின்காந்த அலைகள், வானொலி அலைகளென<br />(காமா, அகச்சிவப்பு, புற ஊதா, X-கதிரெனப் பலப்பல)<br />அலைகளால் நிறைந்து கிடைக்கின்றதிந்தப்<br />பிரபஞ்சத்துப் பெருவாவி.<br /><br />பரந்து, பொசிந்து, வியாபித்துக் கிடக்குமிந்த<br />அலைகளில் இருக்கிறது இந்தப் பிரபஞ்சத்தின்<br />இது நாள் வரையிலான வரலாறு.<br /><br />வரலாறென்றால் எனக்கு மிகவும்<br />பிடித்தமானதொரு துறை.<br /><br />வரலாற்றினை ஆய்வு செய்தல்<br />எப்பொழுதும் சலிப்பினைத்<br />தருவதில்லை; மாறாக<br />வியப்பினைத்தான்.<br /><br />எங்கோவொரு தொலைவிலொரு<br />ஆத்மா (இருக்கும் பட்சத்தில்<br />அல்லது உண்மையாகவிருக்கும்<br />பட்சத்தில்)<br />இதனூடு காலத்தின் பரிணாம வளர்ச்சியினை<br />அல்லது இந்த அண்டவெளியின்<br />இதுவரையிலான அன்றாட நடப்புகளை,<br />போர்களை, உணர்ச்சி வெடிப்புகளை,<br />துக்கத்தினை, மகிழ்ச்சியினையெல்லாம்<br />அறிந்து கொள்ளும் பக்குவம்பெற்றிருக்கும்<br />பக்குவமடைந்திருக்கலாம்;<br /><br />அதன் மூலம்<br />வியப்பும், திகைப்பும் அடைந்து கொண்டிருக்கலாம்<br />இங்கு நான், இப்பொழுது, இக்கணத்தில்<br />அடைந்து கொண்டிருப்பதைப் போல.<br /><br />வியப்பாக இருக்கிறது அலைகளின்<br />ஆற்றலை எண்ணுகையில்.<br /><br />அலைகளின் வேகம் பற்றித்தான்<br />இதுவரையில் பிரமித்திருந்தேன். ஆனால்<br />இப்பொழுதுதான் அவற்றின்<br />மறுபக்கத்தின் மகி¨யெனை<br />பிரமிப்பிலாழ்த்திக் கொண்டிருக்கின்றது..<br /><br />இந்த வகையிலவை வெறும்<br />வரலாற்றுச் சுவடுகள் மட்டுமல்ல.<br /><br />காலத்திரையினில் விரிந்திடுமவற்றின்<br />விசும்புக் காட்சிகள் தொடர்ந்தும்<br />வியப்பினையே தருகின்றன.<br /><br />அலைகள்தானெத்தனை வியப்பானவை;<br />புதிரானவை.<br /><br />அலைகளுக்குள் ஆடுமென்னிருப்பும்<br />வியந்தபடி, அறிய முனைந்தபடி<br />ஆடிடும்<br />இன்னுமொரு அலையென<br />அலைந்தபடி.<br /><br /><br />9. விண்ணும் மண்ணும்!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />விரிந்து கிடக்குமிந்த விசும்பு<br />ஓர் உளவியல் நிபுணரைப் போல்<br />பலருக்கு அறிவுரை பகரும் அதிசயத்தினைப்<br />பார்த்து ஒவ்வொரு முறையும்<br />அதிசயித்துப் போகின்றேன்.<br /><br />'வானத்தைப் போல்.....'<br />அப்பொழுதெல்லாம் இவ்விதம் நான்<br />எனக்குள்ளேயே அடிக்கடி கூறிக்<br />கொள்வதில் ஒரு வித மகிழ்ச்சியில்<br />பூரித்துப் போகின்றேன்.<br /><br />இவ்விதமான வேளைகளில் ஒரு மாபெரும்<br />நூலகத்தினைப் போல் இந்த வானம்<br />எவ்வளவு விடயங்களைத் தன்னுள்<br />தாங்கி வைத்திருக்கின்றதென்பதை<br />உணர்ந்து கொள்கின்றேன்.<br />கற்பதற்கெவ்வளவு உள.<br />கற்பதற்கெவ்வளவு உள.<br />காலவெளி நூலகத்தில்தான்<br />கற்பதற்கெவ்வளவு உள.<br /><br />அளவுகளுக்குள்ளிருந்து<br />ஆகாயம் பார்க்கும் மண்பார்த்து<br />அப்பொழுதெல்லாம் இந்தவான்<br />தனக்குள் நகைத்துக் கொள்ளுமோ!<br /><br />அப்பொழுதெல்லாம் கீழ்க்கண்டவாறு<br />நினைத்துக் கொள்வேன்:<br />'படைகளுக்குள்ளோரிருப்பு! மேலும்<br />படையெடுப்பெதற்கு?'<br /><br />ஆகாயத்தின் இயல்புகளில் சில:<br />அகலம்! விரிவு!<br />அவை கூறும் பொருளெம்<br />அகம் உணர்தல் சாத்தியமா?<br />'அகத்தின் விரிவில், அகலத்தில்<br />மண்ணிலின்பம்! அட மானுடரே!'<br /><br />தன்னியல்பினுள் விடைபொத்தி வைத்திருக்கும்<br />விசும்பு மண்ணின் கேள்விகள்<br />அனைத்துக்கும்.<br />விண்ணிலிருந்து மண்<br />கற்பதற்கு நிறைய உள.<br />கற்பதற்கு நிறைய உள.<br /><br /><br />10. முல்லை = பாலை<br />- வ.ந.கிரிதரன் -<br /><br />எத்தனையோ நாட்களாகி விட்டன<br />நான் இந்த வனத்தில் சிக்கி.<br />யார் சொன்னது கனல்வது<br />பாலைகள் மட்டும் தானென்று ?<br />வந்து பாருங்கள் ஒருமுறை<br />இந்த முல்லையினுள்.<br />முல்லைகளே பாலைகளான<br />விந்தையினைப் புரிந்து கொள்வீர்கள்.<br />பாலைகளில் தான் கானல் நீர்<br />பாய்வதென்பதில்லை.<br />பாருங்கள் இந்தப் பெருவனத்தை.<br />இங்கும் தான் கானல்கள்<br />பாய்கின்றன.<br />கொதிக்கும் அனலிற்குள் சுமந்து செல்லும்<br />ஒட்டகங்கள் அங்கு மட்டும் தானா ?<br />வந்து பாருங்கள் இங்கே.<br />இரண்டு கால் ஒட்டகங்களை<br />இங்கே நீங்கள் தாராளமாகவே<br />காணலாம்.<br />இவற்றால்<br />இருப்பையே இரசிக்க முடியாத அளவிற்கு<br />முதுகில் சுமைகள்.<br />சுமந்து சுமந்து சுமந்து<br />சுமையே வாழ்வாகிப் போன<br />ஒட்டகங்கள் இவை.<br />சுழன்று வீசும் பெருங்காற்று<br />அங்கு மட்டும் தானென்பதில்லை.<br />இங்குமுண்டு.<br />ஓங்கிய விருட்சங்களிற்கிடையில்<br />ஒருமுறை நின்று பாருங்கள்<br />வீசுவது பெருங்காற்றா இல்லையா<br />என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.<br />வனமென்றால் அங்கொரு மரமிருக்கும்.<br />அதன் கீழ் இருக்க நிழலிருக்கும்.<br />அதன் மேல் புள்ளிருக்கும்.<br />இங்கு மரத்தின் நிழலிலும்<br />கனலிருக்கும். இரு காற் புள்ளால் நிறைந்திருக்கும்<br />மரங்களில் சிறகு விரிக்கும்<br />நிஜப் புள்ளெங்கே ?<br />விரிந்திருக்குமிந்த காங்க்ரீட் வனத்திலிருந்து<br />கொண்டு<br />வியந்து கொண்டிருக்கின்றேன் இன்னும்<br />முல்லைக்கும் பாலைக்கும் இடையிலுள்ள<br />வேறுபாடுகளையெண்ணி எண்ணி.<br /><br /><br />11. அனகொண்டா<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />அடாது மழை<br />விடாது பெய்து கொண்டிருந்த<br />நேற்றிரவு நானொரு கனவு<br />கண்டேன்.<br />வழக்கம் போல்<br />இம்முறையும் தனது அகன்ற<br />வாயினை விரித்தபடி<br />அதே அனகொண்டா.<br />விண்ணளாவ வியாபித்து<br />விரிந்திருக்கும் அதன் வாய்<br />எனக்கு அச்சத்தினை<br />மூட்டியது. அதன்<br />துரத்தலிலிருந்து<br />தப்புதலென்பது வழக்கம் போல்<br />இம்முறையும்<br />இயலாத செயல்களில் ஒன்றாகவே<br />ஆனது.<br />எனது கால்களும் கூட<br />நிலை பெயர்தலை<br />நினைக்க மறந்தன.<br />எதற்காக இந்த அனகொண்டா<br />என்னை எப்பொழுதுமே<br />துரத்துகிறது ?<br />இதனிடமிருந்து எனக்கு<br />மீட்சி<br />எப்பொழுது ?<br />அவ<br />தரிப்பிலிருந்து<br />தரிப்புவரை<br />அகன்ற தன் வாயினை<br />அகலத் திறந்தபடியிந்த<br />அனகொண்டா<br />இது போலெப்பொழுதுமே<br />வரத்தான் போகின்றது<br />போல் தெரிகிறது.<br />அகன்று பெரு வெளியெங்கும்<br />வியாபித்துக் கிடக்கும்<br />இதன் பார்வையிலிருந்து<br />ஒரு போதுமே தப்புதலென்பது<br />முடியாது போல் தான்<br />படுகிறது.<br />அனகொண்டாவுடன்<br />வாழப் பழகிக் கொள்வதைத் தவிர<br />வேறெதுவுமொரு வழி<br />இருப்பதாகத் தெரியவில்லை<br />கனவில் மட்டுமல்ல<br />நனவிலும்தான்.<br /><br /><br />12. ஜன்னலினூடு பார்த்தல்!<br /><br />வ.ந.கிரிதரன்<br /><br />இந்த ஜன்னல் எனக்கு எப்பொழுதுமே<br />ஒருவித வியப்பினை<br />ஆச்சர்யத்தினைத்<br />தந்து கொண்டு கொண்டிருக்கிறது.<br /><br />கண்ணாடி ஜன்னல்களையே<br />பார்த்துப் பழகிப் போயிருந்த<br />எனக்கு<br />காற்றாலுருவாகிய இந்த<br />ஜன்னல் வியப்பினைத் தந்ததில்<br />என்ன<br />ஆச்சர்யமிருக்க முடியும் ?<br /><br />கண்ணாடி ஜன்னல்களின்<br />பார்வைப்புலம்<br />போல்<br />இந்த ஜன்னலின்<br />பார்வைப் புலம்<br />குறுகியதல்ல என்பதுவும்<br />என்னை இந்த ஜன்னல்<br />கவர்ந்த காரணங்களில்<br />ஒன்று தான்..<br /><br />குருவிகளை, ஆடுகளை<br />மாடுகளை<br />மனிதர்களை<br />என் வீட்டு ஜன்னல்களால்<br />பார்த்து அலுத்துப் போயிருந்த<br />எனக்கு<br /><br />இந்த ஜன்னல் புதியதொரு<br />பார்வையினைத் தந்து<br />விட்டதெனலாம்.<br /><br />என் பார்வையின்<br />அதிகரித்த புலத்தினால்<br />இப்பொழுது<br />என்னால்<br />இந்தப் பிரபஞ்சத்தை<br />இதன் தோற்றத்தை<br />இதன் ஆழத்தை<br />இதன் மாயத்தை<br />எல்லாம் பார்த்துக் களிக்க<br />முடிகிறது.<br /><br />இப்பொழுது புரிகிறது<br />இந்த ஜன்னலின் சிறப்பு.<br />அன்றைய கிரேக்கர்கள்<br />தொடக்கம்<br />இன்றைய<br />நான் வரை<br />மனிதருக்கு<br />இந்த ஜன்னல் எவ்வளவு<br />உதவியாக<br />இருக்கிறது.<br /><br />இவ்வளவு உதவிகளை<br />வழங்கும்<br />இந்த ஜன்னலைப்<br />போற்றிப் பாதுகாக்க<br />வேண்டியது<br />நம் தலையாய கடமையல்லவா ?<br /><br />இந்த ஜன்னலை<br />இவ்வளவு தூரம்<br />அசுத்தமாக்கியது<br />அவ்வளவு நல்லதென்று<br />யார் சொன்னார்கள் ?<br />ஆனால் தொடர்ந்தும்<br />இதனை அசுத்தப்படுத்திக்<br />கொண்டிருக்கிறார்களே<br />இந்த மட மானிடர்.<br />பார்வையைக் குருடாக்கும்<br />செயலைச்<br />செய்பவரை எவ்விதம் கூறி<br />அழைக்கலாம் ?<br />பார்வைக் குருடர்களென்று<br />அழைக்கலாமோ ?<br /><br /><br />13. எல்லைகளைப் போடாதீர்!<br /><br />வ.ந.கிரிதரன்<br /><br />என் நிறத்தை<br />என் மொழியை<br />என் இயல்பை<br />என் பிறப்பை வைத்து<br />என் நாட்டை<br />வரையறுக்கும்<br />மூடர்களே!<br />உங்களுக்கு<br />ஒன்று சொல்வேன்.<br />கவனமாகக் கேளும்.<br />இந்தப் பிரபஞ்சத்தின்<br />ஒரு துளி நான்.<br />இந்தப் பிரபஞ்சத்தின்<br />ஒவ்வொரு துளியும்<br />எனக்குச் சொந்தம் தான்.<br />என் உடம்பில் விரையும்<br />அடிப்படைத் துகள்கள்<br />தான் இந்தப் பெரு வெளியிலும்<br />பிரிக்க முடியாதபடி<br />விரவிக் கிடக்கின்றன.<br />என்னால் முடிந்தால்<br />இதன் அகன்ற பரப்பில்<br />எந்த மூலையிலென்றாலும்<br />சென்று என் இருப்பை<br />உறுதி செய்ய<br />எனக்கு உரிமை உண்டு.<br />அதே உரிமை<br />உமக்கும் உண்டு<br />என்பதை நான்<br />பெருந் தன்மையுடன்<br />ஏற்றுக் கொள்கின்றேன்.<br />இதிலெனக்கு ஏதும்<br />தயக்கம் கிடையாது.<br />இந்தக் கிரகத்தின்<br />ஒவ்வொரு மூலையிலும்<br />எனக்குச் சொந்தம்<br />உரிமையுண்டு.<br />இதற்கு<br />எல்லைகளைப் போட்டு<br />என் உரிமையை<br />நீர் பறிப்பதை அனுமதிக்க<br />முடியாது.<br />வெளிக்குள் விரையுமிந்தக்<br />கோளின்<br />கதியையொரு கணம்<br />நினைவில் கொள்வீரென்றால்<br />எல்லைகளைப் போட்டுக்<br />கிணற்றுத் தவளையாய்<br />விளங்குமும் மடமை<br />உமக்கே<br />புரியும்.<br /><br /><br />14. பறவையும் பெரு முட்டையும்!<br /><br />வ.ந.கிரிதரன்<br /><br />பந்தைப் போல்<br />அழகாக<br />நீல வண்ணத்தில்<br />இருப்பதால்<br />இது விளையாடுவதற்குரியதொரு<br />பந்தாகுமா ஆகாது.<br />ஒருவகையில்<br />வெளியில் விரையும்<br />சில்லு.<br />இன்னொரு புறத்தில்<br />உயிர் தாங்கி நிற்கும்<br />பெரு முட்டை.<br />இந்த<br />முட்டையை<br />இட்ட<br />அந்தப் பறவையெது ?<br /><br /><br />15. விட்டு விடுதலையாக....<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />விட்டு விடுதலையாகி நிற்குமிந்தச்<br />சிட்டுக் குருவியின் வாழ்வு கண்டு<br />பொறாமைப்படுகின்றாய்!<br />அதுவாகவேயாகிக் கட்டுக்களை மீறி<br />எட்டுத் திசைகளும்<br />பறத்தல் பற்றிய கனவுகளில்<br />ஆழ்ந்து விடுகின்றாய்! ஆயின்<br />பொழுதும், கணமும்,<br />துரத்தும் பெரும் பட்சிகள் தவிர்த்துப்<br />போராடுதலை, தப்பிப் பிழைத்தலையே<br />வாழ்வெனக் கொண்டவதனிருப்புப்பற்றி<br />எப்பொழுதுதாவது நீ<br />எண்ணியதுண்டா ?<br />விட்டு விடுதலையாகச் சிறகடிக்குமிந்த<br />சிட்டுக் குருவியெனச் சிறகடிக்க<br />நீ சிந்தித்ததுண்டா ?<br /><br /><br /><br />16. காலத்தின் சார்பு நிலை!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />எனது பால்யகாலத்தில் எவ்வளவு<br />ஆறுதலாக, மெதுவாகக் காலம்<br />சென்று கொண்டிருந்தது.<br />ஒவ்வொரு கணத்தையும் மிகவும்<br />ஆறுதலாக உளவாங்கி, உணர்ந்து, இரசித்து<br />பொழுதுகளை எவ்வளவு<br />இனிமையாகக் கழிக்க முடிந்தது.<br />அன்னையப்பர் மற்றும் பிற<br />உறவுகளுடன் கழிந்ததந்த<br />வாழ்வினொவ்வொரு பக்கமும்<br />நேற்றுதான் படித்ததொரு புத்தகமென<br />இன்னுமென்னகத்தில்<br />இருக்கும் மாயமென்ன?<br />ஆறுதலாக , மிக மிக மெதுவாக<br />விரைந்த காலமே! உழைப்பேயிருப்பென<br />ஆகிவிட்ட இன்று மட்டுமேன்<br />ஒளிவேகத்தில் விரைகின்றாய்?<br />ஐன்ஸ்டைனின் கூற்றினைத் திருப்திப்படுத்துவதில்<br />உனக்கென்ன அவ்வளவு மோகம், வேகம்?<br /><br /><br />17. தயங்குதலுண்டோ இனி!<br /><br />வ.ந.கிரிதரன்<br /><br />அன்றிலிருந்து இன்றுவரையில் ,<br />இதுவரையில்,நான்<br />எடுத்த முயற்சிகளில்<br />எத்தனைமுறை<br />இடர்களிடறியிருக்குமென<br />நினைக்கிறீர்கள்? - சாணேற<br />முழம் சறுக்குதலென்பது<br />முற்றுப் பெறாததொரு தொடராகத்<br />தொடரும் மர்மம் மட்டும்<br />கண்டு பிடித்து விடின்<br />முடிவில் இனபம் துய்த்தலென்பது<br />அவ்வளவொன்றும்<br />சிரமமானதல்லதான்.<br /><br />ஒவ்வொருமுறையும் புதியதொரு<br />தோல்விக்கான வழியினைக்<br />கண்டு பிடிப்பதில்<br />நான் தோமஸ் அல்வா எடிசனுக்கு<br />எவ்விதத்திலும் குறைந்தவனல்லன்..<br />சத்தமிட்டுச் சொல்லுவேனிதை<br />எத்தனை முறையென்றாலும்!<br />எததனை முறையென்றாலும்!<br /><br />ஒருமுறை ஈரான் தேசத்துக் கைரேகைச்<br />சாத்திரக்காரி ஒருத்தி கூறினாள்:<br />'உன்னைச் சுற்றியும் உள்ள கெட்ட<br />ஆவிகளை ஓட்டிவிட்டால் புத்திரா!<br />அனைத்தும் சுகமே!'<br />ஆளை விடு அம்மாவென்று<br />ஓடியே வந்து விட்டேன்.<br /><br />இருந்தாலும் வாசித்தல் எனக்கு<br />இந்தவிடயத்தில் எப்பொழுதுமே<br />உதவிக்கு வரத் தயங்குவதேயில்லை.<br />அந்தத் துணைமட்டுமில்லாவிடின்<br />என்னவாகியிருக்குமென எண்ணிப்<br />பார்ப்பதில்லை நான்.<br />புரிதலைத் தருபவை அதுவே!<br />விளைவாய் விரிவதெந்தனுள<br />வெளியே!<br />இப்புரிதலுமதன் விளைவாய்<br />விரிதலும் போதுமெனக்கு!<br />எத்தனை முழங்கள் சறுக்கினுமென்ன<br />சாணேறத் தயங்குதலுண்டோ<br />இனி!<br /><br /><br />18. இயற்கையைச் சுகித்தல்<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />அந்தரத்திலொரு<br />தோடஞ்சுளையாகத்<br />தொங்குமிந்த<br />பிறை நிலவின் தனிமை<br />கண்டு நெஞ்சம்<br />கலங்கும். ஆனாலும்<br />ஒரு திருப்தி.<br />இந்தப் பிறைநிலவும்<br />இன்னொருநாளில்<br />முழுநிலவாகி<br />முறுவல் பூத்திடுமேயென்ற<br />நினைவில் தான்.<br /><br />அண்டம் கலங்க<br />இடியிடித்து<br />மின்னிப் பெய்யுமிந்த<br />மழை ஒரு கணம்<br />அகத்தே அச்சம்தனைப்<br />பரப்பும்.<br />இருந்துமொரு<br />நிறைவு.<br />இம்மழையை நம்பி<br />நெல்லும் வேறு பயிரும்<br />இருக்குமென்ற<br />நினைவால் தான்.<br /><br />கவலைகளற்றுக்<br />கட்டுக்களற்றுக்<br />கடுகி மறையுமிந்தச்<br />சிட்டுக்களைத்<br />துரத்தும் கழுகுகளை<br />நினைத்தால்<br />துயரம்தான்.பெருமிதப்<br />பறவை கூடவே சிறகடித்துப்<br />பறக்கும். சுதந்திரக்<br />காற்றினைச் சுவாசிக்கும்<br />இவற்றின்<br />இருப்பையெண்ணி.<br /><br /><br />19. வெளிதாண்டிய வெளிதாண்டாத் தவளைகள்.<br /><br />வ.ந.கிரிதரன்<br /><br />எனக்குச் சில சமயம்<br />ஆச்சர்யமாகத்<br />தானிருக்கிறது<br />என்னை நினைத்தால்.<br />ஏன்<br />நம்மை நினைத்தால்.<br />ஏன் இந்த உலகை<br />இந்த வெளியை<br />இந்த விரிவை<br />இந்த அறிவை<br />இன்னும் என்னால் நினைக்க<br />முடிந்த, அறிய முடிந்த,<br />உணர முடிந்த, மகிழ முடிந்த<br />எதை நினைத்தாலும்<br /><br />எனக்கு ஆச்சரியமாகத் தான்<br />இருக்கிறது.<br /><br />இந்த<br />வயது மாற மனமும்<br />மாறுமோ ? மனதில்<br />முகிழ்க்கும் நினைவும்<br />மாறுமோ ? அறிவும்<br />மாறுமோ ?<br />எனக்கு ஆச்சாியமாகத்<br />தானிருக்கிறது.<br />பொருளே சக்தி.<br />சக்தியே பொருள்.<br />பொருளின்றி சக்தியில்லை.<br />சக்தியின்றிப் பொருளில்லை.<br />இருப்பின்<br />சக்தியை ஆக்கிய பொருளெது ?<br />பொருள் படைத்த சக்தியெது ?<br />மூன்றிற்குள் முடங்கிக்<br />கிடப்பதினால் மூன்றை<br />ஏன் இரண்டை ஏன் ஒன்றினைக் கூட<br />உணராலாம். நான்கை ஐந்தை<br />ஆறினை... அறிவதெப்படி ?<br />இருந்தால்<br />பொருளில்லாத சக்தியை<br />சக்தியில்லாத பொருளை<br />அறிவதில் புரிவதில்<br />சிரமமற்றுச் சிறகடித்திடல்<br />சாத்தியமோ ?<br />பரிமாணம் மீறாத<br />தவளை நான் ஏன்<br />நீயுந்தான். மீறாதவரை<br />கிணறு தாண்டாத<br />தவளைதான். கிணற்றுத்<br />தவளைதான். நான்<br />கிணற்றுத் தவளைதான்.<br />நாம் கிணற்றுத் தவளைதான்.<br />மாாிமழை நிறைக்கும்<br />கிணறு நீங்கி<br />வெளி காணும் தவளைகள்.ஆயின்<br />வெளி தாண்டாத் தவளைகளே!<br />வெளி பார்த்து வெளி தாண்டாத்<br />தவளைகளாய் வளையவருவோம்.<br />வயிறு வீங்கி வெடிக்கும் வரை<br />கத்திக் கத்தி வெடித்துச்<br />சிதறி ஓய்வோம்.<br /><br /><br />20. பெய்பேய் மழை!<br /><br />வ.ந.கிரிதரன் -<br /><br />மழையே! மழையே! வா! வா! வா!<br />மழையே! மழையே! வா! வா! வா!<br />மாமழையே! மழையே! வா! வா! வா!<br />மாமழையே! மழையே1 வா! வா! வா!<br /><br />இரவிரவாய் பெய்யுமேயிந்த<br />அடை மழை.அடம் பிடித்து<br />அடாது பெய்யும் பேய்<br />மழையாய்! பெருமழையாய்.<br />விண்ணிடித்துப் படம்பிடித்த<br />பேரரவாய் காரிருளில்<br />மின்னல். புந்தி<br />நடுங்கிக் கிடந்தும், புரண்டும்<br />கண்ணயர விடாது<br />கொட்டும் வானம் இரவின்<br />மோனம் சிதைத்தபடி.<br />என்ன மழையிது ? என்ன மழை ?<br />இயற்கைப் பெண்ணே! உன்<br />இதயம் குமுறியதேனோ ?<br />மழையென்றால் நினைவில்<br />மழைக்காளான், வயற்புறத்<br />தவளை, வாற்பேத்தை, விரால்<br />சிறகொடுங்கிய கிளிப்புள்,<br />இருண்டதோர் மோனத்தில்<br />மருண்டிருக்கும் மழைவான்,.<br />வந்து வந்து போகும்.<br />வந்து வந்து போகும்.<br />மின்னல், இடி, கோடிழுக்கும்<br />மழைத் தாரை, பெருவெள்ளம்<br />இவையெல்லாம் கதைபல<br />கதைபல கூறும்.கூறும்.கூறும்.<br />காகிதக் கப்பல், 'மழை வா ',<br />'வெயில் போ '<br />படம் விரிக்கும் நினைவுத்<br />திரை.<br />விரிந்ிருக்கும் பெருவான் பார்க்க<br />விரிவெளியில் கிடப்பதென்<br />பெருவிருப்பு. அது போல்<br />படுத்திருந்து பெய்பேய்மழை<br />பார்த்துருளல்<br />இன்னுமோர் இலயிப்பு.<br />ஆண்டு போயென்ன ?<br />அடைமழையில் இன்னும்<br />அடங்கிவிடும் ஆழ்மனது.<br />நடுப்பகல் மழை நள்யாம<br />மழை கண்டும் ஆடாத<br />மனமும் உண்டோ!<br />கவிவடிப்போர் கற்பனைக்குப்<br />புயியில்பஞ்சம்வைக்காப்<br />பெய்யுமிந்தப் பெருமழை.<br />அன்னைபூமி அவலம் கண்டு<br />அகல்வான் உதிர்க்கும் கண்ணீர்.<br />அகதி அலைச்சல் கண்டு மேகம்<br />வடிக்கும் கண்ணீர்.<br />மழையில் புனலாடுதல்<br />பேரின்பம் ஒரு போதில்.<br />மாசற்றபுறம் நீங்கி<br />மாசுற்று வரும் நீரில்<br />நிலப்பெண்ணும்<br />நிலைதளர்வாள்.<br />பூவுலகின் தோழர்களோ<br />நீரில், நிலத்தில்,வெளியில்<br />நீரரித்து நீலம் பாரிப்பர்.<br />இயந்திரப் பேயரக்கர்<br />புகை கக்கும் நகரத்துப்<br />பெரும்பரப்போ<br />கனலடங்கிக்கண்சாய<br />பெய்யும் மழையோ<br />பெய்யும்! பெய்யும்! பெய்யும்!<br />பெருமழையாய்ப் பெய்யும்.<br />பேய்மழையாய்ப் பெய்யும்.<br /><br />மழையே! மழையே! போ! போ! போ!<br />மழையே! மழையே! போ! போ! போ!<br />மாமழையே! மழையே! போ! போ! போ!<br />மாமழையே! ம்ழையே! போ! போ! போ!<br /><br /><br />21. யாரிந்த தீவிரவாதி ?<br /><br />வ.ந.கிரிதரன்<br /><br />வானணை தகர்த்த இந்தத்<br />தீவிரவாதி யார் ?<br />நீரைக் கொட்டி,<br />நெருப்பைக் கக்கி<br />நிலத்தை நடுக்கி<br />நீ<br />புரியும் படுகொலைகள்<br />தானெத்தனை ?<br />மறைந்திருந்து<br />வல்லமையுடன்<br />தாக்குவதில்<br />உனக்கு நிகர்<br />நீயேதான்.<br />குழந்தைகள், பெண்கள்,<br />முதியவர், இளையவர்<br />பறவைகள், மிருகங்கள்<br />என<br />நீ<br />பாரபட்சம்<br />பார்ப்பதில்லை.<br />உன்னைவிட வேறொரு<br />பயங்கரவாதி இப்<br />புவியிலுண்டோ ?<br />தீவிரவாதிகளுக்கெதிரான<br />போரில்<br />கவனம் உன்னையும்<br />சேர்த்துக் கொள்ளப் போகின்றார்கள்.<br />ஆனால் ஒன்று மட்டும்<br />நிச்சயம். இந்த<br />யுத்தத்தில் மட்டும் இறுதி வெற்றி<br />உனக்குத் தான்.<br /><br /><br />22. விளங்காத விந்தை. வியப்பு கொள்ளும் நம் சிந்தை.<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />விரிந்திருக்குமிந்த வான்<br />என் நெஞ்சினில்<br />இனம்புரியாததொரு களிப்பினை<br />விடைதெரியா பல்<br />வினாக்களை எழுப்பிட<br />எப்பொழுதுமே தவறியதில்லை.<br />சூழல் தெரியா<br />மலை முகட்டில் அல்லதோர்<br />குன்றில்<br />அல்லது உயர்வானதொரு புல்வெளியில்<br />அண்ணாந்து படுத்திருந்து<br />வான் பார்த்தல்<br />எப்பொழுதுமே மகிழ்ச்சிக்குரியதொரு<br />விடயமாகத் தானிருந்து வருகிறது.<br />இந்த வெளி<br />தத்துவஞானிகள் எப்பொழுதும்<br />தத்துவங்களைத்<br />தர்க்கிப்பதற்குப் பெரிதும்<br />உதவியாக இருந்திருக்கின்றது.<br />அன்றைய அறிவியல் அறிஞர்கள்<br />தொடக்கம்<br />இன்றைய நியூட்டன், ஐன்ஸ்டைன் என்று<br />சிந்தனையைத் தூண்டியதில்<br />அளப்பரியதொரு பங்கு இதற்குண்டு.<br />விரிந்திருக்கும் சடவெளி<br />அதில்<br />உயிர்த்துடிப்புடன் வளையவரும்<br />பொருளின் பின்னணியில்<br />பெரும் அர்த்தத்துடன் விரிந்து<br />கிடக்கும்.<br />மிகப் பெரியதொரு<br />'பிர(ம்)மா 'ண்டமானதொரு<br />மேடையின் பின்னணியாய்.<br />இதன் பின்னணியில்<br />உயிர்களின் நடனம் நடிப்பு<br />எல்லாமே வெகு நேர்த்தியாக<br />இயல்பாக, அற்புதமாக<br />இருக்கிறது.<br />ஒருவரை ஒருவர்<br />கொன்று தம் இருப்பை<br />உறுதி செய்வதில்<br />எல்லோருமே<br />எல்லாமே<br />உண(ர்)வாக இருக்கின்றார்கள்.<br />இருக்கின்றன.<br />சின்னஞ்சிறிய அழகானதொரு குருவி<br />தன் குஞ்சிற்கு<br />உணவாக ஊர்ந்து செல்லுமொரு<br />உயிரினைப் பிடித்து வருகிறது<br />எந்தவித மன உறுத்தலுமில்லாமல்.<br />ஊர்ந்திடும் உயிருக்கு உள்ள<br />இருக்கக் கூடிய பந்த<br />பாசங்களைப் பற்றிய<br />எந்தவிதத் துயரங்களோ<br />சோகங்களோ<br />கழிவிரக்கமோ<br />இல்லாமல்.<br />தனியாக மானொன்றினை அல்லது<br />வரிக்குதிரையினைத் துரத்தும்<br />புலியோ அல்லது சிங்கமோ<br />அந்த மானின், அந்தக் குதிரையின்<br />அவற்றின் வருகையை<br />ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்<br />அவற்றின் குட்டிகள் அல்லது அவற்றின்<br />காதலர்கள் இருக்கக் கூடிய<br />சாத்தியங்களைப் பற்றியெல்லாம்<br />சிந்திக்காமல் துரத்துகின்றன<br />புசிப்பதை மட்டும்<br />நினைவில் வைத்துப்<br />பெரும் பசியுடன்.<br />ஆனால் முதலை, காட்டு நாய்<br />போன்ற சில<br />கொல்லுவதில் கூடக் கொடூரமானவை.<br />சிறுகச் சிறுகக் குழுவெனக்<br />கூடி கொல்லும் இவற்றின் செயல்<br />கொல்லப் படுவதன்<br />உணர்வுகளைக் கொஞ்சமேனும்<br />கவனத்திலெடுக்காமல்<br />புரியப் படுகின்றது.<br />தனது குழுவில் ராஜாவாக ஆதிக்கம்<br />செலுத்திக் கொண்டிருந்த<br />வரிக் குதிரையொன்றை<br />அல்லது<br />காட்டெருமையினை<br />அல்லது<br />மானொன்றினை இவை<br />கீழ்த்தரமாகக் கொல்லுகின்றன<br />எந்தவித இரக்கமும்<br />இல்லாமல்.<br />உயிர் அளவில் சிறிதாயினும்<br />அல்லது<br />உருவில் பெரிதாயினும்<br />டிஎன்ஏயின்<br />சில வித்தியாசங்கள்<br />போதுமானவையாக<br />இருக்கின்றன<br />அடிப்படை இயல்பினை<br />மாற்றுவதற்கு.<br />உண(ர்)வு<br />உயிர்களின் இருப்பிற்கு<br />உயிராகவே<br />இருக்கின்றது.<br />விரிந்திருக்கும் வெளிப்<br />படுதாவில்<br />வரைந்திருக்கும் ஒவியமாய்<br />சுடர்கள், உயிர்கள்<br />அனைத்துமே எழில் கொண்டு<br />ஒளிர்ந்து. கருவாக,<br />உருவாக, உதித்து<br />உலருமொரு இருப்பு<br />இங்கிருப்பதன் அடிப்படை<br />இரகசியமென்ன ?<br />உயிரற்ற கதிர்<br />அதன் ஒளி, அதன் துகள்<br />உயிரின் அடிப்படையாய்<br />உள்ளதொரு விந்தை.<br />விளங்காத விந்தை. வியப்பு<br />கொள்ளும் நம் சிந்தை.<br /><br /><br />23. ஜன்னலினூடு பார்த்தல்!<br /><br />வ.ந.கிரிதரன்<br /><br />இந்த ஜன்னல் எனக்கு எப்பொழுதுமே<br />ஒருவித வியப்பினை<br />ஆச்சர்யத்தினைத்<br />தந்து கொண்டு கொண்டிருக்கிறது.<br /><br />கண்ணாடி ஜன்னல்களையே<br />பார்த்துப் பழகிப் போயிருந்த<br />எனக்கு<br />காற்றாலுருவாகிய இந்த<br />ஜன்னல் வியப்பினைத் தந்ததில்<br />என்ன<br />ஆச்சர்யமிருக்க முடியும் ?<br /><br />கண்ணாடி ஜன்னல்களின்<br />பார்வைப்புலம்<br />போல்<br />இந்த ஜன்னலின்<br />பார்வைப் புலம்<br />குறுகியதல்ல என்பதுவும்<br />என்னை இந்த ஜன்னல்<br />கவர்ந்த காரணங்களில்<br />ஒன்று தான்..<br /><br />குருவிகளை, ஆடுகளை<br />மாடுகளை<br />மனிதர்களை<br />என் வீட்டு ஜன்னல்களால்<br />பார்த்து அலுத்துப் போயிருந்த<br />எனக்கு<br />இந்த ஜன்னல் புதியதொரு<br />பார்வையினைத் தந்து<br />விட்டதெனலாம்.<br /><br />என் பார்வையின்<br />அதிகரித்த புலத்தினால்<br />இப்பொழுது<br />என்னால்<br />இந்தப் பிரபஞ்சத்தை<br />இதன் தோற்றத்தை<br />இதன் ஆழத்தை<br />இதன் மாயத்தை<br />எல்லாம் பார்த்துக் களிக்க<br />முடிகிறது.<br /><br />இப்பொழுது புரிகிறது<br />இந்த ஜன்னலின் சிறப்பு.<br />அன்றைய கிரேக்கர்கள்<br />தொடக்கம்<br />இன்றைய<br />நான் வரை<br />மனிதருக்கு<br />இந்த ஜன்னல் எவ்வளவு<br />உதவியாக<br />இருக்கிறது.<br /><br />இவ்வளவு உதவிகளை<br />வழங்கும்<br />இந்த ஜன்னலைப்<br />போற்றிப் பாதுகாக்க<br />வேண்டியது<br />நம் தலையாய கடமையல்லவா ?<br /><br />இந்த ஜன்னலை<br />இவ்வளவு தூரம்<br />அசுத்தமாக்கியது<br />அவ்வளவு நல்லதென்று<br />யார் சொன்னார்கள் ?<br />ஆனால் தொடர்ந்தும்<br />இதனை அசுத்தப்படுத்திக்<br />கொண்டிருக்கிறார்களே<br />இந்த மட மானிடர்.<br />பார்வையைக் குருடாக்கும்<br />செயலைச்<br />செய்பவரை எவ்விதம் கூறி<br />அழைக்கலாம் ?<br />பார்வைக் குருடர்களென்று<br />அழைக்கலாமோ ?<br /><br /><br />24. இருப்பொன்று போதாது<br />இருத்தல் பற்றியெண்ணி<br />இருத்தற்கு!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br /><br />படைப்பின் நேர்த்தியெனைப்<br />பிரமிக்க வைத்திடுதல்போல்<br />பாரிலெதுவுமில.<br /><br />வீழும் மலர், ஒளிரும் சுடர்,<br />துணையில் களிப்புறும் இணை,<br />நிலவுமனைத்திலுமிங்கு<br />நிலவும் நேர்த்தியென்<br />நினைவைக் கட்டியிழுத்தல்போல்<br />நினைவெதுவுமில.<br /><br />முறையெத்தனையெனினும்<br />மறையாத நினைவுப் புயல்!<br /><br />இருப்பு, இன்னும் புதிர் மிகுந்து<br />இருந்திடுமோ? இல்லை<br />இதுவும் 'நிச்சயமற்றதொரு<br />தற்செயலின்'<br />சாத்தியம் தானோ?<br /><br />இருப்பொன்று போதாது<br />இருத்தல் பற்றியெண்ணி<br />இருத்தற்கு!<br /><br /><br />25. இருப்பதிகாரம்<br />- வ.ந.கிரிதரன் -<br /><br />நிலை மண்டில ஆசிரியப்பா!<br /><br />வானினை நிலவினை வரையினை மடுவினை<br />தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்<br />அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை<br />மீறிட முடியா சிந்தையை மேலும்<br />தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்<br />மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்<br />குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்<br />ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?<br />என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?<br />விரியு மண்ட மடக்கு மண்டம்<br />அதனை யடக்க மற்றோ ரண்டம்.<br />வெறுமை வெளியில் பொருளின் நடனம்.<br />இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு.<br />இதுவும் நிசமா நிழலாக் கனவா?<br />நனவும் கனவா? கனவும் நனவா?<br />விடைகள் நாடித் தொடரும் வினாக்கள்.<br />விடைக ளற்ற வினாக்கள்! வினாக்கள்!<br />இருப்பு அறிந்திட தேடித் தொடரும்<br />இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே!<br />இதனை அறிதல் புரித லெவ்விதம்?<br />நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக்<br />கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை<br />வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை<br />அறித லெவ்விதம்? புரித லெவ்விதம்?<br />கலவிக் குலாவி யிருந்திடு மவைகளாய்<br />இருந்தே யிருப்பின் இவ்வித இடரெலாம்<br />இல்லா தொழிந்து இருந்தன்றோ இருக்கும்?<br />செயற்கை சமைத்திட சிந்தை தந்த<br />செயலினால் தானோ செகத்தினில் துயரோ?<br />அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க<br />என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட<br />பண்பினால் தானோ பாரினில் பகைமை?<br />தாமரை இலைமேல் தண்ணீர் போன்று<br />தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு<br />நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து<br />விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை<br />வந்திடு மென்றால் அதுவே போதும்.<br /><br />வேறு....<br /><br />அந்திக் கதிரின் சிவப்பில் நாளும்<br />சிந்தை யிழந்து இருத்த லின்பம்!<br />இரவில் வானில் நீந்தும் மீன்கள்<br />வரவி லிதயம் மூழ்கிக் களிக்கும்.<br />விசும்பும் மதியும் கதிரும் காற்றும்<br />புள்ளும் மற்று மிருக்கு மனைத்தும்<br />படைப்பின் திறனை பறையே சாற்றும்.<br />இன்ப வெள்ளம் மடையை யுடைக்கும்.<br />கூகைக ளுலாவிடும் நள்யாமப் பொழுதும்<br />அகத்தினி லுவப்பினை யேற்றி வைத்திடும்.<br /><br />உறவினை உதறி யுண்மை அறிதல்<br />துறவென ஆயிடு மதனா லதனை<br />ஏற்றிடே னானால் உள்ளி ருந்தே<br />உண்மை காணலே சிறந்ததோ தறியேன்.<br />எவ்வித மிருப்பின் உண்மை அறிவேன்.<br />உளையு முளத்தின் உளைவை எவ்விதம்<br />தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?<br /><br /><br />26. இருப்புணர்ந்து இளகும் நெஞ்சு!!<br /><br />வ.ந.கிரிதரன்<br /><br />உன்னைப் பார்க்கும் போதெல்லாம்<br />உனக்குள் எனக்குள்<br />பரவிக் கிடக்கும் வெறுமை<br />கண்டு மனம் அதிரும்.<br />உள்ளூம் புறமும் வெளியாய்ப்<br />பரவிக்கிடக்குமிந்தப் பெருவெளி.<br />சோகமேன் சகியே!<br />உனைப் பார்த்து மட்டுமல்ல<br />உன்னருகே கிளைதாவுமந்த<br />அணில், அதனருகே தனித்துணவு<br />தேடுமந்தச் சிட்டு,<br />அவசர அவசரமாய் வீடு<br />விரையுமந்த அந்த அராபிய மனிதன்<br />ஆபிரிக்க அணங்கு<br />ஆலயம் விட்டு ஆடிவரும்<br />அந்த முதிய சிறிலங்காத் தமிழன்<br />அந்த இந்திய மனிதன்<br />அந்த எருது<br />அந்த அமெரிக்கன்<br />அந்த ஆங்கிலேயன்<br />இவ்விதம் யாரைப் பார்த்தாலும்<br />எதனைப் பார்த்தாலும்<br />எனக்குத் தெரிவதெல்லாம்<br />வெளியும்,கதியும்,முகிலும்,<br />சுடரும்,சக்தியும் தானே.<br />வெறுமைக்குள் வெறுமையாய்<br />அரங்கேறும் நாடகங்கள்.<br />சிறுதுளியாய்க் கணநேர இருப்பு.<br />இருப்பினை இருத்திவிடுமொரு<br />பொறுப்பு மட்டுமில்லையென்றால்...<br />அதற்குள் தானெத்தனை ஆட்டங்கள்!<br />அடிப்படையில் அனைத்துமொன்றே.<br />இது கூடப்<br />புரியாத பொழுதெனவே<br />போகுமிந்த இருப்பினிலே<br />இருப்புணர்ந்து இளகும் என் நெஞ்சே!.<br /><br /><br />27. விசும்பும், தொலைநோக்குதலும்!<br /><br />வ.ந.கிரிதரன்<br /><br />தொலைநோக்கிகள் தொலைவுகளை<br />நோக்க மட்டும்தானென்று யார் சொன்னது?<br />இருப்பியங்குதற்கும் இங்கவை<br />இருக்கும் அதிசயந்தானென்ன!<br /><br />எனக்கு நினைவு தெரிந்த<br />நாளிலிருந்து<br />-முற்றத்தில் அப்பாவின் 'சாற'த்தொட்டிலில்<br />மல்லாந்திருந்து இரசித்த அன்றிலிருந்து -<br />நானும்<br />தொலைவுகளை இதனூடு<br />மேய்ந்துகொண்டுதான் வருகின்றேன்<br />ஒருவித அறிவுப் பசிகொண்டு.<br />அடங்கவில்லை அந்தப் பசி<br />இன்றுவரை.<br /><br />இருந்தும் பால்வீதிகளில் பயணித்தலிலுள்ள<br />ஆர்வம் மட்டும் அணைந்திடவில்லை.<br />ஒவ்வொருமுறையும் வியப்புடனும், ஆர்வத்துடனும்,<br />மர்மங்களை அவிழ்த்துவிட முடியாதாவென்றொரு<br />நப்பாசையுடனும் நானும்<br />முயன்றுகொண்டுதானிருக்கிறேன்; தொலை நோக்கிக்<br />கொண்டுதானிருக்கிறேன்.<br />ஓடு 'சடசட'க்கக் கொட்டும் மழைபோல்<br />என் நெஞ்சு கவர்ந்த மேலுமொரு<br />விடயமிது.<br />எத்தனைமுறை பெய்தாலும் அலுக்காத மழைபோல்<br />எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவில்லை<br />எனக்கு.<br /><br />நீண்டு,கவிந்த இரவு.<br />வியாபித்திருக்கும் விரிவிசும்பு.<br />இயன்றபோதெல்லாம்<br />நோக்கிக் கொண்டிதானிருக்கின்றேன்.<br />இருக்கும்வரை நோக்கிக் கொண்டுதானிருப்பேன்.<br />தொலைநோக்கிகள் தொலைவுகளை<br />நோக்க மட்டும்தானென்று யார் சொன்னது?<br />இருப்பியங்குதற்கும் இங்கவை<br />இருக்கும் அதிசயந்தானென்ன!<br /><br /><br />28. தொராண்டோவின் இரவுப் பொழுதொன்றில்....<br /><br />1.<br />கவிந்து கிடக்குமிரவின் அமைதியில்<br />இளவேனிற்பொழுதொன்றின்<br />துணையுடன் கழியுமொரு பொழுதொன்றில்<br />'டொராண்டோ'ப் பெருநகரின் நடைபாதைகளில்<br />'இடவெளி' வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்<br />வீடற்றவாசிகள் சிலர்.<br />விரிந்து கிடக்கிறது வெளி.<br />எதற்கிந்த முடக்கம்?<br />தாராளமாகவே உங்கள் கால்களைக் கைகளை நீட்டி,<br />நிமிர்ந்து, ஆசுவாசமாகத் துயில்வதற்குமா<br />தயக்கம் வேண்டிக் கிடக்கிறது.<br /><br />2.<br />பகலவனாட்சியில்<br />பல்வகை வாகனங்கள்!<br />பல்லின மானிடர்கள்!<br />விளங்குமிப் பெருநகரின்<br />குணம்<br />இரவுகளில்தான்<br />எவ்விதமெல்லாம்<br />மாறிவிடுகிறது!<br /><br />மாடப்புறாக்களே!<br />நள்ளிரவில் துஞ்சுதல் தவிர்த்து<br />இன்னும் இரைதேடுவீர்!<br />உமதியல்புகளை<br />எவ்விதம் மாற்றிக் கொண்டீர்?<br />நகரத்துப் புறாக்களா?<br />இரவுப் புறாக்களா?<br />சூழல் மாறிடினும்<br />கலங்கிடாப் பட்சிகளே!<br />உம் வல்லமைகண்டு<br />பிரமித்துத்தான் போகின்றதென்<br />மனம்.<br /><br />3.<br />நகரில் துஞ்சாமலிருப்பவை<br />இவை மட்டும்தானென்பதில்லை!<br />துஞ்சாமலிருப்பவர்களும்<br />நிறைந்துதான் இருக்கிறார்கள்.<br />ஆலைத் தொழிலாளர், ஓரின,<br />பல்லினப் புணர்வுகளுக்காய்<br />வலைவிரிக்கும்<br />வனிதையர், வாலிபர்.<br />'மருந்து'விற்கும் போதை<br />வர்த்தகர்கள்,<br />திருடர்கள், காவலர்கள்....<br /><br />துஞ்சாதிருத்தல் பெருநகரப்<br />பண்புகளிலொன்றன்றோ!<br /><br />4.<br />இவ்விதமானதொரு,<br />வழக்கமானதொரு<br />பெருநகரத்தின்<br />இரவுப் பொழுதொன்றில்,<br /><br />'பின்இல்' புல்வெளியில்<br />சாய்கதிரை விரித்ததில்<br />சாய்ந்திருக்கின்றேன்.<br />பெருநகரத்தின் இடவெளியில்<br />ஒளிந்திருக்கும் இயற்கையைச்<br />சுகிப்பதற்காக.<br />சிறுவயதில்<br />'முன்இல்' தந்தையின்<br />'சாறத்'தொட்டிலில்<br />இயற்கையைச் சுகித்ததின்<br />நீட்சியிது.<br /><br />பல்வகைக் கூகைகள் (கோட்டான்கள், நத்துகள்)<br />சப்திக்கும் இரவுகளில், விண்சுடர் ரசித்தல்<br />பால்யத்துப் பிராயத்து<br />வழக்கம்.<br />இன்னும் தொடரும் -அப்<br />பழக்கம்.<br /><br />தோடஞ்சுளையென<br />அடிவானில்<br />கா(ல)ல்மதி!<br /><br />அந்தரத்தில் தொங்குமந்த<br />மதி!<br />அதனெழிலில் தெரிகிறது<br />வெளிதொங்குமென்னிருப்பின்<br />கதி!<br /><br /><br />5.<br />பெருநகரத்துப் பரந்த 'காங்ரீட்' வனத்தின்<br />மத்தியில் ஒளிந்திருக்கும் இயற்கைக்<br />கன்னியின் வனப்பினை<br />இவ்விதமான இரவுப் பொழுதுகளில்தான்<br />ஆறுதலாக, உணர்ந்து, சிந்தித்து,<br />இரசிக்க முடிகிறது.<br />சில சமயங்களில் நகரத்தின்<br />மயானங்களினருகில்<br />நரிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன்.<br />பள்ளத்தாக்குப் பகுதிகளில்<br />மானினங்களைக் கண்டிருக்கின்றேன்.<br />குழிமுயல்களை, இன்னும் பல<br />உயிரினங்களையெல்லாம்<br />இத்தகைய இரவுப் பொழுதுகளில்<br />கண்டிருக்கின்றேன்.<br />அப்பொழுதெல்லாம்<br />வ்ளைகளுக்குள் வாழ்ந்து<br />இரவுகளில்<br />இந்தக் 'காங்ரீட்' வனத்தினுள்<br />சஞ்சரிக்கும் அவற்றின்<br />படைப்பின் நேர்த்தியில்<br />மனதிழந்திருக்கின்றேன்.<br /><br />6.<br />வெளியில் விரைமொரு<br />வாயுக் குமிழி! - உள்<br />உயிர்<br />ஆடும் ஆட்டம்தான்<br />என்னே!<br /><br />ஒளியாண்டுத் தனிமை!<br />வெறுமை! -உணராத<br />ஆட்டம்!<br />பேயாட்டம்!<br /><br />இந்தத்<br />- தனிமையெல்லாம்,<br />- வெறுமையெல்லாம்,<br />- தொலைவெல்லாம்,<br />ஒளியணங்கின் ஓயாத<br />நாட்டியமோ! - மாய<br />நாட்டியமோ?.<br /><br />ஆயின்,<br />விழியிழந்த குருடருக்கு<br />அவை<br />ஒலியணங்கின்<br />சாகசமோ?!<br /><br />7.<br />இந்தப் பெருநகரத்திருப்பில்<br />நான் சுகிக்கும் பொழுதுகளில்<br />இந்த இரவுப் பொழுதுகள்<br />சிறப்பு மிக்கவை.<br /><br />ஏனெனில் -அவை<br />எப்பொழுதுமே<br />என் சிந்தையின்<br />- விரிதலை,<br />- புரிதலை<br />- அறிதலை<br />அதிகரிக்க வைப்பவை;<br />அதனால்தான்.<br /><br /><br />29. ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />நானொரு பைத்தியமாம். சிலர்<br />நவில்கின்றார். நானொரு கிறுக்கனாம்.<br />நான் சொல்வதெல்லாம் வெறுமுளறலாம்; பிதற்றலாம்.<br />நவில்கின்றார். நவில்கின்றார்.<br />ஏனென்று கேட்பீரா? நான் சொல்வேன். அட<br />ஏனெழுந்தீர்? நீருமெனை நினைத்தோரோ 'கிறுக்கனென'.<br />ஆதிமானுடத்திலிருந்தின்றைய மானுடம்' வரையில்<br />வரலாறுதனை<br />அறிந்திடப் போகின்றேன் அப்படியே அச்சொட்டெனவே<br />என்றதற்கியம்புகின்றார் எள்ளி நகைக்கின்றார் இவரெலாம்.<br />நான் சொன்னதெல்லாம் இதுதான். இதுதான். இதுதான்:<br />'நுண்ணியதில் நுண்ணியதாய், மிக நுண்ணியதாயுளவற்றினை<br />நோக்கிடும் வலுவிலொரு தொலைகாட்டி சமைத்து<br />ஒளி விஞ்சிச் சென்றுவிடின்<br />ஆதிமானுடத்தினொளிதனையே<br />அட நான் முந்திட மாட்டேனா என்ன. பின்<br />வரலாறுதனை அறிந்திட மாட்டேனாவொரு<br />திரைப்படமெனவே'. என்றதற்குத்தான் சொல்லுகின்றார்<br />கிறுக்கனாமவை உளறலாம்; பிதற்றலாம்.<br />'ஒளி வேகத்தில் செல்வதென்றாலக்கணத்தில்<br />நீரில்லையும் உடலில்லை. நீளமெலாம் பூச்சியமே.<br />நான் சொல்லவில்லை. நம்ம ஐன்ஸ்டைன் சொல்லுகின்றார்'<br />என்றே<br />நவில்கின்றார்; நகைக்கின்றார் 'நானொரு கிறுக்கனாம்'.<br />நியூட்டன் சொன்னதிற்கே இந்தக் கதியென்றால்<br />நாளை ஐன்ஸ்டைன் சொன்னதிற்கும் மாற்றம் நிகழ்ந்திடாதோ?<br />அட நான் சொல்வேன் கேட்பீர். நானுமிப் பிரபஞ்சந்தனையே<br />சுற்றிச் சுற்றி வருவேனென்றன் விண்கலத்திலவ்வேளை<br />செகத்தினிலிவ் வாழ்வுதனின் அர்த்தம்தனைச்<br />செப்பிவைப்பேன்.<br />நல்லதிவையெலாம் கிறுக்கல், பிதற்றல், உளறலென்பவரெல்லாம்<br />நவின்றிடட்டுமவ்வாறே. அதுபற்றியெனக்கென்ன கவலை.<br />எனக்கென்ன கவலையென்பேன்.<br />- மார்ச் 6, 1983.-<br /><br /><br />30. எதற்காக?<br /><br />வ.ந.கிரிதரன்<br /><br />ஒவ்வொரு கணமும் என்னைச் சுற்றியிருக்கும்<br />இந்த உலகு, வாசனை மலர்கள், மரங்கள்,<br />நதிகள், சுனைகள், விரிந்து கிடக்கும்<br />பரந்த வான், வெளி, சுடர்கள், உயிர்கள்<br />இவை யாவும் என்னைப் புதிர் தேடும் ஒருவனாக<br />ஆக்கி விடுகின்றன. அத்தகைய சமயங்களில்<br />நான் நினைக்கின்றேண்?<br />எதற்காக? இவையெல்லாம் எதற்காக?<br />இந்த இருப்பு, இந்த விருப்பு, இந்த வெறுப்பு<br />இவையெல்லாம் எதற்காக? எதற்காக?<br />நூல்களைத் துருவித் துருவிப் பார்த்தேன்.<br />என் அறிதலின் எல்லையினைக்<br />கூட்டிப் பார்த்திட முயன்றேன். இந்தப் புதிரின் விடையினைக்<br />கண்டுவிடுமொரு வெறியினில் முயற்சித்ததெல்லாம்<br />நெஞ்சில் பிரமிப்பினையே ஏற்றின. ஆயின்<br />என் கேள்விக்கான விடையினை மட்டும்<br />என்னால் அறிந்து கொள்ள முடியாமல் போயிற்று.<br />எதற்காக? எதற்காக? எதற்காக?<br />பரிமாணங்களைப் புரிய முடிந்தது. ஆயின்<br />மீறுவதற்கு ஏதேனும் சாத்தியங்களுண்டா?<br />புரிந்தது சொன்னது இல்லையென்று.<br />புரிதல் தவிர வேறேனும்<br />அறிதல் முறையேதுமுண்டா என்<br />ஆவலைத் தணிப்பதற்கு? உணர்வதன் மூலம்<br />புரிதலுக்குச் சாத்தியமுண்டா?<br />படைப்பினிந்த நேர்த்திதான் என்னைப் பெரிதும்<br />பிரமிக்க வைத்து விடுகிறது. எவ்வளவு அறிவு பூர்வமான<br />நேர்த்தி! படைப்பின் இரகசியம் தானென்ன?<br />இத்தகைய சமயங்களில்<br />நான் நினைக்கின்றேண்?<br />எதற்காக? இவையெல்லாம் எதற்காக?<br />இத்தகைய சமயங்களிளெல்லாம்<br />கட்டுகளறுத்த மானுடச் சிட்டாக இந்த<br />நகர் விட்டு, இந்த ஒலிகளை விட்டு,<br />இந்தக் களரிகளை விட்டு நான்<br />வெளியின் தொலைவுக்குள், ஆழத்திற்குள்<br />பறந்து,புதைந்து ஒளிந்திட விரும்புகின்றேன்.<br />அத்தகைய சமயங்களிலெல்லாம்<br />உறவுகள் தரும் பாதிப்புகளிலிருந்து<br />துறவு கொள்ளப் பெரிதும் விரும்புகின்றேன்.<br />வினாக்களோ மீண்டும் மீண்டும்<br />எழுகின்றன:எதற்காக?<br />இவையெல்லாம் எதற்காக?<br /><br /><br />31. கிணற்றுத் தவளைகள்!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />தவளைகளின் கொட்டம் தாங்க முடியவில்லை.<br />கிணற்றை விட்டு வெளிவர<br />மாட்டோமென்று அடம் பிடிக்கின்றன.<br />சில தவளைகளுக்கோ வார்த்தைகளென்றால்<br />அவ்வளவு உயிர். மழைக்காலங்களில் அவை இழுக்கும்<br />ஆலாபனையிருக்கிறதே! வார்த்தைகளை வைத்து<br />மாயாஜாலம் காட்டுவதில் வல்லவை அவை. மேற்படி<br />தவளைகள் சில வேளைகளில் அறிதலுக்காக<br />மிகவும் பிரயத்தனம் செய்கின்றன.<br />ஆயினும் 'வெளிவருத'லென்பது அவற்றுக்கு<br />வேப்பங்காய் தான்.<br />புறம் விரிக்குமென்பதறியாத அவை<br />அறிதலின் உச்சியில் நின்று<br />ஆனந்தக் கூத்தாடுவதாகக் கனவுகள்<br />காணுகின்றன. தமக்குள் அடிக்கடி மோதிக் கொண்டபோதும்<br />ஒரு விடயத்தில் மட்டும் அவை பெரிதும் ஒற்றுமையாக<br />இருக்கின்றன. அது....<br />இருப்பை நிலை நாட்டுவதிலுள்ள ஆர்வம்.<br />தம்மிருப்பை உறுதி செய்வதில் அவை<br />பெரிதும் ஒற்றுமையாகவிருக்கின்றன.<br />ஆயினும் ஒற்றுமையின் பலம் கொண்டு<br />வெளிவர மட்டும் அவை சிறிதும்<br />முயல்வதில்லை.<br />கிணற்றுத் தவளைகளின் இருப்பு<br />அவற்றின் பரிதாப நிலையினைப்<br />புலப்படுத்தும். வெளி விரிந்து கிடப்பதை<br />அவை அறியவில்லை. இருந்தும் அவை<br />மிகவும் சந்தோஷமாகத்<br />தானிருப்பதாகத் தெரிகின்றது.<br />போதுமென்ற மனதில் பொன் செய்து<br />வாழும் தவளைகள்!<br /><br /><br />32. தேடல்கள்!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />எப்பொழுதுமென் நெஞ்சில் களியை<br />ஊட்டுவனவாகக் கீழுள்ளவற்றினைக்<br />கூறிடலாம்.<br />நல்ல நூல்கள்; நதி;கடல்;<br />மலை;சுடர்;புள்;மரம்;காற்று...<br />இது போல் பலப் பல. இவை<br />எனக்குப் படைப்பின் அதிசயத்தை,<br />அற்புதத்தினைப் போதிக்கின்றன.<br />அகக் கண்களை எல்லைகள் கடந்து<br />நோக்கத் தயார் செய்து விடுகின்றன.<br />எப்பொழுதுமே<br />அறிதலுக்கும், புரிதலுக்குமாக<br />தேடுமென் நெஞ்சத்தின்<br />தாகம் இச்சிறுகணவிருப்பில்<br />அடங்கிப் போகப் போவதில்லை<br />என்பதும் புரிந்துதானிருக்கிறது.<br />இருந்தும் இயன்றவரை<br />வினாக்களுக்குரிய விடைகளை<br />நாடித் தொடருமென் தேடல்<br />தொடரத் தான் போகின்றது.<br /><br /><br />33. நகரத்து மனிதனின் புலம்பல்!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />மரங்களிலிருந்து 'காங்ரீட்' மரங்களிற்கு...<br />குரங்கிலிருந்து மனிதனிற்கு...<br />ஆதிமானுடத்திலிருந்து அதியுயர் மானுடத்திற்கு...<br />பரிணாம நிகழ்வு, வளர்ச்சி<br />என்கின்றது<br />முந்தாநாள் சந்திரனில் கால் பதித்தவனின்<br />சுற்றம்.<br />இதற்கொரு விளக்கம் வேறு...<br />ஒளியையுறுஞ்சுதலென்பது இவ்விரு<br />விருட்சங்களிற்கும் பொதுவான செயலென்று<br />கருத்தியல் வேறு.<br />உறுஞ்சுதலிலொன்றெனினுமிவை<br />உம்மைப்போல் விருட்சத்தோழரே!<br />உணவைப் படைப்பதில்லையே?<br />உயிரையெமக்குத் தருவதில்லையே?<br />தோழரே! நீரோ மேலும்<br />நிழலைத்தந்தீர்! உமது<br />காயைத்தந்தீர்! கனியைத்தந்தீர்.!<br />இலையைத்தந்தீர்!<br />இறுதிலும்மையே தந்தீர்!<br />ஆனால்.......<br />நவீன விருட்சங்களிவை<br />தருவதென்ன?<br />'நன்றி மறத்தல்' நம்மியல்பன்றோ?<br />நன்றியை மறந்தோம்.<br />நண்பருனது தொண்டினையிகழ்ந்தோம்.<br />இதனால்<br />இன்றெமக்கு<br />இரவு வானத்துச் சுடரையும்<br />நிலவுப்பெண்னின் எழிலையும்<br />பாடும் புள்ளையும்<br />இரசிக்கும்<br />உரிமை கூட<br />மறுதலிக்கப் பட்டு விட்டது.<br />உம்மையிழந்ததினால்<br />இந்த மண்ணும்<br />உலர்ந்து போனது.<br />'எரியுண்ட தேச'மென்பதாக<br />இன்று<br />எமது கிரகமும்<br />'எரியுண்ட கிரகம்'<br />என்பதாச்சு.<br /><br /><br />34. விருட்சங்கள்!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />திக்குகளெங்கும் ஓங்கி வளர்ந்த விருட்சங்கள்!<br />எண்ணிலடங்கா விருட்சக் காட்டினுள்<br />தன்னந்தனியாக நான்<br />நடந்து கொண்டிருக்கின்றேன்.<br />வனமெங்கனும் கவிந்து கிடக்குமொரு<br />மோனம்.<br />கோடை வெயிலின் சுட்டெரிப்பில்<br />தகித்துக் கிடக்கும் விருட்சங்கள்<br />தகிப்பினை வாங்கித் தரும்<br />தண்மையின் கீழ் என் பயணம்<br />தொடரும்.<br />அமைதியான,<br />ஆரவாரமற்ற பெருந்தியாகம்!<br />பலன் கருதாப் புரியப்படும்<br />பணி!<br />எத்தனை விந்தையான உயிரினங்கள்!<br />அத்தனைக்குமோர்<br />ஆதரவு! அரவணைப்பு!<br />ஓங்கிய விருட்சங்களுக்குள்<br />ஒரு கோடி பிரிவுகள்! ஆயின்<br />ஒற்றுமையாய் ஒருமித்தவை தரும்<br />தண்நிழல்!<br />பிரமிப்பில் தொடருமென் பயணம்.<br />ஆறறிவு பிளந்து வைக்கும் மண்ணில்<br />கீழறிவின் பேரறிவு!<br />நன்மைக்காய்த் தனை மறக்கும்<br />இன்மனத்தினிருப்பிடமாயிவ்<br />விருட்சங்கள்!<br />தமையழித்த போதும்<br />தண்தரும் விருட்சங்கள்!<br /><br /><br />35. ஞானம்!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />நேரம், சூழல், இடம்<br />இவையெல்லாம் சரியாக<br />அமைந்து விடவேண்டும்<br />சிந்தை குடையும் சில<br />சிக்கல்களை அவிழ்ப்பதற்கு.<br />அப்பொழுதுதான் அதுவரை<br />புதிராய்த் தெரிந்ததெல்லாம்<br />'ப்பூ' இவ்வளவுதானா<br />என்றிருக்கும்.<br />பிரமிப்பில் அத்தகைய தருணங்களில்<br />நான் ஆழ்ந்து விடுவதுண்டு.<br />அறிவின் தெளிவெனை<br />புடமிட்டு வைத்துவிடும்<br />தருணங்களவை.<br />புரியாதவற்றைத் தெரிதற்கு<br />நான் இப்பொழுதெல்லாம்<br />முன்புபோல் குத்துக்கரணங்களடித்து<br />முயல்வதில்லை. கூடிவரும் பொழுதுகளிற்காகவும்,<br />பொருந்தியதொரு சூழலுக்காகவும்,<br />அமைந்தவோரிடத்துக்காகவும்<br />நான் இப்பொழுது காத்திருக்கப்<br />பழகிவிட்டேன்.<br /><br /><br />36. நடிகர்கள்!<br /><br />வ.ந.கிரிதரன்<br /><br />இந்த நாடக மேடையில்<br />நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால்<br />அழுவதா சிரிப்பதா என்று<br />சில நேரங்களில் தெரிவதில்லை.<br />இவர்களுக்கோ தாங்கள் பிறவி<br />நடிகர்கள் என்ற அடிப்படை<br />உண்மை கூடத் தெரியவில்லை.<br />தாங்கள் நடிப்பதில்லை என்று கூறிக்<br />கொண்டே நடித்துக்<br />கொண்டிருக்கின்றார்கள்.<br />இவர்களில் ஒருவன் என்ற வகையில்<br />என்னையும் சேர்த்துத் தான்<br />கூறுகின்றேன்.<br />எவ்வளவு தேர்ச்சி பெற்ற<br />நடிகர்கள் இவர்கள்.<br />எவ்விதமாகவெல்லாம் இவ்வளவு<br />தத்ரூபமாக இவர்களால்<br />முகபாவங்களைக் காட்ட முடிகின்றது?<br />உருகுவதிலாகட்டும் அசடு வழியக்<br />குழைவதிலாகட்டும்<br />என்னமாய் ஜமாய்த்து விடுகின்றார்கள்?<br />இந்த நாடக மேடையிலிருந்து<br />விடுபட வேண்டுமென்று தான்<br />இத்தனை நாளாக முயன்று<br />கொண்டிருக்கின்றேன்.<br />திமிர் பிடித்தவன். மரியாதை தெரியாதவன்.<br />கர்வம் கொண்டவன். வாழத் தெரியாதவன்.<br />எல்லா நடிகர்களும் ஒன்று சேர்ந்து<br />கத்துகின்றார்கள்.<br />நடிக்கவில்லையென்று கூறிக் கொண்டே<br />நடிப்பவர்கள் கூறுகின்றார்கள்<br />ஓரளவாவது நடிப்பதைத் தவிர்க்க முனையும்<br />என்னைப் பார்த்துப்<br />'பார் இவனது அபாரமான<br />நடிப்பை'யென்று.<br />என்ன நடிகர்களிவர்கள்?<br />தங்கள் நடிப்பை விட<br />என் நடிப்பு அபாரமானது<br />என சான்று வழங்கும்<br />பெருந்தன்மை மிக்க<br />மகா பெரிய நடிகர்களே!<br />உங்கள் பெருந்தன்மைக்காக<br />உங்கள் கருணைக்காக<br />உங்கள் அனைவருக்கும்<br />எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்<br />உரித்தாகுக.<br />மகாபெரும் கவிஞராக, அற்புதப்<br />படைப்பாளியாக, மூதறிஞராக,<br />அதிமேதாவியாக,சமூகத்<br />தொண்டராக, தலைவராக<br />எத்தனை விதமான வேடங்களில்<br />நீங்கள் வெளுத்துக் கட்டுகின்றீர்கள்!<br />உங்கள் வாயால் கிடைக்கும் பாராட்டு<br />வசிட்டர் வாயால் கிடைத்தது போல்<br />எத்துனை பெருமை மிக்கது. அதற்காக<br />எனது ஆயிரம் ஆயிரம் கோடி<br />நன்றிகள்!<br />இந்த நாடக மேடையில் முற்றாகவே<br />நடிப்பை ஒதுக்கி விடுவதென்பது<br />இயலாததொன்று என்பதை உணர<br />முடிகின்றது. இருந்தாலும்<br />நடிப்பதைக் குறைத்துக் கொள்ளத்<br />தான் முயன்று கொண்டிருக்கின்றேன்.<br />அதனைக் கூட நடிப்பாகக் கருதி விடும்<br />அற்புதமான நாடக மேடையிது.<br />இங்கு நடைபெறும் நாடகங்கள்<br />அனைத்துமே திரை விழும் வரை<br />தான். விழுந்த பின்னும்<br />நடிப்பில் தேர்ச்சி பெற்ற<br />நடிகர்கள் நாடகத்தைத்<br />தொடரத் தான் செய்வார்கள்.<br />இந்த நாடக மேடையில்<br />நடிப்பதென்பது மட்டும்<br />தான் நித்தியம்.சாசுவதம்.<br />நிரந்தரமானதொரு திரை<br />என்று ஒன்று உண்டா<br />இதன் நிரந்தரத்தை<br />நிரந்தரமின்மையாக்க?<br />யாருக்கும் தெரியாது? அவ்விதமொரு திரை<br />இருக்கும் பட்சத்தில்<br />அவ்விதம் விழும் திரை கூட<br />இன்னுமொரு பக்கத்தில்<br />ஆரம்பமாகுமொரு நாடகத்தின்<br />தொடக்கமாகவிருக்கலாம்?<br />யார் கண்டது?<br />பாத்திரங்களிற்கா<br />குறைவில்லை?<br />ஆக,<br />இருக்கும் வரை<br />நடித்துக் கொண்டேயிருப்போம்.<br /><br /><br />வ.ந.கிரிதரனின் கவிதைகள் சில!<br />(1983-1987 காலகட்டத்தில் எழுதப்பட்டவை).<br /><br />37. அர்த்தமுண்டே...!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />புயல்கள் வீசி புழுதிகள் படர்கையிலே<br />நெஞ்சினில் தானெங்ஙனம் நிம்மதியேது...?<br />ஆயினுமென் நெஞ்சோ<br />துவண்டு விடுவதில்லை! சோகத்தாலுதிர்ந்து<br />விடுவதில்லை.<br />தொலைதூரத்தே, கண்ணாடியினூடே<br />நீலவானத்திரவின் கருமையில் உறைந்து கிடக்கும்<br />ஒளியாண்டுகளில் ஓய்ந்திருக்கும் அமைதிகளில்<br />சுடர்க்கன்னிகளின் 'கெக்கலி' மட்டும்<br />மின்னி மெல்ல மறையும்.<br />நெஞ்சகமோ குலுங்கி மெல்லக் குளிரும்.<br />கூடவே,<br />மென்தென்றலில் நாணிச் சிரிக்கும்<br />மல்லிகைகளும்,<br />வயல்களில் மாரிகளில் படரும்<br />தவளைக் கச்சேரிகளும்,<br />மின்கம்பிகளில் இரட்டைவாற்<br />கருங்குருவிகளின் ஒயிலாட்டங்களும்,<br />மாவினில் மறைந்து மருளும் குயில்களும்<br />மலிந்த என்னூரின் நினைவலைகளும் மெல்ல<br />எழும்..<br />ஆயின் அங்கும் அமைதியில்லை.<br />இரவுகளில் இரத்தம் வீதிகளில்<br />ஆறெனப் பெருகிக் கிடக்கையில்...<br />கண்ணீர் பொழிகையில்..<br />அந்த நினைவுகளும் இன்னும் நெருஞ்சி முட்களாகத்தான்<br />குற்றுகின்றன.<br />கண்ணீருங், கம்பலையுமே கவிந்துவிட்ட<br />வாழ்வினிலே..<br />அர்த்தங்கள் அவர் வாழ்விலில்லை.<br />காலச்சாலைகளில் அங்கு<br />வசந்தப் பூக்களும் வாடியே பூக்கின்றன.<br />அநீதியின் பொருமலுக்குள் அவரெலாம்<br />சிதைந்து, இடிந்து கிடக்கின்றார்.<br />எங்ஙனும்,<br />வியாபித்துக் கிடக்கும் இயற்கைத் தாயே!<br />எதற்கு..? இவையெல்லாம்..எதற்கு..?<br />ஆயினும்,<br />விலகியோடுவதில் அர்த்தமில்லை.<br />உணர்ந்து பின் வாழ்வதிலும்<br />உண்டே அர்த்தங்கள்.<br />'போரற்று அமைதியிங்கு பிறப்பதில்லை.<br />புரட்சி வெடிக்காமல்<br />புதுயுகங்கள் பிறப்பதில்லை.'<br />அர்த்தமற்று வாழ்வதிலுமோர்<br />அர்த்தமுண்டு. அறிந்திடுவோம்.<br />கோழையைப் போலோடுவதால்<br />கண்ட பயன் தானென்ன?<br />நாளை நாம் படைப்போம்<br />நல்லதோர் பொற்காலம்!<br />(1984)<br /><br />38. இயற்கைத்தாயே!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />போதுமென்றே திருப்தியுறும்<br />பக்குவத்தைத் தந்துவிடு!<br />தாயே! இயற்கைத்தாயே!<br />உந்தன்<br />தாள் பணிந்து கேட்பதெல்லாம்<br />இதனைத்தான். இதனைத்தான்.<br />விதியென்று<br />வீணாக்கும் போக்குதனை<br />விலக்கி விடு.<br />மதி கொண்டு<br />விதியறியும்<br />மனத்திடத்தை<br />மலர்த்திவிடு.<br />கோள்கள், சுடர்களெல்லாம்<br />குறித்தபடி செல்வதைப்போல்<br />வாழும் வாழ்வுதனை<br />என் வாழ்நாளில் வளர்த்துவிடு.<br />தாயே! இயற்கத்தாயே!<br />உந்தன்<br />தாள் பணிந்து கேட்பதெல்லாம்<br />இதனைத்தான். இதனைத்தான்...<br /><br /><br />39. ஆசை!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />அர்த்த ராத்திரியில்<br />அண்ணாந்து பார்த்தபடி<br />அடியற்று விரிந்திருக்கும்<br />ஆகாயத்தைப் பார்ப்பதிலே<br />அகமிழந்து போயிடுதல்<br />அடியேனின் வழக்கமாகும்.<br />கருமைகளில்<br />வெளிகளிலே<br />கண் சிமிட்டும் சுடர்ப்<br />பெண்கள்<br />பேரழகில் மனதொன்றிப்<br />பித்தனாகிக் கிடந்திடுவேன்.<br />நத்துக்கள்<br />கத்தி விடும்<br />நள்ளிரவில்<br />சித்தம் மறந்து<br />சொக்கிடுவேன்.<br />பரந்திருக்கும் அமைதியிலே<br />பரவி வரும்<br />பல்லிகளின்<br />மெல்லொலிகள் கேட்டபடி<br />பைத்தியமாய்ப்<br />படுத்திடுவேன்.<br />இயற்கையின் பேரழகில்<br />இதயம் பறிகொடுத்தே<br />இருப்பதென்றால்<br />அடியேனின்<br />இஷ்ட்டமாகும்.<br /><br /><br />40. இயற்கையே போற்றி!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />எங்கும் வியாபித்து, எங்கும் பரந்து<br />எங்கனுமே,<br />சூன்யத்துப் பெருவெளிகளும்<br />சுடர்களும், கோள்களும்,<br />ஆழ்கடலும், பாழ் நிலமும்,<br />பொங்கெழி லருவிகளும்,<br />பூவிரி சோலைகளும்,<br />இன்னும்<br />எண்ணற்ற , எண்ணற்ற கோடி<br />கோடி யுயிர்களுமாய்<br />வியாபித்துக் கிடக்கும்<br />பரந்து கிடக்கும்<br />இயற்கைத் தாயே! உனைப்<br />போற்றுகின்றேன். நானுனைப்<br />போற்றுகின்றேன்.<br />பொருளும் சக்தியுமாய்<br />சக்தியே பொருளுமாய்<br />E=M(C*C)<br />இருப்பதுவே யில்லாததாய்<br />இல்லாததே யிருப்பதுவாய்<br />உண்மையே பொய்மையுமாய்<br />பொய்மையே உண்மையுமாய்<br />நித்தியமே அநித்தியமுமாய்<br />அநித்தியமே நித்தியமுமாய்<br />புதிர்களிற்குள் புதிராகக்<br />காட்சிதரும் இயற்கைத்தாயே! உனைப்<br />போற்றுகின்றேன்!நானுனைப்<br />போற்றுகின்றேன்.<br /><br /><br />41. தனிமைச் சாம்ராஜ்யத்துச்<br />சுதந்திரப் பறவை.!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்<br />நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்<br />அடிமையாகவா? அன்றி<br />ஆண்டானாகவா? இல்லை<br />பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்<br />பறவையெனவே. இசை<br />பாடிடுமெழிற் புள்ளெனவே.<br />கட்டுக்களற்ற உலகில்<br />கவலைக் காட்டேரிகள் தானேது?<br />சட்டங்களற்ற வுலகில்<br />சோகங்கள் தானேது?<br />ஒளித்தோழர்கள் வெட்கி<br />ஒளிந்தனரென் பறத்தலின் பின்னே.<br />பிரபஞ்சத்து வீதிகளில்<br />பறந்து மீள்கையில் படர்வது<br />பெருமிதமே.<br />நோக்கங்கள் விளங்கி விட்ட வாழ்வில்<br />தாக்கங்கள் தானேது? அன்றி<br />ஏக்கங்கள் தானேது?<br />தனிமைகளின் சாம்ராச்சியங்களில்<br />நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்<br />அடிமையாகவா? அன்றி<br />ஆண்டானாகவா? இல்லை<br />பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்<br />பறவையெனவே.இசை<br />பாடிடுமெழிற் புள்ளெனவே.<br /><br /><br />42. ஞானச்சுடரே! நீ எங்கு போயொளிந்தனையோ?<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட் '<br />சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்<br />கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.<br /><br />'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.<br /><br />அஞ்சா நெஞ்சத் தூண்களின்<br />அரவணைப்பில் மயங்கிக்<br />கிடக்கும் இட வெளிகள்.<br /><br />வாயுப் படைகளின் வடிகட்டலில்<br />வடியுமுஷ்ணக் கதிர்கள்.<br />பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்<br />சிலிர்த்திடும்<br />புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்<br />இனிமையில், நீலப்படுதாவின் கீழ்<br />குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை<br />பற்றிய சோக நினைவுகள்.<br /><br />தலைகவிழ்ந்து அரவணைக்கும்<br />விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்<br />ஸ்பரிசக் கனவுகள்.<br /><br />செயற்கையின தாக்கங்கள்<br />படர்ந்திட்ட<br />இயற்கையின் தேக்கங்கள்.<br /><br />மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்<br />குழுக்களாகக் குகைகளில்<br />நடுங்கடிக்குமிருண்ட இராவினில்<br />நடுங்கி மின்னிடுமொளியினில்<br />மருண்டு கொட்டிடும் மழையினுள்<br />சுருண்டு<br />புரியாத பொழுதுகளில்<br />பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட<br />ஆதிப்பயணங்கள்.<br /><br />இயற்கையின் தாக்கத்தினுள்<br />சுழன்றிட்ட வட்டங்களில்<br />மயங்கிக் கிடந்திட்ட வாழ்வு<br />வட்டங்கள். இன்<br />அதிகாலைப் பொழுதுகளா ?<br />எழில் கொட்டிய இன்பப் பொழில்களா ?<br /><br />ஞானத்தினிறுமாப்பில்<br />ஆகாசக் கோட்டை கட்டும்<br />நெஞ்சினிலோ....<br />ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!<br />எங்கே ? எங்கே ? அவையெல்லாம்<br />எங்கே ? ஐயோ..அவையெல்லாம்<br />எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?<br />பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி<br />புகைந்திட்ட வர்க்கப் போர்களால்<br />நிலைகுலையும் ககனத்தில்<br />குண்டுகளின் தாண்டவம்.<br /><br />அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!<br />நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!<br />தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட<br />விருட்சத்துக் குழந்தைகளே!<br />ஆறறிவால் நிலைகுலைந்து<br />நிற்கும் பிரிய சிநேகிதர்களே!<br />வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?<br /><br />விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!<br />போர்! போர்!போர்!<br />போரென்றால்..போர்!போர்!போர்!<br /><br />ஆ....<br /><br />வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?<br />வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?<br />வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?<br />வழுதானென்ன ? வழுதானென்ன ?<br />வழுதானென்ன ?<br /><br />ஆ..அந்த<br /><br />அமைதி!அமைதி!அமைதி!<br />அன்பு!அன்பு!அன்பு!\இனிமை!இனிமை!இனிமை!<br />ஞானச்சுடரே! நீ<br /><br />எங்கு போயொளிந்தனையோ ?<br />நீ! எங்கு போயொளிந்தனையோ ?<br />நீ! எங்கு போயொளிந்தனையோ ?<br /><br /><br />வ.ந.கிரிதரனின் ஆரம்பகாலக் கவிதைகள் சில (கீழுள்ளவை) வீரகேசரி, தினகரன், நுட்பம், சிந்தாமணி, ஈழமணி ..போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்தவை.<br /><br />43. பயணம் தொடரும்!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />நாளையென்ற வசந்தத்தை<br />நாடி எங்கள்<br />பயணம் வாழ்க்கைப்<br />பாலையினூடு<br />தொடர்கிறது.<br />துன்பப்<br />புயற்காற்றுகளால்<br />எங்கள் தேகங்கள்<br />சீர்குலைந்து<br />துவண்டு விட்ட போதும்<br />உறுதி குறையவில்லை.<br />கானல் நீர் கண்டு<br />கண்டு எங்கள் கண்கள்<br />பூத்து விட்ட போதும்<br />கண் 'பாவை'யின் ஒளி<br />பூத்து விடவில்லை.<br />நம்பிக்கைக் கோல் பற்றி<br />எண்ண ஒட்டகங்கள் மேல்<br />எங்கள் பயணங்கள்<br />இனியும் தொடரும் அந்த<br />வசந்தத்தை நாடி<br /><br /><br />44. எதிர்பார்ப்பு!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />இருண்டு கொண்டிருக்கிறது.<br />இன்னும் சிறிது நேரத்தில்<br />இவ்வுலகம்<br />இருளால் நிறைந்துவிடும்<br />கூகைகளும்<br />கோட்டான்களும்<br />கொஞ்சிக் குலாவத் தொடங்கி<br />விடும்.<br />பனிமுட்களால்<br />இருட்பன்றி<br />குத்தத் தொடங்கிவிடும்.<br />நிலவயலைக்<br />கொத்திக் கிளறிவிட்டு<br />வயற்காரக் கதிரவன்<br />வந்தவுடன்<br />இந்தப் பன்றியும்<br />ஓடி ஒளிந்துவிடும்.<br />ஆனாலென்<br />அகவுலகை மூடியிருக்கும்<br />அந்த மயக்க இருள்<br />என்றுதான் தொலையுமோ?<br />அவ்வுலகை ஆட்சி செய்யும்<br />கோபதாபக் கூகைகளும்<br />கோட்டான்களும்<br />என்றுதான் அழியுமோ?<br />கும்மிருள் நீக்கியெழும்<br />குளிர் நிலவொன்றை நாடிச்<br />செல்லும் வழிகாட்டிடத்<br />துருவ நட்சத்திரமொன்றை<br />நோக்கி<br />நானிங்கு காத்திருக்கின்றேன்.<br /><br /><br />45. மும்மூர்த்திகள்!<br /><br />பரிசோதனைக் குழாய்களில்<br />புதுப்புதுப் பாப்பாக்களைப்<br />பிரசவித்த நாங்கள் தான்<br />கூடவே<br />'நியூட்ரன்' குண்டுகளையும்<br />ஆக்கிச் சாதனை<br />புரிந்தவர்கள்.<br />'படைத்தல்'<br />'காத்தல்'<br />'அழித்தல்'<br />புரியும் மும்மூர்த்திகள்<br />நம்மில் அடக்கம்.<br /><br /><br />46. யுகமாற்றம்!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />'அன்ரோமீடாக்கள்'<br />திகழும்<br />அண்டம் முழுவதையும்<br />சுற்றிவந்தே<br />அன்பேயுனை<br />மணப்பேனென்று<br />ஒளியின் வேகத்தில்<br />ஓயாது சுற்றியலைந்து<br />மீண்டபோது, ஏழை<br />அவளிருந்த மண்ணிலோ<br />புட்கள் முளைத்து யுகங்கள்<br />பலவந்து போயிருந்தன.<br /><br /><br />47. ஆத்துமாவின் கேள்வியொன்று!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />நெஞ்சப் பாலைகளில்<br />சிந்தனைப் புயல்கள் வீசிப்<br />புழுதி பறக்கையிலே<br />அடிவயிற்றைக் கீறியொரு<br />திகில்<br />ஊடுருவிச் செல்லும்.<br />ஆத்துமாவின் கேள்வியொன்று<br />சிரித்து நிற்கும்.<br />"நானென்றால் நான் யார்?<br />நானென்றால் இவ்வுடலோ?<br />நானென்றாலுடலாயின்<br />புழுப்பிடித்து நாறுகையில்<br />இந்த நானெங்கே?<br />அன்றி, அம்மனத்தே<br />விரவி நிற்கும்<br />அவ்வுணர்வோ?<br />நானென்றால் உணர்வாயின்<br />நடையிழந்து, மொழியிழந்து<br />நிலைகுலைந்து போகையிலே<br />இந்த<br />நானெங்கே?<br />காணுங் கனவெல்லாம்<br />கனன்றெரியும் சினமெல்லாம்<br />மெய் சிலிர்க்கும்<br />மயக்கமெல்லாம்<br />உணர்வெல்லாம்<br />உடலெல்லாம்<br />நான் தானோ?<br />வெறுமைகள் சிரிக்கும்<br />என்னுடலும் ஓர்<br />அண்டம் தானோ?<br />அப்படியாயின் நான்<br />நான் மட்டும்தானா?<br />நான்தான் பிரபஞ்சமோ?<br />பிரபஞ்சம்தான் நானோ?<br /><br /><br />48. பயணத்தின் எல்லை!<br /><br />காலப் பெருங்கடலில்<br />மிதக்கும்<br />வாழ்க்கைப் படகுகள்<br />ஒருநாள்<br />காலக்கடலுள்<br />மூழ்கிவிடும்.<br />எல்லையற்ற<br />இக்கடலை<br />வெற்றி கண்டவர்<br />யாரோ?<br /><br /><br />49. பயணங்கள்!<br /><br />காலப் பெருங்கடலின்<br />கணப்பொழுதின்<br />ஒரு துளியாய்<br />இந்த ஞாலத்தில்<br />நாள் தோறும்<br />நடைபெறும் பயணங்கள்<br />என்றும் தொடர்வதில்லை.<br />எங்கோ முடிகின்றன.<br />[நன்றி: சிந்தாமணி]<br /><br /><br />50. சீடர்கள்!<br /><br />- வ.ந.கிரிதரன் -<br /><br />நாங்கள் கவிகள்.<br />புல்லின் நுனிகளில்<br />பொலிந்திடும் எழிலினில்<br />மெல்லிய முருங்கைகளில்<br />தொங்கிடும்<br />தூக்கணாங் குருவிக் கூடுகளின்<br />இனிமையான அழகுகளில்<br />மெய்மறந்துடும் எங்கள்<br />நெஞ்சங்கள்<br />சோகங்கள் கண்டு நகருகையில்<br />அமைதி அடைவதில்லை.<br />வாழ்க்கைக் காடுகளில்<br />வழிமாறித் துடித்திடும்<br />மனித ஜீவனகளுக்கு<br />வழிகாட்டுதற்காய், கவி<br />வடித்திடும் வழிகாட்டிகள்<br />நாங்களே!<br />அவலங்கள் கண்டு<br />சிந்தைகள் கனன்று<br />துடிக்கையிலே<br />புயலாகச் சீறியெழும்<br />நாங்கள் மிகவும்<br />அமைதியானவர்கள்.<br />இயற்கையாசானின்<br />இரக்சியங்களை அறிந்திட்ட<br />சீடர்களே நாம்.<br />ngiri2704@rogers.com </span>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-9646298849358517742007-10-24T21:40:00.000-04:002020-05-03T14:03:28.279-04:00தொடர் நாவல்: குடிவரவாளன்! - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF5Otjmb01TlR1pbsdapd-NdsK7hrUrofSsKXyQJcHFQx-e9TiKlLUSs_HWeb5Cu4FtnM_-lxW8w9PB-kVzC_18Zg2wWGENAS-D2VMzY1o7xgaX42MN0IXwOjAY5Hc3yziQCsn/s1600-h/man.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5125084590848651010" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF5Otjmb01TlR1pbsdapd-NdsK7hrUrofSsKXyQJcHFQx-e9TiKlLUSs_HWeb5Cu4FtnM_-lxW8w9PB-kVzC_18Zg2wWGENAS-D2VMzY1o7xgaX42MN0IXwOjAY5Hc3yziQCsn/s320/man.jpg" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" /></a><br />
<br />
அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!<br />
<span style="font-size: 78%;"></span><br />
<div>
<span style="font-size: 78%;"><span style="font-size: 130%;">1.</span>நாளை மறுநாள் அவன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்துச் சரியாக ஒருவருடமாகப் போகின்றது. இளங்கோவுக்குக் காலத்தின் கடுகதிப் பயணம் ஆச்சரியத்தைத் தந்தது. பால்யகாலத்தில் ஒரு வருடம் ஒன்பதுவருடங்கள் போல ஆறுதலாக விரைந்ததுபோல் இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போதிருக்கிறது. எந்தவித வாழ்க்கைப் போராட்டங்களையும் சுமக்க வேண்டிய பொறுப்புகளின்றி, சுதந்திரச் சிட்டுக்களாகப் பெற்றோரின் அரவணைப்பில் பொழுது எவ்வளவு ஆறுதலாக, இனிமையாகக் கழிந்தது? இரவுகளில் கொட்டிக் கிடக்கும் சுடர்களை, மின்மினிகளை, முழுநிலவை, பெருவிழி ஆந்தைகளை, நத்துக்களை, அணில்களை, விண்ணில் கோடிழுக்கும் நீர்க்காகங்களை, குக்குறுப்பான், கொண்டைக் குருவி, மாம்பழத்திக் குருவி, ஆலா, ஆட்காட்டி, ஊருலாத்தி, கிளி, மைனா, மணிப்புறாவெனப் புள்ளினங்களையெல்லாம் இரசிப்பதற்கு நிறையவே பொழுதுகளிருந்தன. ஆனால் இன்று... இருத்தற் போராட்டத்தின் சுமைகளையெல்லாம் தாங்கவேண்டிய சூழலில், இரசிப்பதற்குக் கூடப் பொழுதுகளில்லை? அவ்வளவு விரைவாகக் அவற்றின் பயணம்! இருந்தாலும் இவ்வளவு இடர்களுக்கிடையிலும் ஒரு சில நூல்களையாவது படிப்பதற்கு அவனால் முடிந்தது. சிந்திப்பதற்கு முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் அவன் வாழ்வு ஏதாவது பயன்களைப் பெற்றிருக்கிறதா? பொருளியல்ரீதியில் பலவகை அனுபவங்களைத்தவிர எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுமில்லை. ஆனால் ஒன்று... இந்த அனுபவங்கள் மிகுந்த பயனுள்ளவை. இருப்பின் பல்முனைத் தாக்குதல்களையும் உறுதியுடன் உள்வாங்கி, நம்பிக்கையுடன் எதிர்த்து நடை பயிலும் பண்பினை அவனுக்கு அளித்துள்ளவை இந்த அனுபவங்கள்தான். 'அச்சமில்லை, அமுங்கதலில்லை. நடுங்குதலில்லை நாணுதலில்லை. பாவமில்லை, பதுங்குதலில்லை. ஏது நேரிடினு மிடர்ப்பட மாட்டோம். கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம். யார்க்கு மஞ்சோம். எதற்கு மஞ்சோம். எங்கு மஞ்சோம். எப்பொழுது மஞ்சோம். வான் முண்டு. மாரியுண்டு. ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும், தீயு மண்ணும், திங்களு மீன்களும் உடலுமறிவு முயிரு முளவே' என்னும் உறுதியான மனப்பாங்கினை அவை அவனுக்களித்துள்ளன.<br /><br />வவுனியா நண்பன் ஜெயரட்ணத்தின் உணவகத்திலும் சிறிது காலம் நண்பகற் பொழுதில் உணவு விநியோகிக்கும் பணியாளாகப் பணி புரிநது பார்த்து விட்டான். அதற்குப் பின் சிறிது காலம் வங்க நண்பன் கோஷின் தொழிற்சாலையிலும் தொழிலாளியாக வேலை பார்த்தான். அதுவும் ஓரிரு மாதங்களே நீடித்தது. அதன் பின் வழக்கம்போல் மீண்டும் இருப்புடனான போராட்டம் தொடங்கி விட்டது. ஏற்கனவே முடிவு செய்திருந்ததன்படி மேலும் இந்த மண்ணில் தொடர்ந்திருப்பதை நினைத்துப் பார்க்கவே அவனால் முடியாததாகவிருந்தது. எந்தவிதச் சட்டபூர்வமான ஆவணங்களுமின்றி , பொருளியல்ரீதியில் ஒருவித உறுதியான நிலையினை அடைந்து, ஆழமாக வேரூன்றுவதற்கு முடியாமலிருந்தது. இந்த நிலையில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். நாளை மறுநாள் இந்த மண்ணில் காலடிவைத்துச் சரியாக ஒருவருடமாகிறது. அடுத்த வருடத்தின் முதல் நாளன்று அவனால் இந்த மண்ணில் ஒரு கணம்கூட இருக்க முடியாது. நாளை மறுநாளிரவு அவனது வாழ்வின் அடுத்த கட்டம் ஆரம்பமாகவேண்டும். மீண்டும் முதலிலிருந்து, அடிமட்டத்திலிருந்து, நம்பிக்கைகளுடன், கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன், உற்சாகத்துடன் அவனது இருதத்லுக்கான பயணம் தொடங்க வேண்டும். இதற்கு ஒரே வழி.. எந்த மண்ணை நோக்கிக் கடந்த ஆவணி மாதத்தில், ஈழதில் வெடித்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து அவன் புறப்பட்டானோ, எந்த மண்ணை நோக்கிய அவனது பயணம் இடையில் இந்த மண்ணில் தடைபட்டதோ, அந்த மண்ணை நோக்கி, கனடாவை நோக்கி, அவனது பயணம் மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும். கையிலுள்ள இருநூறு டாலர்களுடன், அவன் மீண்டும் தன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இவ்விதமாக இறுதித் தீர்மானமெடுத்தவுடன் அன்றிரவு அவன் தன் அறை நண்பர்களுக்குத் தன் எதிர்காலத்திட்டங்களை எடுத்துரைத்துப் பிரிவதற்கு முன்னர் அவர்களுடன் இறுதிப் பொழுதினை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டான். இவ்விதமாக உறுதியானதொரு முடிவினைத் தன் எதிர்காலம் பற்றியெடுத்ததும், அவனது நெஞ்சின் பாரம் சிறிதளவு குறைந்தது. அந்தவிடத்தை களியுடன் கூடியதொரு உற்சாகம் கலந்த உணர்வுகள் ஆக்கிரமித்துக் கொண்டன. அன்றிரவு அறை நண்பர்களுடன் ஆனந்தமாகக் கூடிக் கதைத்தான்.<br /><br />அவனது முடிவுக்கு கோஷ் ஆதரவளிக்கவில்லை. அவனது நிலைப்பாடு இளங்கோ இன்னும் சிறிது காலமாவது இருந்து முயன்று பார்க்கலாமென்பதாகவிருந்தது. ஆனால் அருள்ராசா அவ்விதமே சிறிது காலம் மேலுமிருந்து முயன்று பார்ப்பதற்கு முடிவு செய்திருந்தாலும், இளங்கோவின் திட்டங்களுக்குத் தடைபோட அவன் விரும்பவில்லை. இவ்விதமாக அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபொழுது கோஷ் இவ்விதமொரு கேள்வியினைத் தொடுத்தான்:<br /><br />"உங்களுக்கு இழைத்த மனித உரிமை மீறல்களுக்காக உங்களது வழக்கறிஞரின் ஆலோசனையில் அமெரிக்க அரசுக்கெதிராக வழக்கு போட்டீர்களே? அதன் நிலை என்னவாச்சு?"<br /><br />இதற்கு அருள்ராசாவே இடைமறித்துப் பதிலளித்தான்: "அண்மையில் எங்கள் சட்டத்தரணியைச் சந்தித்தபபொழுது இதுபற்றி நாங்களும் அவரிடம் கேட்டிருந்தோம்?"<br /><br />கோஷ்: "அதற்கவனென்ன சொன்னான்?"<br /><br />அருள்ராசா: "அவனது பதில் புதிராகவிருந்தது. அவன் கூறினான் நாங்கள் அந்த வழக்கினைத் தொடர்ந்து நடத்தினால் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தினால் ஊரிலுள்ள எங்களது உறவினர்களுக்குப் பிரச்சினைகள் வருமாம்? அதனால் அவ்வழக்கை அப்படியே போட்டுவிடுவதே நல்லதாம். எனக்கென்றால் அவனது கதை விளங்கவேயில்லை. அப்படியென்றால் எதற்காக அவனாகவே எங்களைத் தூண்டி அவ்விதமாக வழக்குப் போடும்படி செய்தான்?"<br /><br />இதற்கு கோஷ் இவ்விதமானதொரு காரணத்தை முன்வைத்தான்: "எனக்கென்றால் இந்த விடயத்தில் அவனை நம்ப முடியாமலிருக்கிறது.... என்னைப் பொறுத்தவரையில் நான் என்ன நினைக்கிறேனென்றால்...."<br /><br />இவ்விதம் கோஷ் இடை நிறுத்தவே இளங்கோவும் அந்த உரைடாடலில் கலந்து கொண்டான்: "கோஷ். உன்னைப் போல்தான் எனக்குமிந்த விடயத்திலொரு சந்தேகம். முதலில் உன்னுடையதைக் கூறு.".<br /><br />கோஷ்: "நான் என்ன நினைக்கிறேனென்றால்... அமெரிக்க இராஜத் திணைக்களம் அவனுடன் சேர்ந்தொரு இணக்கத்துக்கு வந்திருக்கலாம். இந்த வழக்கை எடுக்காமல் அப்படியே விடுவதற்கு உங்களது வழக்கறிஞருக்கு அமெரிக்க அரசால் ஏதாவது கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு, பணமேதாவது கைமாறியிருக்கலாம். யார் கண்டது? நீங்களோ சட்டவிரோதக் குடிகள். இந்த வழக்கை அவன் தொடர்ந்து நடத்தி, ஒரு சமயம் வெற்றியடைந்திருந்தால், உங்கள் நிலையிலுள்ள பலர் மேலும் இதுபோன்ற வழக்குகள் தொடர்வதற்கு அதுவொரு முன்மாதிரியாகவந்து விடக்கூடிய சாத்தியமுமிருக்கிறது. அவ்விதமானதொரு சூழல் அமெரிக்க அரசுக்கு அரசியல்ரீதியிலும், பொருளியல்ரீதியிலும் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகளிருப்பதையும் மறுப்பதற்கில்லை. இவற்றைப் பார்த்தால் 'மேசைக்கடியால்' பணம் கைமாறப்பட்டு முளையிலேயே இந்த வழக்கு கிள்ளியெறியப்பட்டுவிட்டதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது."<br /><br />அருள்ராசா: "என்னைப் பொறுத்தவரையில் நான் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அவனாகவே ஆரம்பித்தான். அவனாகவே முடித்துக் கொண்டான்."<br /><br />இளங்கோ: "என் நிலையும் அதுதான். நாங்கள் ஆரம்பிக்காதவொன்று. சமயம் வந்தால் ஒருகாலத்தில் உண்மையினை அறிய முயற்சிக்கலாம். அவ்வளவுதான்."<br /><br />கோஷ்:"என்றாலும் உங்களது வழக்கறிஞன் சரியான கெட்டிக்காரன்தான். அவன் காரியம் முடிந்து விட்டது. பணம் அவனது கைக்கு வந்திருக்கும்பட்சத்தில் அவன் கவலை முடிந்தது."<br /><br />அத்துடன் அவர்கள அந்த விடயம் பற்றிய உரையாடலினை நிறுத்திவிட்டு வேறு விடயங்களில் கவனத்தைச் செலுத்தினார்கள். இந்தச் சமயத்தில் திருமதி பத்மா அஜீத் அவர்களது அறைக்கு அவ்வாரத்துக்குரிய வாடகைப் பணத்தை வாங்கும்பொருட்டு வந்தாள். வந்தவள் அவர்களது உரையாடலிலும் பங்கெடுத்துக் கொண்டாள். "என்ன பலமானதொரு விடயத்தைப் பற்றி உரையாடுவதைப் போலொரு தோற்றம் தெரிகிறதே.." என்றாள்.<br /><br />அதற்கு கோஷ் " நீங்கள் கூறுவது சரிதான். உங்களுக்குத்தான் பெருத்த நட்டம்?" என்றான்.<br /><br />அதற்கு திருமதி அஜீத் "என்ன எனக்குப் பெருத்த நட்டமா? என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கு ஒன்றூமே விளங்கவேயில்லையே?" என்றாள்.<br /><br />அதற்கு கோஷ் "பின்னே! இளங்கோ மாதிரி நல்லவனொருவனை வாடகைக்கு இந்த மண்ணில் தேடிப்பிடிப்பதென்பது அவ்வளவு இலகுவான வேலையா என்ன." என்றான்.<br /><br />அப்பொழுதுதான் திருமதி அஜீத்துக்கு விடயம் ஓரளவுக்கு விளங்கியது. அவள் இளங்கோ பக்கம் திரும்பியவளாக "என்ன இளங்கோ? கோஷ் சொல்லுவது உண்மையா? நீ இந்தவிடத்தை விட்டு வேறெங்காவது போகப் போகிறாயா? " என்றாள்.<br /><br />இதற்கு அருள்ராசா பதிலளித்தான்: "அவன் இந்த இடத்தை விட்டுமல்ல, இந்த மண்ணையும் விட்டுப் போகப் போகின்றான். அதுபற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்."<br /><br />திருமதி பத்மா அஜித் இளங்கோவைப் பார்த்து "எங்கு போவதாக உத்தேசம்?" என்றாள்.<br /><br />இதற்கு இளங்கோ வழக்கம்போலவே அவளை 'திருமதி பத்மா அஜித்' என்று விளித்துப் பின்வருமாறு தொடர்ந்தான்: "இந்த மண்ணில் காலடியெடுத்து வைத்து ஒருவருடமாகப் போகிறது. இதுவரையில் பொருளியல்ரீதியிலும்சரி, குடியுரிமைரீதியிலும் சரி ஒருவித முன்னேற்றங்களுமில்லை. இந்த நிலையில் தொடர்ந்தும் என்னால் இங்கிருக்க முடியாது. அதுதான் கனடா போவதாக முடிவு செய்திருக்கிறேன்."<br /><br />திருமதி அஜித்: "அதுசரி. நீயோ சட்டவிரோதக் குடி. எந்தவிதச் சட்டரீதியான ஆவணங்களும் உன்னிடமில்லை. இந்த நிலையில் கனடாவுக்குள் எவ்விதம் நுழைவாய்? அங்கு இதைவிடப் பெரிதாகப் பிரச்சினைகளேதும் வந்துவிடாதா?'<br /><br />கோஷ்: "அதைத்தான் நானும் சிந்திக்கிறேன். திருமதி பத்மா அஜித் கூறுவதிலும் நியாயமிருப்பதாகத்தான் படுகிறது. இளங்கோ இதுபற்றி இந்தக் கோணத்தில் நீ சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா?"<br /><br />இளங்கோ: "நீங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான். ஆனால் நானறிந்த வரையில் கனடா அகதிகள் விடயத்தில் மிகவும் நெகிழ்ச்சியான போக்குள்ள நாடு. இங்கிருந்து என்நாட்டைச் சேர்ந்த பலர் இதுவரையில் எல்லையைக் கடந்து சென்றிருக்கிறார்கள். பலருக்கு அந்நாட்டு நிரந்தரவசிப்பிட உரிமைகூட கிடைத்திருக்கிறது. அங்கு உள் நுழைந்து விட்டால் எல்லாமே நல்லதாக முடிந்து விடும். ஆனால்..."<br /><br />கோஷ்: "ஆனால்.. என்ன?"<br /><br />இளங்கோ: "எல்லையைக் கடக்கும்போது கனடியக் குடிவரவு அதிகாரிகளின் கணினியில் என் பெயரைக் கொண்ட இன்னொருவரின் பெயரில் யாராவது பயங்கரக் குற்றங்கள் செய்திருக்கிற ஒருவரின், 'இண்டர்போல்' போன்ற சர்வதேசப் பொலிசாரால் தேடப்படுகின்ற ஒருவரின் பெயர் இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அத்தகையதொரு சூழலில் நிலைமை மோசம்தான். உள்ளேயே வைத்துவிட்டாலும் வைத்து விடுவார்கள். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவே."<br /><br />திருமதி பத்மா அஜித் (ஒருவிதப் பெருமூச்சுடன்): "இளங்கோ. எந்தவிதப் பிரச்சினைகளுமில்லாமல் நீ அங்குபோய்ச் சேர்ந்து நல்வாழ்க்கையொன்றை ஆரம்பித்து விட்டாயென்றால் எனக்கது போதும். போனால் எங்களை மறந்து விடாதே. அவ்வப்போது அழைத்து விசாரித்துக் கொள்."<br /><br />அருள்ராசா: "இளங்கோ. நீ முதலிலை போ. உன்ர நிலையைப் பார்த்துப் பிறகு நான் வாறன்."<br /><br />கோஷ்: "இளங்கோ. நீ போவதென்று முடிவு செய்து விட்டாய். உன் எதிர்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துக்கள். போவதென்றால் எப்பொழுது செல்வதாகத் திட்டம்?"<br /><br />இளங்கோ: "நாளை இரவே செல்வதாகத் திட்டம்."<br /><br />கோஷ்: "இளங்கோ. நீ ஒரு வித்தியாசமான பேர்வழி. முடிவு செய்து விட்டாயானால் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்க மாட்டாய். அப்படியா?"<br /><br />இளங்கோ: "கோஷ். அப்படியில்லை. இந்த மண்ணில் ஒரு வருடம் வரையில்தான் தங்குவதென்பது ஆரம்பத்திலேயே நான் உறுதியாக முடிவு செய்திருந்த விடயம். இந்த ஒரு வருடம் முடியப் போகிறது. இந்த நிலையில் தொடர்ந்திருப்பது என்னைப் பொறுத்தவரையில் சிரமமானது."<br /><br />இச்சமயம் திரு.அஜித்தும் வந்து அவர்களது கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அவரும் இளங்கோ கனடா செல்லவிருக்கிற விடயம் பற்றி அறிந்ததும் சிறிது கவலைப் பட்டார். அத்துடன் கூறினார்: "நண்பர்களே. இளங்கோவின் பிரியாவிடையினையிட்டு நாம் இன்றொரு சிறியதொரு விருந்து வைத்தாலென்ன?"<br /><br />இச்சமயம் இடையில் புகுந்த திருமதி பத்மா அஜித் "இன்றைய சமையல் என்னுடையது. நல்லதொரு சிக்கன் பிரியாணி செய்யப் போகின்றேன். என்ன சொல்லுகிறீர்கள்?"<br /><br />எல்லோரும் திருமதி பத்மா அஜித்தின் ஆலோசனைக்குச் சம்மதித்தார்கள். வளைக்கரத்தால் உணவுண்டு எத்தனை நாட்களாகி விட்டன? கசக்குமா அவர்களுக்கு.<br /><br /><span style="font-size: 130%;">2.</span>அன்றிரவு அறை நண்பர்களுடனும், அஜித் தம்பதியினருடனும் பொழுது கழிந்தது. திருமதி பத்மா அஜித்தின் கைவண்ணத்தை பிரியாணியின் சுவையில் காணக்கூடியதாகவிருந்தது. அதன்பின்னர் அனைவரும் இளங்கோவின் எதிர்காலச் சிறப்பிற்காக வாழ்த்திவிட்டுப் படுக்கைக்குத் திரும்பினார்கள். சிறிது நேரம் இளங்கோவும், அருள்ராசாவும் வீட்டின் முறபுறத்தில் வந்தமர்ந்து கொண்டு உரையாடினார்கள். அறையினுள் தூக்கத்திலாழ்ந்து கிடந்தவர்களைத் தங்களது உரையாடல் குழப்பி விடக்கூடாதேயென்ற எண்ணத்தில் வெளியிலிருந்து உரையாடுவதே சரியாகப் பட்டது.<br /><br />இளங்கோவின் உள்ளத்தில் உற்சாகம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. தற்போது அவன் வாழ்வில் நிலவும் சூழலுக்கொரு முடிவு வரப் போவதையிட்டுண்டான களிப்பு. மீண்டுமொருமுறை அவன் முதலிலிருந்து இருத்தலுக்கான போராட்டத்தை ஆரம்பிக்கப் போகின்றான். மீண்டும் முதலிலிருந்தது ஆரம்பிக்கப் போவதையிட்டு அவன் கவலைப் படவில்லை. வாழ்க்கையின் சவால்களை எப்பொழுதுமே உற்சாகத்துடன் எதிர்கொள்பவனவன். இந்த மண்ணில் எந்தவித முன்னேற்றங்களுமின்றி நிச்சயமற்றதொரு இருப்பில் தொங்குவதைவிட அது எவ்வளவோ மேல்.<br /><br />அருள்ராசாவுக்கு இளங்கோ கனடா போவதையிட்டு ஒருவிதத்தில் சிறியதொரு கவலை. இனி அவன் தனித்துப் போகப்போகின்றானே. இது அவனது கவலைக்குக் காரணம். ஆயினும் இளங்கோ எடுத்த முடிவையிட்டு அவன் கவலைப்படவில்லை. முடிவுகளையெடுப்பதில் இளங்கோவுக்கிருக்கும் துணிச்சல் அவனுக்கில்லை. அவனது கடவுச்சீட்டு இன்னும் அமெரிக்கக் குடிவரவுத் திணைக்களத்திடம்தானிருக்கிறது. இந்நிலையில் நடந்த உண்மைகளைக் கூறித்தான் இளங்கோ கனடாவிற்குள் நுழையத் தீர்மானித்திருக்கிறான். அவ்விதம் நுழையும்போது 'அமெரிக்காவில் ஏற்கனவே அகதிக்காக விண்ணப்பித்திருக்கிறாயே அதற்கான பதிலைப் பெற்றபின் வா'வென்றால், அங்கிருந்து மீண்டும் திருப்பியனுப்பினால் என்ன செய்வது? இளங்கோ இந்த விடயம் பற்றியும் சிந்தித்துப் பார்த்திருக்கின்றான். அதற்கும் அவனொரு காத்திரமான பதிலை வைத்திருக்கிறான். முதலாவது கடந்த ஒருவருடமாக இங்கு அவனுக்கு வேலை செய்வதற்குரிய எந்தவிதச் சட்டரீதியான ஆவணங்களுமில்லை. எந்தவித அரச உதவிகளுமில்லாமல், சட்டரீதியாக வேலை செய்து வயிற்றை நிரப்புவதற்கு முடியாமலிருக்கிறது. அடுத்தது வேலை வழங்கலுக்கான கடிதம் பெற்று சட்டத்தரணியூடு விண்ணபித்தும்கூட இதுவரையில் அதற்கான பதிலேதும் வரவில்லை. இதுவரையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஒருவாறு காலத்தைத் தள்ளியாகி விட்டது. இனியும் அவனால் இத்தகையதொரு நிலையினைத் தொடர்ந்தும் தாங்க முடியாது? இதுதான் அவனது பதில். இதனையும் மீறி அங்கிருந்து மீண்டும் திருப்பியனுப்பினால் வேறென்ன செய்வது? மீண்டும் இங்கு வந்து மட்டையடிக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஆயினும் அதற்காக இவ்விதம் முயன்று பார்க்காமலிருக்க முடியாது.<br /><br />அருள்ராசா கூறினான்: "இளங்கோ! உனக்கிருக்கிற துணிச்சல் எனக்கில்லை. நீ அங்கு போனதும் விரிவாக அங்குள்ள நிலைமையையெல்லாம் அறிவி. அதுக்குப் பிறகுதான் நான் முடிவு செய்ய வேண்டும்"<br /><br />அதற்கு இளங்கோ "கட்டாயம் எல்லாவற்றையும் விசாரிச்சு, எனக்கு ஏற்படுகிற நிலைமைகளெல்லாவற்றையும் அறிவிக்கிறன். அதுக்குப் பிறகு ஆறுதலாக நீ வரலாம். அவசரமிலை" என்றான்.<br /><br />அதற்கு அருள்ராசா "எல்லாம் நல்லதுக்குத்தான். இங்கை மட்டும் 'சோசல் கார்ட்'டெல்லாம் கிடைச்சிருக்குமென்றால் இங்கையே போவென்று கலைக்கும் மட்டும் இருந்திருக்கலாம். பார்ப்பம் எனக்காவது கெதியிலை கிடைக்குதாவென்று. அது மட்டும் கிடைச்சுட்டுதென்றால் நான் கடைசிவரை அகதிக்கோரிக்கைக்குப் பதில் கிடைக்கிறவரை இங்கேயே தங்கி விடுவன்." என்றான்.<br /><br />இவ்விதமாக உரையாடிக் கொண்டிருந்துவிட்டு திரும்பினார்கள். அருள்ராசா சிறிது நேரத்திலேயே தூங்கி விட்டான். இளங்கோவுக்கோ வழக்கம்போல் இத்தகைய சந்தர்பங்களிலேற்படுவதுபோல் தூக்கம் வருவதற்குத் தயங்கியது. சிறிதுநேரம் தூங்குவதற்கு முயன்றான்; முடியாமல் போகவே உணவறைக்கு வந்து சிறிது நேரம் பாரதியின் கவிதைகளைப் புரட்டினான். சிறிது நேரம் குறிப்பேட்டினில் பார்வையை ஓட்டினான். வழக்கம்போல் பாரதியின் கவிதைகளும், குறிபேடும் அவனது ஓரளவு சோர்ந்திருந்த உணர்வுகளைத் தட்டியெழுப்பின. 'மண்ணில் தெரியுது வானம் அதுநம் கைவசப்பட லாகோதோ? எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்கிறுதியிற் சோர்வோமோ?'. குறிப்பேட்டினைத் திறந்தவன் அன்றைய இரவுப் பொழுதின் தன் உள்ளத்துணர்வுகளையதில் கொட்டத் தொடங்கினான்.<br /><br /><span style="font-size: 100%;">3.</span> </span></div>
<div>
<span style="font-size: 78%;"><br />இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து.........<br /><br />'கடந்த ஒருவருடம்தான் எவ்வளவு விரைவாகக் கழிந்து விட்டது! இந்த மண் மீதிலான என்னனுபவங்கள் பல்வேறு உண்மைகளை எனக்குப் புரிய வைத்துள்ளன. உலகின் சொர்க்கபுரியாக விளங்கும் இந்த மண்ணின் மறுபக்கத்தை எனக்கு இந்த அனுபவங்களே உணர்த்தி வைத்தன. தனியுடமையின் கூடாரமாக விளங்குமிந்த மண்ணில் எத்தனை தனி மனிதர்கள் தடுப்பு முகாமகளுக்குள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். வறுமையின் பிடிக்குள் சிக்கி எத்தனை ஆயிரக்கணக்கில் மக்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் வாழ்வதற்கு எவ்வளவோ வழிவகைகள். மறுபுறத்திலோ வாழுவதற்கான உரிமைகளே மறுக்கப்பட்ட நிலையில் மாயும் மக்கள் கூட்டம். மில்லியன் கணக்கில் இந்த மண்ணில் வாழும் சட்டவிரோதக் குடிகளின் உழைப்பில் சுகித்து வாழுவதற்கு யாருமே தயங்குவதில்லை. ஆனால் அதே சமயம் அவர்களுக்குரிய உரிமைகளைக் கொடுத்து அவர்களது கடின உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதில் மட்டுமென்ன தயக்கம்? இவ்விதம் தயங்குபவர்கள் அவ்வளவு சட்டவிரோதக் குடிகளையும் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு அனுப்பி வைக்கலாமே? ஆனால் அதுமட்டும் முடியாது? அவ்விதம் அனுப்பினால் அதனாலேற்படும் இடைவெளியை ஈடூகட்டுவதற்குரிய தொழிலாளர்களின்றி உணவகங்கள், தொழிற்சாலைகளெல்லாம் முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். சொந்த மண்ணில் தலை விரித்தாடும் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் நுழையும் அகதிகளைச் சட்டவிரோதக் குடிகளாக்கித் தடுப்பு முகாமில் வைத்திருக்கிறது. ஆனால் ஒருகாலத்தில் செல்வம் நாடி இந்த மண்ணுக்குச் சட்டவிரோதமாகப் படையெடுத்த, இந்த மண்ணின் பூர்வீக குடிகளை நிர்மூலமாக்கிய, ஐரோப்பியர்களின் வழித்தோன்றல்களதானே இன்றைய மக்களில் பெரும்பான்மையினர். உலகின் பல்வேறு திக்குகளுளிருந்தும் அரசியல், பொருளியல் காரணங்களுக்காக இம்மண்ணை நோக்கிப் படையெடுக்கும் மக்களைச் சட்டவிரோதக் குடிகளாக்கி சிறுமைப்படுத்துவதற்கு நவ அமெரிக்கர்களுக்கென்ன தார்மீக உரிமை இருக்க முடியும்? தங்களது தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக உலகெங்கும் இவர்களால் அரசியல்ரீதியில் , இராணுவரீதியில் புகுந்து விளையாட முடியும். ஆனால் அதன் விளைவாகப் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக வந்தால் ஏற்பதில் மட்டும் தயக்கமேன்? இந்த மண்ணின் அமைப்பிலுள்ள பல நல்ல அம்சங்களுள்ளன. முக்கியமாக அறிவியற் தொழில் நுட்ப வளர்ச்சி. மிகவும் கடினமாகத் தொலைநோக்குடன் உழைக்கின்றார்கள். ஒருபுறம் அரசின் தேசிய பாதுகாப்பு, அபிவிருத்திக் கொள்கைகளால் உலகம் பற்றியெரிகிறது. இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுச் சமநிலை குலைக்கப்படுகின்றது. மறுபுறம் இந்த மண்ணில் வாழும் மக்களால் தொலை நோக்கில் சிந்தனை முன்னெடுக்கப்படுகிறது. அரசின் நடவடிக்கைகளையிட்டுக் கண்டனம் பலமாக<br />முன்வைக்கப்படுகின்றது. சூழல் பாதுகாப்புக்காக, மூன்றாம் உலகத்து முன்னேற்றத்துக்காக இலாபநோக்கற்ற ரீதியில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான, நம்பிக்கை மிகுந்த, ஆற்றல்மிக்கதொரு பக்கமிருக்கிறது. அதே சமயம் இன்னுமொரு இருண்ட பக்கமும் அதற்கிருக்கிறது. நம்பிக்கையிழந்த, சந்தேகத்துடன் கூடிய, சுயநலம் மிகுந்த , எதிர்மறையானதொரு பக்கமது. அறிவியற் தொழில்நுட்ப வளர்ச்சிகள், கலை இலக்கியங்களில் காணப்படும் முன்னேற்றகரமான போக்குகள், பொருளியற் வளர்ச்சி இவையெல்லாம் அதன் நல்ல பக்கங்களென்றால் அதன் இருண்ட பக்கங்களாக வலிமை குன்றிய உலக நாடுகள்மீது அது தொடுக்கும் ஈவிரக்கமற்ற யுத்தங்கள் (பிஞ்சுக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகளென எத்தனை அப்பாவி உயிர்களை அது காவு கொள்கிறது), சமுதாயத்தில் உலாவும் பலவேறு மனநோய் பீடித்த சமூக விரோதிகள், இனவாதச் சேற்றில் புதைந்துள்ள அமைப்புகள், அகதிகளை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம்கள்.. இவையெல்லாம் விளங்குகின்றன.'<br /><br />இவ்விதமாக இளங்கோ குறிப்பேட்டில் தன் உள்ளத்துணர்வுகளைக் கொட்டித்தீர்த்தான். எழுதவெழுத மனத்திலொரு தெளிவு , அமைதி பிறந்தது. அந்தத் தெளிவுடனும், அமைதியுடனும், அதன் விளைவாக கிளர்ந்தெழுந்த ஒருவிதப் பரவசத்துடனும் மேலும் எழுதத்தொடங்கினான்:<br /><br />'சிறியதொரு நீலவண்ணக் கோளின் மீது வாழும் மனிதர் எதற்காக இவ்விதம் பல்வேறு பிரிவுகளுக்குள் சிக்கி வாழ வேண்டும்? 'யாதும் ஊரே! யாவரும் கேளீர்' என்று வாழுவதற்குரிய பக்குவத்தைத் தடுப்பதெது? எத்தனை விதமான ஏற்றத்தாழ்வுகளால் இந்த உலகு நிறைந்து கிடக்கிறது? வெளியினூடு பிரமாண்டமானதொரு வேகத்தில் விரையும் கோளிது. இதன் விரைதலை உணரமுடியவில்லை. பரந்த இந்தப் பிரபஞ்சத்தில் இதன் அற்பத்தன்மையினை அறிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் அறிவின் பல்நிலைகளில் நிற்கும் மாந்தர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். போர்களால், ஏற்றத்தாழ்வுகளால் இந்த அழகிய கோள் ஒவ்வொரு கணமும் சீரழிந்து கொண்டிருக்கிறது. பெருகும் இரத்த ஆற்றில் அடிபட்டுச் செல்லும் உயிரினங்கள்தானெத்தனை? சகமனிதரை, உயிர்களைக் கொன்றொழிப்பதில்தான் எத்தனையெத்தனை வழிமுறைகள்! போர்கள், அவற்றின் அழிவுகளெல்லாம் இன்று திரையில் நடைபெறும் கூத்துக்களாகிவிட்டன. அழிவுகளுக்குப் பின்னால் உறைந்து கிடக்கும் இரத்த ஆறுகளை, துயர்மிக்க உணர்வுகளை யாரறிவார்? யாருணர்வார்? அறிந்தால், உணர்ந்தால் இவ்விதம் கொல்வதில் நாட்டம் செல்லுமோ? ஒரு குழந்தையின் பிஞ்சு உடல் சிதறிக்கப்படும்போது அதன் பெற்றோரின் உள்ளங்கள் என்ன பாடுபடும்? யாரோ ஒருபிள்ளையென்று பேசாமல் போய்விட முடிகிறதா? மனிதரால் உருவாக்கிய மதம், மொழிக்காக எத்தனை ஆயிரக்கணக்கில் யுத்தங்கள்! இரத்தக் களரிகள்! இந்தச் சிறிய கோள் எத்துணை அற்புதமானது! இதனற்புதத்தினை உணராமலிதையிவ்விதம் சிதைப்பதெதற்காக? 'உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!' என்று வாழ ஏன் முடியவில்லை?'<br /><br />இவ்விதமாக மேலும் மேலும் தூக்கம் கண்களைத் தழுவும் வரையில் எழுதித்தீர்த்தான். ஒரு கட்டத்தில் நித்திராதேவியின் அரவணைப்பின் கனம் அதிகமாகிவிடவே அவளுடன் தன்னை மறந்து சங்கமமானான் இளங்கோ.<br /><br />4.<br />மறுநாள் பகல்முழுவதும் இளங்கோ மான்ஹட்டன் முழுவதும் அலைந்து திரிந்தான். கடந்த ஒரு வருடமாக அந்த மண்ணில் அலைந்து திரிந்த வீதிகள், இடங்களையெல்லாம் மீண்டுமொருமுறை பார்வையிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி இந்திரா, ஹென்றி இவர்களிடமெல்லாம் கூறி விடைபெற்றான். அன்றிரவு நியூயார்க் பஸ் நிலையத்துக்கு அவன் அருள்ராசாவுடன் புறப்பட்டபோது கோஷ், அஜித் தம்பதிகள் எல்லோரும் வழியனுப்ப வந்தனர். இளங்கோ இதனைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் இதை விட மிகப்பெரிய ஆச்சரியமென்னவென்ரால் ஹரிபாபுவும், இந்திராவும் அவனை வழியனுப்ப வந்திருந்தததுதான். எல்லோரும் அவனது எதிர்கால வாழ்வு நன்கமைய வாழ்த்துத் தெரிவித்தார்கள்.<br /><br />அவன் புறப்படும் நேரம் வந்தது. சோகம் கவிந்த முகங்களுடன் நின்ற அவர்களனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு இளங்கோ பஸ்ஸிலேறி மூலையிலிருந்த இருக்கையொன்றில் சென்றமர்ந்தான். அந்த நள்ளிரவில் அவனையும் , சக பயணிகளையும் ஏற்றிக் கொண்டு அந்த பஸ் 'தொராண்டோ' மாநகரை நோக்கிப் புறப்பட்டது. தொலைவில் விரிந்திருந்த இரவுவானில் சுடர்க் கன்னிகள் அவனது புதிய பயணத்தையெண்ணிக் கெக்கலி கொட்டி நகைத்துக் கொண்டிருந்தார்கள். 'நட்சத்திரக் கன்னியரே ! நகைக்கவா செய்கிறீர்கள். நல்லாக நகையுங்கள். நகையுங்கள். உங்கள் நகைப்பில் நானொருபோதும் துவண்டு விடப்போவதில்லை. ஆனால் உங்கள் நகைப்பில் நானறியும் அர்த்தமே வேறு. மோனித்துக் கிடக்கும் வெறுமை படர்ந்த வெளிகளை ஊடுருவி நீங்கள் அனுப்பும் ஒளிக்கதிர்களின் தொலைதூரப் பயணங்கள் என்னைப் பிரமிக்க வைக்கின்றன. வெற்றிடங்களைத் துளைத்து, பல்வேறு காலகட்டங்களிலிருந்தும் எத்தனை துணிச்சலுடனவை தம் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றன. தனிமைகளைக் கண்டு , தொலைவுகளைக் கண்டு பயமற்ற அவற்றின் பயணங்களுடனொப்பிடுகையில் என் பயணத்துக்கொரு அர்த்தம்கூட இருந்திட முடியுமா?'<br /><br />நள்யாமத்துப் பொழுதினில் புறப்பட்ட பஸ் அதிகாலையில் கனடாவை நெருங்கிக் கொண்டிருந்தது. அடிவானில் விடிவெள்ளி முளைக்கத் தொடங்கி விட்டது. 'அதிகாலை மெல்லிருட் போதுகளில் அடிவானில் நீ மெளனித்துக் கிடக்கின்றாய்! படர்ந்திருக்கும் பனிப்போர்வையினூடு ஊடுருவுமுந்தன் நலிந்த ஒளிக்கீற்றில் ஆதரவற்றதொரு சுடராய் நீ ஆழ்ந்திருப்பாய் விடிவு நாடிப் போர் தொடுக்கும் என் நாட்டு மக்களைப் போல. விடிவின் சின்னமென்று கவி வடிப்போர் மயங்கிக் கிடப்பார். ஆயின் சிறுபோதில் மங்கலிற்காய் வாடிநிற்கும் உந்தன் சோகம் புரிகின்றது. அதிகாலைப் போதுகளில் சோகித்த உந்தன் பார்வை படுகையிலே, என் நெஞ்சகத்தே கொடுமிருட் காட்டில் தத்தளிக்கும் என் நாட்டின், என்மக்களின் பனித்த பார்வைகளில் படர்ந்திருக்கும் வேதனைதான் புரிகின்றது. விடிவினை வழிமொழியும் சுடர்ப்பெண்ணே! வழி மொழிந்திடுவாய்!'<br /><br />இளங்கோ தன் புதிய பயணத்தைத் துணிச்சலுடனும், நம்பிக்கைகளுடனும் எதிர்பார்த்து ஆரம்பித்திருக்கின்றான்.' இயற்கைத்தாயே! போதுமென்றே திருப்தியுறும் பக்குவத்தைத் தந்துவிடு! தாயே! இயற்கைத்தாயே! உந்தன் தாள் பணிந்து கேட்பதெல்லாம் இதனைத்தான்! இதனைத்தான்! விதியென்று வீணாக்கும் போக்குதனை விலக்கி விடு! மதி கொண்டு விதியறியும் மனத்திடத்தை மலர்த்தி விடு! வளர்த்து விடு! கோள்கள், சுடர்களெல்லாம் குறித்தபடி செல்வதைப்போல் வாழும் வாழ்வுதனை என் வாழ்நாளில் வளர்த்து விடு! தாயே! இயற்கைத்தாயே! உந்தன் தாள் பணிந்து கேட்பதெல்லாம் இதனைத்தான்! இதனைத்தான்!'<br /><br />கனடா எல்லையினை அடையும் பொழுது எது நடந்தாலும் அதனை ஏற்கும் பக்குவத்தை அவன் பெற்றிருந்தான். விரிந்திருக்கும் ஆகாயமும், பூமியும் இருக்கும்வரை, இங்குள்ள உயிரினங்களொவ்வொன்றுமே தான் வாழும் சூழலுடன் தப்பிப்பிழைத்தலுக்காகப் போராடிக் கொண்டுதானிருக்கிறது. தப்பிப்பிழைத்தலில்தானே உயிரினம் ஒவ்வொன்றினதும் இருப்பின் தொடர்ச்சியே தங்கியுள்ளது. எத்தகைய சூழலையும் துணிச்சலுடன், உறுதியுடன், நம்பிக்கையுடன் உள்வாங்கித் தொடர்ந்து நடைபயில்வதற்குரிய பக்குவத்தை அவனது அமெரிக்க மண்மீதான அனுவங்கள் மேலும் அதிகமாக்கி விட்டுள்ளன. அந்த அனுபவங்களின் துணையுடன் அவன் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கின்றான். நம்பிக்கையுடன் வாழ்க்கை அற்புதமாக விரிந்து கிடக்கின்றது.<br /><br />இப்பூமிப்பந்தின் நானா திக்குகளிலும் போர்களினாலும், அடக்குமுறைகளினாலும் ஏதிலிகளாக மக்கள் கூட்டம் உறவுகளைப் பிரிந்து இருத்தலுக்கானதொரு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது; சொந்தமண் பற்றிய கனவுகளுடன் அவர்களின் பயணம் பலவேறு திக்குகளிலும் தொடருகின்றது. ஒட்டிஉறவாடிச் சொந்தம் கொண்டாடிய மண்ணுடன் மீண்டும் பின்னிப் பிணைந்து சுகித்திட முடியாத சுழல்கள்! போர்கள்! புகுந்த இடத்திலும் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தப்பிப் பிழைத்தலுக்கான போராட்டங்கள். அங்குமில்லை. இங்குமில்லை. நம்பிக்கைக் கனவுகளுடன் தொடரும் திரிசங்கு வாழ்க்கை.<br /><br />வாயுக் குமிழிக்குள் வளையவரும் விரையும் வாழ்வு! உணராத உயிர்களால் குமிழி என்று உடையுமோ? குமிழியின் நிலையற்ற தன்மையினை உணராத உயிர்களோ உள்ளிருந்து கும்மாளமிடுகின்றன. குமிழியினை உடைப்பதென்றே கங்கணம் கட்டி நிற்கின்றனவா! ஆயினும் அவனது பயணம் மீண்டும் தொடங்கும் மிடுக்கெனத் தொடர்கிறது. 'தீமையெலாம் அழிந்துபோம்! திரும்பி வாரா!'வென்னும் நம்பிக்கையில் தொடரும் பயணமது! 'எப்போதுஞ் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்குங் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாது தொடரும் பயணமது! 'இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு, தின்று விளையாடியின்புற்றிருந்து வாழுமொரு' பயணமது! பஸ் இருளைத் துளைத்துக் கொண்டு எல்லையினை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இந்த இருளின்பின்னால் நிச்சயமாக விடிவொன்று மலருமென்ற நம்பிக்கையில் தொடரும் பயணமது.</span><br />
<span style="font-size: 78%;"><br /></span><span style="font-size: 100%;"><b>முற்றும்!</b></span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-60636124382939213252007-10-24T21:38:00.000-04:002020-05-03T13:33:10.533-04:00தொடர் நாவல்: குடிவரவாளன்! - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVrlo1gIHypazQl2csHWACe6EXFEEVQtGxi6-ws1-D22QsejROoQwuiuov5XMqzSRfI7rJciB69ad2OffYIXxqsCHUQAwWjiaI8sGgsPFFLIH8D1i2XINz9SWOLu9eC8arnF-J/s1600-h/man.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5125083190689312498" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVrlo1gIHypazQl2csHWACe6EXFEEVQtGxi6-ws1-D22QsejROoQwuiuov5XMqzSRfI7rJciB69ad2OffYIXxqsCHUQAwWjiaI8sGgsPFFLIH8D1i2XINz9SWOLu9eC8arnF-J/s320/man.jpg" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" /></a> <b></b><br />
அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்...<br />
<br />
<span style="font-size: 78%;">ஸ்பானிஷ்கார முகவனான பப்லோவுடனான அனுபத்தின் பின்னர் இளங்கோ முகவர்களின் மூலம் வேலை தேடும் படலத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். நேரடியாகவே நகரில் அலைந்து திரிந்து வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தான். சட்டவிரோதக் குடிகள் மில்லியன் கணக்கில் வசிக்குமொரு மாநகரில் தனக்கேன் வேலையொன்றை எடுப்பது சிரமமாகவிருக்கிறதென்று எண்ணியெண்ணி மனம் சலித்தான். இருந்தாலும் சோர்ந்து விடாமல் முயனறு கொண்டிருந்தான். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில்தான் அவன் ஜெயரடணத்தை மான்ஹட்டன் நகரத்துத் தெருக்களிலொன்றில் தற்செயலாகச் சந்தித்தான். ஈழத்தின் வன்னிமாவட்டத்தின் முக்கிய நகர்களிலொன்றான வவுனியாவைச் சேர்ந்தவனவன். நாற்பத்தியாறாவது தெருவிலுள்ள இத்தாலியனின் உணவகமொன்றில் பகல் நேரத்தில் உணவக உதவியாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இளங்கோ அன்றாட வாழ்வுக்கே திண்டாடுவதைப் பார்த்த அவன் இளங்கோவுக்குப் பின்வருமாறு புத்திமதியொன்றைக் கூறினான்: "இளங்கோ உனக்கு விருப்பமென்றால், பகல்நேரத்தில் ஓரிரு மணித்தியாலங்கள் செய்யக் கூடியதொரு சிறு வேலையொன்றுள்ளது, அதனை உனக்கு எடுத்துத் தரலாம். ஆனால் உன்னால் அதனைச் செய்ய முடியுமோ தெரியாது.."<br /><br />இவ்விதம் ஜெயரட்ணம் இழுக்கவே இளங்கோ "பரவாயில்லை ஜெயம். சொல்லு. முடிந்தால் செய்யிறேன். பார்ப்பம்" என்றான்.<br /><br />அதற்கு ஜெயரட்ணம் "வேலையொன்றும் பெரிதாகக் கஷ்ட்டமான வேலையில்லை. மத்தியான நேரத்தில் பதினொரு மணியிலிருந்து இரண்டு மணிவரையிலை எங்கட ரெஸ்ட்ராண்டிறிற்கு வருகிற ஓர்டர்களுக்குரிய சாப்பாட்டைக் கொண்டு சென்று குடுப்பதுதான். 'டெலிவரி' வேலை. சில் நேரத்திலை கிட்டடியிலையும் இருக்கும். சில நேரத்திலை ஹை ரைஸ் பில்டிங்கிலை ஐம்பது அறுபது புளோரென்று ஏறி இறங்கவேண்டியும் வரும். பெரிதாகச் சம்பளமெதுவும் தரமாட்டான்கள். மினிமத்திற்கும் குறைச்சுத்தான் தருவான்கள். ஆனா சாப்பாட்டை ஓரடர் பண்ணுறவங்கள் நல்லா டிபஸ் தருவாங்கள். அதெல்லாம் உனக்குத்தான். மற்றது..."<br /><br />"மற்றது.. என்ன " என்றான் இளங்கோ.<br /><br />அதற்கு ஜெயரடணம் தொடர்ந்து விளக்கமளித்தான்: "மத்தியானச் சாப்பாடும் தருவாங்கள். எங்கடை ரெஸ்டாரண்டிலிருந்து என்னத்தை வேண்டுமென்றாலும் எடுத்துத் தின்னலாம். அந்த விதத்திலை பார்க்கேக்கை பரவாயில்லையென்று சொல்லலாம். இன்னொரு நல்ல வேலை கிடைக்கிற வரையிலை கொஞ்ச நேரம் செய்யிறதாலை உனக்குத்தான் நல்லது. நல்லா யோசித்துச் சொல்லு. இன்றைக்கு முழுக்க நல்லா யோசி. விருப்பமென்றால் நாளைக்கே எங்கட ரெஸ்டாரண்டிற்கு பத்து மணி போலை வா. முதலாளிக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறன்."<br /><br />இதற்கு அடுத்த நாள் மறுமொழி கூறுவதாகக் கூறி விட்டு இளங்கோ ஜெயரட்ணத்திடமிருந்து விடைபெற்றான். அன்று தன்னிருப்பிடம் திரும்பும்போது பாதாள இரயிலில் அதுபற்றியே சிந்தித்துக்கொணடிருந்தான். ஒரு விதத்தில் ஜெயரட்ணம் கூறுவதும் சரியாகவே பட்டது. பக்ற்பொழுதில் மூன்று மணித்தியாலங்கள்தான் வேலை. மணிக்கு மூன்று டாலர்கள் தருவார்கள். ஐந்து நாட்கள் வேலை செய்தால் நாற்பத்தியைந்து டாலர்கள் சம்பளமாகக் கிடைக்கும். அது அறை வாடகைக்கும், ஒரு போத்தலுக்கும் போதும். மூன்று மணித்தியாலத்திலும் பத்திலிருந்து இருபது டாலர்கள் வரையில் டிப்ஸ் கிடைக்குமென்று ஜெயம் கூறியிருந்தான். அந்த வழியில் பதினைந்து டாலர்களென்று பார்த்தாலும் வாரத்திற்கு எழுபத்தைந்து டாலர்கள் வரையில் வரும். எழுபத்தைந்தும் நாற்பத்தைந்தும் நூற்றியிருபது டாலர்கள் வரையில் வருமானம் வரும். அதே சமயம் மத்தியானச் சாப்பாடு இலவசமாக் கிடைக்கும். அதற்குரிய செல்வாகப் பத்து டாலர்களைப் போடலம். அந்த வகையில் வாரத்திற்கு ஐம்பது டாலர்கள் வரையில் வரும். ஆக மொத்தம் வாரம் நூற்றியெழுபது டாலர்கள் வரையில் வருமொரு தொழிலாக அதனைக் கருதலாம். அதுவும் மூன்றே மூன்று மணித்தியாலங்கள்தான் வேலை. செய்து பார்ப்பதில் தவறெதுவுமில்லை. கிழமைக்கு ஐம்பது டாலர்களையாவது சேமிக்க வேண்டும். அவ்விதம் சேமித்தால் ஒரு<br />மாதத்திலை இருநூறு டாலர்கள வரையில் சேமிக்கலாம். ஆறு மாதங்கள் இவ்விதம் செய்தாலும் குறைந்தது ஆயிரத்தி இருநூறு டாலர்கள் வரையிலாவது சேர்க்கலாம். குறைந்தது கையில ஆயிரம் டாலர்கள் சேரும் வரையிலாவது இவ்விதம் வேலை செய்து பார்ப்பதில் தவறெதுவுமில்லை. இன்னுமொரு நியூயார்க் மாநகரத்து அனுபவமாக இதுவும் இருந்து விட்டுப் போகட்டும். இதற்குப் பிறகு கோஷிடமும் அவனுடைய தொழிற்சாலையிலேதாவது வேலை கிடைக்குமாவென்று முயன்று பார்க்க வேண்டும். அதுவே அவன் நியுயார்க் மாநகரத்தில் இவ்விதமாகச் சட்டவிரோதமாகச் செய்யும் இறுதி வேலையாகவிருக்க வேண்டும். அதுவும் பிழைத்தால் இந்த நகருக்குப் பிரியாவிடை கூறிவிட வேண்டியதுதான். எந்த நாட்டுக்குப் போகவென்று ஆரம்பத்தில் பயணத்தைத் தொடங்கினானோ அந்த நாட்டுக்குக், கனடாவுக்குச் சென்று விட வேண்டியதுதான். உலகத்தின் சொர்க்கபுரியான அமெரிக்காவின் பிரதான நகரான நியுயார்க் மாநகரில் இதுவரையில் உணவகத்தில் 'கிட்டார்' அடித்துப் பார்த்தாகி விட்டது; மழைக்குக் குடை பிசினஸ் செய்து பார்த்தாயிற்று; நடைபாதை வியாபாரமும் செய்தாயிற்று; போதாதற்கு விளம்பரங்களும் விநியோகித்துப் பார்த்தாயிற்று. இனி மத்தியான உணவினை விநியோகித்துப் பார்ப்போம்; அதுவும் சரியில்லாவிட்டால் கொஷின் தொழிற்சாலையிலும் ஏதாவது வேலை கிடைக்கிறதாவென்று பார்ப்போம். ஒரு சமயம் அனிஸ்மானிடம் தொடுப்பதாகக் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ள அமெரிக்க அரசுக்கெதிரான மானநஷ்ட்ட வழக்கில் அதிருஷ்ட்டமடித்தால் இங்கேயே இருந்து விட வேண்டியதுதான். இவ்விதமாகச் சிந்தனை பல்வேறு வழிகளிலும் கிளைவிட்டோடும் நதியாகவோடியது. இளங்கோ பெரிதும் சிந்தனை வயப்பட்டிருந்தான்.<br /><br />அன்று அவன் நகர் முழுவதும் அலைந்து அறைக்குத் திரும்பும்பொழுது இரவு மணி பத்தைத் தாண்டி விட்டது. பாதாள இரயிலில் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தவனை ஒரு குரல் நனவுலகுக்கு மீட்டு வந்தது.<br /><br />"உனக்கு ஆட்சேபனையேதுமில்லையென்றால் உன்னுடன் கொஞ்சம் கதைக்கலாமா?"<br /><br />அவனது இருக்கைக்கெதிரிலிருந்த பெண்ணொருத்தியின் குரல்தானது. பார்ப்பதற்கு 'பாப்' பாட்டுக்காரி 'சிந்தி லோப்பர்' அவளது புகழ்பெற்ற பாடலான 'Time After Time' இல் வருவதைப் போல் பல்வேறு வர்ணங்களிலான ஆடைகளுடனும், கூந்தலுடனுமிருந்தாள். அவனது அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்க்கையில் அறிமுகமான பாப் பாடகி சிந்தி லோப்பர். அவளது 'நேரத்திற்கு நேரம்' என்ற மேற்படி பாடலை அவன் இரசித்துக் கேட்பதுண்டு; பார்ப்பதுண்டு. அவளது உணர்ச்சி பூர்வமான குரலில் அந்தப் பாடலைக் கேட்பது அவனுக்குப் பிடிக்கும்..நள்ளிரவில் படுக்கையில் படுத்திருந்தபடி, கடிகாரத்தின் 'டிக்' 'டிக்' ஒலியினைக் கேட்டபடி பிரிந்த காதலனைப் பற்றிய நினைவுகளில், நினைவுகளுடன் மல்லாடியபடி பாடும் பாடல் சிந்தி லோப்பரின் அற்புதமான குரலிலும், நடிப்பிலும் சிறந்து விளங்கும். எண்பதுகளில் ஒரு கலக்குக் கலக்கிய பாடலது.<br /><br />If youre lost you can look and you will find me<br />Time after time.<br />If you fall I will catch you Ill be waiting<br />Time after time.<br /><br />After my picture fades and darkness has<br />Turned to gray<br />Watching through windows youre wondering<br />If Im ok<br />Secrets stolen from deep inside<br />The drum beats out of time<br /><br />என்று அவள் பாடும்பொழுது உணர்வு பூர்வமாக உருகியுருகிப் பாடுவாள். அவனுக்குப் பிடித்த வரிகள். பார்வைக்கு சிந்தி லோப்பரைப் போலவேயிருந்த அந்த வெள்ளைக்காரப் பெண் தன்னுடன் எதைப் பற்றிக் கதைக்கப் போகின்றாளோவென்று வியந்தபடி , தனது சிந்தனையைக் கலைத்த அவளையே நோக்கினான் இளங்கோ. அத்துடன்<br /><br />"எனக்கேதும் ஆட்சேபனையில்லை. தாராளமாகவே நீ கதைக்கலாம்" என்றும் கூறினான்.<br /><br />"நானும் அப்பொழுதிருந்து பார்த்துக் கொண்டே வருகிறேன். அப்படியென்ன பலமான ஆழ்ந்த யோசனை?" என்றாள்.<br /><br />அதற்கவன் "சிந்திப்பதென் பொழுது போக்குகளிலொன்று. சிந்திக்கும்பொழுது நான் என்னையே மறந்து விடுவதுண்டு." என்றான்.<br /><br />அதற்கவள் தன் அகன்ற விழிகளை மேலும் விரித்தபடி "சிந்திப்பதுன் பொழுது போக்கா? ஆச்சரியமாகவிருக்கிறதே! எததனையோ பொழுதுபோக்குகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தவிதமான பொழுதுபோக்கு பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்" என்று<br />வியந்தாள்.<br /><br />அதை விட்டால் ஒவ்வொரு கணமும் இருப்புக்காகப் போராடுமவன் வாழ்க்கையில் வேறென்ன பொழுது போக்கிருக்க முடியும்? கனவுகள், கற்பனைகள், திட்டங்களெனச் சிந்திப்பதையும், இழந்தவற்றை இரை மீட்டு மகிழ்வதையும் விட்டால் வேறென்ன பெரிய பொழுது போக்கிருக்க முடியும்? செலவில்லாத பொழுது போக்குகளிலொன்று இவ்விதம் சிந்திப்பது. அவனது தற்போதைய பொருளியல் நிலைக்கேற்ற நல்லதொரு பொழுதுபோக்கு.<br /><br />அவன்: "செலவில்லாத பொழுது போக்கு இதுபோல் வேறென்னவிருக்க முடியும்?"<br /><br />அவள்: "ஒரு விதத்தில் நீ கூறுவதும் சரிதான்"<br /><br />அவன்: "ஒன்று சொல்வேன் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டாயே?"<br /><br />அவள்: "நிச்சயமாக நினைக்க மாட்டேன். நீ தாராளமாகக் கூறலாம்."<br /><br />அவன்: "இரவின் மடியில் இழந்த நாட்களின் நினைவுகளை இரை மீட்டபடி சிந்தி லோப்பர் பாடும் 'நேரத்துக்கு நேரம்' பாடல்<br />கேட்டிருக்கிறாயா?"<br /><br />அவள்: (ஆச்சரியத்துடன்)"உனக்கு அவளைத் தெரியுமா? சிந்தி எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அவளது இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். உனக்கும் பிடிக்குமா?"<br /><br />அவன்: "எனக்கும் கேட்பதற்குப் பிடித்த பாடல்களிலொன்று இந்தப் பாடல். நான் சொல்ல வந்தது..."<br /><br />அவள்: "ஆம். ஆம். நீ ஏதோ சொல்ல வந்தாய். இடையில் குறுக்கிட்டு விட்டேன். அப்படியென்ன சொல்ல வந்தாய்?"<br /><br />அவன்: "உன்னைப் பார்த்தால் அந்தப் பாடகியைப் போலவே தோற்றத்திலிருக்கிறாய். அவளைப் போலவே கூந்தலை பல்வர்ணங்களில் அலங்கரித்திருக்கிறாய். ஆடைகளையும்தான். குறிப்பாக உன் அகன்ற கண்களும், வட்ட முகமும், சிரிப்பும் கூட அவளையே எனக்கு ஞாபகப்படுத்துகிறது"<br /><br />அதைக் கேட்டதும் அவள் பலமாகச் சிரித்தாள். அத்துடன் கூறினாள்: "இதையா கூற வந்தாய்? உனது பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. என் சிநேகிதிகள் கூட அவ்விதம்தான் கூறுவார்கள். பல சமயங்களில் நானும் அவளைப் போலவே ஆடைகள் அணிந்து கொள்வதும், தலையலங்காரம் செய்து கொள்வதும் வழக்கம். உண்மையில் நீ இவ்விதம் கூறுவது எனக்கு மகிழ்ச்சியைத்தான் தருகிறது. என் அபிமானப் பாடகிகளொருத்திபோல் நானிருக்கிறேனென்று நீ கூறுகிறாய். எவ்வளவு பெருமையாகவிருக்கிறது தெரியுமா? நன்றி.<br />நன்றி. மிகவும் பற்பல நன்றி.."<br /><br />இவ்விதமாக அவர்களது உரையாடல் பல்வேறு விடயங்களைத் தொட்டுத் தொடர்ந்தது.<br /><br />"உன்னுடன் இதுவரையில் இவ்விதம் கதைத்துக் கொண்டு வந்தது மகிழ்சியாகவிருந்தது. இந்த இரவினை ஒருபோதுமே மறக்க மாட்டேன். உனக்கு விருப்பமென்றால் இந்த இரவினை உன்னுடன் கழிப்பதில்கூட எனக்கு ஆட்சேபனையேதுமில்லை. எங்காவது உணவகத்துக்கோ அல்லது கிளப்புக்கோ செல்லலாம். என்ன சொல்லுகிறாய்?'<br /><br />அவனுக்கு அவளது வெளிப்படையான பேச்சு வியப்பினைத் தந்தது. அவளது வெளிப்படையான பேச்சும், நடத்தையும் அவளது நல்லுள்ளத்தை வெளிப்படுத்தின.<br /><br />அத்துடன் அவன் கூறினான்: "உன் அழைப்புக்கு நன்றி. ஆனால் தற்போது நான் முக்கியமானதொரு விடயமாக ஒருவரை சந்திக்க வேண்டியிருக்கிறது. மன்னித்துக் கொள். நடுவழியில் என் பிரயாணத்தை உன் சந்திப்பு மூலம் சிறப்பித்ததற்கு என் நன்றி பல. இந்த இரவையும், உன்னுடனான இந்தச் சந்திப்பையும் ஒருபோதும் மறக்க மாட்டேன். சிந்தி லோப்பரின் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு சமயமும் நீயும் என் நினைவுக்கு வருவாய்" என்றான். மூஞ்சூறு தான் போக வழியைக் காணவில்லை. விளக்குமாறைத் தூக்கச் சொல்கிறாள். ஒருவேளை சாப்பாட்டுக்கே 'ததிங்கிணதோம்' போடவேண்டிய நிலையில் கிளப்புக்கு அழைக்கிறாள்?<br /><br />அவள் இறங்குவதற்கான தரிப்பிடம் வந்ததும் சிறிது வாடிய வதனத்துடன் சிறிய காகிதத்துண்டொன்றில் தனது தொலைபேசி இலக்கத்தையெழுதி அவனிடம் தந்தபடி "எப்பொழுதுதாவது நீ என்னச் சந்திக்க் விரும்பினால் இந்தத் தொலைபேசி இலக்கத்துக்கு அழை. நல்லதொரு சந்திப்பினைத் தந்ததற்காக இந்த இரவுக்கு நன்றி.. இந்தப் பயணத்தில் நல்லதொரு துணையாகவிருந்ததற்கு உனக்கும் நன்றி" என்றவள் சிந்தி லோப்பரின் Time After Time பாடலில் வரும் 'If youre lost you can look and you will find me Time after time; If you fall I will catch you Ill be waiting Time after time' என்ற வரிகளைப் பாடி அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டியபடி விடைபெற்றாள்.<br /><br />அவனது தனித்த பயணம் அந்த நள்ளிரவில் தொடர்ந்தது.<br /><br />[அடுத்த அத்தியாயத்தில் முடியும்] </span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-45191701269178872532007-10-24T21:35:00.001-04:002020-05-03T13:34:14.121-04:00தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiELGYMePYRLlY0BgYK8P4Fln84PYeMM-BsSQ4X7H7YNuL5s0fRngwPoYekwsJV0058MhEyIPFoIrosdNTU3rAxUtKX1CQK-O2oqEaeBRcNphZfcyIlrmISTp74uhl2aiZIFs7_/s1600-h/man.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5125082464839839458" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiELGYMePYRLlY0BgYK8P4Fln84PYeMM-BsSQ4X7H7YNuL5s0fRngwPoYekwsJV0058MhEyIPFoIrosdNTU3rAxUtKX1CQK-O2oqEaeBRcNphZfcyIlrmISTp74uhl2aiZIFs7_/s320/man.jpg" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" /></a> <b></b><br />
அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!<br />
<br />
<span style="font-size: 78%;"><b><i>இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து..........<br /></i></b>வாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில சமயங்களில் சலிப்பு மிகவும் அதிகமாகி நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. அச்சமயங்களிலெல்லாம் எந்தவிதமான எதிர்மறையான சிந்தனைகளும் தாக்கவிடாமலிருப்பதற்காக நேரம் காலமென்றில்லாமல் நகர் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். அருள் கூட சில சமயங்களில் என் அலைச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறையிலேயே தங்கி விடுவான். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, சூழலை, சமூக வாழ்க்கையினை எனப் பல்வேறு விடயங்களை அறியும்பொருட்டுக் கவனத்தைத் திருப்பினேன். அவ்வப்போது நகரத்தின் பிரதான நூலகத்துக்குச் செல்வதுமுண்டு. ஒரு சில சமயங்களில் புரூக்லீன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நண்பர்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக அளவளாவி வருவதுமுண்டு.<br /><br />இதே சமயம் அனிஸ்மான் கூறியபடி மான்ஹட்டனிலிருந்த பலசரக்குக் கடையொன்றை நடாத்திக் கொண்டிருந்த குஜராத் தம்பதியினரிடமிருந்து வேலை வழங்கற் கடிதமொன்றினையும் எடுத்து வேலை செய்வதற்குரிய அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பித்தோம். அதே சமயம் அனிஸ்மான் கூறியபடியே எம் விடயத்தில் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்தத்னாலேற்பட்ட மனித உரிமை மீறல்கள் விளைவித்த பாதிப்புகளுக்காக அமெரிக்க அரசிடம் நட்ட ஈடு கேட்டும் விண்ணப்பித்தோம். நாட்கள்தான் வேகமாகச் சென்று கொண்டிருந்தனவே தவிர காரியமெதுவும் நடக்கிறமாதிரித் தெரியவில்லை. இதே சமயம் மீண்டும் பகல் நேரங்களில் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தோம். இவ்விதமாகக் காலம் சென்று கொண்டிருந்தபோதுதான் ஒருநாள் நண்பகற் பொழுதில் மகேந்திரனைச் சந்தித்தேன். இவன் கிரேக்கக் கப்பலொன்றில் பல வருடங்களாக வேலை பார்த்து விட்டு அண்மையில் அக்கப்பல் நியூயார்க் வந்திருந்த சமயம் பார்த்து இங்கேயே தங்கி விட்டவன். இப்பொழுது என்னைப்போல் வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் வழக்கம் போல் பகல் முழுவ்தும் அலைந்து திரிந்து சலித்துப் போய் நாற்பத்திரண்டாவது வீதியிலிருந்த பிரதான பஸ் நிலையத்தில் பொழுதினை ஓட்டிக் கொண்டிருந்தபொழுது அவனாகவே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தான் வேலை தேடித்தருமொரு முகவனைச் சந்திக்கப் போவதாகவும் , அவன் மிகவும் திறைமைசாலியென்று கேள்விப்பட்டிருப்பதாகவும், நான் விரும்பினால் நானும் அவனுடன் அந்த முகவனைச் சந்திக்க வரலாமென்றும் கூறினான். அவனது கூற்றிலிருந்த உற்சாகம் சலித்துக் கிடந்த என் மனதிலும் மெல்லியதொரு நப்பாசையினை ஏற்படுத்தியது. அத்துடன் மகேந்திரன் கூறிய இன்னுமொரு விடயம்தான் எனக்கு மீண்டும் அத்தகையதொரு நப்பாசையினை ஏற்படுத்தக் காரணமாகவிருந்தது. அவனறிந்தவகையில் இந்த முகவன் அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம். அவன் இவ்விதமாகவெல்லாம் அந்த முகவனைப் பற்றி அளந்து கொட்டவே நான் கேட்டேன்: "இதையெல்லாம் எங்கையிருந்து நீ அறிந்து கொண்டனி". அதற்கவன் வழியில் சந்தித்த ஸ்பானிஷ்காரனொருவன் கூறியதாகவும், அவன் தந்திருந்த பத்திரிகையொன்றிலும் இந்த முகவனின் விளம்பரம் வந்திருந்ததாகவும், அதில் கூட இவனைச் சந்திக்கும் எவரையும் உடனடியாகவே வேலை செய்யுமிடத்திற்கு அனுப்பிவிடுவதில் இவன் சமர்த்தனென்று குறிப்பிடப்பட்டிருந்ததைத் தான் பார்ததாகவும் கூறியபொழுது எனக்கும் அந்த முகவன்பேரில் நல்லதொரு அபிப்பிராயமேற்பட்டது. இதன்விளைவாக நானும் மகேந்திரனுடன் சேர்ந்து அந்த முகவனிடம் செல்வதற்குச் சம்மதித்தேன். விடா முயற்சியில்தானே வாழ்க்கையின் வெற்றியே தங்கியுள்ளது. ஊக்கமது கைவிடேலென்று அவ்வைக் கிழவி கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துரைத்திருக்கின்றாளல்லவா.<br /><br />பப்லோ ஒரு ஸ்பானிஷ்கார முகவன். மிகவும் அழகிய தோற்றமும், மயக்கும் குரல்வாகும் வாய்க்கப்பட்டவன். அவனும் நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கண்மையிலுள்ள சிறியதொரு காரியாலயத்தில் தன் தொழிலை நடாத்திக் கொண்டிருந்தான். நாங்களிருவரும் அவனைச் சந்தித்தபொழுது அவன் சிறிது ஓய்வாகவிருந்தான். ஓரிருவர்தான் அவனைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார்கள். அவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு எம்மிடம் வந்தவன் எங்களிருவரையும் தன்னறைக்கு அழைத்துச் சென்றான். எங்களிருவரின் சோகக் கதைகளையும் மிகவும் ஆறுதலாகவும், அனுதாபத்துடனும் கேட்டான். அதன்பிறகு அவன் கூறினான்: "உங்களைப் போல்தான் நானும் ஒருகாலத்தில் தென்னமெரிக்காவிலிருந்து இந்த மண்ணுக்குக் கனவுகளுடன் காலடியெடுத்து வைத்தவன். அதனால் உங்களது உள்ளத்துணர்வுகளை என்னால் நன்கு உணர முடிகிறது. அன்று நானடைந்த வேதனையான அனுபவங்களின் விளைவாகத்தான், இவ்விதமாக இந்த மண்ணில் நான் அன்று வாடியதைப் போல் வாடும் உங்களைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காக இந்த வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தையே ஆரம்பித்தேன். இதற்காக நான் அறவிடுவதும் கூட அப்படியொன்றும் பெரிய கட்டணமல்ல. ஐம்பது டாலர்கள் மட்டும்தான்".<br /><br />அதன்பின் எங்களிருவரையும் வேலை தேடுவதற்கான விண்ணப்படிவங்களை நிரப்பும்படி தந்தான். தான் எங்களிருவரையும் நல்லதொரு தொழிற்சாலைக்கு அனுப்பப் போவதாகவும் , அதற்கேற்ற வகையில் அனுப்புமிடத்தில் எம் வேலை அனுபவங்களைக் கூறவேண்டுமெனவும் அறிவுரைகள் தந்தான். ஐம்பது டாலர்களைக் கட்டிய மறுகணமே தொலைபேசியில் யாருடனோ எம்மிருவரின் வேலை விடயமாகக் கதைத்தான். உடனடியாகவே அனுப்பி வைப்பதாகவும் உறுதியளித்தான். அதன்பிறகு எங்கள் பக்கம் திரும்பி "நண்பர்களே! இன்று நீங்கள் யார் முகத்தில் விழித்தீர்களோ! உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. உங்களிருவரையும் நகரிலுள்ள நல்லதொரு 'மெயிலிங்' தொழிற்சாலைக்கு அனுப்பப் போகின்றேன். வேலையும் அவ்வளவு சிரமமானதல்ல. மெயில்களை தரம் பிரிப்பதுதான் பிரதானமான வேலை. அது தவிர வழக்கம்போல் தொழிற்சாலைக்குரிய பொதுவான வேலைகளுமிருக்கும். வேலையை மட்டும் ஒழுங்காகச் செய்தீர்களென்றால் உங்களிருவருக்கும் நல்லதொரு எதிர்காலமே இருக்கிறது. என்னை உங்களின் கடவுளாகவே கொண்டாடுவீர்கள்." இவ்விதம் கூறியவன் குயீன்ஸ்சில் 'ஸ்டெயின்வே' பாதாள இரயிற் தரிப்பிற்கண்மையிலிருந்த தொழிற்சாலையொன்றின் முகவரியைத் தந்து, அங்கு சென்றதும் மனேஜர் டோனியைச் சந்திக்கும்படி கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தான்.<br /><br />மகேந்திரனோ இதனால் பெரிதும் உற்சாகமாகவிருந்தான். "பார்த்தியா. ஆள் வலு கெட்டிக்காரன்தான். இவனைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான்" என்றான். இதே சமயம் என் நெஞ்சிலும் ஆனந்தம் கூத்தாடாமலில்லை. இந்த வேலை கிடைத்ததும் இரவு அருளிடம் கூறி அவனை அதிசயிக்க வைக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். அத்துடன் அவனையும் அடுத்தநாள் பப்லோவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் மேலதிகத் திட்டமொன்றினையும் போட்டேன். இவ்விதமான திட்டங்கள், கனவுகளுடன் அத்தொழிற்சாலையினைச் சென்றடைந்தோம். 'ரிசப்ஷனில்' இருந்தவளிடம் மனேஜர் டோனியைச் சந்திக்க வந்த விடயத்தைக் குறிப்பிட்டோம். அச்சமயம் அவ்வழியால் வந்த நடுத்தர வயதினான வெள்ளை நிறத்தவனொருவன் "நான் தான் நீங்கள் குறிப்பிடும் டோனி. யார் உங்களை அனுப்பியது பப்லோவா" என்றான். நாம் அதற்கு "ஆம்" என்று பதிலளிக்கவுமே அவன் உடனடியாக எங்களிருவரையும் அருகிலிருந்த உணவறைக்குக் கூட்டிச் சென்றமர்த்தினான். அத்துடன் பின்வருமாறும் கூறினான்: "உண்மையைச் சொன்னால் எனக்கு இந்த ப்ப்லோவை யாரென்றே தெரியாது. அண்மைக் காலமாகவே இவன் என் பெயரை எப்படியோ தெரிந்து கொண்டு உங்களைப் போல் பலரை இங்கு இவ்விதமாக அனுப்பி வைக்கின்றான்." . எங்களிருவருக்கும் பெரிதும் திகைப்பாகவிருந்தது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. டோனி மேலும் தொடர்ந்து "யாரவன்? வேலை வாய்ப்பு தேடித்தரும் முகவனா?" என்றான். அதற்கு நாங்களிருவரும் 'ஆமென்று ' தலையாட்டவே அவன் கேட்டான்" "இதற்காக நீங்களேதாவது பணம் கொடுத்தீர்களா?" இதற்கும் நாம் பரிதாபமாக 'ஆமென்று ' பதிலிறுக்கவே அவன் சிறிது பரிதாப்பட்டான். அத்துடன் கூறினான்: "இந்த விடயத்தில் நான் கூறக் கூடியது இது ஒன்றுதான். இந்த விடயத்தை இங்குள்ள காவற துறையினரிடம் சென்று முறையிடுங்கள். இல்லாவிட்டால் இவன் தொடர்ந்தும் உங்களைப் போல் பலரை ஏமாற்றிக் கொண்டேயிருப்பான். என்னை இந்த விடயத்தில் நீங்கள் சாட்சியத்திற்காக அழைத்தால் வந்து கூறத் தயாராகவிருக்கிறேன்."<br /><br />அச்சமயத்தில் மகேந்திரனின் முகத்தைப் பார்த்தேன். என்னைப் பார்ப்பதற்கே கூச்சப்பட்டுக் கொண்டிருந்தான். வெளியில் வந்தபொழுது சிறிது நேரம் இருவருமே ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. காவற் துறையினரிடம் முறையிடும்படி டோனி கூறியது நினைவுக்கு வந்தது. எப்படி முறையிடுவது? நாங்களோ வேலை செய்வதற்கும் அனுமதியற்ற சட்டவிரோதக் குடிகள். சட்டவிரோதமாக வேலை செய்வதற்காகப் பணம் கொடுத்தோமென்று எவ்விதம் அவர்களிடம் முறையிடுவது? எங்களைப் போன்றவர்களின் நிலையினைப் பயன்படுத்திப் பணம் பறிப்பதற்குத்தான் எத்தனையெத்தனை கூட்டங்களிங்கே?<br /><br />அச்சமயம் மகேந்திரன் பப்லோவைப் பற்றி 'அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம்' என்று கூறியது நினைவுக்கு வந்தது. இலேசாகச் சிரிப்பும் வந்தது. "என்ன சிரிக்கிறாய்?" என்றான் மகேந்திரன்.<br /><br />"நீ அவனைப் பற்றி ஆரம்பத்தில் கூறியதை நினைச்சதும் சிரிப்பு வந்த'தென்றேன்.<br /><br />அவன் புரியாத பார்வையுடன் என்னைப் பார்த்தான்.<br /><br />நான் கூறினேன்: "நீ தானே சொன்னாய் அவன் முதல்நாளிலேயே வேலைக்கு அனுப்பி விடுவதில் வல்லவனென்று. அதை நினைச்சுத்தான் சிரித்தேன். ஒரு விதத்திலை அதுவும் சரிதான். எங்களையும் உடனேயே வேலை செய்யுமிடத்துக்கு அனுப்பி விட்டான்தானே. வேலைக்கு அனுப்புவதிலை கெட்டிக்காரனறுதானே சொல்லுகிறான். வேலையை எடுத்துத் தருவதிலை கெட்டிக்காரனென்று அவன் கூறவில்லைதானே. இந்த விதத்திலை அவன் தன்னைப் பற்றிப் பண்ணியிருக்கிற விளம்பரம் சரிதானே"<br /><br />இதைக் கேட்டதும் மகேந்திரனின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே!<br /><br />அன்றிரவு அறைக்குத் திரும்பியபொழுது அருள்ராசா கேட்டான்: "ஏதாவது கொத்தியதா?".சென்ற விடயம் வெற்றியா , தோல்வியா அல்லது காயா பழமா என்பதற்குப் பதிலாக நாம் 'கொத்தியதா' என்ற சொல்லினைப் பாவிப்பது வழக்கம். அந்த வழக்கத்தில்தான் அருள்ராசா அவ்விதம் கேட்டான். ஆனால் அவனுக்குப் பப்லோவென்றோர் அரவம் கொத்திய விடயத்தை எவ்விடம் தெரிவிப்பது?<br /><br />[தொடரும்] </span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-70444768919756138942007-10-24T21:33:00.000-04:002020-05-03T13:35:13.707-04:00தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghe_oDYq_VnzfOF0IwN8UMcC4LP_FSFMRtVJYNkWmFxXo9vUvd0CGJX8jv2NQCINgbUG0b-tDCyk0sym5mNYSRz5klpTUDdmqnlpOMGkWwKMlusou2Akg6yZhAtEzgwoi_7e4e/s1600-h/man.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5125081610141347522" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghe_oDYq_VnzfOF0IwN8UMcC4LP_FSFMRtVJYNkWmFxXo9vUvd0CGJX8jv2NQCINgbUG0b-tDCyk0sym5mNYSRz5klpTUDdmqnlpOMGkWwKMlusou2Akg6yZhAtEzgwoi_7e4e/s320/man.jpg" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" /></a> <b></b><br />
அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!<br />
<div>
<br />
<span style="font-size: 78%;">"வாருங்கள் என் அன்புக்குரிய நண்பர்களே! காலை வணக்கங்கள்! இன்று நான் உங்களை சந்திக்க விரும்பியதற்கொரு முக்கியமான காரணமுண்டு. அதற்குமுன்னர் உங்களது வாழ்க்கையைப் பற்றிச் சிறிது அறிய விரும்புகின்றேன். வாழ்க்கை எப்படியிருக்கிறது? என்னால் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டியதேதாவதிருக்கிறதா?" இவ்விதமாக இளங்கோவையும் அருள்ராசாவையும் வரவேற்றார் சட்டத்தரணி அனிஸ்மான்.<br /><br />இதற்கு இளங்கோவையே பதிலளிக்குமாறு பார்வையால் உணர்த்தினான் அருள்ராசா. அதனைப் புரிந்து கொண்ட இளங்கோ சிறிது விபரமாகக் கூறத்தொடங்கினான்: "நற்காலை வந்தனங்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும் அனிஸ்மான் அவர்களே! உங்களது பரிவான விசாரணைக்கு எமது நன்றி. நீங்கள் உடனடியாக அழைத்ததால்தான் தற்போது வந்துள்ளோம். இருந்தாலும் சிறிது காலமாகவே உங்களைச் சந்திக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். அதற்குள் நீங்களே அழைத்து விட்டீர்கள் பழம் பழுவிப் பாலில் விழுந்தது மாதிரி"<br /><br />'மேலே கூறுங்கள்' என்பது போன்றதொரு பாவனையில் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் அனிஸ்மான். இளங்கோவே மேலே தொடர்ந்தான்: "தற்போது எங்கள் முன்னாலுள்ள முக்கியமான பிரச்சினையே 'சமூகக் காப்புறுதி இலக்க அட்டை' போன்ற சட்டரீதியான ஆவணங்களைப் பெறுவதுதான். 'ச.கா.இ' அட்டை இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. எங்களிடமிருந்த கடவுச் சீட்டையும் குடிவரவுத் திணைக்களத்தினர் பாஸ்டனிலேயே பறித்து வைத்துள்ளனர். இந்நிலையில் 'ச.கா.இ.' அட்டையில்லாமல் சட்டரீதியாகவொரு வேலைகூடச் செய்ய முடியாமலுள்ளது. வங்கியொன்றில் கணக்கொன்றும் ஆரம்பிக்க முடியாமலுள்ளது. நீங்கள்தான் இந்த விடயத்தில் எப்படியாவது உதவ வேண்டும். ஒழுங்காக வேலையொன்றும் செய்ய முடியாமல் அன்றாட வாழ்க்கையையே கொண்டு நடத்த முடியாமலுள்ளது"<br /><br />இளங்கோ இவ்விதம கூறவும் அவன் கூறுவதையே மிகவும் அவதானமாகச் செவிமடுத்துக் கொண்டிருந்த சட்டத்தரணி அனிஸ்மான "உங்கள் நிலை எனக்கு நன்றாகவே புரிகிறது. நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு முயன்று பார்க்கிறேன் மேலும் நீங்கள் மட்டும் யாராவது ஒருவரது வர்த்தக நிறுவனத்திலிருந்து உங்களுக்கு வேலையிருப்பதாக ஒரு கடிதமொன்றினை எடுத்துத் தந்தால் அதனையும், உங்களது இன்றைய நிலையினையும் வைத்து குடிவரவுத் திணைக்களத்திடம் உங்களுக்கு வேலை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரம் கோரி விண்ணப்பிக்கலாம்."<br /><br />சட்டத்தரணி அனிஸ்மான் இவ்விதம் கூறவே அவர்களது உரையாடலின் நடுவே புகுந்த அருள்ராசா "எபபடியாவது நீங்கள் கூறியது போன்றதொரு கடிதத்தினை எடுத்துத் தருகின்றோம். தந்தால் எங்களுக்குச் சமூகக் காப்புறுதி இலக்க அட்டை கிடைக்குமென்பது என்ன நிச்சயம்?" என்று கேட்கவும் அனிஸ்மான் அதற்குப் பதிலாக "எதுவுமே நூற்றுக்கு நூறு நிச்சயமில்லை. ஆனால் முயன்று பார்ப்பதில் தவறொன்றுமில்லையே. அவ்விதமானதொரு 'வேலை வழங்கல்' கடிதமொன்றிருந்தால் அது உங்களுக்கு மிகவும் சார்பாக அமையும்" என்று விடையிறுத்தார்.<br /><br />அதற்கு இளங்கோவும், அருள்ராசாவும் "நீங்கள் கூறுவதும் சரிதான். எப்படியாவது அவ்விதமானதொரு 'வேலை வழங்கல்'<br />கடிதமொன்றினை எடுத்துத் தருகின்றோம்." என்று கூறினார்கள். அதன்பின் அவர்களது உரையாடல் அகதிக் கோரிக்கைக்கான விண்ணப்பம் பற்றித் திரும்பியது. அவர்களது அகதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்திற்கான விசாரணைக்கான திகதி அறிவித்துக் கடிதம் வரும். அதற்கு முன்னர் அவர் இன்னுமொருமுறை அவர்களிருவரையும் சந்தித்து அவர்களது அகதிக் கோரிக்கைக்கான முழு விபரங்களையும் பெற்றுக் கொள்வார். இவ்விதம் தெரிவித்த அனிஸ்மான தற்போது அவர்களது முக்கிய பிரச்சினை வேலை செய்வதற்குரிய சமூகக் காப்புறுதி இலக்க அட்டை பெறுவதுதான் என்றார். அவரைப் பொறுத்தவரையிலும் அது முக்கியமான விடயம். அவர்களிருவரும் வேலை செய்தால் மட்டுமே அவர்களால் அவருக்கு வழங்கவேண்டிய கட்டணத்தைச் செலுத்த முடியும். இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப் பற்றி அவருடன் கலந்துரையாடியபின் அனிஸ்மான் அன்று அவர்களை அழைத்ததற்கான விடயத்திற்கு வந்தார்.<br /><br />சட்டத்தரணி அனிஸ்மான்: " இது உங்களுக்கு இங்கேற்பட்ட நிலையுடன் தொடர்புள்ளது.."<br /><br />இளங்கோ, அருள்ராசா (ஒரே குரலில்): "புரியவில்லையே திரு. அனிஸ்மான். சற்று விபரமாகவே கூறுங்களேன்."<br /><br />அனிஸ்மான்: "உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் இந்த நாட்டிற்குச் சட்டவிரோதமாக வந்தவர்களல்லர். கனடாவிலுள்ள மான்ரியால் நகருக்குச் செல்வதுதான் உங்களது நோக்கமாகவிருந்தது."<br /><br />இளங்கோ, அருள்ராசா (இருவரும் மீண்டும் ஒருமித்த குரலில்): "ஆம்! ஆம்! நீங்கள் சொல்லுவது சரிதான்"<br /><br />அதன்பின் இளங்கோ தொடர்ந்தான்: "அப்படித்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். அதுதான் எங்களது நோக்கமாகவுமிருந்தது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையவேண்டுமென்று எப்பொழுதுமே நாங்கள் நினைத்திருக்கவில்லை. எங்களது போதாத காலம் எங்களை மான்ரியால் நகருக்கு ஏற்றிச் செல்ல வேண்டிய டெல்டா விமான நிறுவனம் மறுத்து விட்டதுதான். அதனால்தான் எங்களுக்கிந்த நிலை ஏற்பட்டது. அதுதான் காரணம். நீங்கள் சொல்வது சரிதான்."<br /><br />இப்பொழுது இளங்கோவை இடைமறித்த அனிஸ்மான் கூறினார்: "உண்மைதான். இந்த நாட்டிற்குச் சட்டவிரோதமாக வரவேண்டுமென்று எந்தவித எண்ணமுமில்லாமல் வந்த உங்களுக்கு இந்த நிலையேற்பட்டது வருத்ததிற்குரியது. அதற்காக இந்த நாட்டுக் குடிமகனென்ற வகையில் நான் வெட்கமடைகின்றேன். அதுதான் என் மனதினைப் போட்டு வருத்திக் கொண்டிருந்தது. அதற்காகத்தான் இந்த விடயத்தில் உங்களுக்கு நீதி கேட்டு என்னால் முடிந்த ஏதாவது உதவிகளைச் செய்ய முடியலாமாவென்ரு யோசித்துப் பார்த்தேன். உதவலாமென்று பட்டது. அதற்காகத்தான் உங்களுடன் சிறிது கலந்தாலோசிக்க விரும்புகின்றேன்."<br /><br />இளங்கோ: "உங்களது பெருந்தன்மைக்கு மிகவும் நன்றி. நாங்கள் உண்மையில் பெருமைப் படுகின்றோம் உங்களது உயர்ந்த<br />உள்ளத்தையெண்ணி. எந்தவகையில் இந்த விடயத்தில் உதவலாமென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்"<br /><br />அனிஸ்மான்: "உண்மையில் மனித உரிமைகள் விடயத்தில் உங்களுக்குத் தீங்கு இழைக்கப்பட்டிருபப்தாகக் கருதுகின்றேன். உங்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கு எட்டு மணி நேரம் இந்த மண்ணில் தங்கியிருக்க சட்டரீதியான அனுமதியிருந்தது. உங்களது கடவுச் சீட்டுகளில் அதற்கான முத்திரை கூட இடப்பட்டிருந்தது. ஆனால் உங்களது துரதிருட்டம் உங்களை மான்ரியால் ஏற்றிச் செல்ல வேண்டிய விமான நிறுவனம் மறுத்து விட்டதுதான். அதனால் உங்களைத் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டபோது அதனைத் தவிர்ப்பதற்காக இங்கு அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்தீர்கள். சட்டரீதியாக இந்த மண்ணில் இருக்கும்போதுதான் அவ்விதம் விண்ணப்பித்தீர்கள். இந்த நாட்டினுள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் நீங்கள் அந்த விண்ணப்பத்தினைச் சமர்ப்பித்திருந்தீர்கள். ஆனால் உங்களுக்கு தங்கியிருக்க அனுமதியளிக்கப்பட்ட அந்த எட்டு மணி நேரம் கடந்ததும் நீங்கள் அந்த சட்டரீதியான நிலையினை இழந்தீர்கள். அந்த நிலையில் உங்களுக்குப் பிணையில் வெளியில் வருவ்தற்குரியதொரு வாய்ப்பிருந்தது. அதனை உங்களுக்கு வழங்குவதற்குப் பதில் உங்களை இந்த நாட்டினுள் அனுமதிக்கப்படாத சட்டவிரோதக் குடிகளாகத் தவறாகக் கருதிய குடிவரவுத் திணைக்களம் உங்களைத் தடுப்புமுகாமில் போட்டு அடைத்தது. நீங்கள் அவ்விதம் தடுப்பு முகாமில் தங்கியிருந்த காலகட்டமானது உங்களுக்குரிய மனித உரிமைகள் மறுதலிக்கப்பட்ட காலகட்டமாகும். அதற்காக உங்களுக்கேற்பட்ட பாதிப்புகளுக்காக இந்த அரசிடமிருந்து நட்ட ஈட்டினைப் பெறுவதற்குரிய உரிமை உங்களுக்கிருப்பதாகவே நான் கருதுகின்றேன். நீங்கள் விரும்பினால் இந்த விடயத்தில் உங்கள் சார்பில் அதற்கான வழக்கினை முன்னெடுத்து வாதாட நான் தயாராகவிருக்கிறேன். அதற்குரிய ஊதியத்தினை வழக்கு வெற்றிபெறும் பட்சத்தில் கிடைக்கும் நட்ட ஈட்டுத் தொகையிலிருந்து நான் பெற்றுக் கொள்ளச் சித்தமாகவிருக்கின்றேன். நீங்கள் இதற்கென்ன சொல்லுகிறீர்கள்?"<br /><br />இவ்விதம் ச்ட்டத்தரணி அனிஸ்மான் கூறவும் ஒருகணம் இருவரும் என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் திண்டாடிப் போனார்கள். சட்டத்தரணி அனிஸ்மானே தொடர்ந்தார்: "நீங்களிருவரும் உங்களுக்கிடையில் தாராளமாகவே கலந்தாலோசித்து முடிவினைக் கூறுங்கள். மேலும் இவ்விதம் அரசுக்கெதிராக வழக்குத் தொடுப்பதனால் ஒருவேளை உங்களது அகதிக் கோரிக்கை விடயத்தில் அவர்கள் ஓரளவுக்கு விட்டுக் கொடுத்து வழக்கினைத் தீர்ப்பதற்கும் வாய்ப்புகளுள்ளன".<br /><br />இதற்குப் பின்னர் அவர்களிருவரையும் தமக்குள் கலந்துரையாட விட்டுவிட்டு சட்டத்தரணி அனிஸ்மான் வேறு காரியமாக வெளியே சென்றார். நண்பர்களிருவரும் தமக்குள் இது விடயமாகக் கலந்துரையாடினர்.<br /><br />இளங்கோ: "என்ன அருள் இவன் சொல்லுறதைப் பத்தி உன்னுடைய யோசனையென்ன? காத்தியை இந்த விசயத்திலை நம்பலாமென்று நினைக்கிறியா?"<br /><br />அருள்ராசா: "இவன் சொல்லுறதிலையும் நியாயமிருக்குதானே. எங்கட நிலையிலை இதிலை வென்றால் லொத்தர் விழுந்தமாதிரித்தானே.. சும்மா வாறதை ஏன் விடுவான். வந்தவரைக்கும் லாபம்தானே... எனக்கென்றால் அவன் சொல்லுறபடியே செய்து பார்க்கலாமென்றுதான் படுகிது. சில நேரம் அவன் சொல்லுற மாதிரி எங்கட அகதிக் கோரிக்கை வழக்குக்கும் இது 'பார்கயின்' பண்ன உதவலாம். எனக்கு ஓகே."<br /><br />இவ்விதமாக நண்பர்களிருவரும் கலந்துரையாடி இறுதியில் சட்டத்தரணி அனிஸ்மானின் ஆலோசனைக்குச் சம்மதிப்பதாக முடிவு செய்தார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பிய அனிஸ்மான் " என் அன்புக்குரிய நண்பர்களே! இந்த விடயத்தில் என்ன முடிவினையெடுத்துள்ளீர்கள்?" என்றார். அதற்கு அருள்ராசா "நாங்கள் நன்கு ஆலோசித்துப் பார்த்தோம். நீங்கள் கூறுவது சரியாகவே படுகிறது. சம்மதிக்கிறோம்." என்றான். அதைக்கேட்ட சட்டத்தரணி அனிஸ்மானின் முகமெல்லாம் உடனடியாகவே பல்லாக மலர்ந்தது. அந்த முகமலர்ச்சியுடன் "நல்ல முடிவாக எடுத்திருக்கிறீர்கள். நாளைக்கு மீண்டும் வாருங்கள். உரிய பத்திரங்களைத் தயாரித்து வைக்கிறேன். கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்." என்றும் கூறினார்.<br /><br />[தொடரும்]</span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-81291261517249393092007-10-24T21:31:00.000-04:002020-05-03T13:35:33.538-04:00தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkm0dzvk1a25oy42qf5ytWVbT9zBzLQAjbOlJRmoS6e98fxxlvMsn_y6tTUIl26CMnMp9kD_0CV3hpe84uIPJmRuq15tfyza-cM3TMvqe5BFUArUuLc5LcCbffPL44978OFAVr/s1600-h/man.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5125081141989912242" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkm0dzvk1a25oy42qf5ytWVbT9zBzLQAjbOlJRmoS6e98fxxlvMsn_y6tTUIl26CMnMp9kD_0CV3hpe84uIPJmRuq15tfyza-cM3TMvqe5BFUArUuLc5LcCbffPL44978OFAVr/s320/man.jpg" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" /></a> <b></b>அத்தியாயம் இருபத்திமூன்று: சட்டத்தரணி அனிஸ்மானின் அலுவலக்த்தை நோக்கி!<br />
<br />
<span style="font-size: 78%;">கார்லோவிற்காக மாலை நேரங்களில் விளம்பரங்களை விநியோகிக்கும் வேலையும் புதியதொரு அனுபவத்தை அவர்களுக்குத் தந்தது. நான்காவது தெரு மேற்கும், ஆறாவது அவென்யுவும் சந்திக்குமிடத்தில் இளங்கோ பிரசுரங்களை விநியோகிக்கத் தொடங்கினான். அருள்ராசா கிறிஸ்தோபர் வீதி, ஏழாவது அவென்யு மற்றும் நான்காவது தெரு மேற்கும் சந்திக்குமிடத்தில் அவற்றை விநியோகிக்கத் தொடங்கினான். அவர்களைப் பொறுத்தவரையில் அவ்விதமாக விளம்பரங்களை விநியோகிப்பது பெரிதும் சிரமமானதாகவிருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்த கூச்சமெல்லாம் ஒரு சில நிமிடங்களிலேயே மறைந்து விட்டது. 'ஒன்றுக்கு இரண்டு. ஒன்று வாங்கினால் இன்னுமொன்று இலவசம். (Two for one!)' இதுதான் கார்லோவின் மலிவு விற்பனை விளம்ப்ர வாசகங்கள். ஒன்றுக்கு இரண்டு என்று கூவிக் கூவி விளம்பரங்களை விநியோகிப்பதும் சிறிது இலகுவாகவிருந்தது. ஒன்றுக்கு இரண்டு என்றதும் நடைபாதையால் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் ஒருகணம் நின்று அதுபற்றி விசாரித்தார்கள். அதன்பின் விளம்பரங்களையும் வாங்கிக் கொண்டார்கள். ஆளுக்கு ஆயிரம் விளம்பரங்களையாவது விநியோகிக்க வேண்டும். அவ்விதம் ஆயிரம் விளம்பரங்களை ஒருவர் விநியோகித்தால் அவற்றை வாங்கிய ஆயிரம் பேரில் குறைந்தது நூறு பேர்களாவது கார்லோவின் கடைக்கு விஜயம் செய்வார்கள். அவர்களில் குறைந்தது பத்துப் பதினைந்து பேராவது ஏதாவது வாங்கிச செல்வார்கள். இவ்விதமாக விளம்பரங்களை விநியோகிக்கும்போது பெரும்பாலும் நடைபாதைவாசிகள் நின்று விசாரித்து வாங்கிச் சென்றதால் வேலை மிகவும் இலகுவானதாகப் பட்டது. அதேசமயம் பல்வேறு வயதினராக, நிறத்தினராக, மொழியினராக, மதத்தினராக, நாட்டினராக நடைபாதைவாசிகளிருந்தார்கள். பலர் அவர்களுடன் சிறிது நேரமாவது நின்று நிதானித்து சிறியதொரு சம்பாசணையினை நிகழ்த்தினார்கள். ஒரு சிலர் அவர்களது பூர்வாசிரமத்தைப் பற்றி விசாரித்தார்கள். இன்னும் சிலர் அவர்களது தாய்நாடு பற்றிய தங்களது பூகோளவியல் சம்பந்தமான தமது அறிவினை வெளிப்படுத்தும் வகையில் கேள்விகளைத் தொடுத்தார்கள் அல்லது பகிர்ந்து கொண்டார்கள்.<br /><br />இளங்கோவைப் பொறுத்தவறையில் அவ்விதமாக விளம்பரங்களை விநியோகிக்கையில் மேலும் சிலரின் நட்பினைச் சம்பாதித்துக் கொண்டான். அவர்களிலொருத்தி 'ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா' அமைப்பினச் சேர்ந்த இங்கிரிட். இங்கிரிட் சேலை உடுத்தித் தொலைவிலிருந்து பார்க்கையில் ஓரிந்தியப் பெண்ணாகவே காட்சி தந்தாள். ஆரம்பத்தில் அவளுடனான சந்திப்பு பின்வருமாறு அமைந்திருந்தது.<br /><br />இளங்கோவை முதன்முதலாக அவ்விடத்தில் விளம்பரங்களுடன் கண்டதும் அந்நடைபாதையிலிருந்து 'ஹரே கிருஷ்ணா! ஹரே ! ராமா!' அமைப்பினரின் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த இங்கிரிட் தானே வலியவந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். "ஹாய்! என்பெயர் இங்கிரிட். ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா! அமைப்புக்காகத் தொண்டராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். நீ யாருக்காக வேலை செய்கின்றாய். அது என்ன? எவற்றை நீ விநியோகித்துக் கொண்டிருக்கிறாய்?"<br /><br />அதற்கு அவன் "கார்லோவின் ஆடைக்கடைக்காக விளம்பரங்கள் விநியோகிக்கின்றோம். தற்போது அங்கு ஒன்றுக்கு இரண்டு என்று மலிவு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரும்பினால் நீங்களும் ஒருமுறை சென்று பாருங்களேன்." என்று கூறிவிட்டு அவளுக்கும் இரண்டு மேலதிக விளம்பரங்களை கொடுத்தான். அதைச் சிறிது நேரம் வாசித்துவிட்டு அவள் 'பிரயோசனமான மலிவு விற்பனைதான். வேலை முடிந்து செல்லும்போது ஒருமுறை சென்று பார்க்க வேண்டியதுதான்." என்று பதிலுரைத்தாள். அத்துடன் அவள் அவனின் அமெரிக்க வாழ்க்கை அனுபவங்களையும் அனுதாபத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அவனதும், அவனது நண்பனினதும் நிலையையெண்ணி அனுதாபம் கொண்ட இங்கிரிட் அவர்களுக்குப் பலனளிக்கக் கூடியதோர் ஆலோசனையினையும் வழங்கினாள். அது வருமாறு: "எங்களது ஆலயத்திற்கு வந்தால் உங்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். அவ்வப்போது வரப்பாருங்கள். உணவுக்கு உணவு. இந்த நகர அலைச்சலிலிருந்து கொஞ்சநேரமாவது நிம்மதியான ஓய்வு". அத்துடன் ஒருநாள் அவர்களிருவரையும் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஆலயத்துக்கும் அழைத்தும் சென்றாள்.<br /><br />இவ்விதமாகக் காலம் ஓடிக்கொண்டிருந்த சமயம் திடீரென ஒருநாள் அவர்களது நியுயார்க் சட்டத்தரணி அனிஸ்மானிடமிருந்து அழைப்பொன்று வந்தது. அனிஸ்மானின் சட்ட அலுவலகம் மான்ஹட்டனில் அமைந்ததிருந்த 'அந்நாள்' புகழ் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில், முப்பத்துநான்காவது மாடியில் அமைந்திருந்தது. விரைவில் தன்னை வந்து சந்திக்கும்படி தனது செய்தியினைப் பதிவு செய்திருந்தான். அத்துடன் அவர்களது அகதிக்கோரிக்கை பற்றிய வழக்குகள் மற்றும் வேலை செய்வதற்கான தற்காலிக வேலை அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிப்பது சம்பந்தமான விடயங்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடத் தான் விரும்புவதாக அந்தச் செய்தியில் அவன் மேலும் தெரிவித்திருந்தான்.<br /><br />இவ்விதமானதொரு காலகட்டத்தில் ஒருநாள் இளங்கோவும் அருள்ராசாவும் அவர்களது வழக்கறிஞரான அனஸ்மானைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். உலகப் புகழ்பெற்ற 'எம்பயர் ஸ்டேட் பில்டிங்'கில் காலடி வைத்தபொழுது அருள்ராசா கூறினான்:" ஒரு பத்து வருசத்துக்கு முந்தி இதைப்போலை இந்தக் கட்டடத்திலை காலடி வைக்கிறதைப் போலை கனவு கண்டிருப்பியா அல்லது நினைச்சுத்<br />தானிருந்திருப்பியா?"<br /><br />அருள்ராசாவின் கேள்விக்கு இயலுமானவரையில் நியாயமாக, உண்மையாகப் பதிலளிக்க விரும்பிய இளங்கோ "நீ சொல்லுறது<br />ஒருவிதத்திலலை சரிதான். கனவிலை கூட இப்பிடி கண்டிருக்கவில்லைதான்"<br /><br />இவ்விதமாகக் கதைத்தபடி சென்று கொண்டிருந்த நண்பர்களின் உரையாடல் இறுதியில் சட்டத்தரணி அனிஸ்மானுடனான சந்திப்பு<br />பற்றியே மீண்டும் மீண்டும் வந்து வந்து நின்றது. அனிஸ்மானின் நினைவுடன் இளங்கோ அருள்ராசாவுக்குப் பின்வருமாறு<br />ஞாபகப்படுத்தினான்: "எதுக்காக அனிஸ்மான் இப்படித் திடீரென்று விரைவாக அழைத்திருக்கிறானோ தெரியவில்லை. எதுக்கும் இந்த<br />முறை கட்டாயம் அவனிட்டை வேலைக்கான அனுமதிப்பத்திரம் பெறுவது பற்றியும், அகதிக் கோரிக்கை பற்றிய வழக்கு பற்றிய<br />விபரங்கள்பற்றியும் நிறையக் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் இவன் ஏன் இருந்தாற்போலை திடீரென்று கூப்பிட்டிருக்கிறானோ? எனக்கென்றால் ஆச்சரியமாகததானிருக்குது."<br /><br />அருள்ராசா சிரித்தபடியே "இளங்கோ! இன்னும் கொஞ்ச நேரத்திலை அவனைச் சந்திக்கப் போகிறோம். அவனிடமே கேட்டுத் தெரிஞ்சு கொள்ளுறதுதானே! அதுக்குள்ளை என்ன அவசரம்?" என்றான்.<br /><br />அருள்ராசா இவ்விதம் சிறிது சிரிப்புடன் கூறவும் இளங்கோவுக்குச் சிறிது வெட்கமாகவிருந்தது. அந்த வெட்கத்தை இயலுமானவரையில் மறைததவனாக "இந்த நியூயோர்க் குடிவரவுத் திணைக்களத்தில் ஒரு விடயத்தை எதிர்பார்ப்பதென்பது கல்லிலை நார் உரிப்பது மாதிரி. பார்ப்பம் இந்தக் கல்லிலை நாரி உரிப்பதிலை அனிஸ்மான் எந்த அளவுக்குத் திறமைசாலியென்று."<br /><br />இதற்கு அருள்ராசா " சும்மா சொல்லக் கூடாது. இந்த யூதர்கள் வலு கெட்டிக்காரங்கள். கார்ல் மார்க்சைப் பார்! ஐன்ஸ்டனைப் பார்! சிக்மண்ட் பிராய்ட்டைப் பார். இன்றைய நோம் சாம்ஸ்கியைப் பார். இப்பிடி எந்தத் துறையிலும் பிரகாசிக்கிறது அவங்கதான். பிசின்சிலை இறங்கி நல்லாக் காசைச் சேமித்து வைக்கிறதும் அவங்கள்தான். இந்தத் தனியுடமையை ஒழிச்சுப் பொதுவுடமையைப் பரப்ப வேண்டுமென்ற புரட்சித் தத்துவததை உலகுக்குப் போதித்ததும் அவங்கள்தான். ஆச்சரியமாயில்லை?". இளங்கோ அதுவரையில் அவ்விதமானதொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்ததில்லை. அருள்ராசா கூறியதும்தான் அவ்விதம் ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்த்தான். ஆச்சரியமாகத்தானிருந்தது. இவ்விதமாக உரையாடியபடி நண்பர்களிருவரும் அவர்களது நியுயார்க் சட்டத்தரணியான அனிஸ்மானின் அலுவலகமிருந்த திக்கை நோக்கி நடையைக் கட்டினார்கள்.<br /><br />[தொடரும்]</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-8944667719448720552007-10-24T21:29:00.000-04:002020-05-03T13:35:57.930-04:00தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeVcnMx1vhWWeJqbPY74A1A8XtyORrOJrr788yCLgoxtMUo4PTYKgB2QNEtF9WGBAlxpkMQpDtbxY0WOgWzExPtwIMCo3WiX5mcqTDeptZSvPTzcI5Vm8mjX-WXf4rtWdwAZGV/s1600-h/man.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5125080639478738594" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeVcnMx1vhWWeJqbPY74A1A8XtyORrOJrr788yCLgoxtMUo4PTYKgB2QNEtF9WGBAlxpkMQpDtbxY0WOgWzExPtwIMCo3WiX5mcqTDeptZSvPTzcI5Vm8mjX-WXf4rtWdwAZGV/s320/man.jpg" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" /></a> <b></b><br />
அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!<br />
<br />
<span style="font-size: 78%;">இளங்கோ அருள்ராசாவிடம் ஹரிபாபுவுடனான வேலை முடிவுக்கு வந்த விடயத்தைக் கூறியபோது அவன் கொஞ்சமும் ஆச்சரியப்படவில்லை. "இதை நான் எப்பவோ எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு நாளைக்காவது வேலையும் தந்து சம்பளமும் தந்தானே. அதுக்காக அவனைப் பாராட்ட வேண்டியதுதான். அவனுக்கு நன்றியாக இருக்க வேண்டியதுதான்" என்றவன் கார்லோவிடம் பிரசுரங்கள் விநியோகிக்கும் வேலை கிடைத்தது பற்றிக் குறிப்பிட்டதும் "ஒரு விதத்திலை இதுவும் நல்லதுக்குத்தான்" என்றான்.<br /><br />"அருள் எந்த விதத்திலை இது நல்லதென்று நீ நினைக்கிறாய்?"<br /><br />"கார்லோவிடம் வேலை பின்னேரங்களிலை ஒரு சில மணித்தியாலங்கள்தானே. அப்ப நாள் முழுக்க எங்களுக்கும் நிறைய நேரமிருக்கும் வேறேதாவது நல்ல வேலை தேட. இல்லையா? அதோடை 'இமிகிரேசன்' அலுவலைப் பார்க்கலாம் இல்லையா..."<br /><br />அருள்ராசா கூறியதும் சரியாகத்தான் பட்டது. "ஒரு விதத்திலை நீ சொல்லுறதும் சரியாய்த்தானிருக்கு... எல்லாமே நல்லதுக்குத்தான்.<br />பகல் முழுக்க வேறேதாவது வேலையைத் தேடிப்பார்க்க வேண்டியதுதான். சும்மா நேரம் இருக்குதென்று விஸ்கியை அடித்துப் போட்டுப் பகல் முழுக்கப் படுத்துப் படுத்துக் கிடக்கிறதில்லை. இந்த விசயத்திலை உன்னை நல்லக் கட்டுப்பாட்டிலை வைத்திருக்க வேண்டும் கண்டியோ?"<br /><br />"நீ சொல்லுறதும் சரிதான். இப்பிடியே காலத்தை வீணக்கிக் கொண்டிருக்க முடியாது. எப்படியாவது நிரந்தரமானதொரு வேலையைக் கண்டு பிடிக்க வேண்டியதுதான்.."<br /><br />"இல்லாவிட்டால்... கொஞ்சமும் காசு கீசு சேர்க்க முடியாது... இப்பப் பார்.. ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கையைக்<br />கொண்டோடிறதிலையே முடிஞ்சு போகுது. ஒரு பொழுதுபோக்கு அது இதென்று ஒன்றுமில்லை. எப்பவாவது இருந்திருந்திட்டு அடிக்கிற தண்ணிப் 'பார்ட்டி'யோடை எல்லாமே சரி..."<br /><br />"என்ன செய்யிறதடா இளங்கோ... எல்லாம் இந்த இமிகிரேசக்காரங்களாலை வந்த கரைச்சல்தானே... அவங்கள் மட்டும் இந்நேரத்துக்கு 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்'டைத் த்ந்திருந்தாங்களென்றால் இந்த வேலைப் பிரச்சினை இந்நேரம் போயிருக்கும். ம்.. எல்லாம் காலம்.."<br /><br />அருள்ராசா கூறுவதும் இளங்கோவுக்குச் சரியான கூற்றாகத்தான் பட்டது. அன்றிரவு எல்லோரும் தூக்கத்தில் சாய்ந்த பின்னும்<br />இளங்கோவுக்குத் தூக்கமே வரவில்லை. வழக்கமாக இவ்விதமான சமயங்களில் செய்வதுபோல் தனது குறிப்பேட்டையும், பாரதியார்<br />கவிதைகளையும் எடுத்துக் கொண்டு அறையில் தூக்கத்திலாழ்ந்திருப்பவர்களின் தூக்கத்தினைக் கலைப்பதற்கு விரும்பாமல் உணவறைக்கு வந்தான். சிறிது நேரம் பாரதியாரின் கவிதைகளைப் படிப்பதிலீடுபட்டான். அவனைப் பொறுத்தவரையில் வாழ்க்கை சலிப்பும், விரக்தியுமாகச் சாய்ந்திருக்கும் சமயங்களிலெல்லாம் அவனுக்குத் துணையாக இருப்பவை நூல்களே. முக்கியமாகப் பாரதியாரின் கவிதைகளைப் படிக்கும்போது அவனது சோர்ந்து, துவண்டிருக்கும் மனதானது உற்சாகம் பெற்றுத் துள்ளிக் குதிக்கவாரம்பித்துவிடும்.<br />பாரதியாரின் கவிதைகளைப் படிக்கப் படிக்க மனது இலேசாகிக் கொண்டே வந்தது. உள்ளத்தில் உறுதி கலந்த உற்சாக உணர்வுகள்<br />சிறகடிக்கவாரம்பித்தன. அதன்பின் தனது குறிப்பேட்டினை எடுத்து எழுதவாரம்பித்தான். குறிப்பேடு பல வழிகளில் அவனுக்குதவி புரிந்து கொண்டிருந்தது. மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைப்பதற்குரிய சுமைதாங்கியாக, வாழ்க்கையைத் திட்டமிடுவதற்குரியதொரு சாதனமாக, அந்தரங்க உணர்வுகளைப் பகிர்ந்துகொளவதற்குரியதொரு துணையாகப் பல்வகைகளில் உதவிக்கொண்டிருந்தது. குறிப்பேட்டினைப் பிரித்தவன் முதலில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த குறிப்புகளைச் சிறிது நேரம் வாசித்தான். அதன்பின் எழுதவாரம்பித்தான்:<br /><br />'நாட்டை விட்டு வெளியேறி இன்றுடன் ஆறுமாதங்கள் கழிந்து விட்டன. முதல் மூன்று மாதங்கள் தடுப்பு முகாமில். அடுத்த மூன்று மாதங்கள் வெளியில் காற்றிலாடும் சருகாக. ஒவ்வொரு நாளையும் கழிப்பதற்கான போராட்டத்திலேயே வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது. இரவு வானை, மதியை, சுடரை, வீசும் தென்றலை, புள்ளை, அந்தியின் அடிவானத்து வர்ண விளையாட்டை.. இவற்றையெல்லாம் மனம்விட்டு இரசிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இருப்புப் பிரச்சினையே பெரியதொரு பிரச்சினை. இதற்கு விரைவில் முடிவொன்றினைக் கட்ட வேண்டும். இப்படியே வாழ்வினைச் செல்ல விடக்கூடாது. போனது போகட்டும். இனி அடுத்த ஆறு மாதத்திற்குள் என் வாழ்க்கை உறுதியானதொரு அடித்தளத்தில் கட்டப்பட வேண்டும். அதற்கான உறுதியை இப்பொழுதே இந்தக் கணமே எடுத்துக் கொள்கின்றேன். என் அருமைக் குறிப்பேடே! நீ தான் இதற்குச் சாட்சி!<br /><br />வீட்டாருக்கு இங்கு நான் படுகிற கஷ்ட்டங்கள் தெரியாது. சொன்னாலும் புரியப் போவதில்லை. ஒரு நேரச் சாப்பாடிற்காக என் மண்ணில் ஒவ்வொரு நாளையும் குடும்பம், குட்டிகளுடன் கழிக்கும் குடியானவர்களின் அன்றாட நிலைமையை இந்தக் கணத்தில் என்னால் மனப்பூர்வமாக உணர முடிகிறது. எந்தவித நம்பிக்கைகளுமின்றி அன்றாடம் வாழ்வே போராட்டமாக வாழும் மக்களுடன் ஒப்பிடும்பொழுது என்நிலை ஒரு பொருட்டேயல்ல. ஆனால் இவற்றையெல்லாம் வீட்டார் உணரும் நிலையில் இருப்பார்களென்று நினைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் மகன் உலகின் குபேரபுரியில் வாழ்கிறான். 'பொடியன் அமெரிக்காவிலை' என்று சொல்லும்போதே அவர்களது வாயெல்லாம் பூரிப்பால் மலர்ந்து விடும். ஆனால் 'பொடியன் இங்கு படுகிற பாட்டை' நேரில் வந்து பார்த்தால் மட்டும்தான் அவர்களால் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்ள முடியும்.' இவ்விதம் சிறிது நேரம் குறிப்பேட்டில் எழுதினான். அதன் பின் இளங்கோவின் கவனம் அடுத்த ஆறு மாதங்களைப் பற்றிய எதிர்காலத் திட்டங்களில் ஆழ்ந்து போனது. அவற்றைப் பற்றி எழுதும்போது மேலும் மேலும் உள்ளம் நம்பிக்கையால், உற்சாகத்தால் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது.<br /><br />'சரியாக இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்த மண்ணில் மிகவும் உறுதியாகக் காலூன்ற வேண்டும். அதற்கு இயலுமானவரையில் குடிவரவு அதிகாரிகளுடன் மீண்டும் மீண்டும் கதைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆறு மாதங்களுக்குள் எதுவுமே சரிவராவிட்டால் தொடர்ந்தும் இங்கிருப்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. எந்த விதச் சட்டரீதியான அடையாளத்துக்குரிய ஆவணங்களுமில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கக் கூட முடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருத்தரின் துணையை நாட வேண்டும். இதற்கொரு முடிவை எவ்வளவு விரைவில் கட்ட வேண்டுமோ அவ்வளவு விரைவில் கட்ட வேண்டும். இந்த விசயத்தில கடமையைச் செய்வேன். பலனை எதிர்பார்க்காமல். ஆனால் செயலுக்குரிய பலனெதுவுமில்லாதிருக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் செயலாற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமெதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு மேல் பலனை எதிர்பார்க்க வேண்டியதுதான். அதுவரையில் எந்தவிதப் பயனையும் எதிர்பார்க்காமல் முடிந்தவரையில் முயல வேண்டியதுதான். அதன் பிறகும் எந்தவிதப் பயனும் விளையாவிட்டால் இந்த மண்ணில் நான் ஒருபோதுமே இருக்கப் போவதில்லை.<br /><br />விறகுவெட்டி, தெருவிளக்கில் படித்த ஆபிரகாம் லிங்கனுக்குச் சாத்தியமான அமெரிக்கக் கனவு எனக்குச் சாத்தியமாக வேண்டுமென்றால் முதலில் எனக்கும் அவர்களுக்கிருந்ததைப் போல் இந்த மண்ணில் காலூன்றுவதற்குரியதோரிடம் , அது தற்காலிகமாகவேனுமிருக்க வேண்டும். அதனை இந்த அரசு செய்து தர வேண்டும். அடுத்த ஆறு மாதங்களிலாவது அதனை இந்த அரசு செய்து தருமா?<br /><br />நியூயார்க்கின் துறைமுகத்தில் நின்றபடி தனது குடிமக்களை, வந்தேறு குடிகளை, அடக்கு ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி ஓடோடிவரும் அகதிகளை வரவேற்கும் சுதந்திரதேவி ஏன் சிலையாக நிற்கிறாளென்று இப்பொழுதுதான் தெரிகிறது? சுதேசிகளுக்கொரு சட்டம். விதேசிகளுக்கொரு சட்டம். சுதேசிகளுக்குள்ளும் வர்ண அடிப்படையில் நிலவுகின்ற இன்னுமொரு சட்டம். அபயக் குரலெழுப்பி ஓடிவரும் அகதிகளுக்கு நீரிலொரு சட்டம்; நிலத்திலொரு சட்டம். ஓடிவரும் அகதிகளுக்குச் சுதந்திரவொளி காட்டி இருகரம் நீட்டி ஆதரிக்க வேண்டிய உன்னால் அது முடியாமல் போனதினால் ஒருவேளை சிலையாகிப் போனாயோ<br /><br />சுதந்திரதேவியே! இந்த உலகுக்கெல்லாம் நீ விடுதலையினையும், அது பற்றிய ஞானத்தினையும் போதிப்பதாகக் கூறுகின்றார்களே!<br />ஆனால். என் விடயத்தை எடுத்துப் பார். இங்குள்ள தடுப்பு முகாம்களுக்குள் அன்றாடம் கனவுகளுடனும், கற்பனைகளுடனும்,<br />ஏக்கங்களுடனும் வளைய வரும் இந்தப் பூவுலகின் பலவேறு திக்குகளிலிருந்தும் வந்து வாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்ட அகதிகளை எண்ணிப் பார்! உலகுக்கெல்லாம் சுதந்திரத்தைப் போதிக்குமுன் மண்ணில் அடைக்கலம் நாடி வந்தவர்களுக்கேனிந்த நிலை? என்னைப் பொறுத்தவரையில் இந்த மண்ணை நோக்கிக் களவாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வந்தவனல்லன். முறையான ஆவணங்களுடன் இன்னொரு நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டிய விமானம் கொண்டு<br />செல்ல மறுத்து விட்ட நிலையினால் இந்த மண்ணில் நிர்க்கதிக்குள்ளாகிப் போனவன். சட்டரீதியாக இந்நாட்டினுள் நுழைந்தவனைச் சட்டவிரோதமாக நுழைந்தவனென்ற பிரிவில் வைத்துத் தடுப்பு முகாமில் அடைத்து வைத்ததும் நீ சுதந்திரத்தைப் போதிக்குமிந்த மண்ணில்தானே நிகழ்ந்தது. சுதந்திரதேவியே!'<br /><br />இவ்விதம் சிறிதுநேரம் மனப்பாரங்களையெல்லாம் தனது உற்ற துணையான அந்தக் குறிப்பேட்டில் கொட்டித் தீர்த்தான் இளங்கோ.<br />இவ்விதம் சுமைகளை இறக்கிய மனதில் சிறிது உறுதியும், உற்சாகமும் குமிழியிட்டன. இறுதியாக இவ்விதம் எழுதினான்: -<br />சுதந்திரதேவியே! உன் மண்ணில் நீ போதிக்கும் சுதந்திரம் என்னைப் போன்றவ்ர்களுக்கு மறுக்கப்பட்டபோதும் நான் உன்னைப் போற்றுகின்றேன். நீ போதிக்கும் சுதந்திரத்தின் அருமையினை உணர்ந்தவன் நான். அதனால் உன்னைப் போற்றுகின்றேன். இரவிலும், பகலிலும், மழையிலும், வெயிலிலும் தனியாக உயர்ந்து நின்று விடுதலையினை உலகுக்கெல்லாம் போதிக்கின்றாயே! அந்தத் தியாகத்தை நான் மதிக்கின்றேன். 'எத்தனை இடர் வரினும் தளர்ந்து விடாதே! விடுதலைக்காகப் போராடு! உலக விடுதலைக்காகப் போராடு!' என்று நீ இயம்புவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சுதந்திரதேவியே நீ வாழி! -<br /><br />இவ்விதம் உணர்வுச் சுமைகளைக் குறிப்பேட்டிலிறக்கியதும் உள்ளத்தில்தானெத்தனை மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சியுடன் பாரதியாரின் கவிதை நூலினை மீண்டும் பிரித்தான் இளங்கோ.<br /><br />'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!<br />இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,<br />அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.<br />துச்சமாக வெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்,<br />அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.<br />பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,<br />அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.<br />இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,<br />அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.......<br />உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,<br />அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.'<br /><br />அதன்பின்னர் நண்பர்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த அறையினுள் மெதுவாக வந்தவன் தன் படுக்கையில் சாய்ந்தான். சாய்ந்தவனை விரைவிலேயே நித்திராதேவி வந்து அரவணைத்துக் கொண்டாள். அவளது அரவணைப்புக்குள் தஞ்சமாவதற்கு முன்னர் அவன் பின்வருமாறு உறுதியாக நினைத்துக் கொண்டான்: 'இன்னும் ஆறு மாதங்கள் மட்டும்தான். அதன்பிறகு சரிவராவிட்டால் அடுத்த பயணத்தைத் தொடங்க வேண்டியதுதான்.' இவ்விதமாக எதிர்காலம் பற்றியதொரு தெளிவான சிந்தனையால் இளகிக் கிடந்தவனை நித்திராதேவி மிகவும் இலகுவாகவே அணைத்துக் கொண்டாள்..<br /><br />[தொடரும்]</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-13220241823566178372007-10-24T21:17:00.000-04:002020-05-03T13:36:54.127-04:00தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0J6knkvml2KFqMuM9Gr5fpAS3kIBfCFu8LyHqsvvpqZQ9_bf76dS1JuQ9EX5HzpoTdvs1HcQRqm733ZezX8u72P_ctlIwnoaUwV-fudqDeyyj8WzB4O_0UD_2CoQzFMd-waDY/s1600-h/man.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5125078397505810050" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0J6knkvml2KFqMuM9Gr5fpAS3kIBfCFu8LyHqsvvpqZQ9_bf76dS1JuQ9EX5HzpoTdvs1HcQRqm733ZezX8u72P_ctlIwnoaUwV-fudqDeyyj8WzB4O_0UD_2CoQzFMd-waDY/s320/man.jpg" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" /></a> <b></b>அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்... .<br />
<br />
<span style="font-size: 78%;">"என்ன பையா! வியாபாரமெல்லாம் எப்படி? இன்று எனக்கு உதவியதற்கு நன்றி. நீ இல்லாவிட்டால் உண்மையில் நான் பெரிதும் சிரமப்பட்டிருப்பேன்" என்று வந்ததும் வராததுமாக இளங்கோவைப் பார்த்துக் கூறிய நடுத்தெருநாராயணன் மனைவியின் பக்கம் திரும்பி "கொஞ்சநேரம் தனியாக வியாபாரத்தைக் கவனித்துக் கொள். கொஞ்சநேரம் நான் இளங்கோவுடன் நமது வியாபாரம் பற்றிய முக்கியமான விடயம் பேச வேண்டும்." என்றான்.<br /><br />இளங்கோவுக்குச் சிறிது ஆச்சரியமாகப் போய்விட்டது. வந்ததும் வராததுமாகக் ஹரிபாபு இவ்விதம் கூறியது அவன் எதிர்பார்க்காததொன்று. ஹரிபாபுவின் உளவியல் பற்றிச் சற்று நேரத்துக்கு முன்னர் அவன் மனைவி கூறியவை நினைவுக்கு வரவே இலேசாகப் புன்னைகையொன்றும் மலர்ந்தது. அதனை அவதானித்த ஹரிபாபு "என்ன சிரிக்கிறாய். நான் வேடிக்கையாகக் கூறுகிறேனென்று நினைத்து விட்டாயா? இல்லை. மிகவும் முக்கியமானதொரு விடயம் பற்றிக் கதைக்கத்தான் அழைக்கிறேன். கடந்த சில நாட்களாகவே இது பற்றி உன்னுடன் கதைக்கவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் முடிவெடுத்தேன். வா.அங்குள்ள உணவகத்துக்குச் சென்று சிறிது நேரம் தேநீர் அருந்தி, கதைத்து வருவோம்" என்று கூறவும் இளங்கோ அவன் கூறப்போகும் அந்த முக்கியமான விடயம் என்னவாகவிருக்குமெனத் தனக்குள் எண்ணியவனாகக் ஹரிபாபுவைப் பின் தொடர்ந்தான்.<br /><br />இருவருக்கும் ஹரிபாபுவே தேநீர் வாங்கி வந்தான். இளங்கோவுக்கு அருகில் அமர்ந்தவனாக அவனே முதலில் உரையாடலை ஆரம்பித்தான்: "இளங்கோ. உனக்கும் அருள்ராசாவுக்கும் நான் மிகவும் நன்றி கூறவேண்டும். இதுவரையில் நீங்கள் செய்த உதவியை ஒருபோதுமே மறக்க மாட்டேன்"<br /><br />இளங்கோ ஹரிபாபுவையே மெளனமாகச் செவிமடுத்துக் கொண்டிருந்தான். ஹரிபாபு தொடர்ந்தான்: "என்னுடைய வியாபாரம் மீண்டும் மந்தமடைய ஆரம்பித்து விட்டது. இனி விற்பதுக்கும் அதிகமாகப் பொருட்கள் எதுவுமில்லை. உங்கள் புண்ணியத்தில் தேங்கிக் கிடந்த பித்தளைச் சிலைகள், ஆபரணங்கள் போன்றவற்றிலும் கணிசமான அளவுக்கு விற்று விட்டோம். இந்த நிலையில் என்னிடமுள்ளவற்றை விற்பதற்கு என்னையும் என் மனைவியையும் தவிர மேலதிகமாக ஆட்கள் தேவையில்லையென நினைக்கிறேன். மேலும் என் மனைவியும் இன்னுமொரு வாரங்களில் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யப் போகிறா. அதன் பிறகு நான் மட்டுமே இதனைக் கவனிக்கப் போகிறேன். ஹென்றியும் அதுமுதல் தன் வியாபாரத்தை மீண்டும் தொடங்க இருக்கிறான்."<br /><br />இளங்கோவுக்கு விடயம் விளங்கி விட்டது. இங்கும் அவனது வேலை வழக்கம்போல் தொடரப் போவதில்லை. அடுத்த வேலைக்கு மீண்டும் முழு மூச்சுடன், வீச்சுடன் முயன்று பார்க்க வேண்டியதுதான். உறுதியான கைகளும், கால்களும், உள்ளமும், மேலே விரிந்திருக்கும் ஆகாயமும், கீழே பரந்திருக்கும் பூமியுமிருக்கையில் அச்சப்படுவதற்கென்னவிருக்கிறத. இருப்புக்கான இந்தப் போராட்டத்தில் முடிந்தவரை போராடிப் பார்க்க வேண்டியதுதான்.<br /><br />ஹரிபாபு இறுதியில் இவ்விதம் கூறினான்: "நாளைக்கு நீ மட்டும் வேலைக்கு வந்தால் போதுமானது. உன் நண்பன் வரத் தேவையில்லை. நாளையிலிருந்து நீயும் வரவேண்டிய தேவையில்லை. ஆனால் அதற்காகத் தொடர்புகளை விட்டுவிடாதே. மீண்டும் எனக்கு உங்களது உதவி தேவைப்பட்டால் அழைப்பேன். அச்சமயம் உங்களுக்கும் தற்போதுள்ளதைப்போல் நேரமிருந்தால் வந்து உதவலாம்"<br /><br />இதற்கு இளங்கோவின் பதிலிவ்விதமாகவிருந்தது: "நிச்சயமாக உங்களுக்கு உதவத் தயாராகவேயிருக்கிறோம். எங்கள் வாழ்வின் சோதனையானதொரு காலகட்டத்தில் நீங்கள் செய்த உதவியை நிச்சயம் நாங்கள் மறக்கவே மாட்டோம். குறுகியகாலமே உங்களுடன் வேலை செய்யச் சந்தர்ப்பம் கிடைத்ததென்றாலும் எங்கள் நேரமறிந்து நீங்கள் செயத இந்த உதவி இந்த உலகைவிட மிகப்பெரியது. எங்கள் இலக்கியத்தில் இதுபற்றிய அழகானதொரு கவிதையேயுண்டு. 'காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது' என்று இரு அடிகளில் ஒரு கவிஞன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிச் சென்றிருக்கிறான்"<br /><br />இவ்விதம் இளங்கோ மிகவும் விரிவாக நன்றி கூறிப் பதிலளித்தவிதம் ஹரிபாபுவைச் சிறிது நெகிழவைத்தது. அத்துடன் அவன் "உங்களது நிலை என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. உங்கள் நாட்டு நிலை விரைவில் சீரடைந்து நீங்கள் உங்கள் குடும்பத்தவர்களுடன் சேர நான் எப்பொழுதுமே பிரார்த்திப்பேன். நீ மிகவும் பெருந்தன்மையாக எனக்கு நன்றி கூறினாலும் உண்மையில் உங்களது கவிஞன் கூறியது எங்களுக்கு நீங்கள் செய்த உதவிக்குத் தான்மிகவும் பொருந்தும். காலமறிந்து நீங்களளிருவரும் செய்த இந்த உதவியினை நாங்களும் நிச்சயம் மறக்க மாட்டோம். மற்றது..." என்று கூறிச் சிறிது நிறுத்தினான்.<br /><br />"மேலே கூறுங்கள் ஹரிபாபு" என்றுவிட்டு அவன் பதிலுக்காகக் காத்திருந்தான் இளங்கோ. ஹரிபாபு தொடர்ந்தான்: "நீங்கள் விரும்பினால எனது கடையில் இலவசமாக , உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும் மட்டும், தங்கலாம். எனக்கு எந்தவித ஆட்சேபணையுமில்லை. அங்கு விற்பதற்குரிய பொருட்கள் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால்..."<br /><br />"ஆனால்..."<br /><br />"ஆனால்... குளிப்பதற்குரிய வசதிகளில்லை. கழிவறை மட்டும்தானுள்ளது. முகம் கழுவலாம். குளிப்பதற்கு வேண்டுமானால் என்னிருப்பிடத்தில் வந்து குளிக்கலாம். என்ன சொல்லுகிறாய்?"<br /><br />இளங்கோவுக்கு ஹரிபாபுவின் யோசனை பிடித்திருந்தது. "தற்போது எங்களுக்கு இருப்பிடப் பிரச்சினையேதுமில்லை. ஆனால் எல்லாம் எங்களுக்கு வேலை கிடைப்பதைப் பொறுத்திருக்கிறது. எதற்கும் அருள்ராசாவுடனும் இதுபற்றிக் கதைத்துவிட்டு என் பதிலைக் கூறுகிறேன். நீங்கள் இவ்விதம் கேட்டது உங்களது நல்ல உள்ளத்தைத்தான் காட்டுகிறது. நன்றி ஹரிபாபு. குளிப்பது பிரச்சினையென்றாலும் அவ்வப்போது உங்களிருப்பிடத்தில் வந்து குளிப்பதுவும் அவ்வளவு சிரமானதல்ல எங்களது தற்போதைய வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது."<br /><br />அன்று மாலை ஹரிபாபுவுக்கும், அவனது மனைவி இந்திராவுக்கும் நன்றி கூறிவிட்டுத் தன்னிருப்பிடம் நோக்கித் திரும்புவதற்காக இளங்கோ திரும்பிக் கொண்டிருந்தபொழுது அவனது கவனத்தைக் கிறிஸ்தோபர் வீதியிலிருந்த தோலாடைகளை விற்பனை செய்யுமொரு இத்தாலியனின் ஜவுளிக்கடை கவர்ந்தது. கடையின் கண்ணாடி ஜன்னலில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரம்தான் உண்மையில் அவனது கவனத்தைக் கவர்ந்ததென்று கூறவேண்டும். அதில் 'எங்களது விளம்பரங்களை மாலை நேரத்தில் இச்சுற்றாடலில் குறைந்தது மூன்று மணித்தியாலங்களாவது விநியோகம் செய்வதற்குப் பணியாட்கள் தேவை. ஆர்வமுள்ளவர்கள் உள்ளே வந்து விண்ணப்பிக்கவும்' என்று எழுதப்பட்டிருந்தது. இளங்கோவுக்கு அவ்விளம்பரம் எத்தகைய மகிழ்ச்சியினைத் தந்ததென்று கூறத் தேவையில்லை. உடனடியாகவே உள்ளே நுழைந்தான். அவன் ஜன்னலிருந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததை ஏற்கனவே அவதானித்துக் கொண்டிருந்த அக்கடையின் சொந்தக்காரனான இத்தாலியன் "நண்பனே! நான் உதவி உனக்குச் செய்யலாமா?" என்று கூறியவாறே அருகில் வந்தான்.<br /><br />அதற்கு இளங்கோ "நிச்சயமாக" என்றவன் தொடர்ந்து "நீங்கள்தான் இக்கடையின் சொந்தக்காரரா" என்றான். அதற்கு அந்த இத்தாலியன் "சரியாகச் சொன்னாய் நண்பனே! நானேதான் இக்கடையின் உரிமையாளன். கார்லோ இந்தக் கடையின் சொந்தக்காரன்தான். என்ன விழி பிதுங்குகிறாய். கார்லோ என்பது எனபெயர்தான். அதுசரி உன் பெயரென்ன?" என்றான்.<br /><br />இளங்கோவுக்கு கார்லோவென்னும் அந்த இத்தாலியனின் உரையாடற்போக்கு சிறிது ஆச்சரியத்தைத் தந்தது. ஏனோ தெரியவில்லை அச்சமயத்தில் அவன் ஹரிபாபுவை ஒருகணம் நினைத்துக் கொண்டான்.<br /><br />"என் பெயர் இளங்கோ.. நானும் இச்சமயத்தில் வேலை பகுதி நேரமோ அல்லது முழு நேரமோ தேடிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்..."<br /><br />இத்தாலிய உரிமையாளன் கார்லா: "நாங்களா.... மற்றது யார்?"<br /><br />இளங்கோ: "அவன் என் நண்பன். இருவரும்தான் வேலை தேடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் விளம்பரங்களை விநியோகம் செய்யப் பணியாட்களைத் தேடிக் கொண்டிருப்பதாக விளம்பரத்தில் அறிவித்திருக்கிறீர்கள். அந்த வேலை பற்றித்தான் மேலதிகமாக அறிய விரும்புகிறேன்."<br /><br />கார்லா: "நீ முன்பு இதுபோல் ஏதாவது விளம்பர விநியோகம் செய்திருக்கிறாயா?"<br /><br />இளங்கோ: "இல்லை. ஆனால் என்னால் முடிந்தவரையில் கடுமையாக வேலை செய்வேன்"<br /><br />அவனது பதிலும் அதில் கலந்திருந்த உண்மையான உணர்வும், ஆர்வமும், உற்சாகமும் அந்த இத்தாலிய உரிமையாளனைக் கவர்ந்தது. அதன் விளைவாக அவனது அடுத்து வந்த சொற்களிருந்தன: "உண்மையில் உன்னைப் போன்ற ஆர்வமும், உற்சாகமும் மிக்க உண்மையான பணியாட்களே எமக்குத் தேவை. குறைந்தது மூன்று வாரங்களாவது எமக்கு உனது உதவி இந்த விடயத்தில் தேவைப்படும். நீயும் , உனது நண்பன் விரும்பினால் அவனும் எமக்கு இந்த விடயத்தில் உதவலாம். நாங்கள் குறிப்பிடும் இரு சந்திகளில் நீ ஒரு சந்தியிலும், உனது நண்பன் அடுத்த சந்தியிலும் எங்கள் விளம்பரங்களை விநியோகிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆறு நாட்களும் திங்கள் முதல் சனி வரை , குறைந்தது மூன்று மணித்தியாலங்கள் இவ்விதம் விநியோகிக்க வேண்டும். மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் தருவோம். பகுதி நேரமாக எழுபத்தி இரண்டு டாலர்கள் வாரத்திற்கு உழைக்கலாம். விரும்பினால் நாளைக்கே நீயும் உனது நண்பனும் வேலையை ஆரம்பிக்கலாம். இப்பொழுதே நீ உன் பதிலைக் கூறத்தேவையில்லை. வீடு சென்று உனது நண்பனுடனும் இதுபற்றி ஆறுதலாகக் கதை. இருவரும் விரும்பினால் நாளை மாலை உன் நண்பனையும் அழைத்துக் கொண்டு வந்து வேலையை ஆரம்பி"<br /><br />ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்குமென்று கூறுவது இதனைத்தானென்று பட்டது இளங்கோவுக்கு. மனதில் இலேசானதொரு உணர்வு படர்ந்தது. ஒரு வாரத்துக்கு 72 டாலர்கள். வீட்டு வாடகைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட உணவுக்கும் போதுமானது. இத்தாலியத் துணிக்கடைக்காரன் கார்லோவின் புண்ணியத்தில் ஒருவாறு இன்னும் சிறிது காலம் வண்டியோட்டலாமென்று பட்டது.<br /><br />[தொடரும்]</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31135205.post-45425398276365488772007-08-08T14:14:00.000-04:002020-05-03T13:38:51.812-04:00'பல்லி'க்கூடம்! - வ.ந. கிரிதரன் -<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<br />
<i><span style="font-size: 85%;">- ஒரு குட்டிக் கதை! ஆனந்தவிகடன் பவளவிழாப் போட்டிக்குத் தெரிவான ரூபா 3000 பரிசு பெற்ற முத்திரைக் குட்டிக்கதை.! -</span></i><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit3KTQkA9O6FC59JdHvBcOm3sdvNsoBV9mJftYTnWJuIxyznGVH3Y6osz7VeRDi5Mpj32yDGCqy4W-bXokuYrpUOn-GDgOlM4YfXTP4Hrvq8ZiIa8gNVPdxihhIUhb7nSWa-4i/s1600-h/pallikkoodam_1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5096395276967616706" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit3KTQkA9O6FC59JdHvBcOm3sdvNsoBV9mJftYTnWJuIxyznGVH3Y6osz7VeRDi5Mpj32yDGCqy4W-bXokuYrpUOn-GDgOlM4YfXTP4Hrvq8ZiIa8gNVPdxihhIUhb7nSWa-4i/s320/pallikkoodam_1.jpg" style="float: left; margin: 0px 10px 10px 0px;" /></a></div>
<br />
<span style="font-size: 85%;">வெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கிறது. யமுனாவுக்குத் தூக்கமே வரவில்லை. சற்றுத் தள்ளி கிழவி படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறாள். பேத்தியின் மனநிலை மட்டும் அவளுக்குத் தெரிந்திருக்குமானால், துடித்திருப்பாள்.<br /><br />இந்தத் தள்ளாத வயதிலும் அவள் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு வாழ்வதே பேத்திக்காகத்தானே! பஸ் விபத்தொன்றில் மகளையும் மருமகனையும் இழந்ததிலிருந்து இவ்வளவு காலமாக அந்தக் கிழவிதானே யமுனாவைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறாள்!<br /><br />கிழவியைப் பார்க்கப் பாவமாயிருக்கிறது. தான் செய்வது சரியா என்று யமுனா தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.<br /><br />அவளது நெஞ்சில் இவ்வளவு போராட்டங்களுக்கும் காரணமாக இருப்பவன் மாதவன். படித்துவிட்டு வேலையற்று ஊர்சுற்றிக் கொண்டிருப்பவன்.. மணந்தால் மாதவன்தானென்று இவளும், இவள்தானென்று அவனும் நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், வசதிமிக்க சண்முகத்தை மணந்தால் யமுனாவின் வாழ்க்கை சீராக இருக்குமென்று கணக்கிட்டு, நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டாள் கிழவி. இதற்கு முடிவு.. மாதவனும் யமுனாவும் ஊரைவிட்டே ஓடிப்போவதுதான்..<br /><br />நள்ளிரவு மாதவன் வருவான்.. தன்மேல் உயிரையே வைத்திருக்கும் கிழவியிடம்கூடச் சொல்லாமல் மாதவனுடன் ஓடுவது யமுனாவுக்கு கஷ்டமாக இருந்தது. தவிர, மாதவனுக்கோ வேலை வெட்டியென்று எதுவுமே கிடையாது. இந்நிலையில் ஓடிப்போவது சரியான முடிவுதானா?<br /><br />யமுனாவின் பார்வை, சுவரின்மேல் இரைக்காகக் காத்துக்கொண்டிருந்த பல்லியின்மேல் திரும்பியது.. இந்த நேரம் பார்த்து அங்கே இன்னொரு பல்லி பிரவேசித்தது. ஆண்பல்லியாக இருக்க வேண்டும். மெதுவே, பின்புறமாக வந்து இரைக்காகக் காத்திருந்த இந்தப் பெண்பல்லியைத் தழுவ அது முற்பட்டது.... சட்டென்று இந்தப் பெண் பல்லி அதனிடமிருந்து தப்பித்து நழுவி ஓடத் தொடங்கியது. சற்று நேரம் இப்படி ஆணை அலைக்கழிய வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண்பல்லி, ஆண்பல்லியின் மேல் பரிதாபம் கொண்டதோ என்னவோ... இம்முறை ஓடாமல் ஆண் பல்லியை எதிர்பார்த்து அசையாமல் நின்றது. ஆணும் அதுவரை நிகழ்ந்த ஊடலையெல்லாம் மறந்து கூடலை நாடி பெண்பல்லியை நெருங்கியது. அந்தச் சமயம் பார்த்து எங்கிருந்தோ பூச்சியன்று பெண்பல்லிக்கு முன்பாக வந்து அமர்ந்தது.<br /><br />அதுவரை காதல் மயக்கத்தில் மூழ்கிக் கலவியின்பத்தை எதிர்பார்த்துக் கிடந்த அந்தப் பெண் பல்லி தன் உணர்வுகளை எல்லாம் கணப்பொழுதில் மாற்றிக் கொண்டு தன் முன்னால் வந்தமர்ந்த பூச்சியின் மீது பாய்ந்தது, 'லபக்‘கென்று பிடித் துச் சுவைக்கத் தொடங்கியது. ஆண்பல்லி ஏமாற்றத்துடன் நின்றது. பசி உணர்வு அவ்வளவு வலிமையானதா? காதலை விட, காமத்தைவிட பசி அத்தனை வலிமையானதா..?<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTXHW_9ODff0Sxy8ckt-kRSDGzHOCN7NdPMQuQAxcZqF_t8YYy9uNZ7YcZACXGyXHhSyvArNIgeYwSTh9SP5BEpU-ydnnDB6ajJV9_LxNF0IPWK-r3JQqHfIDhAMh4W49Zt1bR/s1600-h/pallikkoodam_2.jpg"></a>அவள் மாதவனுடன் ஓடிப் போவதால் தற்காலிகத்தீர்வு கிடைக்கலாம். ஆனால்.. எத்தனை நாளைக்குத்தான் அவளை வைத்து அவனால் பராமரிக்க முடியும்? அவனுக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை எப்படியாவது அவள் காத் திருக்க வேண்டும். கிழவியிடமும் அழுது கதறி அவள் சம்மதத்தை வாங்கிவிடலாம். அதுவரை, என்ன ஆனாலும் சரி... ஓடிப்போக மட்டும் கூடாது...<br /><br />யமுனா ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக விட்டத்தைப் பார்த்தாள். பல்லிகளைக் காணோம்!</span><span style="font-size: 78%;"><i>நன்றி: ஆனந்தவிகடன் 27-05-2001. </i></span></div>
</div>
Unknownnoreply@blogger.com0